search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nazareth"

    • நாசரேத் பேரூர் தி.மு.க. சார்பில் பாக முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • வீடு வீடாக சென்று தி.மு.க. அரசு செய்த சாதனைகளை விளக்கி சொல்ல வேண்டும் என கூட்டத்தில் பேரூர் தி.மு.க. செயலாளர் ஜமீன் சாலமோன் பேசினார்.

    நாசரேத்:

    நாசரேத் பேரூர் தி.மு.க. சார்பில் பாக முகவர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நாசரேத் பேரூர் செயலாளர் ஜமீன் சாலமோன் தலைமை தாங்கினார். வருகிற 2024 பாராளுமன்ற தேர்தலில் பாக முகவர்களின் கடமைகளையும், பூத் கமிட்டியினர் எவ்வாறு செயல்பட வேண்டும் எனவும், வீடு வீடாக சென்று அவர்கள் உள்ளுரில் இருக்கிறார்களா? அல்லது வெளியூர், வெளிநாடுகளில் இருக்கிறார்களா? 80 வயதுக்கு மேற்பட்ட வர்களா? மாற்றுத் திறனாளிகளா? என்பது குறித்து தீவிரமாக விசாரிக்க வேண்டும்.

    மேலும் வாக்காளர்கள் இறந்து விட்டால் அவர்கள் பெயரை நீக்க அதற்குரிய படிவங்களை நிரப்பி உரிய அலுவல ரிடம் கொடுக்க வேண்டும். 1-1-2024 அன்று 18வயது நிரம்பக்கூடியவர்களை புதிதாக வாக்காளர்களாக சேர்க்கவும், விடுபட்ட வாக் காளர்கள், இடம் மாறிய வாக்காளர்கள், சேர்க்க, நீக்க, திருத்தங்கள் மேற்கொள்வதற்கான படிவங்கள் பெற்று பூர்த்தி செய்து, அந்த படிவங்களை, அந்த அந்த முகாம்க ளில் பாக முகவர்களும் பூத் கமிட்டியினரும் திறம்பட செய்து உரிய இடத்தில் சேர்க்க வேண்டும், வீடு வீடாக சென்று தி.மு.க. அரசு செய்த சாதனைகளை விளக்கி சொல்ல வேண்டும் என கூட்டத்தில் பேரூர் தி.மு.க. செயலாளர் ஜமீன் சாலமோன் பேசினார்.

    கூட்டத்தில் நகரஅவை தலைவர் கருத்தையா, பாக முகவர்கள் ஞானராஜ், ஜெபசிங், டேவின் சாலமோன், சிலாக்கியமணி, அன்பு தங்கபாண்டியன், சரவணன், ஜீலியட் எபநேசர், சந்திரசேகர், மனோகரன், மாற்கு தர்மகண், ஜேம்ஸ் ரவி, உடையார், எமர்சன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்வார்திருநகரி யூனியனுக்கு உட்பட்ட புறையூர் ஊராட்சி மன்றத்தில் புதிய நூலகம் திறப்பு விழா நடைபெற்றது.
    • நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி. லாசரஸ் கலந்து கொண்டு புதிய நூலக கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    நாசரேத்:

    நமக்கு நாமே திட்டத்தில் ரூ.11 லட்சம் திட்ட மதிப்பீட்டில் ஆழ்வார்திரு நகரி யூனியனுக்கு உட்பட்ட புறையூர் ஊராட்சி மன்றத்தில் புதிய நூலகம் திறப்பு விழா நடைபெற்றது.

    கட்டிடம் திறப்பு விழா

    நமக்கு நாமே திட்டத்தில் நாலுமாவடி புது வாழ்வு சங்கத்தின் சார்பில் தமிழக அரசுக்கு நிதி பங்கீடாக ரூ. 3,67,000 வழங்கப்பட்டு புதிய கட்டிடமும் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.

