search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Collector Senthilraj"

    • கோரம்பள்ளம் நீர் வடிநில கோட்டம் மூலம் தற்போது உப்பாற்று ஓடையில் தூத்துக்குடி துறைமுகம் வரை ரூ.5 கோடி மதிப்பில் தூர்வாறும் பணி நடைபெற்று 99 சதவீதம் நிறைவடைந்து விட்டது.
    • குளத்தில் அள்ளப்படும் மண், வேறு தனியாருக்கு போய்விட கூடாது என்பதற்காக, பணியில் ஈடுபடும் லாரிகளில் தற்போது ஜி.பி.எஸ். கருவிகள் பொருத்தும் பணி நடக்கிறது என்று கலெக்டர் கூறினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்பிக் தொழிற்சாலை நிதியிலிருந்து ரூ.5 லட்சம் செலவில், கோரம்பள்ளம் குளம் பாசன விவசாயிகள் பயன்பெறும் வகையில் 2-ம் எண் மடைபாய்மான பிரதான வாய்க்காலை 4 கி.மீ தூரத்திற்கு சீரமைக்கும் பணியை அத்திமரப்பட்டியில் கலெக்டர் செந்தில்ராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    அப்போது, கலெக்டர் கூறுகையில், இந்த வாய்க்கால் சீரமைப்பு பணி மூலம், 2,200 ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடையும். இந்த பணி 2 வாரங்களில் முடிக்கப்படும். கோரம்பள்ளம் குளத்தை நம்பி விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.

    இந்த பகுதியில் விவசாயத்தினை பாதுகாக்கும் வகையிலும், உப்பாற்று ஓடையில் ஏற்படும் வெள்ளப்பெருக்கினால் தூத்துக்குடி மாநகர் பகுதிகள் பாதிக்கப்படாமல் இருக்கவும் அரசு நிதியில் இருந்து ரூ.12 கோடி மதிப்பீட்டில் கோரம்பள்ளம் குளத்தினை தூர்வாரும் பணியினை 2 மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடி தொகுதி எம்.பி. தொடங்கி வைத்தார். இந்தபணி தற்போது நடைபெற்று வருகிறது.

    தடுப்பணைகள்

    மேலும், கோரம்பள்ளம் நீர் வடிநில கோட்டம் மூலம் தற்போது உப்பாற்று ஓடையில் தூத்துக்குடி துறைமுகம் வரை ரூ.5 கோடி மதிப்பில் தூர்வாறும் பணி நடைபெற்று 99 சதவீதம் நிறைவடைந்து விட்டது.

    கோரம்பள்ளம் நீர் வடிநில கோட்டம் மூலமாக உப்பாற்று ஓடையை தூர்வாருவது மட்டுமல்லாமால், ஓட்டப்பிடாரம் பகுதியில் ஓடையில் ஆங்காங்கே தடுப்பணைகள் கட்டுவதற்கும் திட்டமிடப்பட்டு உள்ளது.

    கோரம்பள்ளம் குளத்திலிருந்து அள்ளப்படும் மண் தூத்துக்குடி நகரில் பயன்படுத்தப்படாமல் உள்ள தொழில்துறை புறம்போக்கு இடங்களில் கொட்டுவதற்கு, தொழில்துறையிடம் அனுமதி கோரப்பட்டு, கடந்த வாரம்தான் அனுமதி கிடைத்தது.

    லாரிகளில் ஜி.பி.எஸ். கருவி

    குளத்தில் அள்ளப்படும் மண், வேறு தனியாருக்கு போய்விட கூடாது என்பதற்காக, பணியில் ஈடுபடும் லாரிகளில் தற்போது ஜி.பி.எஸ். கருவிகள் பொருத்தும் பணி நடக்கிறது. இதனை அடுத்து வருகிற வெள்ளி அல்லது சனிக்கிழமையில் கோரம்பள்ளம் குளத்தில் இருந்து மண் அள்ளும் பணி தொடங்கி அடுத்த 3 மாதங்களுக்கு நடைபெற உள்ளது. தூர் வாரும் பணி தாமதமானதால், குளத்தின் கரைகளை பலப்படுத்தும் பணி நடைபெற்றது. விவசாயிகளின் ஒத்துழைப்போடு கோரம்பள்ளம் குளம் முழுமையாக தூர்வாரப்படும். இதனால் கோரம்பள்ளம் குளத்தின் நீர் கொள்ளவு அதிகரிக்கும்' என்றார்.

