search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister Anitha Radhakrishnan"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பட்டமளிப்பு விழாவில் 1,166 பட்டதாரிகளுக்கு பட்டங்களை கவர்னர் ஆர்.என்.ரவி வழங்க உள்ளார்.
    • பல்கலை. துணைவேந்தருக்கு அரசின் ஒப்புதல் இல்லாத நிலையில், மேலும் ஒரு ஆண்டு பதவியை நீட்டித்து கவர்னர் ஆர்.என்.ரவி அண்மையில் உத்தரவிட்டார்.

    சென்னை:

    தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக 23-வது பட்டமளிப்பு விழா வேப்பேரியில் இன்று நடந்தது. கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். துணை தலைமை இயக்குனர் ராகவேந்திர பட்டா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    விழாவில் கால்நடைத்துறை அமைச்சரும், பல்கலைக்கழக இணைவேந்தருமான அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொள்வார் என அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

    ஆனால் அவர் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார். கவர்னர் ஆர்.என்.ரவி 1166 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் மற்றும் மெடல்கள் வழங்கினார்.

    கேரளாவை சேர்ந்த டிரைவர் விஷ்ணுவிற்கு 13 விருதுகளை அவர் வழங்கி பாராட்டினார். விழாவில் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வகுமார் வரவேற்றார். பதிவாளர் டென்சிங் ஞானராஜ் உள்பட துறை அதிகாரிகள், மருத்துவர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    • சீயோன் நகரில் ரூ.9 லட்சம் மதிப்பில் புதிய ரேஷன் கடையை அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
    • மேலும் ரூ.40 லட்சம் மதிப்பில் சமுதாய நலக்கூடம் உள்ளிட்டவைகளுக்கு அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

    உடன்குடி:

    உடன்குடி ஊராட்சி ஓன்றியம் வெள்ளாளன் விளை ஊராட்சி சீயோன் நகரில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில் ரூ.9 லட்சம் மதிப்பில் புதிய ரேஷன் கடையை தமிழக மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

    மேலும் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ.40 லட்சம் மதிப்பில் சமுதாய நலக் கூடம், சீர்காட்சி ஊராட்சி காமராஜ்நகரில் ரூ.20 லட்சம் மதிப்பில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த் தேக்க தொட்டி ஆகியவை அமைப்பதற்கான பூமி பூஜையிலும் அமைச்சர் பங்கேற்று அடிக்கல் நாட்டி னார்.

    உடன்குடி ஊராட்சி ஓன்றியக்குழு தலைவர் டி.பி.பாலசிங் தலைமை தாங்கினார். திருச்செந்தூர் உதவி கலெக்டர் குருசந்திரன், தாசில்தார் வாமனன், உடன்குடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜான்சிராணி, சுடலை, ஊராட்சி மன்றத் தலைவர்கள் வெள்ளாளன் விளை ராஜரத்தினம், சீர்காட்சி கருணாகரன், உடன்குடி கிழக்கு ஓன்றிய தி.மு.க. செயலர் இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் தி.மு.க. மாநில வர்த்தக அணி துணை செயலர் உமரிசங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், உடன்குடி பேரூராட்சி உறுப்பினர்கள் ஜான்பாஸ்கர், அஸ்ஸாப் அலி, செட்டியாபத்து ஊராட்சி தலைவர் பாலமுருகன், சீர்காட்சி ஊராட்சி துணைத்தலைவர் ஜெயகிருஷ்ணன், தி.மு.க. மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் மகாவிஷ்ணு, மாவட்ட, நிர்வாகிகள் பால்ராஜ், ராதாகிருஷ்ணன், சசிகுமார், கிதியோன், பிரவீன், சற்குணராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • கனமழையால் உடன்குடி பேரூராட்சிக்குட்பட்ட பஜார் வீதிகள் மற்றும் பல இடங்களில் மழை நீர் தேங்கி கிடந்தது.
    • அமைச்சர் உத்தரவின்பேரில் உடன்குடிபேரூராட்சி சார்பில் கனரக எந்திரங்கள் மூலம் மழை நீர் அகற்றும் பணி பேரூராட்சி முழுவதும் நடைபெற்றது.