    ஆழ்வார்திருநகரி யூனியன் சேர்மன் ஜனகர் தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் செல்வக்குமார், துணைத் தலைவர் மாட சாமி ஆகியோர் முன்னி லை வகித்தனர். இதில் நாலுமாவடி இயேசு விடுவி க்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி. லாசரஸ் கலந்து கொண்டு புதிய நூலக கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் தம்பிரான், இக்பால், ஹனிபா, ராணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் கடம்பாகுளம் பாசன மடை எண் 5, 6 வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் தொடங்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவ னர் மோகன் சி. லாசரஸ் கலந்து கொண்டு கொடி அசைத்து பணிகளை தொடங்கி வைத்தார். ஆழ்வார்திருநகரி யூனியன் சேர்மன் ஜனகர் தலைமை தாங்கினார்.

    நிகழ்ச்சியில் மேலக்கடம்பா ஊர்த்தலை வர் பலவேசம், விவசா யிகள் சரவணன், முத்து, சுதா, தூர்க்கையாண்டி, ஆபிரகாம், குருகாட்டூர் ஜேம்ஸ், சித்தர், ஜோஷ்வா, கல்லை ஆறுமுகம், நாலு மாவடி இயேசு விடுகிறார் ஊழியர் சமூக பொறுப்பாளர் எட்வின், மக்கள் தொடர்பு அலுவலர் சாந்தகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை இயேசு விடுவிக்கிறார் ஊழியப் பொது மேலாளர் செல்வக்குமார் தலைமை யில் ஊழியர்கள் செய்தி ருந்தனர்.

    • நாசரேத்தில் அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • முன்னாள் எம்.எல்.ஏ. ராஜேந்திரன் கலந்து கொண்டு பூத் கமிட்டிகளுக்கான புத்தகத்தை ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார்.

    நாசரேத்:

    நாசரேத்தில் அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது. தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ராஜேந்திரன் கலந்து கொண்டு பூத் கமிட்டிகளுக்கான புத்தகத்தை ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார். நகர செயலாளர் கிங்சிலி வரவேற்றார். மாவட்ட அவைத்தலைவா் திருபாற்கடல், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளா் ஞானையா, ஒன்றிய மகளிரணி செயலாளா் ஜுலியட் ஆகியோர் முன்னிலை வகித்தனா்.

    இதில் நகர அவைத்தலைவா் சிவசுப்பு, இணை செயலாளா் கோமதி, ஜெயலலிதா பேரவை செயலாளா் தினகரன், துணை செயலாளா் முருகேசன், மகளிரணி கிருபா, மாணவரனி செயலாளா் அா்ஜுன், வாா்டு செயலாளா் செல்வகுமாா், செல்வின் விக்டா், பெல்வின், ராஜ்குமாா், பட்டுதங்கம், சில்வியா, தங்கராஜ், காா்த்திக், பாலா, மாயாண்டி, ஆறுமுகநயினாா் மற்றும் வார்டு செயலாளர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை நாசரேத் நகர அ.தி.மு.க. செயலாளர் கிங்சிலி மற்றும் தொண்டர்கள் செய்திருந்தனர்.

    • திருவிழாவை முன்னிட்டு தினமும் காலை 5.30 மணிக்கு ஜெபமாலை, மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீரும் நடந்தது.
    • இந்த ஆராதனையில் கள்ளிக்குளம் பனிமய அன்னை மெட்ரிக் பள்ளி முதல்வர் மணி மறையுரை ஆற்றினார்.

    நாசரேத்:

    நாசரேத் அருகே உள்ள தைலாபுரம் பரிசுத்த உபகார மாதா ஆலய திருவிழா கடந்த 18-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடந்தது.

    திருவிழாவை முன்னிட்டு தினமும் காலை 5.30 மணிக்கு ஜெபமாலை, நவநாள் திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீரும் நடந்தது.

    9-ம் திருவிழா மாலை 6 மணிக்கு ஜெபமாலை, மறையுரை, திருவிழா சிறப்பு மாலை ஆராதனை தூத்து க்குடி மறை மாவட்ட குருகுல முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் நடந்தது. இந்த ஆராதனையில் கள்ளிக்குளம் பனிமய அன்னை மெட்ரிக் பள்ளி முதல்வர் மணி மறையுரை ஆற்றினார்.

