search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sathankulam"

    • கடந்த 2020-ம் ஆண்டு இட்டமொழி ரோட்டில் உள்ள அரசுடமையாக்கப்பட்ட வங்கி ஒன்றில் மூதாட்டி தங்கம்மாள் முதியோர் உதவித்தொகை வரவு வைக்கப்பட்டு வந்துள்ளது.
    • இதற்கிடையே பல மாதங்களாக உதவித்தொகையை எடுக்காத தால் அந்த பணம் திரும்ப பெறப்பட்டுள்ளது.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் காமராஜ்நகரை சேர்த்தவர் கூலித் தொழிலாளி பேச்சிமூத்து மனைவி தங்கம்மாள் (வயது95). கடந்த 3 வருடங்களுக்கு முன்பு முதியோர் உதவி தொகை கேட்டு சாத்தான்குளம் சமூகப் பாதுகாப்பு தாசில்தாரிடம் தங்கம்மாள் மனு கொடுத்திருந்தார்.

    அதன்பேரில் கடந்த 2020-ம் ஆண்டு இவரின் வங்கி கணக்கில் இட்டமொழி ரோட்டில் உள்ள அரசுடமையாக்கப்பட்ட வங்கி ஒன்றில் அவரது முதியோர் உதவித்தொகை வரவு வைக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் வங்கி அதிகாரிகளோ மற்றும் சமூக பாதுகாப்பு திட்ட அதிகாரிகளோ தங்கமாளுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டது குறித்து தகவல் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.

    இதற்கிடையே பல மாதங்களாக உதவித்தொகையை எடுக்காத தால் அந்த பணம் திரும்ப பெறப்பட்டுள்ளது. இது குறித்து மூதாட்டி தங்கம்மாள் கூறும்போது, எனக்கு முதியோர் தொகை வந்துள்ளதா என பல முறை வங்கியிலும், தாலுகா அலுவலகத்திலும் கேட்டு வந்தேன். ஆனால் அதற்கு வங்கி அதிகாரிகளும், வருவாய்த்துறைனரும் சரியான பதிலை கூறவில்லை.

    இந்நிலையில் உறவினர் ஒருவர் மூலம் வங்கி கணக்கு புத்தகத்தை வங்கியில் உள்ள எந்திரத்தில் பதிவு செய்து பார்த்தபோது எனக்கு கடந்த ஏப்ரல் மாதம் வரை உதவித்தொகை வழங்கப்பட்டு அந்த பணத்தை எடுக்காததால், சமூக பாதுகாப்பு திட்டம் மூலம் மொத்தம் ரூ. 36 ஆயிரம் திரும்ப எடுத்து கொண்டது தெரியவந்தது. எனவே எனக்கு மீண்டும் முதியோர் உதவித் தொகை வழங்கக்கோரி மாவட்ட கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனுக்கள் அனுப்பி உள்ளேன். அதற்கு அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 

    • வடக்கு அமுதுண்ணாக்குடியில் மக்கள் கோரிக்கையை ஏற்று கடந்த 10 நாட்களுக்கு முன்னர் பழுதான மின்மாற்றி சீரமைக்கப்பட்டது.
    • இந்நிலையில் நேற்று காலை முதல் பெய்த மழையால் அந்த மின்மாற்றியின் அடிப்பகுதி பெயர்ந்து சரிந்து நின்றது.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அருகே உள்ள வடக்கு அமுதுண்ணாக் குடியில் மக்கள் கோரிக்கையை ஏற்று கடந்த 10 நாட்களுக்கு முன்னர் பழுதான மின் மாற்றி சீரமைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை முதல் சாத்தான்குளம் பகுதியில் தொடர் மழை பெய்தது. இதில் அந்த மின் மாற்றியின் அடிப்பகுதி பெயர்ந்து சரிந்து நின்றது. இதனால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் மின் கம்பம் சரிந்து நிற்பது சமூக வலை தளங்களில் வைரலானது. இதனை தொடர்ந்து மின் வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு சரிந்த நின்ற மின் மாற்றியை சீரமைத்தனர். மேலும் மழை நேரத்தில் துரிதமாக செயல்பட்டு பழுதான மின் மாற்றியை சீரமைக்க நடவடிக்கை எடுத்து மின் ஊழியர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    • நுண்ணீர் பாசன பாரமரிப்பு பயிற்சி மீரான்குளம் கிராமத்தில் நடைபெற்றது.
    • பயிற்சியின் போது நுண்ணீர் பாசன கருவிகள் பயன்பாடுகள் குறித்து விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

    சாத்தான்குளம்:

    ஆழ்வார்திருநகரி வட்டார, வேளாண்மை - உழவர் நலத்துறை மூலம் அட்மா மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான விவசாயிகள் நுண்ணீர் பாசன பாரமரிப்பு பயிற்சி சாத்தான்குளம் அருகே மீரான்குளம் கிராமத்தில் நடைபெற்றது.

    வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சுரேஷ் தலைமை தாங்கி பயிற்சியின் நோக்கம், நுண்ணீர் பாசனம் அமைப்பதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் அரசின் மானியத் திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்தார். துணை வேளாண்மை அலுவலர் தங்கமாரியப்பன் வேளாண்மைதுறை மூலம் வழங்கப்படும் திட்டங்கள் மற்றும் நுண்ணீர் பாசனம் அமைக்கும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும், இரிகேசன் களப்பணியாளர் அபிசேக் நுண்ணீர் பாசன கருவிகள் பயன்பாடுகள் மற்றும் பாரமரிப்பு தொழில் நுட்பம் குறித்து விவசாயிகளுக்கு தெரிவித்தனர்.

    பயிற்சிக்கான ஏற்பாடுகளை ஆழ்வார்திருநகரி அட்மா, தொழில் நுட்ப மேலாளர் ஜேசுதாசன், உதவிதொழில் நுட்பமேலாளர்கள் நளினி, சூசைமாணிக்கம் ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் உதவி வேளாண்மை அலுவலர் சீதாலெட்சுமி நன்றி கூறினார்.

    • சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் 11 பணியிடம் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • போதிய மருத்துவர்கள் இல்லாததால் சிகிச்சைக்கு வரும் மக்கள் சிரமத்துக்கு ஆளாகுகின்றனர்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் வட்டத்தின் தலைமையிட மருத்துவமனையாக அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனையில் டாக்டர் உள்ளிட்ட 11 பணியிடம் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சாத்தான்குளம் பா.ஜ.க. தலைவர் சரவணன் தலைமையில் நகரத் தலைவர் ஜோசப் ஜெபராஜ், ஒன்றிய பொதுச் செயலர் ஜெயராஜேஷ்குமார் மற்றும் நிர்வாகிகள் சாத்தான்குளம் தாசில்தார் அலுவலகத்தில் தலைமையிடத்து துணை தாசில்தார் பிரபுவிடம் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில், சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் மருத்துவர் உள்ளிட்ட 11 பணியிடங்கள் காலியாக உள்ளது. மருத்துவமனைக்கு தற்காலிகமாக மருத்துவர்கள் வந்து செல்கின்றனர். போதிய மருத்துவர்கள், பணியாளர்கள் இல்லாததால் மருத்துவ மனைக்கு சிகிச்சைக்கு வரும் மக்கள் சிரமத்துக்கு ஆளாகுகின்றனர். எனவே அரசு மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களை நியமிக்க பரிந்துரைக்க வேண்டும் என கூறி இருந்தனர்.

    • வருவாய்துறை மூலம் 23 பேருக்கு ரூ.4 லட்சத்து 6 ஆயிரத்து 20 மதிப்பிலான பட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை கனிமொழி எம்.பி. வழங்கினார்.
    • மகளிர் உரிமைத்தொகை தகுதியான மகளிருக்கு கிடைக்க நடவடிக்கை எடுப்போம் என்று கூறினார்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் ஒன்றியத்தில் புத்தன்தருவை, அரசூர், தாமரைமொழி, நடுவக்குறிச்சி, சாஸ்தாவிநல்லூர் ஊராட்சி மக்களிடம் மக்கள் களம் நிகழ்ச்சி மூலம் கனிமொழி எம்.பி. மனுக்கள் வாங்குதல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    நலத்திட்ட உதவிகள்

    புத்தன்தருவை ஊராட்சியில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் தலைமை தாங்கினார். மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். திருச்செந்தூர் ஆர்.டி.ஓ. குருசந்திரன் வரவேற்றார்.