    கலந்து கொண்டவர்கள்

    நிகழ்ச்சியில், தாசில்தார் பிரபாகரன், ஸ்பிக் முழுநேர இயக்குனர் இ.பாலு, முதுநிலை மேலாளர் ஜெயப்பிரகாஷ், மக்கள் தொடர்பு அதிகாரி எம்.ஜெ.அம்ரித கவுரி, முத்தையாபுரம், முள்ளக்காடு, அத்திமரப்பட்டி விவசாயிகள் சங்க தலைவர் என்.வி.பூபதி, முள்ளக்காடு சின்னராஜ், உப்பாற்று ஓடை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் ஜோதிமணி உள்பட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • பேரூராட்சி அலுவலகத்திற்கு எதிரே குப்பை கிடங்கு அகற்றப்பட்ட நிலையில் அங்கு புதிய திட்டங்களை செயல்படுத்துவது குறித்து கலெக்டர் கேட்டறிந்தார்.
    • மேலும் இப்பகுதி மாணவ, மாணவிகளின் மேம்பாட்டிற்காக புதிய விளையாட்டு மைதானம் மற்றும் பயிற்சி அரங்கத்திற்கான இடத்தை கலெக்டர் பார்வையிட்டார்.

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு பணிகளை மேற்கொ ள்வதற்காக நேற்று ஆறுமுக நேரி பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்தார். அவரை பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம், துணைத் தலைவர் கல்யாண சுந்தரம், செயல் அலுவலர் கணேசன் ஆகியோர் வரவேற்றனர்.

    பின்னர் பேரூராட்சி அலுவலகத்திற்கு எதிரே குப்பை கிடங்கு அகற்றப்பட்ட நிலையில் அங்கு புதிய திட்டங்களை செயல்படுத்துவது குறித்து கலெக்டர் கேட்டறிந்தார். மேலும் இப்பகுதி மாணவ, மாணவி களின் மேம்பாட்டிற்காக புதிய விளையாட்டு மைதானம் மற்றும் பயிற்சி அரங்கத்திற்கான இடத்தை பார்வையிட்டார்.

    நாசரேத் அருகே உள்ள கடம்பாகுளத்தின் உபரிநீர் வடிகால் வாய்க்கால் குரும்பூர், வரண்டியவேல், தலைவன்வடலி வழியாக கடலில் சென்று கலக்கிறது. முன்பு ஆறு போல் சென்ற இந்த வாய்க்கால் காலப் போக்கில் ஆக்கிரமிப்பு காரண மாக ஓடை போல் குறுகி விட்டது. இதனை மீண்டும் அகலப் படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அந்த பணிகளையும் கலெக்டர் நேற்று பார்வை யிட்டு வாய்க் கால் ஆக்கிர மிப்பில் உள்ள வயல்கள் மற்றும் உப்பள ங்களை முழு மையாக அகற்றி விட அதிகாரி களுக்கு அறி வுறுத்தினார்.

    ஆய்வின் போது திருச்செந்தூர் உதவி கலெக்டர் குருசந்திரன், தாசில்தார் வா மணன், பொ துப் பணித்துறை தாமிரபரணி கோட்ட செயற் பொறியாளர் மாரியப்பன், ஆத்தூர் பேரூ ராட்சி தலைவர் கமால்தீன், விவசாய சங்கத் தலைவர் செல் வம், ஆத்தூர் நகர தி.மு.க. செயலாளர் முரு கானந்தம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகி ரவிச் சந்திரன் ஆகி யோர் உடன் இருந்தனர்.

    • புறையூர் ஊராட்சியில் கலெக்டரின் மக்கள் தொடர்பு முகாம் கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்றது
    • முகாமில் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உள்பட மொத்தம் 111 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    நாசரேத்:

    தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள புறையூர் ஊராட்சியில் கலெக்டரின் மக்கள் தொடர்பு முகாம் கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்றது. முகாமில் மாற்றுத்திற னாளிகள் உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, இயற்கை மரண உதவி தொகை, வேளாண் கருவிகள், இடுபொருட்கள் என மொத்தம் 111 பயனாளிகளுக்கு ரூ. 29 லட்சத்து 51 ஆயிரத்து 432- மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார்.