    இதில் பங்குத்தந்தைகள் ரெமிஜியூஸ், ராபின், இருதயசாமி, கலை செல்வம் மற்றும் இறை மக்கள் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து இரவு 10 மணிக்கு அன்னை மற்றும் புனிதர்களின் உருவ சப்பர பவனி நடந்தது.

    10-ம் திருவிழாவான நேற்று காலை 6.30 மணிக்கு ஜெபமாலையும், காலை 7 மணிக்கு பெருவிழா திருப்பலியும் சாத்தான்குளம் மறை வட்ட முதன்மை குரு ரவிபாலன் தலைமையில் நடந்தது. தைலாபுரம் பங்குத்தந்தை ததேயுஸ் ராஜன் வரவேற்றார். சோமநாதபேரி பங்குத்தந்தை மைக்கிள் ஜெகதீஸ் மறையுரை ஆற்றினார்.

    இதில் பங்குத்தந்தைகள் சலேட் ஜெரால்ட், மணி, இருதயசாமி, கலைச்செல்வன், விஜயன் மற்றும் இறைமக்கள் திரளானோர் பங்கேற்றனர். காலை 10 மணிக்கு திருமுழுக்கு வழங்குதல் நிகழ்ச்சியும், காலை 11 மணிக்கு அன்னை மற்றும் புனிதர்களின் உருவ சப்பர பவனியும் நடந்தது. இதில் திரளானோர் பங்கேற்றனர். அன்று மாலை 5.30 மணிக்கு ஜெபமாலை, நற்கருணை பவனி தென் மண்டல பணிக்குழுக்கள் ஒருங்கி ணைப்பாளர் நெல்சன் பால்ராஜ் தலைமையில் நடந்தது. சவேரியார்புரம் பங்குத்தந்தை ரெமிஜியூஸ் மறையுரை ஆற்றினார். இரவு 10 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.

    • திருவிழாவை முன்னிட்டு தினமும் காலை 5.30 மணிக்கு ஜெபமாலை, நவநாள் திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, நற்கருணை ஆசீரும் நடக்கிறது.
    • சோமநாதபேரி பங்குத்தந்தை மைக்கிள் ஜெகதீஸ் மறையுரை ஆற்றுகிறார்.

    நாசரேத்:

    நாசரேத் அருகே உள்ள தைலாபுரம் பரிசுத்த உபகார மாதா ஆலய திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது.

    ஜெபமாலை

    திருவிழாவின் முதல் நாளான நேற்று முன்தினம் மாலை 7 மணிக்கு ஜெப மாலை, திருக்கொடியேற்றம், மிக்கேல் அதிதூதர் சப்பர பவனி, மறையுரை, நற்கரு ணை ஆசீர் நடைபெற்றது. வடவை மறைவட்ட முதன்மைக்குரு மார்ட்டின் தலைமை வகித்து கொடி யேற்றினார்.

    தைலாபுரம் பங்குத்தந்தை ததேயுஸ் ராஜன் வரவேற்றார். மங்களகிரி தூயவளன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் ராபின் ஸ்டான்லி மறையுரை ஆற்றினார். இதில் மன்னார்புரம் பங்குத்தந்தை எட்வர்ட், கள்ளிக்குளம் பனிமய அன்னை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் எஸ்.கே. மணி மற்றும் இறைமக்கள் திரளானோர் பங்கேற்றனர்.

    சப்பரபவனி

    திருவிழாவை முன்னிட்டு தினமும் காலை 5.30 மணிக்கு ஜெபமாலை, நவநாள் திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீரும் நடக்கிறது. வருகிற 26-ந்தேதி (செவ்வா ய்க்கிழமை) 9-ம் திருவிழா மாலை 6 மணிக்கு ஜெப மாலை, மறையுரை, திருவிழா சிறப்பு மாலை ஆராதனை தூத்துக்குடி மறைமாவட்ட குருகுல முதல்வர் பன்னீர் செல்வம் தலை மையில் நடக்கிறது. இந்த ஆராத னையில் கள்ளிக்குளம் பனிமய அன்னை மெட்ரிக் பள்ளி முதல்வர் மணி மறையுரை ஆற்றுகிறார். இதனை தொடர்ந்து இரவு 10 மணிக்கு அன்னையின் மற்றும் புனிதர்களின் திரு உருவ சப்பர பவனி நடக்கிறது.