    உடன்குடி:

    உடன்குடி பகுதியில் விட்டு விட்டு பெய்து வரும் கனமழையால் உடன்குடி பேரூராட்சிக்குட்பட்ட பஜார் வீதிகள் மற்றும்பல இடங்களில் மழை நீர் தேங்கி கிடந்தது.இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் வாகனஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடுகள்நோய்பரவும் சூழல் ஏற்பட்டது. இந்த நிலையில் இவ்வழியாக தண்டுபத்து சென்ற தமிழக மீன்வளம் மீனவர் நலன்மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தேங்கிய மழை நீரை அப்புறப்படுத்த உத்தரவிட்டார். அவரது உத்தரவின்பேரில் உடன்குடிபேரூராட்சி சார்பில் கனரக எந்திரங்கள் மூலம் மழை நீர் அகற்றும் பணி பேரூராட்சி முழுவதும் நடைபெற்றது.இப்பணிகளை பேரூராட்சி செயல் அலுவலர் பிரபா, பேரூராட்சி தலைவி ஹூமைரா அஸ்ஸாப், பேரூராட்சி துணைத்தலைவர் மால்ராஜேஷ், பேரூராட்சி உறுப்பினர்கள் அஸ்ஸாப் கல்லாசி, பஷீர், முகம்மது ஆபித், மும்தாஜ், ஜான்பாஸ்கர் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்டி அமைக்கப்பட்ட ‘ஹெல்த் வாக்’ சாலை இன்று திறக்கப்பட்டது.
    • தூத்துக்குடி தெற்கு கடற்கரை சாலை மாதா கோவில் அருகே அமைக்கப்பட்டிருந்த விழா மேடையில் இருந்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    தூத்துக்குடி:

    தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்டி அமைக்கப் பட்ட 'ஹெல்த் வாக்' சாலை இன்று திறக்கப்பட்டது.

    தூத்துக்குடி மாவட் டத்தில் தூத்துக்குடி தெற்கு கடற்கரை சாலை மாதா கோவில் அருகே அமைக்கப் பட்டிருந்த விழா மேடையில் இருந்து அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, சண்முகையா எம்.எல்.ஏ., தூத்துக்குடி மாநகராட்சி கமிஷனர் தினேஷ் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், சப்- கலெக்டர் கவுரவ்குமார், சுகாதார பணிகள்துணை இயக்குனர் பொற்செல்வன் ஆகியோர் பார்வை யிட்டனர்.

    அதனை தொடர்ந்து தூத்துக்குடி மாதா கோவில் அருகே இருந்து தொடங்கி மீன்பிடி துறைமுகம், இனிகோ நகர், ரோச் பூங்கா, படகு குழாம் வரை 4 கிலோ மீட்டர் தூரம் சென்று மீண்டும் அதே வழியில் திரும்பி மாதா கோவில் முன்புறம் முடிவடையும் (ஹெல்த் வாக் சாலை) நடைப்பயிற்சி நடை பாதையில், கலெக்டர் லட்சுமிபதி, மேயர் ஜெகன் பெரியசாமி, சண்முகையா எம்.எல்.ஏ., மாநகராட்சி கமிஷனர் தினேஷ் குமார் மற்றும் அதிகாரிகள் காலை 6 மணிக்கு பொதுமக்களுடன் சென்று நடை பயிற்சி மேற்கொண்டனர்.

    இதில் அரசு மருத்து வர்கள், மருத்துவக்கல்லூரி மாணவர்கள், செவிலி யர்கள் சுகாதாரத்துறையி னர் உள்பட ஏராளமான கலந்து கொண்டனர்.

    • செட்டிவிளை, சிதம்பரபுரம் ஆகிய 2 கிராமத்தில் கடந்த சில மாதங்களாக குடிநீர் சீராக விநியோகம் செய்யப்படவில்லை.
    • அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் உத்தரவின்பேரில், மாணிக்கபுரம் பகுதியில் இருந்து புதிய பைப்லைன் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் விஸ்தரிப்பு செய்யப்பட்டு தண்ணீர் வழங்கப்பட்டது.

    உடன்குடி:

    உடன்குடி யூனிய னுக்குட்பட்ட மானாடு தண்டுபத்து ஊராட்சி செட்டிவிளை, சிதம்பரபுரம் ஆகிய 2 கிராமத்தில் கடந்த சில மாதங்களாக குடிநீர் சீராக விநியோகம் செய்யப்படவில்லை.

