வனஉயிரின வார விழா கட்டுரைப்போட்டி - 28-ந் தேதிக்குள் இணையதளத்தில் பதிவு செய்யலாம்

பேச்சுப்போட்டி மற்றும் வினாடி வினா ஆகிய போட்டிகள் நடத்தப்பட உள்ளது.wlw2020atrtpr@gmail.com என்ற இணையதளத்தில் 28 ந் தேதி மாலை 5:30 மணிக்குள் பதிவேற்ற வேண்டும்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

உடுமலை :

வனஉயிரின வார விழா ஆண்டுதோறும் அக்டோபர் முதல் வாரத்தில் (2 முதல் 8 -ந்தேதி வரை) கொண்டாடப்படுகிறது. இதுகுறித்து உடுமலை ஆனைமலை புலிகள் காப்பக உதவி வனப்பாதுகாவலர் மற்றும் உதவி இயக்குனர் க.கணேசராம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஆனைமலை புலிகள் காப்பகம் திருப்பூர் வனக்கோட்டத்தில் வன உயிரின வார விழாவினை கொண்டாடும் விதமாக பல்வேறு விதமான போட்டிகள் நடத்துவதற்கு வனத்துறை சார்பில் திட்டமிடப்பட்டு உள்ளது.அதில் ஓவியம், கட்டுரை,பேச்சுப்போட்டி மற்றும் வினாடி வினா ஆகிய போட்டிகள் நடத்தப்பட உள்ளது.ஓவியம் மற்றும் கட்டுரைப் போட்டிகள் இணைய வழி மூலமாகவும், பேச்சுப்போட்டி மற்றும் வினாடி வினா போட்டிகள் நேரடியாகவும் நடத்தப்பட உள்ளது.

மாணவ- மாணவிகள் தங்களது ஓவியம் மற்றும் கட்டுரை விவரங்களை wlw2020atrtpr@gmail.com என்ற இணைய தளத்தில் வருகின்ற 28 ந் தேதி மாலை 5:30 மணிக்குள் பதிவேற்ற வேண்டும்.வினாடி வினா மற்றும் பேச்சுப் போட்டியானது உடுமலையில் உள்ள ஆர்.ஜி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைபெறுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். விழாவிற்கான ஏற்பாடுகளை வனத்துறையினர் செய்துள்ளனர்.  

X

Maalai Malar
www.maalaimalar.com