    முகாமில் திருச்செந்தூர் வருவாய் ஆர்.டி.ஓ. புகாரி, சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் ஜேன் கிறிஸ்டி பாய், வேளாண் இணை இயக்குநர் பாலதண்டாயுதபாணி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் நாணயம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் விக்னேஷ், சமூக நல அலுவலர் ரதிதேவி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் பொற்செல்வன், மாவட்ட வழங்கல் அலுவலர் அபுல்காசிம், ஏரல் தாசில்தார் கைலாசகுமாரசாமி, தனி தாசில்தார் பேச்சிமுத்து, புறையூர் ஊராட்சி மன்றத்தலைவர் செல்வக்கு மார் மற்றும் பல்வேறுதுறை அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • சுழல்நிதி கடனாக 516 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தலா ரூ.15 ஆயிரம் வீதம் ரூ. 77.40 லட்சம் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
    • தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் மூலம் புதியதாக நகர்ப்புற பகுதிகளில் 548 மகளிர் சுய உதவிக்குழுக்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    முதல்-அமைச்சர் ஆட்சிப்பொறுப்பேற்றவுடன் தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகை தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தார்.

    அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் 2420 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட ரூ.74.44 கோடி கடன்தொகை தள்ளுபடி செய்யப்பட்டு, அதற்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டு ள்ளது. மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் மே 2021-2022 மற்றும் 2022-2023-ம் ஆண்டில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், 635 புதிய மகளிர் சுய உதவிக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    முதல்-அமைச்சர் தலைமையிலான அரசு ஆட்சிப்பொறுப்பேற்ற நாளான 07.05.2021 முதல் 31.05.2023 வரை சுழல்நிதி கடனாக 516 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தலா ரூ.15 ஆயிரம் வீதம் ரூ. 77.40 லட்சம் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது. சமுதாய முதலீட்டு நிதியாக 796 குழுக்களுக்கு ரூ.661.80 கோடி கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது. நலிவுற்ற தன்மை குறைப்பு நிதியின் கீழ், 154 நபர்களுக்கு ரூ.38.50 லட்சம் கடனுதவிகள் வழங்கப்ப ட்டுள்ளது.

    வங்கிக்கடன் இணைப்பு நிதியாக 26623 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1390.05 கோடி வங்கி கடன் பெற்றுதரப்பட்டு ள்ளது. வங்கி பெருங்கடன் வழங்குவதில் இதுவரை 49 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு ரூ.1869.90 லட்சம் மதிப்பிலான கடனு தவிகள் வழங்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் மூலம் புதியதாக நகர்ப்புற பகுதிகளில் 548 மகளிர் சுய உதவிக்குழுக்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களை ஊக்குவிக்கும் வகையில் மகளிர் குழு உறுப்பினர்கள் சுய தொழில் தொடங்க ஏதுவாக கடனுதவிகள் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
    • மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    உதவித்தொகை

    தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து எந்தவித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் பல ஆண்டுகளாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

    9-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று 10-ம் வகுப்பில் தோல்வியுற்றவருக்கு மாதம் ரூ.200-ம், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300-ம், பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.400-ம், பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.600 வீதம் 3 ஆண்டுக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பவராக இருத்தல் வேண்டும். தொடர்ந்து பதிவை புதுப்பித்து இருக்க வேண்டும்.

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும், ஏனையோர் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்குச் சென்று படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட மாட்டாது. எனினும், தொலைதூரக்கல்வி அல்லது அஞ்சல் வழி மூலம் கல்வி கற்பவர்கள் உதவித்தொகை பெறலாம்.

