search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Free cycle"

    • கமுதியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.
    • மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமையில் பரமக்குடி கோட்டாட்சியர் அப்துல் ரத்தாப் முன்னிலையில் நடைபெற்றது.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பேரையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமையில் பரமக்குடி கோட்டாட்சியர் அப்துல் ரத்தாப் முன்னிலையில் நடைபெற்றது.

    கமுதி தாசில்தார் சேதுராமன் வரவேற்றார். அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்டு தமிழக அரசின் இலவச சைக்கிள்களை மாணவ, மாணவிகளுக்கு வழங்கி னார்.

    விழாவில் கமுதி ஊராட்சி ஒன்றிய பெரும் தலைவர் தமிழ்செல்வி போஸ், எம்.பி. நவாஸ் கனி, மாவீரன் வேலுசாமி, ஒன்றிய தி.மு.க. செயலாளர் வாசு தேவன், முதுகுளத்தூர் ஒன்றிய செயலாளர்கள் பூபதி மணி, கோவிந்தராஜ், மணலூர் ராமர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருச்செந்தூர் அருகே புனித ஜோசப் மேல்நிலை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது
    • முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் சொன்னதை போல் லட்சியத்தை அடைய கனவு காண வேண்டும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் அருகே புனித ஜோசப் மேல்நிலை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் முன்னிலை வகித்தார். அடைக்கலாபுரம் புனித சூசை அறநிலையம் இயக்குனர் பிரொமில்டன் லோபோ வரவேற்று பேசினார்.

    விழாவில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பள்ளி மாணவ, மாணவிகள் 65 பேருக்கு இலவச சைக்கிள் வழங்கி பேசியதாவது:-

    தமிழ்நாடு 2-வது இடம்

    சுகாதாரமும், கல்வியும் இரு கண்கள் என்ற வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுகாதாரத்தை, கல்வியை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மேலும் கல்வித்துறைக்கு பட்ஜெட்டில் ரூ.35 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். கல்வி செல்வத்தை மட்டும்தான் யாரும் எடுத்து செல்ல முடியாது. அது உங்களோடே இருக்கும்.

    கல்வி வளர்ந்தால் தான் ஒரு நாடு வளரும். கடலோர மக்களுக்கு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தை நிறுவிய பெருமை இந்த கல்வி நிறுவனத்திற்கு உண்டு. இந்தியாவிலேயே கல்வியில் தமிழ்நாடு 2-வது இடத்தில் இருக்கிறது. பெருந்தலைவர் காமராஜர் முதல்-அமைச்சராக இருந்த போது பள்ளிக்கு வராத மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்பதற்காக, மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார்.

    எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தார். முத்தமிழறிஞர் கலைஞர் சத்தான வகையில் மாணவ, மாணவிகள் இருக்க வேண்டும் என்பதற்காக முட்டைகள் வழங்கி உண்மையான சத்துணவு திட்டமாக மாற்றினார்கள். தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு சிறுபான்மையின மக்களை காக்கின்ற அரசாக விளங்கி வருகிறது.

    ஆசிரியரின் வழிகாட்டுதல்

    முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் சொன்னதை போல் லட்சியத்தை அடைய கனவு காண வேண்டும். மாணவர்களாக இருக்கின்ற நீங்கள் தாய், தந்தையரின் சொல்லை கேட்டும், அதுபோல ஆசிரியரின் வழிகாட்டுதலின் படியும் சிறப்பாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர், திருச்செந்தூர் யூனியன் வீரபாண்டியன்பட்டணம் பஞ்சாயத்தில் ரூ. 28 லட்சத்து 12 ஆயிரம் மதிப்பில் 6 புதிய விநியோக மின் மாறிகளை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார்.

