search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Organic farming"

    • தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் வருகிற 7-ந் தேதி அங்கக வேளாண்மை பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
    • உர நிர்வாகம், அங்கக சான்றிதழ், இடுபொருள் தயாரிப்பு, விளைபொருட்களை சந்தைப்படுத்துதல் உள்ளிட்டவை வல்லுநர்களால் கற்பிக்கப்படும்

    திருப்பூர்:

    தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் வருகிற 7-ந் தேதி அங்கக வேளாண்மை பயிற்சி அளிக்கப்படவுள்ளது.இப்பயிற்சியில் அங்கக வேளாண்மை அடிப்படை, களை மேலாண்மை, அங்கக பூச்சிநோய் மேலாண்மை, உர நிர்வாகம், அங்கக சான்றிதழ், இடுபொருள் தயாரிப்பு, விளைபொருட்களை சந்தைப்படுத்துதல் உள்ளிட்டவை வல்லுநர்களால் கற்பிக்கப்படும். இதற்கு, பயிற்சி கட்டணமாக ஜி.எஸ்.டி., சேர்த்து 750 ரூபாய் செலுத்தவேண்டும். ஆர்வமுள்ள விவசாயிகள் 94867-34404 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அங்கக விவசாயம் செய்யும் விவசாயிகள் இலவ சமாக அங்கக சான்றிதழ் பெற முடியும் என நாமக்கல் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர், சித்திரைசெல்வி தெரிவித்துள்ளார்.
    • அங்கக விவசாயிகள் குறைந்தபட்சம் 5 முதல் அதிகபட்சம் 25 பேர் சேர்ந்து, ஒரு குழுவினை அமைக்க வேண்டும்.

    பரமத்தி வேலூர்:

    அங்கக விவசாயம் செய்யும் விவசாயிகள் இலவ சமாக அங்கக சான்றிதழ் பெற முடியும் என நாமக்கல் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர், சித்திரைசெல்வி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியி ருப்பதாவது:-

    அங்கக சான்றிதழ் பெற விரும்பும் ஒரே கிராமத்தை சேர்ந்த அல்லது அருகிலுள்ள கிராமங்களை சேர்ந்த அங்கக விவசாயிகள் குறைந்தபட்சம் 5 முதல் அதிகபட்சம் 25 பேர் சேர்ந்து, ஒரு குழுவினை அமைக்க வேண்டும். பிறகு குழுவிற்கான பெயர் மற்றும் தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும். குழுவில் போதுமான அளவு பெண் உறுப்பினர்கள் இருப்பது அவசியம். குழுவினை அமைத்த பிறகு, உறுப்பினர்களின் அடிப்படை விவரங்களுடன், பங்கேற்பாளர் உத்தரவாத அமைப்பு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து உரிய ஆவணங்க ளுடன் வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்து, அதற்கான ஆவணங்களை மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பித்து பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு பதிவு செய்யப்படும் குழுக்களுக்கு குழு உறுப்பினர்களின் சக மதிப்பீட்டின் அடிப்படையில் ஒப்புதல் வழங்கப்பட்டு, சான்றிதழ்கள் இலவசமாக வழங்கப்படும். இவ்வாறு பதிவு செய்யப்படும் குழுக்களுக்கு ஆண்டு பயிர்களுக்கு 3 ஆண்டுகளும் நிரந்தர பயிர்களுக்கு 4 ஆண்டுகளும் மாறுதல் காலம் கடை பிடிக்கப்படுகிறது. இவ்வாறு பெறப்படும் வாய்ப்பு சான்றிதழ் மூலம், அங்கக விவசாயிகள், தங்களது விளை பொருட்களை மதிப்பு கூட்டு செய்து அதிக விலைக்கு விற்றுக் கூடுதல் லாபம் பெற முடியும் என அந்த செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்துள்ளார்.

    • நாமக்கல் மாவட்டத்தில் வேளாண்மையும் அதனை சார்ந்த தொழில்களும் முக்கிய பங்கு வகிக்கிறது.
    • மக்கள் தொகையில் 65 முதல் 75 சதவீதம் பேர் விவ சாயத்தை தங்கள் வாழ்வா தாரமாக கொண்டுள்ளனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    நாமக்கல் மாவட்டத்தில் வேளாண்மையும் அதனை சார்ந்த தொழில்களும் முக்கிய பங்கு வகிக்கிறது. மக்கள் தொகையில் 65 முதல் 75 சதவீதம் பேர் விவ சாயத்தை தங்கள் வாழ்வா தாரமாக கொண்டுள்ளனர்.

    மேலும் வளர்ந்து வரும் மக்கள் தெகைக்கு தேவை யான உணவு மற்றும் உணவுப் பொருட்களின் பாதுகாப்பினை உறுதிப் படுத்திட இயற்கை விவசா யம் செய்து, நஞ்சில்லா உணவு பொருட்களை உற்பத்தி செய்வதில் பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சி திட்டம் மிக முக்கிய அங்கமாக விளங்கு கிறது.