    இதில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு, வருவாய்துறை மூலம் 23 ேபருக்கு ரூ. 4 லட்சத்து 6 ஆயிரத்து 20 மதிப்பிலான பட்டா, ஆதரவற்ற விதவைகள், ஒய்வூதிய திட்டத்தில் ஓய்வூதியம், மாற்றுத்திறனாளிகளுக்கு ஒய்வூதியம். உழவர் பாதுகாப்பு திட்டத்தில் இறப்பு நிவாரண தொகை, வேளாண்மை துறை மூலம் 2 பேருக்கு விவசாய இடுபொருள்கள், மகளிர் திட்டம் மூலம் 2 பேருக்கு குழுகடன், தோட்டக்கலை மூலம் 2 பேருக்கு விதைகள் மற்றும் இடுபொருள்கள் என மொத்தம் 118 பேருக்கு ரூ. 10 லட்சத்து 97 ஆயிரத்து 303 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினர். பின்னர் மக்களிடம் மனுக்கள் பெற்றார். அப்போது அவர் கூறியதாவது:-

    விரைவில் நடவடிக்கை

    மக்கள் களம் மூலம் மக்களிடம் பெறப்படும் மனுகள் மீது விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஏராளமான பெண்கள் மனு அளித்துள்ளனர். அது மகளிர் உரிமைத்தொகைக்கான மனுவாக இருக்கும் என நினைக்கிறேன். மகளிர் உரிமைத்தொகை தகுதியான மகளிருக்கு கிடைக்க நடவடிக்கை எடுப்போம். இது 73 ஊராட்சியில் நடக்கும் மக்கள் களம் நிகழ்ச்சி. முதல்-அமைச்சர், அனைத்து கிராமங்களிலும் அடிப்படை வசதிகளை செய்து தர உறுதியாக உள்ளார். இந்த பகுதியில் உள்ள மக்களுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. பல திட்டப்பணிகள் செய்து முடிவடைந்துள்ளன. பல்வேறு திட்டங்களை முதல்-அமைச்சர் அறிவித்து வழங்கி வருகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசுகையில், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஏழை, எளிய மக்கள் வாழ்வு உயர பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறார். 5-ம் வகுப்பு வரை அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் தந்துள்ளார். கனிமொழி எம்.பி., சாதி, மதங்களை கடந்து அனைவரையும் அரவணைத்து செல்ல கூடியவர். எந்த இடத்துக்கு எது தேவையோ? அதனை அறிந்து நிதிகளை வழங்கி வருகிறார். மக்களுக்காகவே பணியாற்றி வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் தொடர்ந்து ஆதரவு தர வேண்டும் என்றார்.

    தொடர்ந்து ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. பேசுகையில், மக்கள் களம் என்பது அருமையான நிகழ்ச்சி. எந்த எம்.பி.யும் இதைபோல் செய்து விட முடியாது. இப்பகுதி விவசாயிகளோடு இணைந்து பல முயற்சிகள் எடுத்து இப்பகுதிக்கு தேவையான தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுககப்பட்டது. அதனால் இப்பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை சமாளிக்கப்பட்டது. அரசு, விவசாயிகளுக்கு தேவையானவற்றை செய்து வருகிறது என்றார்.

    கலந்து கொண்டவர்கள்

    நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிகுழு தலைவர் பிரம்மசக்தி, மாவட்ட திட்ட இயக்குநர் வீரபுத்திரன், மாவட்ட அறங்காவலர்குழு தலைவர் பார்த்திபன், மாவட்ட ஆவீன் சேர்மன் சுரேஷ்குமார், மாநில வர்த்தக பிரிவு துணை அமைப்பாளர் உமரிசங்கர், ஊராட்சித் தலைவர்கள் சுலைகாபீவி, தினேஷ்ராஜாசிங், சாந்தா, சபிதா, திருக்கல்யாணி, யூனியன் சேர்மன் ஜெயபதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுரேஷ், கருப்பசாமி, ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் பாலமுருகன், ஜோசப், பொன்முருகேசன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் இந்திரகாசி, ஒன்றிய அவைத்தலைவர் ராஜபாண்டியன், ஒன்றிய கவுன்சிலர்கள் லதா, பிச்சிவிளை சுதாகர், ஒன்றிய பொருளாளர் ஆனந்த், நடுவக்குறிச்சி துணைத் தலைவர் சந்திரசேகர், மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் சங்கர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் தாசில்தார் ரதிகலா நன்றி கூறினார்.

    • தமிழ்நாடு சயின்ஸ் போரம் சார்பில் மாவட்ட அளவிலான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு வல்லநாட்டில் நடைபெற்றது.
    • இதில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அறிவியல் கண்காட்சி போட்டிகள் நடைபெற்றது.

