search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Essay Competition"

    • ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு
    • சான்றிதழ், ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டது

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே ஒண்ணுபுரம் அரசு மேநிலைப்பள்ளியில் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசார கட்டுரை போட்டி நடைபெற்றது.

    இப்போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஒண்ணுபுரம் கிளை மேலாளர் சுனில்குமார் கலந்து கொண்டு சான்றிதழ்கள், ரொக்கப் பரிசுகள் வழங்கினார்.

    அப்போது தலைமை ஆசிரியர் பாபு ஆசிரியர்கள் திருமால் உள்பட பலர் உடனிருந்தனர்.

    • போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்கலாம்.
    • மாணவ-மாணவிகளின் கையெழுத்தில் ‘ஏ4’ அளவு தாளில் 1,500 வார்த்தைகளுக்கு மிகாமலும், ஒவ்வொரு தாளிலும் ஒரு பக்கம் மட்டுமே எழுதியிருத்தலும் அவசியம்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்ரோ) உந்தும வளாகம் சார்பில் உலக விண்வெளி வாரத்தை முன்னிட்டு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கட்டுரை போட்டி நடக்கிறது.

    இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்கலாம். 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு 'உலகளாவிய விண்வெளி சக்தியாக இந்தியாவின் எழுச்சி' என்ற தலைப்பிலும், 10 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 'விண்வெளி தொழில் நுட்பத்தின் விளைவுகள், விண்வெளித்துறையின் கண்டுபிடிப் புகள் பூமியில் உள்ள வாழ்க்கைக்கு எவ்வாறு பயனளிக்கின்றன?' என்ற தலைப்பிலும் கட்டுரை போட்டி நடத்தப்படுகிறது.

    25-ந்தேதி கடைசி நாள்

    கட்டுரைகள் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் இருத்தல் அவசியம். கட்டுரைகள் தெளிவாகவும், திருத்தமாகவும் மாணவ-மாணவிகளின் கையெழுத்தில் 'ஏ4' அளவு தாளில் 1,500 வார்த்தைகளுக்கு மிகாமலும், ஒவ்வொரு தாளிலும் ஒரு பக்கம் மட்டுமே எழுதியிருத்தலும் அவசியம்.

    போட்டியில் பங்கேற்கும் மாணவ-மாணவிகளின் பெயர், வயது, வகுப்பு, பள்ளியின் பெயர், பள்ளியின் முகவரி, பெற்றோர் பெயர், வீட்டின் முகவரி, தொலைபேசி எண் ஆகியவை குறிப்பிட்டு இருக்க வேண்டும். இந்த கட்டுரை மாணவரால் தான் எழுதப்பட்டு இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்த பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் இருந்து ஒப்புதல் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும்.

    கட்டுரைகள் வருகிற 25-ந்தேதி (திங்கட்கிழமை) அன்றோ அல்லது அதற்கு முன்பாகவோ 'நிர்வாக அலுவலர், ஐ.பி.ஆர்.சி., மகேந்திரகிரி அஞ்சல், நெல்லை மாவட்டம்-627133' என்ற முகவரிக்கு கிடைக்கும்படி அனுப்புதல் வேண்டும். உறையின்மேல் 'கட்டுரை போட்டி' என்று குறிப்பிடப்பட வேண்டும்.

    பரிசளிப்பு

    தமிழ், ஆங்கில கட்டுரைகளுக்கு தனித்தனியாக முதலாவது, 2-வது, 3-வது பரிசுகள் வழங்கப்படும். போட்டியில் பரிசு பெற்றவர்களின் விவரங்கள் தனியாக தெரிவிக்கப்பட்டு அடுத்த மாதம் (அக்டோபர்) 10-ந்தேதி மகேந்திரகிரியில் நடைபெறும் உலக விண்வெளி வார நிறைவு விழாவில் பரிசுகள் வழங்கப்படும்.