    ஏற்கனவே உதவித்தொகை பெற்று வருபவர்கள் தொடர்ந்து 3 ஆண்டுகள் வரை உதவித்தொகை பெற நாளது தேதி வரை வங்கிகளில் குறிப்புகள் இடப்பட்ட வங்கி கணக்கு புத்தக நகலுடன் உறுதிமொழி ஆவணத்தையும் பூர்த்தி செய்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

    மாற்றுத்திறனாளிகள்

    மேலும் எந்தவிதமான அரசு உதவித்தொகையும் பெறாத மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து ஓராண்டுகள் நிறைவு பெற்றவர்கள் உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கலாம். 10-ம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் படித்தவர்களுக்கு மாதம் ரூ.600-ம், பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.750-ம், பட்டதாரிகளுக்கு ரூ.1,000-ம் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த உதவித்தொகை பெறுவதற்கு தகுதி உள்ளவர்கள் அனைத்து கல்விச்சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் தூத்துக்குடியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரில் விண்ணப்பிக்கலாம். மேலும் உதவித்தொகை பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. உதவித்தொகை பெறுவதால் வேலைவாய்ப்பு பரிந்துரைத்தலுக்கு எவ்வித தடையும் ஏற்படாது.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • அமிழ்வுக்குட்டை அமைக்கும் பணிகளை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • மரக்கன்றுகள் நட்டு கரையைப் பலப்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

    ஓட்டப்பிடாரம்:

    ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கீழமுடிமன் கிராமத்தில் கீழமுடிமன், வெள்ளாரம் மற்றும் பாஞ்சாலங்குறிச்சி நீர்வடிப்பகுதிகளில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடந்தது.

    கலெக்டர் ஆய்வு

    விழாவிற்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி, நீர்வடிப்பகுதிகளில் உள்ள 24 விவசாயிகளுக்கு பேட்டரி தெளிப்பான்கள், 39 விவசாயிகளுக்கு தார்ப்பாய்களும், நிலமற்ற விவசாய தொழிலாளர்களின் அடிப்படை வாழ்க்கை தரத்தை உயர்த்தும் பொருட்டு 24 பயனாளிகளுக்கு 24 தையல் எந்திரங்கள் என 87 பயனாளிகளுக்கு ரூ.7 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    இதனைத் தொடர்ந்து ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள சில்லாநத்தம் மற்றும் கீழமுடிமண் ஆகிய பஞ்சாயத்துகளில் ரூ.2 கோடியே 67 லட்சம் மதிப்பீட்டில் நீர்வடிப்பகுதியில் அமைக்கப்பட்ட தடுப்பணை, வரத்து கால்வாய் பணி மற்றும் அமிழ்வுக்குட்டை அமைக்கும் பணிகளை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.

    91 நீர்வடிப்பகுதி

    குழுக்கள்

    அப்போது கலெக்டர் செந்தில் ராஜ் கூறிய தாவது:-

    தூத்துக்குடி மாவட்டத்தில் 2022-23-ம் ஆண்டில் தமிழ்நாடு நீர்வடிப்பகுதி மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் கயத்தார், ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம் மற்றும் புதூர் வட்டாரங்களில் தேர்வு செய்யப்பட்டுள்ள 91 நீர்வடிப்பகுதி குழுக்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    ஓட்டப்பிடாரம் தாலுகாவில் மொத்தம் ரூ.2 கோடியே 67 லட்சம் நிதியில் தடுப்பணை அமைத்தல், ஊரணி சீரமைத்தல், வரத்து கால்வாய் சீரமைத்தல், அமிழ்வுக்குட்டைகள் அமைத்தல் போன்ற பணிகள் நடந்து வருகிறது. மேலும் ரூ.ஒரு கோடி 96 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் விவசாயிகளுக்கு இடுபொருள் வழங்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதிகாரிகளுக்கு அறிவுரை

    தொடர்ந்து அவர், சில்லாநத்தம் மற்றும் கீழமுடிமண் நீர்வடிப்பகுதியில் அமைக்கப்பட்ட தடுப்பணை, வரத்துக்கால்வாய் சீரமைக்கும் பணி மற்றும் அமிழ்வுக்குட்டை அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    சீரமைக்கப்பட்ட வரத்துக்கால்வாய் ஓரங்களிலும், அமிழ்வுக்குட்டையை சுற்றிலும் மரக்கன்றுகள் நட்டு கரையைப் பலப்படுத்தவும் விவசாயத்துறை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

    தொடர்ந்து பாஞ்சாலங்குறிச்சி சிலோன் காலனியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பஞ்சாயத்து நிர்வாகம் மூலம் பராமரிக்கப்படும் மினி பாரஸ்ட் காடுகள் மற்றும் நர்சரி ஆகியவற்றை அவர் பார்வையிட்டார்.

