search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாசரேத் அருகே பரிசுத்தவான்கள் ஆலய பிரதிஷ்டை விழா
    X

    நாசரேத் அருகே பரிசுத்தவான்கள் ஆலய பிரதிஷ்டை விழா

    • வெள்ளரிக்காயூரணி சகல பரிசுத்தவான்கள் ஆலய பிரதிஷ்டை பண்டிகை 6 நாட்கள் நடைபெற்றது
    • பார்வை இழந்தோர் பாடசாலை மாணவ, மாணவிகளின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது

    நாசரேத்:

    நாசரேத் அருகிலுள்ள வெள்ளரிக்காயூரணி சகல பரிசுத்தவான்கள் ஆலய பிரதிஷ்டை பண்டிகை மற்றும் அசன பண்டிகை விழா 6 நாட்கள் நடைபெற்றது.

    முதல் நாள் இரவு ஊரை சுற்றி ஆயத்த ஜெப பவனி நடைபெற்றது. 2-வது நாள் மாலையில் கன்வென்ஷன் கூட்டத்தில் ராஜன் அகஸ்டின் செய்தி கொடுத்தார். 3, 4-வது நாள் இரவு கூட்டங்களில் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியர் எட்வின் சாம்ராஜ் சிறப்பு செய்தி கொடுத்தார். 5-வது நாள் மாலை பண்டிகை ஆயத்த ஆராதனை மற்றும் ஞானஸ்தான ஆராதனை மூக்குபேறி சேகரத்தலைவர் டேனியல்ஞான பிரகாசம் தலைமையில் நடைபெற்றது. இதில் ஜெபராஜ் தேவசெய்தி கொடுத்தார். இரவு 9 மணிக்கு பார்வை இழந்தோர் பாடசாலை மாணவ, மாணவிகளின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

    6-வது நாள் பிரதிஷ்டைப் பண்டிகை ஆராதனையும் பரிசுத்த நற்கருணை, ஆராதனையும் மூக்குப்பேறி சேகர தலைவர் டேனியல் ஞானப்பிரகாசம் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரைன்ட்நகர் சேகரத் தலைவரும், ஜி.எம்.எஸ். பொதுச் காரியதசியுமான டேனியல் எட்வின் சிறப்பு செய்தி கொடுத்தார். மாலை 3 மணிக்கு அசனவிருந்து நடைபெற்றது. ஏற்பாடுகளை சேகரத் தலைவர் டேனியல் ஞானப்பிரகாசம் தலைமையில் சபை ஊழியர் ஜாண் வில்சன் முன்னிலையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    Next Story
    ×