    சாத்தான்குளம்:

    தமிழ்நாடு சயின்ஸ் போரம் சார்பில் மாவட்ட அளவிலான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு வல்லநாட்டில் நடைபெற்றது. இதில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அறிவியல் கண்காட்சி போட்டிகள் நடைபெற்றது. இதில் சாத்தான்குளம் டி.என்.டி.டி.ஏ. ஆர்.எம்.பி. புலமாடன் செட்டியார் தேசிய மேல்நிலைப்பள்ளியில் கல்வி பயிலும் இல்லம் தேடி கல்வி மாணவர்கள் குமரன், பிரகதீஷ் மாணிக்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டுவெற்றி பெற்று நெல்லை மாவட்டம் வள்ளியூரில் நடைபெற உள்ள மண்டல அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.

    வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் இல்லம்தேடி கல்வி தன்னார்வலர்கள் உமா மகேஸ்வரி, பொன்ரதி ஆகியோரை சாத்தான்குளம் வட்டார கல்வி ஆர்வலர்கள், பொதுமக்கள் பாராட்டினர்.

    • அனைத்து கிராமஅண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ.9.76 லட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு புதிய ரேஷன் கடை கட்ட பூமி பூஜை விழா நடைபெற்றது.
    • ஊராட்சித் தலைவர் தனலட்சுமி சரவணன் தலைமை தாங்கி அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் ஒன்றியம் படுக்கப்பத்து ஊராட்சிக்குட்பட்ட மறக்குடியில் ரேஷன் கடை இல்லாமல் இருந்தது. இதனால் கிராம மக்கள் ஊராட்சித் தலைவரிடம் முறையிட்டனர். அதன்படி அனைத்து கிராமஅண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ.9.76 லட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு புதிய ரேஷன் கடை கட்ட பூமி பூஜை விழா நடைபெற்றது. ஊராட்சித் தலைவர் தனலட்சுமி சரவணன் தலைமை தாங்கி அடிக்கல் நாட்டி பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். ஒன்றிய பா.ஜ.க. தலைவர் சரவணன் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் சித்ரா வரவேற்றார். இதில் முன்னாள் ஊராட்சி துணைத் தலைவர் இசககி, ஊர் பிரமுகர்கள் வீரபாண்டி, கணபதி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • முதலூர் சாலை, தோப்புவளம் சாலை மற்றும் நாடார் தெற்கு தெருவில் அமைக்கப்பட்டுள்ள தெருவிளக்குகள் முறையாக எரிவது இல்லை என அப்பகுதியினர் புகார் தெரிவித்துள்ளனர்.
    • இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் பேரூராட்சிக்குள்பட்ட 14 மற்றும் 15-வது வார்டு பகுதியில் உள்ள முதலூர் சாலை, தோப்புவளம்சாலை மற்றும் தச்சமொழி நாடார் தெருக்களில் அமைக்கப்படடுள்ள தெரு விளக்குகளில் மின்விநியோகம் செய்யும் வகையில் தோப்புவளம் சாலையில் மின்மாற்றி அமைக்கப்பட்டு மின்விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இதில் முதலூர் சாலை, தோப்புவளம் சாலை மற்றும் நாடார் தெற்கு தெருவில் அமைக்கப்பட்டுள்ள தெருவிளக்குகள் முறையாக எரிவது இல்லை என அப்பகுதியினர் புகார் தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக அவர்கள் கூறும்போது, பல நேரங்களில் இரவில் தெருவிளக்குகள் எரியாமல் இருளில் முழ்கி காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். தோப்புவளம் சாலையில் உள்ள மின்வயரில் மரக்கிளைகள் உரசுவதால் அடிக்கடி தெருவிளக்குகள் எரியாமல் உள்ளது.

    இது தொடர்பாக மின்வாரிய அதிகாரிகளுக்கு தெரியபடுத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுத்து தெருவிளக்குகள் சீராக எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • விஜயராமபுரம், வெங்கட்ராயபுரம் பகுதியில் பனைவிதைகள் விதைக்கப்பட்டுள்ளன.
    • நவம்பர் மாதம் இறுதிக்குள் சாத்தான்குளம் வட்டத்தில் 10 ஆயிரம் பனைவிதைகளை விதைக்க உள்ளதாக தெரிவித்தனர்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் வட்டத்தில் சமூக ஆர்வலர், பால்வளத்துறை ஊழியர் பிரவீன் தலைமையில் குளக்கரை, சாலையோரங்களில் சுமார் 10 ஆயிரம் பனை விதைகள் நடும் திட்டத்தின் கீழ் இப்பகுதியில் பனைவிதைகள் விதைக்கப்பட்டு வருகின்றனர்.