    கலந்துகொண்டவர்கள்

    இந்த நிகழ்ச்சிகளில் வேளாண்மை திட்ட அலுவலரும், வேளாண்மை இணை இயக்குநருமான பழனிவேலாயுதம், மாவட்ட கலெக் டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மார்டின்ராணி, வேளாண்மை துணை இயக்குநர் சாந்திராணி, ஓட்டப்பிடாரம் தாசில்தார் சுரேஷ், மண்டல துணை தாசில்தார் ஸ்டாலின், ஓட்டப்பிடாரம் யூனியன் ஆணையாளர் சிவபாலன், வேளாண்மை உதவிப் பொறியாளர் தமிம்அன்சாரி, நீர்வடிப்பகுதி மேம்பாட்டு அணி உறுப்பினர்கள் முத்துராமன், வெண்ணிலா மற்றும் சில்லாநத்தம், பாஞ்சாலங்குறிச்சி, கீழமுடிமண் நீர்வடிப்பகுதி குழுத்தலைவர்கள் மற்றும் கிராம பொதுமக்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் 2023-24-ம் ஆண்டுக்கான மாணவ-மாணவிகள் சேர்க்கை வருகிற 2-ந் தேதி தொடங்குகிறது.
    • இந்த பள்ளியில் சேருவதற்கு 12 வயதுக்கு மேல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்ப தாவது:-

    மாணவர் சேர்க்கை

    தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் 2023-24-ம் ஆண்டுக்கான மாணவ-மாணவிகள் சேர்க்கை வருகிற 2-ந் தேதி தொடங்குகிறது. இந்த பள்ளியில் சேருவதற்கு 12 வயதுக்கு மேல் 25 வயது க்குள் இருக்க வேண்டும்.

    குரலிசை, பரதநாட்டியம், தேவாரம், வயலின், மிருதங்கம் ஆகிய கலை களுக்கு 7-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தவில், நாதசுரம் ஆகிய கலைகளுக்கு எழுதப் படிக்க தெரிந்திருந்தால் போதுமானது.

    இசைப்பள்ளி படிப்பின் கால அளவு மூன்று ஆண்டுகள் ஆகும். இசைப்பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர் களுக்கும் மாதந்தோறும் ரூ.400 கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

    அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் அரசு விடுதி வசதியும் செய்து தரப்படும். வெளி யிடங்களில் இருந்து வரும் மாணவர்களுக்கு இலவச பஸ் கட்டண வசதியும் செய்து தரப்படும்.

    வேலைவாய்ப்பு மூன்று ஆண்டுகள் படித்து அரசுத்தேர்வுகள் இயக்ககம் நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் கர்நாடக இசைக் கச்சேரிகள் நடத்தவும், நாதசுரம் மற்றும் தவில் வாசித்து தொழில் புரியவும், தேவாரம் பாடுதல் மற்றும் கோவில் களில் பணிபுரியவும், வானொலி மற்றும் தொலைக் காட்சிகளில் நடத்தப்படும் இசை நிகழ்ச்சி களில் பங்குபெற்று திறமை களை வெளிப்படுத்தவும் வாய்ப்புகள் உள்ளன.

    கோவில்களில் தேவார ஓதுவார் பணியில் சேர்ந்திட இந்த பள்ளியில் தேவார இசை படித்து தேர்ச்சி பெற்ற மாணவ -மாணவி களுக்கு முன்னுரிமை அளித்து வேலைவாய்ப்பு வழங்க அரசு ஆணையிட்டு உள்ளது.

