search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆழ்வார்திருநகரி பள்ளியில் 82 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள்- ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. வழங்கினார்
    X

    இந்து மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. வழங்கிய காட்சி.

    ஆழ்வார்திருநகரி பள்ளியில் 82 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள்- ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. வழங்கினார்

    • ஆழ்வார்திருநகரி இந்து மேல்நிலை பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.
    • கிராமப் பகுதியில் இருந்து வரும் மாணவிகளுக்கு பஸ் கிடைக்கவில்லை பள்ளிக்கு மாணவர்கள் வராமல் இருந்து விடக்கூடாது என நல்ல எண்ணத்தில் இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    தென்திருப்பேரை:

    ஆழ்வார்திருநகரி இந்து மேல்நிலை பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.

    விழாவிற்கு இந்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராமசாமி வரவேற்றார். இந்து மேல்நிலைப்பள்ளி தலைவர் சந்தான கோபாலன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அய்யப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளிச் செயலர் ஆதிநாதன் சிறப்புரை ஆற்றினார்.

    சிறப்பு விருந்தினராக ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி 12-ம் வகுப்பு மாணவ- மாணவிகள் 82 பேருக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழக அரசினால் வழங்கப்படும் இலவச சைக்கிள்களை கிராம பகுதியில் இருந்து வந்து செல்லும் மாணவ- மாணவிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என கருதுகிறேன். நீங்கள் படிப்பில் கவனம் செலுத்தி பள்ளியில் முதல் இடம் பெற்று முதல் பட்டதாரியாகவும் இருக்க வேண்டும். கிராமப் பகுதியில் இருந்து வரும் மாணவிகளுக்கு பஸ் கிடைக்கவில்லை பள்ளிக்கு மாணவர்கள் வராமல் இருந்து விடக்கூடாது என நல்ல எண்ணத்தில் இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதை சிறந்த முறையில் பயன்படுத்தி பள்ளிக்கு தவறாமல் வர வேண்டும். சாதாரண குடும்பத்தில் இருக்கிறோம் என நினைக்காமல் நன்றாக படித்து முன்னேற வேண்டும். உங்கள் குடும்பம் முன்னேற படிப்பில் கவனம் செலுத்தி நன்றாக படித்து நல்ல பதவிக்கு வர வேண்டுமென ஆசைப்படுகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணைத் தலைவர் சங்கர், ஆழ்வார் திருநகரி வட்டார தலைவர் கோதண்டராமன், மாநில பொதுக்குழு உறுப்பினர் தாசன், ஆழ்வார் திருநகரி பேரூராட்சி தலைவி சாரதா பொன்னி இசக்கி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் காங்கிரஸ் எடிசன், சுரேஷ், முன்னாள் பேரூராட்சி தலைவர் ஆதிநாதன், தி.மு.க. நகர செயலாளர் கோபிநாத், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி பாலசந்திரன்,

    இளைஞர் காங்கிரஸ் முன்னாள் மாவட்ட தலைவர் ஜெயசீலன், ஊடகப்பிரிவு முத்து மணி, ஸ்ரீவைகுண்டம் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜெபஸ் பிளஸ்வின், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் இசை சங்கர், ஆழ்வை வட்டார பொருளாளர் விஜய் கரன், ஊடகப்பிரிவு மரியராஜ், நாசரேத் நகர காங்கிரஸ் நிர்வாகி கெர்சோம் கிறிஸ்டியான், ஆல்வின், வட்டார செயலாளர் ஆறுமுகநயினார், வட்டார செயலாளர் சேகர், வட்டார இளைஞர் அணி செயலாளர் சண்முகம், உள்பட பலர் கலந்து கொண்டனர். முதுகலை ஆசிரியர் ராஜா நன்றி கூறினார்.

    Next Story
    ×