    எனவே அந்த பகுதிமக்கள் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் விநியோகம் செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து இத்தொகுதி எம்.எல்.ஏ.வும், அமைச்சருமான அனிதாராதாகிருஷ்ணன் உத்தரவின் பேரில் அந்த பகுதிமக்களுக்கு சீராக குடிநீர் விநியோகம் செய்யும் பொருட்டு மாணிக்கபுரம் பகுதியில் இருந்து புதிய பைப்லைன் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் விஸ்தரிப்பு செய்யப்பட்டு தண்ணீர் வழங்கப்பட்டது.

    இதன் தொடக்க விழாவிற்கு உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    இதில் மாநாடு தண்டு பத்து ஊராட்சி தலைவர் கிருஷ்ண ம்மாள், துணைத்தலைவர் சுயம்புலிங்கம், தி.மு.க., செயலா ளர்கள் கோபால், சண்முகவேல் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    குடிநீர் வசதி ஏற்பாடு செய்த அமைச்சருக்கு 2கிராம மக்களும் பாராட்டு தெரிவித்தனர்.

    • குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா தமிழகத்தில் முதலிடம் வகிக்கும் திருவிழா வாகும்.
    • மனுவைபெற்றுக் கொண்ட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சம்ப ந்தப்பட்ட போக்கு வரத்துதுறை அதிகாரி களிடம் கலந்து சிறப்பு அரசு பஸ்கள் இயக்கபடும் என்று கூறினார்.

    உடன்குடி:

    உடன்குடி கிழக்குஒன்றிய தி.மு.க. செயலாளர் இளங்கோ, உடன்குடி பேரூ ராட்சி கவுன்சிலர் அஸ்ஸாப், செட்டியாபத்து ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருகன் மற்றும் தி.மு.க. வினர், தமிழக மீன்வளம், மீனவர்நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணனை நேரில் சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்ப தாவது:-

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா தமிழகத்தில் முதலிடம் வகிக்கும் திருவிழா வாகும். உலக நாடுகளில் இருந்தும் பல லட்சம் பக்தர்கள் கோவி லுக்கு வந்து செல்வார்கள். பக்தர்களின் வசதிக்காக திருவிழாவில் முக்கிய நாட்களான வருகிற 22, 23,24.25 ஆகிய தேதிகளிலும், பக்தர்கள் திரும்பிச் செல்வ தற்கு வசதியாக 26, 27, 28 ஆகிய நாட்களில் மொத்தம் 7 நாட்கள் தமிழகத்தில் முக்கிய ஊர்களான சென்னை, கோவையில் இருந்து திருச்செந்தூர் மற்றும் உடன்குடி பகுதிக்கு சிறப்பு அரசு பஸ்களை மதுரை, தூத்துக்குடி, நெல்லை வழியாக இயக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.

    மனுவைபெற்றுக் கொண்ட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சம்ப ந்தப்பட்ட போக்கு வரத்துதுறை அதிகாரி களிடம் கலந்து சிறப்பு அரசு பஸ்கள் இயக்கபடும் என்று கூறினார்.

    • அரசு நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த போது பெண்கள் சிலர் அமைச்சரிடம் கோரிக்கை மனு கொடுத்து கடன் தள்ளுபடி செய்யவில்லை என்று கூறினர்.
    • சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி, உடன்குடி மகளிர் சுயஉதவி குழு கடன்களை தள்ளுபடி செய்யாது ஏன்? மீண்டும் அவர்களுக்கு கடன் கொடுக்க வேண்டும் என்று கூறினார்.

    உடன்குடி:

    உடன்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மகளிர் சுயஉதவி குழுவினர் கடன் பெற்றதாக வும், அதில் ஒரு சில குழுக்க ளுக்கு தள்ளுபடி செய்ய வில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் உடன்குடி யில் நடந்த ஒரு அரசு விழாவுக்கு அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் வந்தார். அரசு நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த போது பெண்கள் சிலர் அமைச்சரிடம் கோரிக்கை மனு கொடுத்து கடன் தள்ளுபடி செய்யவில்லை என்று கூறினர். மனுவை வாங்கி படித்த அமைச்சர் உடனடியாக செல்போன் மூலம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி, உடன்குடி மகளிர் சுயஉதவி குழு கடன்களை தள்ளுபடி செய்யாது ஏன்? மீண்டும் அவர்களுக்கு கடன் கொடுக்க வேண்டும் என்று கூறினார்.