    இந்த ஆண்டு முதல் இசை ஆசிரியர் களுக்கான வளாக நேர்காணல் நடத்தப்பட்டு வேைல வாய்ப்பு பெற நடவடி க்கை மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

    எனவே கலை ஆர்வம் உள்ள மாணவ-மாணவிகள் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு இசைப் பள்ளி தலைமை ஆசிரியை, தூத்துக்குடி-2 என்ற முகவரியிலும், 9487739296 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் வருகிற 26-ந்தேதி காலை 9 மணிக்கு காமராஜர் கல்லூரியில் நடைபெற உள்ளது.
    • ஒரு போட்டிக்கு ஒருவர் வீதம் ஒரு கல்லூரியிலிருந்து 3 பேர் கலந்து கொள்ளலாம்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கவிதை- பேச்சு போட்டி

    தூத்துக்குடி மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அனைத்து வகை கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில் கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் வருகிற 26-ந்தேதி காலை 9 மணிக்கு காமராஜர் கல்லூரியில் நடைபெற உள்ளது.

    எனவே கல்லூரி பயிலும் மாணவ-மாணவிகள் தங்கள் கல்லூரி முதல்வரை அணுகி போட்டிக்கான விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து கல்லூரி முதல்வரின் கையொப்பம் பெற்று போட்டி நடைபெறும் நாளன்று தூத்துக்குடி மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநரிடம் வழங்க வேண்டும்.

    போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவ-மாணவிகள் காலை 9 மணிக்கு வருகை தந்து வருகைப் பதிவேட்டில் கையொப்பம் இடவேண்டும்.

    ஒரு போட்டிக்கு ஒருவர் வீதம் ஒரு கல்லூரியிலிருந்து 3 பேர் கலந்து கொள்ளலாம். போட்டிக்கான தலைப்புகள் போட்டி நாளன்று வழங்கப்படும்.

    மாநில போட்டிக்கு....

    ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறும் மாணவ-மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.7 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.5 ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்படும்.

    போட்டிகளில் முதல் பரிசு பெற்றவர்கள் மட்டும் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பப்படுவார்கள். மாநிலப் போட்டி தொடர்பான தகவல் பின்னர் தெரிவிக்கப்படும்.

    மாவட்ட தமிழ் வளர்ச்சி துணை இயக்குனர் சம்சுதீன் போட்டியின் ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார். இந்த அரிய வாய்ப்பினை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி மாணவ-மாணவிகளும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பொது வினியோக சிறப்பு முகாம் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது.
    • இந்த முகாமில் பொதுவினியோக திட்டம் தொடர்பான குறைகளையும் தெரிவித்து பொதுமக்கள் பயன்பெற்றுக் கொள்ளலாம் என கலெக்டர் கூறியுள்ளார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமை பொதுவினியோக திட்ட சிறப்பு முகாம் அந்தந்த தாலுகா அலுவலகத்தில் நடந்து வருகிறது. அதன்படி இந்த மாதத்துக்கான சிறப்பு முகாம் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது.

    இந்த முகாமில் மின்னணு ரேஷன் கார்டில் முகவரி மாற்றம், பெயர் திருத்தங்கள், உறுப்பினர் சேர்த்தல் மற்றும் நீக்குதல், புதிய ரேஷன்கார்டு மற்றும் நகல் அட்டை கோருதல் போன்ற குறைகள் சரி செய்து வழங்கப்பட உள்ளது.

    மேலும் மின்னணு ரேஷன் கார்டுகளுக்கு உரிய தவறுகளில் குடும்ப தலைவரின் புகைப்படம் பதிவேற்றம் செய்ய வேண்டி இருந்தால், முகாமிலேயே புகைப்படம் பதிவேற்றம் செய்யப்படும்.

    மேலும் இந்த முகாமில் பொதுவினியோக திட்டம் தொடர்பான குறைகளையும் தெரிவித்து பொதுமக்கள் பயன்பெற்றுக் கொள்ளலாம். எனவே பொதுமக்கள் இந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்டு குறைகளை தெரி வித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • கலெக்டர் செந்தில்ராஜ் செய்துங்கநல்லூர் நூலக கட்டிடத்தினை பார்வையிட்டார்.
    • புதிய கட்டிடத்திற்கான வரைபடத்தினை உருவாக்கும்படி பொறியாளருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

    செய்துங்கநல்லூர்:

    ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூரில் நூலக கட்டிடம் கட்டிடம் தர வேண்டும் என்று செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து தலைவர் பார்வதிநாதன், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு ஆகியோர் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜிடம் கடந்த வாரம் நேரில் சந்தித்து மனு கொடுத்திருந்தனர்.