    கலந்து கொண்டவர்கள்

    நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, திருச்செந்தூர் உதவி கலெக்டர் குருசந்திரன், வாமணன், மண்டல துணைத் தாசில்தார் தங்கமாரி, அடைக்கலாபுரம் புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பிரம்மநாயகம், திருச்செந்தூர் யூனியன் ஆணையாளர் அன்றோ, வட்டார வளர்ச்சி அலுவலர் பொங்கலரசி, வீரபாண்டியன்பட்டணம் பஞ்சாயத்து தலைவர் எல்லமுத்து, துணை தலைவர் ஜெகதிஷ் வி. ராயன், வீரபாண்டியன்பட்டினம் (ரூரல்) பஞ்சாயத்து தலைவர் வசந்தி, மாநில தி.மு.க. வர்த்தக அணி இணை செயலாளர் உமரிசங்கர், மாவட்ட அவை தலைவர் அருணாசலம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், தூத்துக்குடி மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள், திருச்செந்தூர் கோட்ட மின் வினியோக செயற்பொறியாளர் விஜயசங்கரபாண்டியன், உதவி செயற்பொறியாளர் பேச்சுமுத்து, கட்டுமான மற்றும் மேம்பாட்டு பொறியாளர் ராம்மோகன், உதவி பொறியாளர்கள் முத்துராமன், ராஜா ராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாணவர்கள் விளையாட்டு துறையிலும் மேம்பட முதல்-அமைச்சர் கோப்பை என்ற திட்டத்தில் விளையாட்டுப் போட்டிகளை நடை முறைப்படுத்தியுள்ளார்.
    • மேலும் மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற 11-ம் வகுப்பு மாணவி ஜெயராணிக்கு பரிசு வழங்கப்பட்டது.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி யில் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி தலைமை தாங்கி னார். மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, ஆறுமுகநேரி பேரூராட்சி துணைத்தலைவர் கல்யாண சுந்தரம், திருச்செந்தூர் உதவி கலெக்டர் குரு சந்திரன், தாசில்தார் வாமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் சுப்புலெட்சுமி வரவேற்று பேசினார்.

    விழாவில் தமிழக கால்நடை துறை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் களை வழங்கி சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவ-மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அவர்கள் விளையாட்டு துறையிலும் மேம்பட முதல்-அமைச்சர் கோப்பை என்ற திட்டத்தில் விளையாட்டுப் போட்டிகளை நடை முறைப்படுத்தியுள்ளார்.

    மாணவிகள் உயர்கல்வி பெற்றால் தான் அவர்களின் குடும்பம் மேம்படும். அதன் மூலம் தமிழகமும் பெருமை அடையும். அதனால் தான் இவர்களை ஊக்குவிக்கும் வகையில் அரசு பள்ளிகளில் பயின்று கல்லூரிக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப் படுகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மேலும் மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற 11-ம் வகுப்பு மாணவி ஜெயராணிக்கு பரிசு வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாநில தி.மு.க. வர்த்தக அணி இணை செயலாளர் உமரி சங்கர், மாவட்ட இளை ஞரணி அமைப்பாளர் ராம ஜெயம், அவைத்தலைவர் அருணாச்சலம், மாவட்ட கவுன்சிலர் செல்வகுமார், உதவி திட்ட அலுவலர் முனியசாமி, திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ், மாவட்ட அறங்காவலர் உறுப்பினர் வாள்சுடலை, ஆறுமுகநேரி நகர தி.மு.க. செயலாளர் நவநீத பாண்டியன், ஆறுமுகநேரி பேரூராட்சி கவுன்சிலர்கள் வெங்க டேசன், ஆறுமுகநயினார், சந்திரசேகர், லெட்சுமணன், புனிதா சேகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • நாசரேத் தூய யோவான் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது
    • மொத்தம் 220 மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது

    நாசரேத்:

    நாசரேத் தூய யோவான் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. பேரூராட்சி தலைவி நிர்மலா ரவி தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் சாந்தகுமாரி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை மாசில்லா வரவேற்றார். மொத்தம் 220 மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.

    இதில் முன்னாள் பேரூராட்சி தலைவர் ரவி செல்வக்குமார், பேரூராட்சி துணைத்தலைவர் அருண் சாமுவேல் என்ற தம்பு, வார்டு கவுன்சிலர்கள் அதிசய மணி, சாமுவேல், காமா ஜெபக்குழு நிறுவனர் சாமுவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், பேரிலோவன்பட்டி தி.வெ.அ நல்லழகு நாடார் மேல்நிலைப்பள்ளியில் 95-மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
    • மாணவ- மாணவிகளிடம் எம்.எல்.ஏ. பொது அறிவு கேள்விகள் கேட்டு பதில் அளித்த மாணவ- மாணவிகளுக்கு பரிசுத்தொகை வழங்கி மரங்கள் வளர்ப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், பேரிலோவன்பட்டி தி.வெ.அ நல்லழகு நாடார் மேல்நிலைப்பள்ளியில் 95-மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