    27-ந்தேதி (புதன்கிழமை) 10-ம்திருவிழா காலை 6.30 மணிக்கு ஜெபமாலையும், காலை 7 மணிக்கு பெருவிழா திருப்பலியும் சாத்தான்குளம் மறைவட்ட முதன்மைக்குரு ரவிபாலன் தலைமையில் நடக்கிறது. சோமநாதபேரி பங்குத்தந்தை மைக்கிள் ஜெகதீஸ் மறையுரை ஆற்றுகிறார். காலை 10 மணிக்கு திருமுழுக்கு வழங்கு தல் நிகழ்ச்சியும், காலை 11 மணிக்கு அன்னையின் மற்றும் புனிதர்களின் திருஉருவ சப்பர பவனியும் நடக்கிறது. அன்று மாலை 5.30 மணிக்கு ஜெபமாலை, நற்கருணை பவனி தெ ன்மண்டல பணிக்குழுக்கள் ஒருங்கி ணைப்பாளர் நெல்சன் பால்ராஜ் தலைமை யில் நடக்கிறது. சவேரி யார்புரம் பங்குத்தந்தை ரெமிஜியூஸ் மறையுரை ஆற்றுகிறார். இரவு 10 மணிக்கு இன்னிசை விருந்து நிகழ்ச்சி நடக்கிறது.

    ஏற்பாடுகளை தைலாபுரம் பரிசுத்த உபகார மாதா ஆலய பங்குத்தந்தை ததேயுஸ் ராஜன் தலைமையில் நிர்வாக கமிட்டி தலைவர் கிறிஸ்டோ பர், செயலாளர் ரவீந்திரன், பொருளாளர் பீற்றர், விழா கமிட்டி தலை வர் மனோ கரன், கமிட்டி உறுப்பினர்கள் டோலர், மரிய செல்வராஜ், தியா க்கோன், அந்தோணி வினோத், இருதய பார்த்தி பன், நோபட், ஜேசுராஜா, மரிய சுதாகர் மற்றும் விழாக்குழுவினர், இறை மக்கள் செய்துள்ளனர்.

    • நாசரேத் திருமறையூர் மறுரூப ஆலய வளாகத்தில் சர்வதேச ஓசோன் தினம் நடைபெற்றது.
    • இதில் கலந்து கொண்டவர்கள் இயற்கைப் பாதுக்காப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கையில் ஏந்திச் சென்றனர்.

    நாசரேத்:

    தூத்துக்குடி- நாசரேத் திருமண்டலம் சுற்றுச்சூழல் கரிசனைத் துறையின் சார்பாக நாசரேத் திருமறையூர் மறுரூப ஆலய வளாகத்தில் சர்வதேச ஓசோன் தினம் நடைபெற்றது. இதில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். ஓசோன் படலத்தின் தன்மைகள் அவற்றுள் ஏற்பட்டுள்ள சேதங்கள், ஓசோன் படலத்தினை காப்பதற்கான வழிமுறைகள் போன்றவைகளை துறையின் இயக்குநர் ஜாண்சாமுவேல் எடுத்துரைத்தார். இதில் பங்கு பெற்றவர்கள் இயற்கையை பாதுகாப்போம் என்ற உறுதிமொழியினை எடுத்துக் கொண்டனர்.

    விழாவின் நிறைவில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில் கலந்து கொண்டவர்கள் இயற்கைப் பாதுக்காப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கையில் ஏந்திச் சென்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுற்றுச்சூழல் கரிசனைத்துறையின் இயக்குநர் ஜாண் சாமுவேல் செய்திருந்தார்.