    இதைத்தொடர்ந்து கலெக்டர் செந்தில்ராஜ் செய்துங்கநல்லூர் நூலகத்துக்கு ஆய்வு செய்ய வருகை தந்தார். அவர் அங்குள்ள பழமையான நூலக கட்டிடத்தினை பார்வையிட்டார். மேலும் நூலகத்துக்கு வருகை தரும் வாசகர்களுக்காக புதிய கட்டிடம் கட்ட பட வேண்டிய இடத்தினை பார்வையிட்டார். அதன் பின் கருங்குளம் ஒன்றிய ஆணையாளர் பாக்கிய லீலா, மேலாளர் மகேந்திர பிரபு, செய்துங்கநல்லூர் கிளார்க் சங்கரபாண்டியன் ஆகியோரிடம் ஆலோசனை செய்தார்.

    அதன்பின் அதற்கான வரைபடத்தினை உருவாக்கும்படி பொறியாளருக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து அங்கிருந்தவர்களை சந்தித்து மக்கள் குறை கேட்டார். கலெக்டருடன் சார் ஆட்சியர் கவுரவ்குமார், நெல்லை அருங்காட்சியக காப்பாட்சியர் சிவசக்திய வள்ளி, ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் ராதாகிருஷ்ணன், கருங்குளம் சேர்மன் ராஜேந்திரன் உள்பட பலர் உடன் வந்தனர்.

    • சஞ்சீவி பெட்டகம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
    • யோகா பயிற்சி சுகப்பிரசவத்துக்கு மிகவும் உதவுவதாக அமைந்து உள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடி மாவட்டத்தில் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் கீழ் இயங்கி வரும் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித்துறை சார்பில் கர்ப்பிணிகளின் சுகப்பிரசவத்துக்காக நெல்லிக்காய் லேகியம், உளுந்து தைலம், மாதுளை மணப்பாகு போன்ற 9 சித்த மருந்துகள் உள்ளடக்கிய சஞ்சீவி பெட்டகம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை இதன் மூலம் 2,761 கர்ப்பிணிகள் பயன்பெற்றுள்ளனர்.

    கொரோனா தொற்று காலங்களில் சித்த மருத்துவத்துக்கென தனியாக இரண்டு சிறப்பு சிகிச்சை மையங்கள் தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்டு அதன் மூலம் 150-க்கும் மேற்பட்ட நோயாளிகள் குணமடைந்துள்ளனர். தமிழக முதல்-அமைச்சரின் உத்தரவின்படி, மழைக்காலங்களில் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரும் குடிநீர் வழங்கல், பள்ளிகளில் விழிப்புணர்வு மற்றும் யோகா, கர்ப்பிணிகளுக்கு சுக மகப்பேறு தரும் மகப்பேறு சஞ்சீவி பெட்டகம் வழங்கல், துணை சுகாதார நிலையங்களின் மூலம் யோகா பயிற்சி, மூலிகை மரக்கன்றுகள் பொதுமக்களுக்கு வழங்கல், கர்ப்பிணிகளுக்கு யோகா பயிற்சி, தொற்றா நோய்களுக்கு யோகா பயிற்சி, கிராமங்கள் தோறும் சிறப்பு மருத்துவ முகாம்கள் என பல்வேறு திட்டங்கள் மக்களுக்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    கர்ப்ப காலத்தில் ரத்தக் குறைவை நிவர்த்தி செய்யவும், சுகப்பிரசவம் ஏற்படவும் சித்த மருந்துகள் பெரிதும் உதவுகிறது. கொரோனா தொற்று காலங்களில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. டெங்கு வைரஸ், சாதாரண வைரஸ் தொற்று காலங்களில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. இதன் மூலம் 3 லட்சத்து 31 ஆயிரத்து 936 பொதுமக்கள் பயன்பெற்றனர். வீட்டு சிகிச்சையிலேயே நோயாளிகள் குணமடைந்து உள்ளனர்.