    கோரிக்கை மனு கொடு த்தவுடன் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் அமைச்சர் பேசி யதை பார்த்து, கோரி க்கை மனு கொடுத்த பெ ண்கள் அமைச்சருக்கு பாரா ட்டும், நன்றியும் தெரி வித்த னர். அப்போது கட்சி நிர்வா கிகள் மற்றும் அரசு அதி காரிகள் உடன் இருந்தனர்.

    • ஆழ்வார்திருநகரி யூனியன் அலுவலகத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.
    • கர்ப்பிணி பெண்களுக்கு புடவை, வளையல், பூ, இனிப்பு வகைகள் அடங்கிய சீர்வரிசை பொருட்களை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

    தென்திருப்பேரை:

    தூத்துக்குடி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் ஆழ்வார் திருநகரி யூனியன் அலுவல கத்தில் கர்ப்பிணி பெண்க ளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.

    விழாவிற்கு ஆழ்வார் திருநகரி யூனியன் சேர்மன் ஜனகர் தலைமை தாங்கி னார். வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெகோலியா வரவேற்று பேசினார். மாவட்ட திட்ட அலுவலர் சரஸ்வதி திட்ட விளக்க உரையாற்றினார்.

    விழாவில் மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 100 கர்ப்பிணி பெண்களுக்கு தட்டு, புடவை, வளையல், பூ, மஞ்சள், குங்குமம், தேங்காய், பழம், இனிப்பு வகைகள் அடங்கிய சீர்வரிசை பொருட்களை வழங்கினார். மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு 5 வகையான ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்பட்டது. விழாவில், திருச்செந்தூர் உதவி கலெக்டர் குருச்ச ந்திரன், ஏரல் தாசில்தார் கைலாச குமார சாமி, ஆழ்வார் திரு நகரி யூனியன் ஆணை யாளர் பாக்கியம் லீலா, வட்டார வளர்ச்சி அலுவலர் நாகராஜன், தி.மு.க. மாநில வர்த்தக அணி இணை செயலாளர் உமரி சங்கர், மாவட்ட இளை ஞரணி அமைப்பாளர் ராம ஜெயம், ஆழ்வை ஒன்றிய செயலாளர்கள் சதீஷ்குமார், நவீன்குமார், தென்திருப்பேரை பேரூ ராட்சி தலைவர் மணி மேகலை ஆனந்த், கவுன்சிலர் ஆனந்த், ஆழ்வை மத்திய ஒன்றிய அவைத் தலைவர் மகர பூசணம், நகர செயலா ளர் முத்து வீரபெருமாள், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் விஜ யன், வட்டார மருத்துவ அலு வலர் பார்த்தீபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தூத்துக்குடி மாவட்ட அளவிலான அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டிகள் தொடக்க விழா மாவட்ட விளையாட்டு அரங்கம் முன்பு நடைபெற்றது.
    • இப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக கோப்பையும், ரூ.5 ஆயிரமும், முதல் 10 இடங்களை பிடிப்பவர்களுக்கு தலா ரூ.ஆயிரம் ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது.

    தூத்துக்குடி:

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட அளவிலான அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டிகள் தொடக்க விழா மாவட்ட விளையாட்டு அரங்கம் முன்பு நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார்.

    மேயர் ஜெகன் பெரியசாமி முன்னிலை வகித்தார். மாவட்ட விளை யாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அந்தோணி அதிஷ்டராஜ் வரவேற்று பேசினார். 3 வகையான போட்டியை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், மீன்வளம் மீனவர்நலன் மற்றும் கால்நடைத்துறை அமைச்ச ருமான அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ டேவிட் செல்வின், மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் உமரிசங்கர், தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், வக்கீல் அணி அமைப்பாளர் செல்வக்குமார், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப், ஓன்றிய செயலாளர் சரவணக்குமார், தெற்கு மாவட்ட தி.மு.க. இலக்கிய அணி துணை அமைப்பாளர் ஆறுமுகம், மாப்பிள்ளை யூரணி ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா மற்றும் கபடிகந்தன், கவுதம், செய்தி மக்கள் தொடர்பு உதவி அலுவலர் முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக கோப்பையும், ரூ.5 ஆயிரமும், 2-வது பரிசாக ரூ.3 ஆயிரமும், 3-வது பரிசாக ரூ.2 ஆயிரமும், முதல் 10 இடங்களை பிடிப்பவர்களுக்கு தலா ரூ.ஆயிரம் ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது.