    மேலும் மாணவ- மாணவிகளிடம் எம்.எல்.ஏ. பொது அறிவு கேள்விகள் கேட்டு பதில் அளித்த மாணவ- மாணவிகளுக்கு பரிசுத்தொகை வழங்கி மரங்கள் வளர்ப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் பன்னீர்செல்வம், பள்ளி செயலர் ரவீந்திரன், பள்ளி நிர்வாக குழு உறுப்பினர் செல்வகுமார், விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், ஒன்றிய கவுன்சிலர் முனியசாமி, சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உட்பட ஆசிரிய- ஆசிரியைகள் உட்பட மாணவ- மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • வாசுதேவநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
    • சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ., நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ., யூனியன் சேர்மனும் வாசு வடக்கு ஒன்றிய செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் ஆகியோர் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினர். யூனியன் துணை சேர்மன் சந்திரமோகன் முன்னிலை வகித்தார்.

    இந்நிகழ்ச்சியில் தென்மலை ஒன்றிய கவுன்சிலர் முனியராஜ், வாசு பேரூராட்சி வார்டு கவுன்சிலர் பூமாரி, கிளை செயலாளர் ஸ்டாலின், ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் கிருஷ்ணகுமார், பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயசீலன், உள்ளார் மணிகண்டன், விக்கி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியம் நெல்கட்டும்செவல் மாவீரன் பூலித்தேவன் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.
    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவ -மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியம் நெல்கட்டும்செவல் மாவீரன் பூலித்தேவன் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.

    யூனியன் சேர்மனும் வடக்கு ஒன்றிய செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி மாணவ -மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். யூனியன் துணை சேர்மன் சந்திரமோகன் முன்னிலை வகித்தார்.

    இந்நிகழ்ச்சியில் யூனியன் சேர்மன் பேசியதாவது:- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவ -மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மேலும் இப்பள்ளியின் சார்பாக வைக்கப்பட்ட அடிப்படை கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றி தரப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் நெல்கட்டும்செவல் ஒன்றிய கவுன்சிலர் விமலா மகேந்திரன், தென்மலை ஒன்றிய கவுன்சிலர் முனியராஜ், கிளை செயலாளர் ஸ்டாலின், பள்ளி தலைமை ஆசிரியர் ராமசாமி, அரசு ஒப்பந்ததாரர் பூசைத்துரை, உள்ளார் மணிகண்டன், விக்கி, தி.மு.க. நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.


    • திருவேங்கடம் தாலுகா குருவிகுளம் கோபால் நாயக்கர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலை இல்லா சைக்கிள்களை ராஜா எம்.எல்.ஏ. வழங்கினார்.
    • நிகழ்ச்சியில் தெற்கு குருவிகுளம் ஊராட்சி மன்ற தலைவர் குணசுந்தரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சங்கரன்கோவில்:

    திருவேங்கடம் தாலுகா குருவிகுளம் கோபால் நாயக்கர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலை இல்லா சைக்கிள்களை ராஜா எம்.எல்.ஏ. வழங்கினார்.

    நிகழ்ச்சியில் தெற்கு குருவிகுளம் ஊராட்சி மன்ற தலைவர் குணசுந்தரி, ஒன்றிய கவுன்சிலர் மணிமாலா சுரேஷ், மாவட்ட கவுன்சிலர் சுதா பிரபாகரன், சமூக ஆர்வலரும், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினருமான அழகை கண்ணன், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் மாடசாமி, கல்வி மேலாண்மை குழு தலைவர் மைதிலி, தி.மு.க. ஒன்றிய செயலாளர் கடற்கரை மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • விளாத்திகுளம் மற்றும் சிவஞானபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பள்ளியில் மரங்களை வளர்த்து மாணவர்கள் பராமரித்தால் தனது சொந்த நிதியிலிருந்து 1000 வழங்குவதாக மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. மாணவர்கள் மத்தியில் பேசினார்.