    கிராமப்புறங்களில் அதிகரித்து வரும் தொற்று நோய்களான சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், உடல் பருமன் போன்றவற்றை கட்டுப்படுத்த துணை சுகாதார நிலையங்களில் யோகா பயிற்சி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் இதுவரை 2317 பேர் பயன்பெற்றுள்ளனர். யோகா பயிற்சிகள் கர்ப்பிணி பெண்களின் சுகப்பிரச வத்துக்கு மிகவும் உதவுவதாக அமைந்து உள்ளது. இதுபோன்ற எண்ணற்ற திட்டங்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக அரசின் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 6-ம் வகுப்பு பயிலும் மாணவிக்கு ரூ. 1000 பெண் கல்வி ஊக்கத்தொகை வழங்கிட முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
    • தூத்துக்குடி மாவட்டத்தில் 35 பள்ளி விடுதிகளும், 3 கல்லூரி விடுதிகளும் செயல்பட்டு வருகிறது

    தூத்துக்குடி:

    முதல்-அமைச்சர் தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டார், மிகப்பி ற்படுத்தப்பட்டார், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலனுக்காக பல்வேறு சிறப்பான நலத்திட்டங்கள் மற்றும் உலமாக்களுக்கு மிதிவண்டிகள் போன்ற எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    மேற்படி மக்களின் கல்வி, சமூகம், பொருளாதாரம் ஆகியவற்றிற்காக பல திட்டங்களின் மூலம் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

    தமிழ்நாட்டில் தற்போது உள்ள 69 சதவீதம் இட ஒதுக்கீடானது செயல்படுத்தப்பட்டு வருகிறது.பிற்படுத்தப்பட்டோர் சமூகத்திற்கு 30 சதவீதமும், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு 20 சதவீதமும், ஆதிதிராவிடருக்கு 18 சதவீதமும் மற்றும் பழங்குடியினருக்கு 1 சதவீதமும் இடஒதுக்கீட்டு முறைநடைமுறையில் உள்ளது.

    இது குறித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பள்ளிப்படிப்பு முதல் இளங்கலைப்பட்ட படிப்பு வரை பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவர்களுக்கு இலவச கல்வி உதவித்தொகை, அரசு, அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ-மாணவிக்கு இலவச கல்வித்திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தணையுமின்றி கல்வி உதவித்தொகை ஆகியவை வழங்கப்படுகிறது. மேலும் பட்டயபடிப்பு மற்றும் தொழிற்கல்வி படிப்பு பயில்பவர்களுக்கு குடும்பத்தில் முதல் பட்டய, பட்டதாரியாகவும் பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் இருக்கும் பட்சத்தில் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.

    கிராமப்புறங்களிலுள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் பகுதியாக அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3 முதல் 6 -ம் வகுப்பு வரை பயிலும், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்த பெண் குழந்தைகள் பள்ளி இடைநிற்றலை தவிர்க்க தொடர்ந்து பள்ளிக்கு செல்வதை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டொன்றுக்கு ஊக்கத்தொகையாக 3 -ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவிக்கு ரூ. 500 மற்றும் 6-ம் வகுப்பு பயிலும் மாணவிக்கு ரூ. 1000 பெண் கல்வி ஊக்கத்தொகை வழங்கிட முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இத்தொகையானது மாணவி களின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் பெயரில் உள்ள வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 38 விடுதிகள் இயங்கி வருகிறது. இவற்றில் 35 விடுதிகள் பள்ளி விடுதிகளாகவும், 3 கல்லூரி விடுதிகளாகவும் செயல்பட்டு வருகிறது.

    இவ்விடுதிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு ஒவ்வொரு விடுதிக்கும் 2 தமிழ் நாளிதழ் மற்றும் ஒரு ஆங்கில நாளிதழ் வழங்கப்பபடுகிறது. எதிர்கால வேலை வாய்ப்புகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வாழ்கை வழிகாட்டி நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

    தூத்துக்குடி மாவட்டத்தில் 2021-2022-ம் கல்வி ஆண்டில் 10,880 இலவச மிதிவண்டிகள் ரூ. 5.52 கோடி மதிப்பீட்டில் வழங்கப்பட்டு, மாணவ, மாணவியர்கள் பயனடைந்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×