    நெடுந்தூர ஓட்டப் போட்டியையொட்டி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மயிலேறும் பெருமாள் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தி ருந்தார். இப்போட்டியில் மாணவ-மாணவிகள் முதல் முதியவர்கள் வரை கலந்து கொண்டனர்.

    • ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங் தலைமையில் நடந்தது.
    • விழாவில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி 100 கர்ப்பிணி பெண்களுக்கு சீதனப் பொருட்களை வழங்கினார்.

    உடன்குடி:

    உடன்குடி பேரூராட்சி திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங் தலைமையில் நடந்தது. குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயாதுரை பாண்டியன் வரவேற்றார்.

    பெண்களுக்கு பல்வேறு திட்டங்கள்

    திருச்செந்தூர் ஆர்.டி.ஓ. குருச்சந்திரன், வட்டார மருத்துவ அலுவலர் அனிபிரி மின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட திட்ட அலுவலர் சரஸ்வதி திட்ட விளக்கவு யாற்றினார். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் குத்துவிளக்கு ஏற்றி 100 கர்ப்பிணி பெண்களுக்கு சீதனப் பொருட்களை வழங்கி பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை அறிவித்து அதை செயல்படுத்துவதில் தனி கவனம் செலுத்தி முன்னாடி மாநிலமாக தமிழகத்தை மாற்றி வருகிறார். தமிழகத்தை பார்த்து காலை சிற்றுண்டி திட்டம் சில மாநிலங்களில் செயல்பட தொடங்கி விட்டன. வயிற்றில் வளரும் குழந்தைகளுக்கு பல்வேறு ஊட்ட சத்துகளை வழங்கு வது, கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை வழங்குவது, அரசு பஸ்சில் பெண்களுக்கு இலவச அனுமதி வழங்கியது, மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்குவது என பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து அத்திட்டங்கள் முறைப்படி பெண்களுக்கு சென்ற டைகிறதா? என்று தனிக் கவனம் செலுத்தி வருகிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    காலை உணவுத் திட்டம்

    இதை போல அரசு பள்ளியில் காலை உணவு திட்டம், அரசு பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகள் கல்லூரி வரை சென்று படிப்பதற்கு அரசு உதவித்தொகை இப்படி தமிழக மக்களுக்கு தினசரி ஒரு புது திட்டங்கள் அறிவித்து செயல்படுத்தி வரும் முதல்-அமைச்சருக்கு தமிழக மக்களாகிய நாம் என்றும் ஆதரவு கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அமைச்சர் பேசினார்.

    இதில் உடன்குடி யூனியன் ஆணையாளர்கள் ஜான்சி ராணி, சுடலை, உடன்குடி பேரூராட்சி செயல் அலுவ லர் பிரபா, உடன்குடி பேரூ ராட்சி தலைவர் ஹீமைரா ரமீஸ் பாத்திமா, உடன்குடி யூனியன் துணைச் சேர்மன் மீரா சிராசுதின், உடன்குடி பேரூ ராட்சி துணைத் தலைவர் மால் ராஜேஷ், பேரூராட்சி கவுன்சி லர்கள் ஜான் பாஸ்கர், மும்தாஜ் பேகம், அன்பு ராணி, சர ஸ்வதி பங்காளன், பாலாஜி, ஆபித், பஷீர், பிரதிப் கண்ணன், சபானா, ராஜே ந்திரன், மாநில தி.மு.க., வர்த்தக அணி இணை அமைப்பாளர் உமரி சங்கர், முன்னாள் எம்.எல்.ஏ. அமிர்தராஜ், மாநில காங்கிரஸ் பொதுக் குழு உறுப்பினர் சிவசுப்பிர மணியன், மூத்த தலைவர் வெற்றிவேல், ஜெயராமன், தி.மு.க. கிளைச் செயலாளர் முகமது சலீம், தங்கம், முருகன். முகேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மேற்பார்வை யாளர் மலர்கொடி சுகிர்தா நன்றி கூறினார்.

