search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Energy saving"

    • மின் சிக்கனம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது
    • தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகம் சார்பில் மின் சேமிப்பு வார விழா ஆலங்குடியில் நடந்தது.

    புதுக்கோட்டை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகம் சார்பில் மின் சேமிப்பு வார விழா ஆலங்குடியில் நடந்தது.மின் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு ஊர்வலத்தை ஆலங்குடி செயற்பொறியாளர் நடராஜன் பஸ் ஸ்டாண்டிலிருந்து தலைமையேற்று கொடிய சைத்து துவக்கி வைத்தார். ஆலங்குடி நகரம் உதவி செயற்பொறியாளர் பிருந்தாவனன் முன்னிலையில் வகித்தார்.மின்சாரத்தை அளவோடு பயன்படுத்தி வளமோடு வாழ்வோம் சூரிய ஒளி இருக்க மின் ஒளி எதற்கு மின்சாரம் நாட்டின் ஆதாரம் மின்சாரம் தேவை.மின்நிலையம் தவிர்த்து மின்தேவையை குறைப்போம் மின் உபகரணங்களை பயன்படுத்தி மின்சாரத்தை சேமிப் போம் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு ஒலிபெருக்கி மூலம் காமராஜர் சிலை அரசமரம் பஸ் ஸ்டாப் வடகாடு முக்கம் சந்தைப்பேட்டை வரை சென்றடைந்தது.மின்வாரிய ஊழியர்கள் கடைகள் பொதுமக்களிடையே மின்சிக்கன ம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் வினியோகத்தினர். மின்வாரிய அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் விழிப்பு ணர்வு ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.




    • நேரு நர்சிங் கல்லூரியில் மின் சிக்கன வார விழா கொண்டாடப்பட்டது.
    • மாணவிகளுக்கு மின் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    வள்ளியூர்:

    வள்ளியூர் மின்வாரிய கோட்டத்தின் சார்பாக மின் சிக்கன வார விழா நேரு நர்சிங் கல்லூரியில் கொண்டாடப் பட்டது. மின்வாரிய செயற்பொறியாளர் வளன் அரசு தலைமை தாங்கினார். கல்லூரி தாளாளர் டி.டி.என் லாரன்ஸ் மற்றும் கல்லூரி முதல்வர் மார்கரெட் ரஞ்சிதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் மின் சிக்கனம் மற்றும் பாதுகாப்பு குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.மேலும் மின் சிக்கனம் குறித்து போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் உதவி செயற்பொறியாளர்கள் ஆனந்த குமார், செல்வ கார்த்திக், பத்மகுமார், உதவி மின் பொறியாளர்கள், மின் வாரிய பணியாளர்கள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர். 

    • தாராபுரம் கோட்ட மின் வாரியம் சார்பில் மின் சிக்கன வார விழா ஒருவார காலம் நடத்தப்படுகிறது.
    • மின் சிக்கனம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    தாராபுரம் :

    மின் சிக்கன வார விழாவையொட்டி தாராபுரம் கோட்ட மின் வாரியம் சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான மின் சிக்கனம் குறித்த கட்டுரைப்போட்டி நடத்தப்படுகிறது.

    இது குறித்து மின் வாரிய செயற்பொறியாளா் வ.பாலன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :- தாராபுரம் கோட்ட மின் வாரியம் சார்பில் மின் சிக்கன வார விழா ஒருவார காலம் நடத்தப்படுகிறது. மின்சாரத்தை சேமிக்கும் வழிமுறைகள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டும். ஐ.எஸ்.ஐ. முத்திரை கொண்ட மின் சாதனங்களான எல்.இ.டி. விளக்குகள், மின் விளக்குகள், மின் சாதனங்கள், குளிா்சாதனப்பெட்டி, வாஷிங்மிஷின் ஆகியவற்றை பாதுகாப்புடன் பயன்படுத்த வேண்டும். டி.வி, கணினி உள்ளிட்ட மின் சாதனங்களை சுவிட்ச் மூலம் நிறுத்த வேண்டும்.

    மேலும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே மின் சிக்கனம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில் இணையதளம் வாயிலாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மின் சிக்கனம் குறித்த கட்டுரைப்போட்டி மற்றும் ஓவியப்போட்டி 19-ந் தேதி வரை நடத்தப்படுகிறது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மின் சிக்கன வார விழாவான 20-ந் தேதி பரிசுகள் வழங்கப்படும்.

    கட்டுரை போட்டிக்கு கீழ்க்கண்டவற்றில் ஏதேனும் ஒரு தலைப்பின் கீழ் தமிழ் அல்லது ஆங்கிலம் இரண்டு தலைப்புகளில் எழுதி அனுப்ப வேண்டும். ஆங்கில போட்டியில் கலந்துகொள்வதற்கான இணையதள முகவரி https://forms.gle/GMDToAAfehTNGLkZ6. மின்னாற்றல் சேமிப்பில் என் பங்கு, மின்னாற்றல் ஆடம்பரத்திற்கா? அத்தியாவசியத்திற்கா?, மின்னாற்றல் சேமிப்பின் அவசியம்.

    அதே போன்று ஓவியப்போட்டிக்கு கீழ்க்கண்டவற்றில் ஏதேனும் ஒரு தலைப்பு தமிழ் அல்லது ஆங்கிலத்தில் இருக்க வேண்டும். போட்டியில் கலந்துகொள்வதற்கான இணையதள முகவரி https://forms.gle/gNFcYtxZaASBXVe8 .மின்னாற்றல் சேமிப்பும் பசுமை உலகமும், நாளைய இருளை தடுப்போம், இன்றே விழிப்புணர்வு பெறுவோம், இயற்கை முறை மின்சாரம் காலத்தின் கட்டாயம், மின் சிக்கனம் மற்றும் சேமிப்பு குறிப்புகள், மின்சாரத்தை அளவோடு பயன்படுத்தி வளமோடு வாழ்வோம், சூரிய ஒளி இருக்க மின் ஒளி எதற்கு? மின்சாரம் நாட்டின் ஆதாரம். மின் சிக்கனம் தேவை இக்கணம் ஒரு யூனிட்டு சேமிப்பு இரண்டு யூனிட்டு உற்பத்திக்குச் சமம், 6 நட்சத்திர குறியீடு கொண்ட மின் உபகரணங்களை பயன்படுத்தி மின் விரயம் தவிர்த்து மின் தேவையினை குறைப்போம், இன்றைய மின் சேமிப்பு வரும் சந்ததிக்கு வழிகாட்டி, மின் சிக்கனம் செய்வோம் இயற்கை வளங்களைக் காப்போம். திறன்மிகு மின் உபகரணங்களை பயன்படுத்தி மின்சாரத்தை சேமிப்போம் உள்ளிட்ட தலைப்புகளில் இணையதளத்தில் பதிவிடலாம்.

    இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×