    விளாத்திகுளம்:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மற்றும் சிவஞானபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    விளாத்திகுளம் பள்ளி மாணவர்களுக்கு 294 விலையில்லா சைக்கிள்களும், சிவஞானபுரம் பள்ளியில் 95 சைக்கிள்களையும் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் மத்தியில் பேசிய மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., மரங்கள் வளர்ப்பதன் பயன் குறித்து எடுத்துரைத்தார். மரங்கள் நமக்கும் நமது நாட்டிற்கும் மிகப்பெரிய பயனை கொடுத்து வருகிறது படிப்பின் மூலம் வாழ்க்கையில் வெற்றி அடைந்தவர்களை விட மரங்கள் வைத்து வாழ்க்கையில் வெற்றி அடைந்தவர்கள் அதிகம்.

    எனவே ஒவ்வொருவரும் மரம் வளர்க்க வேண்டும். மேலும் இப்பள்ளியை விட்டு மாணவர்கள் வெளியே செல்வதற்கு முன் ஒரு மரத்தையாவது நட்டு வைத்து செல்ல வேண்டும். அப்படி இப்பள்ளியில் மரங்களை வளர்த்து மாணவர்கள் பராமரித்தால் தனது சொந்த நிதியிலிருந்து 1000 வழங்குவதாக மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. மாணவர்கள் மத்தியில் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் சின்னராசு, விளாத்திகுளம் பள்ளி தலைமை ஆசிரியர் ரோஸ்லின் சாந்தி, சிவஞானபுரம் பள்ளி தலைமை ஆசிரியர் கண்ணன், விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, பேரூராட்சி தலைவர் அய்யன்ராஜ், விளாத்திகுளம் நகர செயலாளர் வேலுச்சாமி, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், மாவட்ட கவுன்சிலர் ஞானகுருசாமி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள்

    இம்மானுவேல், மகேந்திரன், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர் ராஜபாண்டி, வார்டு செயலாளர்கள் ஜெயசங்கர், ஸ்டாலின் கென்னடி, வார்டு கவுன்சிலர் குறிஞ்சி, சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர், உட்பட ஆசிரிய- ஆசிரியைகள் பலர் கலந்து கொண்டனர்.

    • ஆழ்வார்திருநகரி இந்து மேல்நிலை பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.
    • கிராமப் பகுதியில் இருந்து வரும் மாணவிகளுக்கு பஸ் கிடைக்கவில்லை பள்ளிக்கு மாணவர்கள் வராமல் இருந்து விடக்கூடாது என நல்ல எண்ணத்தில் இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    தென்திருப்பேரை:

    ஆழ்வார்திருநகரி இந்து மேல்நிலை பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.

    விழாவிற்கு இந்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராமசாமி வரவேற்றார். இந்து மேல்நிலைப்பள்ளி தலைவர் சந்தான கோபாலன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அய்யப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளிச் செயலர் ஆதிநாதன் சிறப்புரை ஆற்றினார்.

    சிறப்பு விருந்தினராக ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி 12-ம் வகுப்பு மாணவ- மாணவிகள் 82 பேருக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழக அரசினால் வழங்கப்படும் இலவச சைக்கிள்களை கிராம பகுதியில் இருந்து வந்து செல்லும் மாணவ- மாணவிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என கருதுகிறேன். நீங்கள் படிப்பில் கவனம் செலுத்தி பள்ளியில் முதல் இடம் பெற்று முதல் பட்டதாரியாகவும் இருக்க வேண்டும். கிராமப் பகுதியில் இருந்து வரும் மாணவிகளுக்கு பஸ் கிடைக்கவில்லை பள்ளிக்கு மாணவர்கள் வராமல் இருந்து விடக்கூடாது என நல்ல எண்ணத்தில் இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதை சிறந்த முறையில் பயன்படுத்தி பள்ளிக்கு தவறாமல் வர வேண்டும். சாதாரண குடும்பத்தில் இருக்கிறோம் என நினைக்காமல் நன்றாக படித்து முன்னேற வேண்டும். உங்கள் குடும்பம் முன்னேற படிப்பில் கவனம் செலுத்தி நன்றாக படித்து நல்ல பதவிக்கு வர வேண்டுமென ஆசைப்படுகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணைத் தலைவர் சங்கர், ஆழ்வார் திருநகரி வட்டார தலைவர் கோதண்டராமன், மாநில பொதுக்குழு உறுப்பினர் தாசன், ஆழ்வார் திருநகரி பேரூராட்சி தலைவி சாரதா பொன்னி இசக்கி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் காங்கிரஸ் எடிசன், சுரேஷ், முன்னாள் பேரூராட்சி தலைவர் ஆதிநாதன், தி.மு.க. நகர செயலாளர் கோபிநாத், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி பாலசந்திரன்,