    மேலும் விவரங்களுக்கு 04637-281940, 281757, 9486041737, 9944604557 ஆகிய தொலைபேசி எண்களில் அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம். இப்போட்டியில் விண்வெளி ஆராய்ச்சி நிறுவன பணியாளர்களிக்கு குழந்தைகள் பங்கேற்க இயலாது.

    இந்த தகவலை மகேந்திரகிரி இஸ்ரோ மைய குழு இயக்குனர் முருகேசன் தெரிவித்துள்ளார்.

    • காளீஸ்வரி கல்லூரியில் கட்டுரை போட்டி நடந்தது.
    • இவ்விழாவிற்குக் கல்லூரி முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார்.

    சிவகாசி

    சுதந்திர தின விழாவை முன்னிட்டு சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் கல்வி வட்டம் சார்பில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான கட்டுரை, பேச்சுப் போட்டி நடந்தது. கல்வி வட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் கணிதவியல் துறை உதவிப்பேராசிரியர் அனுபாலா வரவேற்றார். இவ்விழாவிற்குக் கல்லூரி முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். கல்லூரி துணை முதல்வர் முத்துலட்சுமி வாழ்த்துரை வழங்கினார்.

    சிறப்பு விருந்தினராக மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி ராமன் கலந்து கொண்டார். அதனை தொடர்ந்து விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவின் சாதனைகள் என்னும் தலைப்பில் கட்டுரைப் போட்டியும், இந்தியா வளர்ந்த நாடாக மாற எதிர்கொள்ளும் சவால்கள் என்னும் தலைப்பில் பேச்சுப் போட்டியும் நடைபெற்றது. இப்போட்டிகளில் விருதுநகர் மாவட்டத்தைச் சார்ந்த 33 பள்ளிகளில் இருந்து மொத்தம் 408 மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வெற்றி மாணவர்களுக்கு துணை முதல்வர் பரிசுகளை வழங்கினார். முடிவில் தமிழியல் துறை உதவிப்பேராசிரியர் ஜமுனாராணி நன்றி கூறினார்.

    • கட்டுரைப்போட்டி, கடந்த மாதம் திருநள்ளாறு மற்றும் காரைக்கால் என இரு பிரிவுகளில் நடை பெற்றது.
    • கலெக்டர் குலோத்துங்கன் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

    புதுச்சேரி:

    காரைக்காலில் கடந்த மாதம் நடைபெற்ற தீயணைப்பு தடுப்பு வார கட்டுரைப்போட்டியில், வெற்றி பெற்ற மாணவர் களுக்கு, கலெக்டர் குலோத்துங்கன் பரிசளித்து பாராட்டினார். காரைக்கால் மாவட்ட தீயணைப்புத்துறை சார்பில், ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14 முதல் 21-ந் தேதி வரை தீயணைப்பு தடுப்பு வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக் கான தீயணைப்பு தடுப்பு வார கட்டுரைப்போட்டி, கடந்த மாதம் திருநள்ளாறு மற்றும் காரைக்கால் என இரு பிரிவுகளில் நடை பெற்றது. இதில் ஏராளமான பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டார்கள். போட்டி யில் வெற்றி பெற்ற 4 மாணவ, மாணவிகளுக்கு, காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவல கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது, கலெக்டர் குலோத்துங்கன் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

    இதில் திருநள்ளாறு பிரிவில் முதல் பரிசு பெற்ற சேத்தூர் அரசு பள்ளியைச் சேர்ந்த கிரிஷ் என்ற மாணவனுக்கு ரூ.900, 2-ம் பரிசு பெற்ற சக்தி என்ற மாணவனுக்கு ரூ.600 வழங்கப்பட்டது. மேலும் காரைக்கால் பிரிவில் கோவில்பத்து அரசு பள்ளியைச் சேர்ந்த முகம்மது இப்ராஹிம் என்ப வருக்கு ரூ.900, ஹரிஷ் ராகவா என்ற மாணவனுக்கு ரூ.600 ரொக்கம் மற்றும் சான்றிதழும் வழங்கப் பட்டது. இந்நிகழ்ச்சியில், துணை கலெக்டர் பாஸ்கரன், கலெக்டரின் செயலர் பக்கிரிசாமி மற்றும் சுரக்குடி தீயணைப்பு அதிகாரி ஹென்றிடேவிட், காரைக்கால் தீயணைப்பு அதிகாரி மாரிமுத்து மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    • கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் வருகிற 26-ந்தேதி காலை 9 மணிக்கு காமராஜர் கல்லூரியில் நடைபெற உள்ளது.
    • ஒரு போட்டிக்கு ஒருவர் வீதம் ஒரு கல்லூரியிலிருந்து 3 பேர் கலந்து கொள்ளலாம்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கவிதை- பேச்சு போட்டி