    அதன்படி விஜயராமபுரம், வெங்கட்ராயபுரம் பகுதியில் பனைவிதைகள் விதைக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து சாத்தான்குளம் கரையடி குளக்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் சுமார் 2200 பனைவிதைகள் விதைக்கும் பணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட திடக்குழு உறுப்பினர் ஏ.எஸ். ஜோசப் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். 3,4-வது ரீச் மணிமுத்தாறு விவசாயிகள் சங்கத் தலைவர் எம்.எம். மலையாண்டி பிரபு, நகர தி.மு.க. செயலர் மகா.இளங்கோ, தேவிஸ்ரீ அழகம்மன் கோவில் அறங்காவலர்குழு தலைவர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சமூக ஆர்வலர்களான காவல்துறையை சேர்ந்த முத்துராஜ், தொழிலதிபர் பாலவிநாயகம் , புள்ளியல்த்துறையைச் சேர்ந்த டல்லஸ் மற்றும் முத்துசிவா, வருவாய்துறை ஜெயசெல்வன், வனத்துறை அருண்,மருத்துவதுறை வினோத், ஆசிரியர்கள் சாம், சந்திரா பொறியாளர் ராமச்சந்திரன், ஆகாஷ், சங்கர், மங்கையர்க்கரசி, இல்லம்தேடி கல்வி தன்னார்வலர் தினேஷனி உள்ளிட்ட பள்ளி மாணவ,மாணவிகள் பங்கேற்று பனை விதைகள் விதைக்கும் பணியில் ஈடுப்பட்டனர். நவம்பர் மாதம் இறுதிக்குள் சாத்தான்குளம் வட்டத்தில் 10 ஆயிரம் பனைவிதைகளை விதைக்க உள்ளதாக தெரிவித்தனர். பனை விதை விதைக்கும் பணிக்கான ஏற்பாடுகளை பால்வளத்துறை ஊழியர் பிரவீன் செய்திருந்தார்.

    • சாத்தான்குளம் மெயின் பஜாரில் கடந்த 25 நாட்களுக்கு முன்பு புதியதாக கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்றது.
    • அந்த கால்வாய் கட்டுமானப்பணியின் கழிவுகளை அருகே உள்ள ஒரு கடையின் வாசலில் போட்டுவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் மெயின் பஜாரில் கடந்த 25 நாட்களுக்கு முன்பு புதியதாக கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்றது. இந்த பணிக்காக சாத்தான்குளம் மெயின் பஜாரில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதி அடைந்து சிறு, குறு தெருக்கள் வழியாக மிகவும் சிரமத்துடன் சென்று வந்ததாக பொதுமக்கள் புகார் கூறினர்.

    இந்த நிலையில் பொதுமக்கள், வியாபாரிகள் எதிர்ப்பு காரணமாக கடந்த 19-ந்தேதி கழிவு நீர் கால்வாய் பணிகள் அவசர கதியில் முடிக்கப்பட்டு பின்னர் போக்குவரத்துக்காக திறந்து விடப்பட்டது. இந்த நிலையில் அந்தப் பணியினை செய்த ஒப்பந்ததாரர் அந்தப் கால்வாய் கட்டுமானப் பணியின் கழிவுகளை அருகே உள்ள ஒரு கடையின் வாசலில் போட்டுவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அந்த கடையை திறக்க வந்த வியாபாரி கடந்த 4 நாட்களாக கடையை திறக்க முடியாமல் மிகவும் அவதியடைந்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

    இது குறித்து வியாபாரிகள் சங்க செயலாளர் மதுரம் செல்வராஜ் கூறுகையில், இந்த கழிவுநீர் கால்வாய் பணிக்காக வியாபாரிகள் ஒரு மாத காலத்திற்கு மேலாக போக்குவரத்து நிறுத்தப்பட்டதினால் அவதி அடைந்து வந்த நிலையில் தற்போது பணிகள் முடிந்தும் அங்குள்ள கடையின் வாசலில் கால்வாய் கட்டுமான கழிவுகளை கொட்டப்பட்டு இருந்ததால் வியாபாரிகள் அவதி அடைந்து வருவது மிகவும் வேதனைக்குரியது. எனவே இந்த விவகாரத்தில் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் தலையிட்டு கட்டிட கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