    • விழாவில் மாவட்ட துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) நேர்முக உதவியாளர் மதுரம் பிரைட்டன், தேவதாஸ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
    • முன்னதாக விழாவை முன்னிட்டு வணிகர்களுக்கான இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.

    நாசரேத்:

    நாசரேத் நகர வணிகர் சங்க 23-வது ஆண்டுவிழா ஜோதி மஹாலில் நடந்தது. சங்க தலைவர் ஜெபஸ் திலகராஜ் தலைமை தாங்கினார். நிர்வாகக்குழு உறுப்பினர் பாபு செல்வன் வரவேற்றார். தொழி லதிபர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார்.

    விழாவில் மாவட்ட துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) நேர்முக உதவியாளர் மதுரம் பிரைட்டன், சங்க நிர்வாகக்குழு உறுப்பி னர்கள் கிருஷ்ணராஜ், ரஞ்சன், மாமல்லன், தேவதாஸ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    இதில் நாசரேத்தை தலைமை இடமாக கொண்டு தனி தாலுகாவாக உருவாக்க அரசை கேட்பது, வணிகர்களுக்கு முதல்-அமைச்சரின் விரிவாக்க காப்பீடு திட்டத்தில் அடை யாள அட்டை வழங்குவது, நாசரேத் ரெயில் நிலை யத்தை பொது மக்களின் நலம் கருதி விரிவுப்படுத்தி எஸ்கலேட்டரை விரைவில் அமைக்க ெரயில்வே நிர்வாகத்தை கேட்பது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    தொடர்ந்து 2023- 2024-ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. இதில் ஜெபஸ் திலகராஜ் தலைவராகவும், ஆறுமுகம் துணை தலைவராகவும், செல்வன் செயலாளராகவும், சித்திக் துணை செயலாளராகவும், அகிலன் பொரு ளாளராகவும், நோவா சாலமோன், ஜெபராஜ், செல்வாஸ் ஆகியோர் புதிய நிர்வாகக்குழு உறுப்பினர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    முன்னதாக விழாவை முன்னிட்டு வணிகர்களுக்கான இலவச மருத்துவ பரிசோ தனை முகாம், மாவட்ட துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) நேர்முக உதவியாளர் மதுரம் பிரைட்டன் தலை மையில் உடையார்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் விஜயகுமார், மாவட்ட பயிற்சிக்குழு மருத்துவ அலுவலர் டாக்டர் ஜோசுவா ஆகியோர் முன்னிலையில் நடந்தது.

    சுகாதார ஆய்வாளர்கள் தியாகராஜன், ஞானராஜ் மற்றும் குழுவினர் வணிகர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர். இதில் வணிகர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் சங்க செயலாளர் செல்வன் நன்றி கூறினார்.

    • திருமண்டல உப-தலைவர் தமிழ்செல்வன் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
    • கல்லூரி வேலை வாய்ப்பு அலுவலர் ஜாண்வெஸ்லி வேலை வாய்ப்புகள் குறித்து பேசினார்.

    நாசரேத்:

    தூத்துக்குடி- நாசரேத் திருமண்டலத்தின் சார்பில் நாசரேத்தில் செயல்படும் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சியை நாசரேத் பேராலய தலைமைகுரு மர்காசிஸ் டேவிட் வெஸ்லி தொடங்கி வைத்தார். கல்லூரி பாடகர் குழுவினர் பாடல்கள் பாடினர். முதலாம்- ஆண்டு துறைத்தலைவர் சோபியா வேதபாடம் வசித்தார். கல்லூரி முதல்வர் கோவில்ராஜ் ஞானதாசன் வரவேற்று பேசினார்.

    திருமண்டல உப-தலைவர் தமிழ்செல்வன் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கினார். திருமண்டல லே செயலரும், கல்லூரி தாளாளருமான நீகர் பிரின்ஸ் கிப்ட்சன், கல்லூரி ஆட்சிமன்றகுழு உறுப்பினர் ராஜாசிங் ஹாரிஸ்டன் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு பேசினர்.