    தூத்துக்குடி மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அனைத்து வகை கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில் கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் வருகிற 26-ந்தேதி காலை 9 மணிக்கு காமராஜர் கல்லூரியில் நடைபெற உள்ளது.

    எனவே கல்லூரி பயிலும் மாணவ-மாணவிகள் தங்கள் கல்லூரி முதல்வரை அணுகி போட்டிக்கான விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து கல்லூரி முதல்வரின் கையொப்பம் பெற்று போட்டி நடைபெறும் நாளன்று தூத்துக்குடி மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநரிடம் வழங்க வேண்டும்.

    போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவ-மாணவிகள் காலை 9 மணிக்கு வருகை தந்து வருகைப் பதிவேட்டில் கையொப்பம் இடவேண்டும்.

    ஒரு போட்டிக்கு ஒருவர் வீதம் ஒரு கல்லூரியிலிருந்து 3 பேர் கலந்து கொள்ளலாம். போட்டிக்கான தலைப்புகள் போட்டி நாளன்று வழங்கப்படும்.

    மாநில போட்டிக்கு....

    ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறும் மாணவ-மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.7 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.5 ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்படும்.

    போட்டிகளில் முதல் பரிசு பெற்றவர்கள் மட்டும் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பப்படுவார்கள். மாநிலப் போட்டி தொடர்பான தகவல் பின்னர் தெரிவிக்கப்படும்.

    மாவட்ட தமிழ் வளர்ச்சி துணை இயக்குனர் சம்சுதீன் போட்டியின் ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார். இந்த அரிய வாய்ப்பினை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி மாணவ-மாணவிகளும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தாராபுரம் கோட்ட மின் வாரியம் சார்பில் மின் சிக்கன வார விழா ஒருவார காலம் நடத்தப்படுகிறது.
    • மின் சிக்கனம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    தாராபுரம் :

    மின் சிக்கன வார விழாவையொட்டி தாராபுரம் கோட்ட மின் வாரியம் சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான மின் சிக்கனம் குறித்த கட்டுரைப்போட்டி நடத்தப்படுகிறது.

    இது குறித்து மின் வாரிய செயற்பொறியாளா் வ.பாலன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :- தாராபுரம் கோட்ட மின் வாரியம் சார்பில் மின் சிக்கன வார விழா ஒருவார காலம் நடத்தப்படுகிறது. மின்சாரத்தை சேமிக்கும் வழிமுறைகள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டும். ஐ.எஸ்.ஐ. முத்திரை கொண்ட மின் சாதனங்களான எல்.இ.டி. விளக்குகள், மின் விளக்குகள், மின் சாதனங்கள், குளிா்சாதனப்பெட்டி, வாஷிங்மிஷின் ஆகியவற்றை பாதுகாப்புடன் பயன்படுத்த வேண்டும். டி.வி, கணினி உள்ளிட்ட மின் சாதனங்களை சுவிட்ச் மூலம் நிறுத்த வேண்டும்.

    மேலும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே மின் சிக்கனம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில் இணையதளம் வாயிலாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மின் சிக்கனம் குறித்த கட்டுரைப்போட்டி மற்றும் ஓவியப்போட்டி 19-ந் தேதி வரை நடத்தப்படுகிறது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மின் சிக்கன வார விழாவான 20-ந் தேதி பரிசுகள் வழங்கப்படும்.