    • சாத்தான்குளத்தில் 2 நாட்களுக்கு ஒருமுறை வழங்கப்பட்டு வந்த குடிநீர் தற்போது 3 நாட்களுக்கு ஒருமுறை விநியோகிக்கப்படுகிறது.
    • மேலும் பேரூராட்சி 7-வது வார்டுக்குட்பட்ட அழகம்மன் கோவில் தெரு உள்ளிட்ட தெருக்களில் கடந்த 15 நாட்களாக முறையாக குடிநீர் கிடைக்கவில்லை என்று மனுவில் கூறியுள்ளனர்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் பேரூராட்சி கவுன்சிலர் லிசா தலைமையில் பொதுமக்கள் இளநிலை உதவியாளர் ஆறுமுகத்திடம் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    சாத்தான்குளம் பேரூராட்சியில் போதிய மழையின்மையால் ஏற்பட்ட வறட்சி காரணமாகவும், ஸ்ரீவைகுண்டம் உறைகிணற்றில் ஏற்பட்ட நீர் இருப்பு குறைவினாலும் இங்கு குடிநீர் விநியோகிப்பது பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 2 நாட்களுக்கு ஒருமுறை வழங்கப்பட்டு வந்த குடிநீர் தற்போது 3 நாட்களுக்கு ஒருமுறை விநியோகிக்கப்படுகிறது. இதனால் பல தெருகளுக்கு போதுமான குடிநீர் கிடைக்கவில்லையென புகார் எழுந்துள்ளது.

    மேலும் பேரூராட்சி 7-வது வார்டுக்குட்பட்ட அழகம்மன் கோவில் தெரு, கரையாளர்தெரு, அருணாசலசெட்டியார் தெரு உள்ளிட்ட தெருகளில் கடந்த 15 நாட்களாக முறையாக குடிநீர் கிடைக்கவில்லை. இதனால் பொதுமக்கள் லாரி தண்ணீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தும் நிலையில் உள்ளனர். எனவே முன்புபோல் முறையாக குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அருணாசல செட்டியார் தெருவில் சேதமான சாலையை சீரமைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.   

    • சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வனவிலங்குகள் பாதுகாப்பு வாரம் கொண்டாடப்பட்டது.
    • சாத்தான்குளம் அரசு கால்நடை மருத்துவர் காயத்ரி வனவிலங்குகளின் வாழ்வியலையும், அதன் பாதுகாப்பு பற்றியும் பேசினார்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வனவிலங்குகள் பாதுகாப்பு வாரம் கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. பேச்சுப் போட்டியில் முதல் பரிசினை மாணவி பேச்சியம்மாளும், 2-வது பரிசினை சிராஜ் இர்பானாவும் பெற்றனர். கட்டுரைப் போட்டியில் ஞான அந்தோணி ஜெனிபர் முதலிடத்தையும், ரேவதி 2-வது இடத்தையும் பெற்றனர். பானையில் ஓவியம் தீட்டுதல் போட்டியில் சித்ரா பவானி முதலிடத்தையும், கிருஷ்ண ஜீவா 2-வது இடத்தையும் பெற்றுள்ளனர். சுவரில் ஓவியம் தீட்டும் போட்டியில் மாணவிகள் ஜெசிகா, கவிதா முதலிடத்தையும், பிரின்ஸி ராணி, இந்துமதி ஆகியோர் 2-வது இடத்தையும் பெற்றனர். போட்டிகளை பேராசிரியைகள் உமாபாரதி, வளர்மதி ஆகியோர் நடத்தினர்.

    தொடர்ந்து நடைபெற்ற வனவிலங்கு பாதுகாப்பு வார விழாவில் சிறப்பு விருந்தினராக சாத்தான்குளம் அரசு கால்நடை மருத்துவர் காயத்ரி கலந்து கொண்டு வன விலங்குகளின் வாழ்வியலையும் அதன் பாதுகாப்பு பற்றியும் பேசினார். கல்லூரியின் பொறுப்பு முதல்வர் ஜமுனா ராணி தலைமை தாங்கினார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழும், பரிசும் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பேராசிரியர்கள் பூங்கொடி, சண்முக சுந்தரி, ஆனந்தி, நீமா தேவ் பொபீனா மற்றும் பேரவை மாணவிகள் செய்திருந்தனர்.

    ×