search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Canal Repair"

    • பருவமழை பெய்து வருவதால் அணைக்கட்டுகளிலிருந்து கடந்த சில வாரங்களாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது
    • தருவைகுளத்திற்கு வரும் நீர்வழித்தடங்கள் பல இடங்களில் அழிந்த நிலையில் உள்ளது

    உடன்குடி:

    தமிழ்நாட்டில் தற்போது பருவமழை பெய்து வருகிறது. அணைக்கட்டுகளிலிருந்து கடந்த சில வாரங்களாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக திருச்செந்தூர் பகுதியிலுள்ள எல்லப்பநாயக்கன்குளம் வேகமாக நிரம்பி வருகிறது. இதிலிருந்து வெளியேறும் உபரிநீர் குலசேகரன்பட்டினம் தருவைகுளத்திற்கு வரும். தற்போது தருவைகுளத்திற்கு வரும் நீர்வழித்தடங்கள் பல இடங்களில் அழிந்த நிலையில் உள்ளது. இதனால் இக்குளத்தில் முறையாக தண்ணீர் வருவதற்கு வாய்பு இல்லை, இதனையடுத்து சமூகஆர்வலர்கள், விவசாயிகள் ஆகியோர் தமிழக மீன்வளம் மீனவர் நலன் மற்றும்கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து, நிலத்தடி நீரில் கடல்நீர் உட்புகுந்து உப்புநீராக மாறியுள்ளது. இதனால் குடிநீர், மற்றும்விவசாயத்திற்கு தண்ணீர் தட்டுபாடு வரும் நிலை உருவாகும். ஆண்டுதோறும் குளங்கள் நிரப்பினால், நிலத்தடி நீர் மற்றும் பம்பு செட் விவசாயம் செய்யும் கிணற்று தண்ணீர்தன்மைமாறாமல் இருக்கும் என கூறினர்.

    இதனைத்தொடர்ந்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தனது சொந்த செலவில் எல்லப்பநாயக்கன்குளத்திலிருந்து தருவைகுளம் பகுதி வரை சிதிலமடைந்த நீர்வழித்தடங்களை சீரமைத்தும், புதியதாக கால்வாய்கள் அமைத்து உடன்குடி ஊரணிக்கு தண்ணீர் கொண்டு செல்லவும், மழைக்காலங்களில் வடிகால் பகுதியிலிருந்து தண்ணீரை சேமிக்கும் வகையில் நீர்வழித்தடங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணியினை உடன்குடி யூனியன்சேர்மன் பாலசிங் ஆய்வுமேற்கொண்டார். அப்போது சமூகஆர்வலர், ஆசிரியர் சிவலூர் ஜெயராஜ், ஒன்றிய பிரதிநிதி ஆட்டோகணேசன், வக்கீல் செல்வகுமார் உட்பட சமூக ஆர்வலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர். கால்வாய் சீரமைப்பு பணிக்கு சொந்த செலவில் நடவடிக்கை எடுத்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை விவசாயிகள் பாராட்டினர்.

    • களக்காடு அருகே உள்ள மலையடிபுதூர் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து தொடங்கும் இறையடிக்கால்வாய் நீண்ட நாட்களாக தூர் வாரப்படவில்லை.
    • கால்வாயில் செடி-கொடிகள் முளைத்து புதர் மண்டி கிடந்தது. ஆங்காங்கே மண் திட்டுகளும் ஏற்பட்டிருந்தன. இதனால் கால்வாயில் நீரோட்டம் தடைபட்டது.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள மலையடிபுதூர் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து தொடங்கும் இறையடிக்கால்வாய் நீண்ட நாட்களாக தூர் வாரப்படவில்லை.

    இதனைதொடர்ந்து கால்வாயில் செடி-கொடிகள் முளைத்து புதர் மண்டி கிடந்தது. ஆங்காங்கே மண் திட்டுகளும் ஏற்பட்டிருந்தன. இதனால் கால்வாயில் நீரோட்டம் தடை பட்டது.

    மேலும் மழைக்காலங்களில் கால்வாயில் அதிகளவில் வெள்ளம் கரை புரண்டு ஓடும் போது, அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் கரைகளை உடைத்து கிராமங்களுக்குள் புகும் அபாயகரமான சூழல் நிலவியது.

    எனவே புதர் மண்டி கிடக்கும் இறையடிக்கால்வாயை சீரமைக்கவும், கரைகளை பலப்படுத்தவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்நிலையில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சிவக்குமார் உத்தரவின் பேரில், உதவி செயற்பொறியாளர் மணிகண்டன், உதவி பொறியாளர் பாஸ்கர், பாசன உதவியாளர் ஆனந்தன் மற்றும் பொதுப்பணித்துறையினர் புதர் மண்டி கிடந்த இறையடிக்கால்வாயை நேரில் பார்வையிட்டு அதனை சீரமைக்க நடவடிக்கை எடுத்தனர்.

    அதன்படி கால்வாயில் ஆக்கிரமிப்பு உள்ளதா? என்று அளவீடு செய்யப்பட்டது.

    அதனைதொடர்ந்து நேற்று இறையடிக்கால்வாய் தூர் வாரும் பணி தொடங்கியது. பொக்லைன் இயந்திரம் மூலம் கால்வாய் தூர் வாரப்பட்டு வருகிறது.

    ×