    கல்லூரி வேலை வாய்ப்பு அலுவலர் ஜாண்வெஸ்லி வேலை வாய்ப்புகள் குறித்து பேசினார். இதில் ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள் சாம்சன் மோசஸ், ஆசிரியர் பிரதிநிதி ஷெரீன், நாசரேத் சேகரகமிட்டி உறுப்பினர்கள் எபன், ஐசக், மர்காஷிஸ், ஜோனா, ஆசிரியர்கள், புதிதாக கல்லூரியில் சேர்ந்த மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியை ஆசிரியர்கள் ஜான் வெலிங்டன், வினோத், ஜெசிந்த் ஆகியோர் தொகுத்து வழங்கினர். முடிவில் கல்லூரி பர்சார் தனபால் நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் நீகர்பிரின்ஸ் கிப்ட்சன் தலைமையில் முதல்வர் கோவில்ராஜ் ஞானதாசன் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    • பேரணி பள்ளியில் தொடங்கி நாசரேத் பஸ் நிறுத்தம் வரை நடந்தது.
    • மாணவ, மாணவிகள் கையில் பதாகைகளை ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர்.

    நாசரேத்:

    நாசரேத் நகரில் அமைந்துள்ள பிரகாசபுரம் ஜேம்ஸ் மெமோரியல் மேல்நிலை பள்ளியில் 'பசுமையை நோக்கி' என்ற தலைப்பில் பசுமையை காப்பது, மரங்களை நடுவது குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. எஸ்.டி.ஏ. பள்ளிகளின் தெற்கு மண்டல ஆய்வாளர் தங்கராஜ் தலைமை தாங்கினார்.

    பேரணியை நாசரேத் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பேரணி பள்ளியில் தொடங்கி நாசரேத் பஸ் நிறுத்தம் வரை நடந்தது. இதில் மரங்களை நடுவோம் மழை பெறுவோம், மரங்களை வெட்டாதீர், பசுமை யை காப்போம் போன்ற வாசகங்களை கொண்ட பதாகைகளை ஏந்தியவாறு மாணவ, மாணவிகள் ஊர்வலமாக சென்ற னர். பேரணியில் சப்-இன்ஸ்பெ க்டர்கள் ராய்ஸ்டன், வை குண்டதாஸ், ஆசிரியர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொ ண்டனர். பள்ளி முதல்வர் எட்வின் சாமுவேல் நன்றி கூறினார்.

    • பேரணியானது நாசரேத் அருகிலுள்ள மூக்குப்பீறி தூய மாற்கு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கியது.
    • இதனைத் தொடர்ந்து மர்காஷிஸ் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

    நாசரேத்:

    தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல சுற்றுச்சூழல் கரிசனைத்துறை மற்றும் நாசரேத் ஒய்.எம்.சி.ஏ. சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. பேரணியானது நாசரேத் அருகிலுள்ள மூக்குப்பீறி தூய மாற்கு மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கியது.சேகர குரு ஞானசிங் எட்வின் ஆரம்ப ஜெபம் செய்தார். பள்ளி தாளாளர் செல்வின், தலைமை ஆசிரியர் எட்வர்ட், தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல உபத்தலைவர் தமிழ் செல்வன், நாசரேத் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியை தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல லே செயலர் நீகர் பிரின்ஸ் கிப்ட்சன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி மூக்குப்பீறி தூய மாற்கு பள்ளியிலிருந்து புறப்பட்டு பஸ் நிலையம், சந்தி பஜார் வழியாக சென்று மர்காஷியஸ் கல்லூரி வந்து அடைந்தது.