    கட்டுரை போட்டிக்கு கீழ்க்கண்டவற்றில் ஏதேனும் ஒரு தலைப்பின் கீழ் தமிழ் அல்லது ஆங்கிலம் இரண்டு தலைப்புகளில் எழுதி அனுப்ப வேண்டும். ஆங்கில போட்டியில் கலந்துகொள்வதற்கான இணையதள முகவரி https://forms.gle/GMDToAAfehTNGLkZ6. மின்னாற்றல் சேமிப்பில் என் பங்கு, மின்னாற்றல் ஆடம்பரத்திற்கா? அத்தியாவசியத்திற்கா?, மின்னாற்றல் சேமிப்பின் அவசியம்.

    அதே போன்று ஓவியப்போட்டிக்கு கீழ்க்கண்டவற்றில் ஏதேனும் ஒரு தலைப்பு தமிழ் அல்லது ஆங்கிலத்தில் இருக்க வேண்டும். போட்டியில் கலந்துகொள்வதற்கான இணையதள முகவரி https://forms.gle/gNFcYtxZaASBXVe8 .மின்னாற்றல் சேமிப்பும் பசுமை உலகமும், நாளைய இருளை தடுப்போம், இன்றே விழிப்புணர்வு பெறுவோம், இயற்கை முறை மின்சாரம் காலத்தின் கட்டாயம், மின் சிக்கனம் மற்றும் சேமிப்பு குறிப்புகள், மின்சாரத்தை அளவோடு பயன்படுத்தி வளமோடு வாழ்வோம், சூரிய ஒளி இருக்க மின் ஒளி எதற்கு? மின்சாரம் நாட்டின் ஆதாரம். மின் சிக்கனம் தேவை இக்கணம் ஒரு யூனிட்டு சேமிப்பு இரண்டு யூனிட்டு உற்பத்திக்குச் சமம், 6 நட்சத்திர குறியீடு கொண்ட மின் உபகரணங்களை பயன்படுத்தி மின் விரயம் தவிர்த்து மின் தேவையினை குறைப்போம், இன்றைய மின் சேமிப்பு வரும் சந்ததிக்கு வழிகாட்டி, மின் சிக்கனம் செய்வோம் இயற்கை வளங்களைக் காப்போம். திறன்மிகு மின் உபகரணங்களை பயன்படுத்தி மின்சாரத்தை சேமிப்போம் உள்ளிட்ட தலைப்புகளில் இணையதளத்தில் பதிவிடலாம்.

    இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் சர்.சி.வி.ராமன் 138-வது பிறந்தநாளை முன்னிட்டு அறிவியல் அறிஞர்களின் பங்கு என்ற தலைப்பில் கட்டுரைப்போட்டி நடந்தது.
    • போட்டிக்கான பரிசளிப்பு விழா கல்லூரி உள்ளரங்கில் நடந்தது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் சர்.சி.வி.ராமன் 138-வது பிறந்தநாளை முன்னிட்டும், நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாகவும், விடுதலை போராட்டத்தில் அறிவியல் அறிஞர்களின் பங்கு என்ற தலைப்பில் கட்டுரைப்போட்டி நடந்தது.

    இப்போட்டியை ஆதித்தனார் கல்லூரியும், அறிவியல் சங்கமும் இணைந்து நடத்தின. இப்போட்டிக்கான பரிசளிப்பு விழா கல்லூரி உள்ளரங்கில் நடந்தது.

    கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். விழாவில் சிறப்பு விருந்தினராக வேதியியல்துறை முன்னாள் பேராசிரியர்கள் சு.பாலகுமார், கு.ஆறுமுககனி ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர்.

