search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின் சிக்கனம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்
    X

    மின் சிக்கனம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்

    • மின் சிக்கனம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது
    • தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகம் சார்பில் மின் சேமிப்பு வார விழா ஆலங்குடியில் நடந்தது.

    புதுக்கோட்டை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகம் சார்பில் மின் சேமிப்பு வார விழா ஆலங்குடியில் நடந்தது.மின் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு ஊர்வலத்தை ஆலங்குடி செயற்பொறியாளர் நடராஜன் பஸ் ஸ்டாண்டிலிருந்து தலைமையேற்று கொடிய சைத்து துவக்கி வைத்தார். ஆலங்குடி நகரம் உதவி செயற்பொறியாளர் பிருந்தாவனன் முன்னிலையில் வகித்தார்.மின்சாரத்தை அளவோடு பயன்படுத்தி வளமோடு வாழ்வோம் சூரிய ஒளி இருக்க மின் ஒளி எதற்கு மின்சாரம் நாட்டின் ஆதாரம் மின்சாரம் தேவை.மின்நிலையம் தவிர்த்து மின்தேவையை குறைப்போம் மின் உபகரணங்களை பயன்படுத்தி மின்சாரத்தை சேமிப் போம் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு ஒலிபெருக்கி மூலம் காமராஜர் சிலை அரசமரம் பஸ் ஸ்டாப் வடகாடு முக்கம் சந்தைப்பேட்டை வரை சென்றடைந்தது.மின்வாரிய ஊழியர்கள் கடைகள் பொதுமக்களிடையே மின்சிக்கன ம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் வினியோகத்தினர். மின்வாரிய அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் விழிப்பு ணர்வு ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.




    Next Story
    ×