    நிகழ்ச்சியை திருமண்டல தொடர்புத்துறை செயலர் பாஸ்கரன் தொகுத்து வழங்கினார். பேரணியில் தென்னிந்திய திருச்சபை சுற்றுச்சூழல் கரிசனைத்துறை இணை இயக்குனர் ஜாண் சாமு வேல், நாசரேத் பேரூராட்சி தலைவி நிர்மலா ரவி, முன்னாள் பேரூராட்சி தலைவர் ரவி செல்வகுமார், நாசரேத் புனித லூக்கா சமுதாயக் கல்லூரி தாளா ளர் செல்வின், முன்னாள் மூக்குப்பீறி கூட்டுறவு வங்கி மேலாளர் ஆனந்த ஜோதிபாலன், அருள்மணி, முன்னாள் நாசரேத் சேகர பொருளாளர் மர்காஷிஸ், உதவி ஆய்வாளர் ராய்ஸ்டன் மற்றும் நாசரேத் பகுதி பள்ளி, கல்லூரி, மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.

    இதனைத் தொடர்ந்து மர்காஷிஸ் கல்லூரி வளாகத்தில மரக்கன்றுகள் நடப்பட்டன. தூய யோ வான் பேராலய தலைமை குரு மர்காஷிஸ் டேவிட் நிறைவு ஜெபம் செய்தார்.

    ஏற்பாடுகளை நாசரேத் ஒய்.எம்.சி.ஏ. தலைவர் எபனேசர், செயலர் சாமு வேல்ராஜ், தென்னிந்திய திருச்சபை சுற்றுச்சூழல் கரிசனைத்துறை இணை இயக்குனரும்,தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல சுற்றுச்சூழல் கரிச னைத்துறை செயலருமான ஜாண்சாமுவேல் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். 

    • புறையூர் ஊராட்சியில் கலெக்டரின் மக்கள் தொடர்பு முகாம் கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்றது
    • முகாமில் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உள்பட மொத்தம் 111 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    நாசரேத்:

    தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள புறையூர் ஊராட்சியில் கலெக்டரின் மக்கள் தொடர்பு முகாம் கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்றது. முகாமில் மாற்றுத்திற னாளிகள் உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, இயற்கை மரண உதவி தொகை, வேளாண் கருவிகள், இடுபொருட்கள் என மொத்தம் 111 பயனாளிகளுக்கு ரூ. 29 லட்சத்து 51 ஆயிரத்து 432- மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார்.

    முகாமில் திருச்செந்தூர் வருவாய் ஆர்.டி.ஓ. புகாரி, சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் ஜேன் கிறிஸ்டி பாய், வேளாண் இணை இயக்குநர் பாலதண்டாயுதபாணி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் நாணயம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் விக்னேஷ், சமூக நல அலுவலர் ரதிதேவி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் பொற்செல்வன், மாவட்ட வழங்கல் அலுவலர் அபுல்காசிம், ஏரல் தாசில்தார் கைலாசகுமாரசாமி, தனி தாசில்தார் பேச்சிமுத்து, புறையூர் ஊராட்சி மன்றத்தலைவர் செல்வக்கு மார் மற்றும் பல்வேறுதுறை அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • நாசரேத் சப்-இன்ஸ்பெக்டர் எபநேசர் தலைமையில் போலீசார் அப்பகுதியில் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
    • அப்போது அங்கு நிறுத்தியிருந்த காரை சந்தேகத்தின் பேரில் சோதனை நடத்தினர்.

    நாசரேத்:

    நாசரேத் அருகே உள்ள அகப்பைக்குளத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் சட்ட விரோதமாக விற்பனை செ ய்யப்படுவதாக போலீ சாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நாசரேத் சப்-இன்ஸ்பெக்டர் எபநேசர் தலைமையில் போலீசார் அப்பகுதியில் தீவி ரமாக கண்காணித்து வந்தனர்.

    அப்போது அங்கு நிறுத்தியிருந்த காரை சந்தேகத்தின் பேரில் சோதனை நடத்தினர். அதில் கார் டிக்கியில் 110 புகையிலை பாக்கெட்டுகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை கைப்பற்றிய போலீசார், காரின் உரிமை யாளரான அகப்பைகுளம் 1-வது தெருவை சேர்ந்த செல்வன் விக்டர் (வயது58) என்பவரை கைது செய்து, காரையும் பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    ×