என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பொதுமக்கள் ஆதரவு தொடர வேண்டும்- உதயநிதி ஸ்டாலின்
    X

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பொதுமக்கள் ஆதரவு தொடர வேண்டும்- உதயநிதி ஸ்டாலின்

    • ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பெண்கள் மாதந்தோறும் ஆயிரம் பெற்று வருகின்றனர்.
    • விடுபட்ட பெண்களுக்கு டிசம்பர் மாதம் முதல் ரூ.1000 உதவித்தொகை கிடைக்கும்.

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடந்தது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதன்பின் அவர் பேசியதாவது:-

    73 ஆயிரம் பேருக்கு இன்று ரூ.300 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இது மகிழ்ச்சி அளிக்கிறது. குறுகிய காலத்தில் இந்த விழாவை மிகப்பிரமாண்டமாக மாவட்ட மாநாடு போல ஏற்பாடு செய்ததற்காக பாராட்டுகிறேன்.

    ராஜாக்கள் பெயரில் அதிக அளவில் ஊர்கள் உள்ளன. ராணிகள் பெயரில் சில ஊர்கள் மட்டுமே உள்ளன. அதில் முக்கியமானது ராணிப்பேட்டை.

    அதனால்தான் ராணிப்பேட்டையில் நடைபெறும் இந்த விழாவில் ராணிகளுக்கு அதாவது பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

    இன்று நலத்திட்ட உதவிகள் பெற்ற 73 ஆயிரம் பேரில் 55 ஆயிரம் பேர் பெண்கள்.

    திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றதில் இருந்து மகளிருக்கான திட்டங்களை அதிகளவில் செயல்படுத்தி வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும் முதல் கையெழுத்தாக விடியல் பயணத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    கடந்த 4½ ஆண்டுகளில் 820 கோடி பயணங்கள் இதன் மூலம் மகளிர் சென்றுள்ளனர். இதன்மூலம் மாதம் ரூ.900 முதல் ஆயிரம் வரை சேமிக்கிறார்கள்.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் இந்த திட்டத்தில் 8 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது அரசின் மிகப்பெரிய வெற்றி. அனைவரும் உயர் கல்வி பெறவேண்டும் என்ற நோக்கத்தில் புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

    இந்த திட்டத்தில் 8 லட்சம் மாணவ மாணவிகளுக்கு மாதந்தோறும் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் 14 ஆயிரம் பேர் இந்த திட்டத்தில் பயனடைகின்றனர். முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தால் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தங்கள் பிள்ளைகள் பசியுடன் இருக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்புகிறார்கள்.

    இதன் மூலம் தரமான உணவு, கல்வி வழங்கப்படுகிறது. இதுவரை இந்த திட்டத்தில் தினமும் 22 லட்சம் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் 25,000 குழந்தைகள் காலை உணவு திட்டத்தில் பயனடைந்து வருகின்றனர்.

    இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    இந்த திட்டத்தை செயல்படுத்த முடியாது என எதிர்கட்சிகள் விமர்சனம் செய்தன.

    கடன் சுமை, நிதிச் சுமை இருந்தாலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    இந்த திட்டத்தின் மூலம் ஒரு கோடியே 20 லட்சம் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பெண்கள் மாதந்தோறும் ஆயிரம் பெற்று வருகின்றனர்.

    விடுபட்ட பெண்களுக்கு டிசம்பர் மாதம் முதல் ரூ.1000 உதவித்தொகை கிடைக்கும். இந்த அறிவிப்பை நான் தான் சட்டசபையில் வெளியிட்டேன்.

    திராவிட மாடல் அரசின் திட்டங்களை இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் செயல்படுத்தப்படும் மாநிலமாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறப்புடன் செயல்பட்டு வருகிறார்.

    மகளிர் குழுவினருக்கு அடையாள அட்டை வழங்கப்படுகிறது.

    இதன் மூலம் அரசு பஸ்களில் சுமார் 25 கிலோ எடை வரை 100 கிலோ மீட்டர் தூரம் வரை இலவசமாக பொருட்களை எடுத்துச் செல்லலாம்.

    எனவே மகளிர் குழுவினர் உங்களுடைய அடையாள அட்டைகளை பாதுகாப்பாக வைத்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    தமிழகத்தில் கடந்த 4½ ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று 12,000 பேருக்கு பட்டா கிடைக்கப் பெற்றுள்ளது.

    பட்டா கேட்டு அரசு அலுவலகங்களுக்கு மக்கள் சென்ற நிலைமை மாறி அரசு தேடி வந்து பட்டா வழங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    அன்பு கரங்கள் திட்டத்தில் பயன்பெறும் மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துங்கள்.

    விளையாட்டில் ஈடுபடுங்கள் உங்களுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார். இன்று அரசு நலத்திட்ட உதவிகள் பெற்ற அனைவருக்கும் பாராட்டு, நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    தமிழகத்தை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு எடுத்துச் செல்ல திராவிட மாடல் அரசுக்கும் முதலமைச்சருக்கும் உங்கள் ஆதரவு தொடர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×