search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை தாலுகா அலுவலகங்களில், பொது வினியோக திட்ட சிறப்பு முகாம் - கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்
    X

    தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை தாலுகா அலுவலகங்களில், பொது வினியோக திட்ட சிறப்பு முகாம் - கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்

    • பொது வினியோக சிறப்பு முகாம் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது.
    • இந்த முகாமில் பொதுவினியோக திட்டம் தொடர்பான குறைகளையும் தெரிவித்து பொதுமக்கள் பயன்பெற்றுக் கொள்ளலாம் என கலெக்டர் கூறியுள்ளார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமை பொதுவினியோக திட்ட சிறப்பு முகாம் அந்தந்த தாலுகா அலுவலகத்தில் நடந்து வருகிறது. அதன்படி இந்த மாதத்துக்கான சிறப்பு முகாம் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது.

    இந்த முகாமில் மின்னணு ரேஷன் கார்டில் முகவரி மாற்றம், பெயர் திருத்தங்கள், உறுப்பினர் சேர்த்தல் மற்றும் நீக்குதல், புதிய ரேஷன்கார்டு மற்றும் நகல் அட்டை கோருதல் போன்ற குறைகள் சரி செய்து வழங்கப்பட உள்ளது.

    மேலும் மின்னணு ரேஷன் கார்டுகளுக்கு உரிய தவறுகளில் குடும்ப தலைவரின் புகைப்படம் பதிவேற்றம் செய்ய வேண்டி இருந்தால், முகாமிலேயே புகைப்படம் பதிவேற்றம் செய்யப்படும்.

    மேலும் இந்த முகாமில் பொதுவினியோக திட்டம் தொடர்பான குறைகளையும் தெரிவித்து பொதுமக்கள் பயன்பெற்றுக் கொள்ளலாம். எனவே பொதுமக்கள் இந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்டு குறைகளை தெரி வித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×