search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல ஆண்கள் ஐக்கிய சங்கம் சார்பில் கிறிஸ்துமஸ் கீத ஆராதனை
    X

    கிறிஸ்துமஸ் கீத ஆராதனை நடைபெற்ற போது எடுத்த படம்

    தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல ஆண்கள் ஐக்கிய சங்கம் சார்பில் கிறிஸ்துமஸ் கீத ஆராதனை

    • கிறிஸ்துமஸ் கீத ஆராதனை நாசரேத் தூய யோவான் பேராலயத்தில் நடைபெற்றது.
    • சபை மன்றங்களிலுள்ள அந்தந்த சேகர ஆண்கள் கிறிஸ்துமஸ் சிறப்பு பாடல்கள் பாடினர்.

    நாசரேத்:

    தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலம் ஆண்கள் ஐக்கிய சங்கம் சார்பில் கனோன் ஆர்தர் மர்காஷிஸ் சபை மன்ற அளவிலான கிறிஸ்துமஸ் கீத ஆராதனை நாசரேத் தூய யோவான் பேராலயத்தில் நடைபெற்றது.

    லே செயலாளர் நீகர் பிரின்ஸ் கிப்ட்சன், பொருளாளர் மோகன்ராஜ் அருமைநாயகம், குருத்துவ செயலாளர் இம்மானுவேல் வான்ஸ்றக், உப தலைவர் தமிழ்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சபை மன்றங்களிலுள்ள அந்தந்த சேகர ஆண்கள் கிறிஸ்துமஸ் சிறப்பு பாடல்கள் பாடினர். தேவ செய்தி வழங்கப்பட்டது.

    ஏற்பாடுகளை பேராயரும், பிரதமப் பேராயரின் ஆணையாளருமான தீமோத்தேயு ரவீந்தர் தலைமையில் நாசரேத் தூய யோவான் பேராலய குருவானவர்கள் பொன் செல்வின் அசோக்குமார், மர்காஷியஸ் டேவிட் வெஸ்லி, கனோன் ஆர்தர் மர்காஷிஸ் சபை மன்ற தலைவர் வெல்ட்டன் ஜோசப், திருமண்டல ஆண்கள் ஐக்கிய சங்க இயக்குநர், செயலர் ராபின்சன் ஆகியோர் செய்திருந்தனர். விழாவில் ஐக்கிய விருந்து பரிமாறப்பட்டது.

    Next Story
    ×