    இளைஞர் காங்கிரஸ் முன்னாள் மாவட்ட தலைவர் ஜெயசீலன், ஊடகப்பிரிவு முத்து மணி, ஸ்ரீவைகுண்டம் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜெபஸ் பிளஸ்வின், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் இசை சங்கர், ஆழ்வை வட்டார பொருளாளர் விஜய் கரன், ஊடகப்பிரிவு மரியராஜ், நாசரேத் நகர காங்கிரஸ் நிர்வாகி கெர்சோம் கிறிஸ்டியான், ஆல்வின், வட்டார செயலாளர் ஆறுமுகநயினார், வட்டார செயலாளர் சேகர், வட்டார இளைஞர் அணி செயலாளர் சண்முகம், உள்பட பலர் கலந்து கொண்டனர். முதுகலை ஆசிரியர் ராஜா நன்றி கூறினார்.

    • ராஜபாளையம் அன்னப்பராஜா பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.
    • தலைமையாசிரியர் ரமேஷ் வரவேற்றார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா பள்ளிச்செயலர் கிருஷ்ணமூர்த்தி ராஜா தலைமையில் நடந்தது. தலைமையாசிரியர் ரமேஷ் வரவேற்றார். ராஜபாளையம் நகர்மன்ற தலைவர் பவித்ரா ஷியாம்ராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விலையில்லா சைக்கிள்களை மாணவ,மாணவிகளுக்கு வழங்கி பேசினார்.

    ராமச்சந்திர ராஜா அறக்கட்டளை தாளாளர் மஞ்சுளா கிருஷ்ணமூர்த்திராஜா, அறக்கட்டளை உறுப்பினர்கள் ராம்விஷ்ணு ராஜா, ராம்வெங்கட்ராஜா மற்றும் ராகஜோதி ராம்விஷ்ணு ராஜா, கருத்தாளர்கள் சிவகுமார், பழனியப்பன் ஆகியோர் கலந்துகொண்டனர். உதவி தலைமையாசிரியர் மாரியப்பன் நன்றி கூறினார்.

    • விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாண விகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • விழுப்புரம் காம ராஜர் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட நான்கு பள்ளிகளில் படிக்கும் பிளஸ் ஒன் மாணவ மாணவிகளுக்கு 1894 பேருக்கு ஒரு கோடி மதிப்பிலான சைக்கிள் வழங்கினார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் கல்வி மாவட்டத்தின் சார்பில் இன்று விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாண விகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ண பிரியா தலைமை தாங்கினார். விழுப்புரம் நகரசபை தலைவர் தமிழ்ச்செல்வி சக்கரை வாழ்த்துரை வழங்கினார். முன்னதாக அனைவரையும் விழுப்புரம் மாவட்ட கல்வி அலுவலர் காளிதாஸ் வரவேற்றார். 

    விழாவில் சிறப்பு விருந்தினராக விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் லட்சுமணன் கலந்து கொண்டு விழாவில் பேரூரையாற்றி விழுப்புரம் அரசு மேல்நிலைப்பள்ளி , விழுப்புரம் நகராட்சி பீமநாயக்கன் ,மேல்நிலைப் பள்ளி கீழ்பெரும்பாக்கம் நகராட்சி மேல்நிலைப் பள்ளி, விழுப்புரம் காம ராஜர் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட நான்கு பள்ளிகளில் படிக்கும் பிளஸ் ஒன் மாணவ மாணவிகளுக்கு 1894 பேருக்கு ஒரு கோடி மதிப்பி லான சைக்கிள் வழங்கினார். முடிவில்விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சசிகலா நன்றி கூறினார்.

    ×