    மூன்றாம் ஆண்டு வேதியியல் மாணவர் சோ. வீரமனோகரனுக்கு முதல் பரிசான ரூ.3 ஆயிரமும், மூன்றாம் ஆண்டு மாணவர் சுஜித்துக்கு 2-ம் பரிசான ரூ.2 ஆயிரமும், விலங்கியல்துறை முதலாம் ஆண்டு மாணவர் ரோஷனுக்கு 3-ம் பரிசான ரூ.ஆயிரமும் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில், முன்னதாக வேதியியல் துறை தலைவர் செ.கவிதா வரவேற்று பேசினார். உதவி பேராசிரியை பே.தீபாராணி நன்றி கூறினார். விழாவில் கல்லூரி பேராசிரியர்களும், மாணவர்களும் கலந்து கொண்டனர்.

    • பேச்சுப்போட்டி மற்றும் வினாடி வினா ஆகிய போட்டிகள் நடத்தப்பட உள்ளது.
    • wlw2020atrtpr@gmail.com என்ற இணையதளத்தில் 28 ந் தேதி மாலை 5:30 மணிக்குள் பதிவேற்ற வேண்டும்.

    உடுமலை :

    வனஉயிரின வார விழா ஆண்டுதோறும் அக்டோபர் முதல் வாரத்தில் (2 முதல் 8 -ந்தேதி வரை) கொண்டாடப்படுகிறது. இதுகுறித்து உடுமலை ஆனைமலை புலிகள் காப்பக உதவி வனப்பாதுகாவலர் மற்றும் உதவி இயக்குனர் க.கணேசராம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஆனைமலை புலிகள் காப்பகம் திருப்பூர் வனக்கோட்டத்தில் வன உயிரின வார விழாவினை கொண்டாடும் விதமாக பல்வேறு விதமான போட்டிகள் நடத்துவதற்கு வனத்துறை சார்பில் திட்டமிடப்பட்டு உள்ளது.அதில் ஓவியம், கட்டுரை,பேச்சுப்போட்டி மற்றும் வினாடி வினா ஆகிய போட்டிகள் நடத்தப்பட உள்ளது.ஓவியம் மற்றும் கட்டுரைப் போட்டிகள் இணைய வழி மூலமாகவும், பேச்சுப்போட்டி மற்றும் வினாடி வினா போட்டிகள் நேரடியாகவும் நடத்தப்பட உள்ளது.

    மாணவ- மாணவிகள் தங்களது ஓவியம் மற்றும் கட்டுரை விவரங்களை wlw2020atrtpr@gmail.com என்ற இணைய தளத்தில் வருகின்ற 28 ந் தேதி மாலை 5:30 மணிக்குள் பதிவேற்ற வேண்டும்.வினாடி வினா மற்றும் பேச்சுப் போட்டியானது உடுமலையில் உள்ள ஆர்.ஜி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைபெறுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். விழாவிற்கான ஏற்பாடுகளை வனத்துறையினர் செய்துள்ளனர்.  

    • நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்தநாளை மாணவர் தின விழாவாக கொண்டாடப்பட்டது.
    • விழாவில் விரிவுரையாளர் கார்த்திகேயன் வரவேற்றார். பள்ளியின் துணை முதல்வர் புவனேஸ்வரி தலைமை தாங்கினார்

    புதுச்சேரி:

    நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்தநாளை மாணவர் தின விழாவாக கொண்டாடப்பட்டது. விழாவில் விரிவுரையாளர் கார்த்திகேயன் வரவேற்றார். பள்ளியின் துணை முதல்வர் புவனேஸ்வரி தலைமை தாங்கினார். பட்டதாரி ஆசிரியர் ரமேஷ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

    விழாவையொட்டி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பட்டதாரி ஆசிரியை சாமுண்டீஸ்வரி சிறப்புரை ஆற்றினார். தமிழாசிரியர் பாலச்சந்தர் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை என் .எஸ் .எஸ் திட்ட அலுவலர் விரிவுரையாளர் முத்துக்குமார், ஓவிய ஆசிரியர் ராஜாக்கண்ணு உடற்கல்வி ஆசிரியர்கள் சதீஷ், சித்தானந்தம் ஆகியோர் செய்து இருந்தனர். 

    ×