    • கூட்டத்தில் முதல்-அமைச்சரின் கிராம சபை கூட்டம் குறித்த உரை தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.
    • அந்தோணியார்புரத்தில் குடிநீர், தெரு விளக்கு உள்ளிட்ட கோரிக்கைகள் உடனடியாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மறவன்மடம் ஊராட்சியில் கிராமசபை கூட்டம் ஊராட்சித் தலைவர் லில்லி மலர் தலைமையில் நடைபெற்றது.

    ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், ஊராட்சி துணைத் தலைவர் பொன்வேல் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.

    ஊராட்சி செயலர் சத்திய ராஜ் வரவேற்று வளர்ச்சி பணி தீர்மானங்களை நிறை வேற்றினார். சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.

    கூட்டத்தில் முதல்-அமைச்சரின் கிராம சபை கூட்டம் குறித்த உரை தொலைக்காட்சியின் ஒளிபரப்பப்பட்டது. இதனைத்தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி பேசிய பொது மக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டு அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் பேசுகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை யிலான அரசு பொறுப்பேற்ற பிறகு மக்களின் தேவை அறிந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி நல்லாட்சி நடத்தி வருகிறது.

    தற்போது கலைஞரின் மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை வழங்கப்பட்டுள்ளது. விடு பட்டவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள தி.மு.க. அரசு பொறுப்பேற்பதற்கு முன்பு ஆண்டுக்கு 4 முறை நடந்து வந்த கிராம சபை கூட்டங்கள் தற்போது 2 நாட்கள் கூடுதலாக சேர்த்து ஆண்டுக்கு 6 முறை நடத்தப்பட்டு வருகிறது.

    கிராமசபை கூட்டங்களில் மக்கள் பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி மனு அளித்துள்ளனர். அந்த மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து நிறை வேற்றப்படும். அந்தோணி யார்புரத்தில் குடிநீர், தெரு விளக்கு, நாச்சியார்புரத்தில் அங்கன்வாடி, இலவசவீடு, மயான பாதை உள்ளிட்ட கோரிக்கைகள் உடனடியாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    நிகழ்ச்சியில் ஊராட்சிகள் உதவி இயக்குனர் உலக நாதன், தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹெலன் பொன்மணி, வசந்தா, வேளாண்மை இணை இயக்குனர் பால சுப்ரமணியன், கால்நடை பராமரிப்புத் துறை சஞ்சீவன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மாவட்ட அலுவலர் சரஸ்வதி, சுகாதாரப் பணிகள் இயக்குனர் லிங்கம், மாவட்ட வழக்கலர் அபுல் காசிம், தாசில்தார் பிரபாகரன், மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் உமரிசங்கர், மாவட்ட அவைத் தலைவர் அருணாச் சலம், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு அமைப்பாளர் மாவட்ட கவுன்சிலர் வக்கீல் முள்ளக்காடு செல்வகுமார், இளைஞர் அணி செயலாளர் ராமஜெயம், மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் டிடிசி.ராஜேந்திரன், மாநகர கவுன்சிலர் ரெங்கசாமி, ஒன்றிய தி.மு.க. செய லாளர்கள் ஜெயக்கொடி, சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • புல்லுகாட்டு வலசையில் பார்வை கிளை நிலையம் தொடக்க விழா நடைப்பெற்றது.
    • சிறந்த முறையில் கால்நடைகள் வளர்ப்போருக்கு விருது வழங்கப்பட்டன.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குறும்பலாபேரியில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாமினை தொடங்கி வைத்து, ரூ.1.76 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நான்கு கால்நடை மருந்தக கட்டிடங்களை மீன்வளம் மற்றும் மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ்.எம்.குமார், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனி நாடார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா ஆகியோர் முன்னிலையில் திறந்து வைத்தார்.

    கால்நடை பராமரிப்புத் துறையில் நபார்டு நிதியுதவியின் மூலம் ரூ.1.76 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 4 கால்நடை மருந்தகங்களின் (மாறாந்தை, வல்லம், ஆய்க்குடி, பொட்டல்புதுார்) புதிய கட்டிடங்கள் மற்றும் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் நிதியின் மூலம் கட்டப்பட்ட அரியப்பபுரம் பார்வை கால்நடை மருந்தகம் (கிளை நிலைய கட்டிடம்) திறப்பு விழா நடைபெற்றது.

    கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியத்தில் அரியப்பபுரம் கிராமத்தில் புதிய பார்வை கால்நடை மருந்தகம் மற்றும் புல்லுகாட்டு வலசையில் பார்வை கிளை நிலையம் தொடக்க விழா நடைப்பெற்றது.

    பின்னர் மீன்வனம் மற்றும் மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் ஆணையின் பேரில், தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் சிறந்த கால்நடை பராமரிப்பு முறைகள் குறித்த விளக்கங்களும், செயலாக்கங்களும், மருத்துவ சேவைகளும் விவசாயிகளின் இருப்பிடங்களிலே வழங்கும் விதமாக தமிழ்நாட்டில் 7760 சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு தென்காசி மாவட்டத்தில் ஒரு ஊராட்சி ஒன்றியத்துக்கு 20 முகாம்கள் வீதம் 10 ஊராட்சி ஒன்றியங்களுக்கு 700 முகாம்கள் நடத்தப்படவுள்ளது.

    ஒரு முகாம் நடத்த ஆகும் மொத்த செலவு ரூ.10,000 வீதம் 200 முகாம்களுக்கான மொத்த செலவு ரூ.20,00,000 ஆகும். இன்று புதிதாக தோற்றுவிக்கப்பட்ட கால்நடை மருந்தகங்கள் மற்றும் தொடங்கப்பட்ட முகாம்கள் மூலம்

    தென்காசி மாவட்டத்தில் உள்ள கால்நடைகள் பயனடையும். மேலும் குறும்லாப்பேரி கிராமத்தில் நடைப்பெற்ற முகாமில் சுமார் 700- க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்துதல், குடற்புழு நீக்கம்

    செய்தல் சிகிச்சை, செயற்கை முறை கருவூட்டல், சினைப் பரிசோதனை, மலடுநீக்க சிகிச்சை போன்றவை மேற்கொள்ளப்பட்டன. மேலும் கன்று மேலாண்மை, சினை மாடு மேலாண்மை, கறவைமாடு மேலாண்மை, தீவன

    மேலாண்மை போன்றவை குறித்த விழிப்புணர்வு கால்நடை வளர்ப்போரிடையே ஏற்படுத்தப்பட்டது. சிறந்த முறையில் கால்நடைகள் வளர்ப்போருக்கு விருதும், சிறந்த கிடேரி கன்றுகள் வளர்ப்போருக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

    மேலும் பால் உற்பத்தியை அதிகரிக்க மற்றும் சினை பிடிப்பதற்கு தேவையான சத்துகள் அடங்கிய தாது உப்புகளும் வழங்கப்பட்டது. இந்த சிறப்பு முகாம்கள் மூலம் தொலைத்தூர குக்கிரா மங்களில் உள்ள கால்நடைகள் மற்றும் மக்களும் பயன்பெறுவார்கள் தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன், செயற்பொறியாளர் (பொதுப்பணி துறை கட்டிட மற்றும் கட்டுமானம்) அழகிரிசாமி, கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் (கூ.பொ) (திருநெல்வேலி) தியோபிலாப் ரோஜர், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் தமிழ்செல்வி போஸ், மாவட்ட ஊராட்சிக் குழுத் துணை உதய கிருஷ்ணன், ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர்கள் கீழப்பாவூர் காவேரி சீனித்துரை, ஆலங்குளம் திவ்யா மணிகண்டன், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் சீனித்துரை, சிவன் பாண்டியன், ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவர் கீழப்பாவூர் முத்துக்குமார், கால்நடை பராமாரிப்புத் துறை உதவி இயக்குநர் மகேஷ்வரி, உதவி செயற் பொறியாளர்கள் பொதுப்பணி துறை கட்டிட மற்றும் கட்டுமானம் செல்வி, அனிதா சாந்தி, உதவி பொறியாளர்கள் நிர்மல் சிங், உதய குமார், உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ராமசுப்பிரமணியன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சாக்ரடீஸ், ஊராட்சி மன்ற தலைவர் குலசேகரப்பட்டி முத்துமாலையம்மாள் மதிசெல்வன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் குலசேக ரப்பட்டி திருவளர்செல்வி சாமிராஜா ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கீழப்பாவூர் முருகேசன், புவனா மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×