    வேதியியல் பொருட் களை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதால் மண்ணும் நீரும் நச்சுத் தன்மை அடைந்து மனித வாழ்வு நலிவடைவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்ப தால், இதனை தவிர்க்கும் விதமாக இயற்கையான எருவைப் பயன்படுத்தி ரசாயன உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகள் இல்லாமல் வேளாண்மை செய்யும் அங்கக வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு அங்கக வேளாண்மை கொள்கை அண்மையில் வெளியிட்டுள்ளது.

    அதனைத் தொடர்ந்து அங்கக வேளாண்மையின் முக்கியத்துவம் குறித்து விவசாயிகள், கிராமப்புற இளைஞர்கள், பண்ணை மகளிர், மாணவர்களி டையே போதிய விழிப்பு ணர்வு ஏற்படுத்துதல் மற்றும் அங்க வேளாண் மையை ஊக்குவிக்க மாவட்ட மற்றும் வட்டார அளவில் விவசாயிகளுடன் கூடிய குழுக்கள் அமைத்திட தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் அங்கக வேளாண்மையை ஊக்கு விக்கும் வகையில், பாரம் பரிய வேளாண்மை வளர்ச்சி திட்டம் செயல் படுத்த திட்டமிடப்பட்டு, இத்திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்திற்கு 15 வட்டா ரங்களில் 400 எக்டர் பரப்பளவில் 20 தொகுப்பு கள் உருவாக்கிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் அங்கக சான்றிதழ் பெறுவதை ஊக்குவிக்கும் வகையில், சான்று கட்டணமான ெஹக்டருக்கு ரூ. 2,000 வழங்கப்படுகிறது.

    இத்திட்டத்தின் கீழ் 1 எக்டருக்கு குறைவாக உள்ள விவசாயிகளும் இணைந்து பயன்பெறலாம். மேலும் இத்திட்டத்தின் கீழ் விளைவிக்கப்படும் உணவு பொருள்கள் மனித உடலுக்கு ஊறு விளை விக்காத காரணத்தினால் அதிக அளவில் மக்களிடம் வரவேற்பையும் அதிக லாபத்தையும் ஈட்டித் தரும் திட்டமாகும்.

    இத்திட்டம் குறித்த விபரங்களை தெரிந்து கொள்ள விவசாயிகள் அருகிலுள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவல கத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என கூறியுள்ளார்.

    • அங்கக வேளாண்மை குறித்த வழிகாட்டுதல்கள், பதிவு செய்யும் முறை விளக்கப்பட்டது.
    • உதவி வேளாண்மை அலுவலர் சிவக்குமார் உழவன் செயலியின் பயன்பாடு விளக்கப்பட்டது.

     காங்கயம்:

    காங்கயம் வட்டாரத்தில் 2023-ம் ஆண்டு வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் அங்கக வேளாண்மை செய்ய ஆர்வமுள்ள விவசாயிகள் குழு கண்டறியப்பட்டு அக்குழுவில் உள்ள 25 விவசாயிகளுக்கு காங்கயம் அருகே காடையூர் பகுதியில் முதல் கட்ட பயிற்சி வேளாண்மை உதவி இயக்குனர் தலைமையில் நடத்தப்பட்டது.

    இந்த பயிற்சியில் அங்ககச் சான்று ஆய்வாளர் ஹேமா கலந்துகொண்டு அங்கக வேளாண்மை குறித்த வழிகாட்டுதல்கள், பதிவு செய்யும் முறை பற்றி விளக்கமாக எடுத்துக்கூறினார். தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் ஆலோசகர் அரசப்பன் கோடை உழவு, உயிர் உரங்கள், பசுந்தாள் உரங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள், அங்கக வேளாண்மையில் இவற்றின் பங்கு ஆகியவை பற்றி விரிவாக விவசாயிகளுக்கு எடுத்துக்கூறினார். வேளாண்மை உதவி இயக்குனர் வசந்தாமணி பரம்பரகத் க்ரிசி விகாஷ் யோஜனா திட்டம் (பி.கே.வி.வை) பற்றி எடுத்துரைத்தார். வேளாண்மை அலுவலர் ரேவதி பாசன நீர் மாதிரி எடுத்தல் மற்றும் அதன் முக்கியத்துவம் பற்றி கூறினார்.

    உதவி வேளாண்மை அலுவலர் சிவக்குமார் உழவன் செயலியின் பயன்கள் பற்றி கூறினார். அட்மா உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் தேவராஜ், வசந்த் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • சிறப்பு முகாம்கள் ஜூன் 26-ந்தேதி முதல் நடத்தப்படுகிறது.
    • குளிா்பதன கிடங்கு விரைவில் விவசாயிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

     ஊட்டி,

    நீலகிரி மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் அம்ரித் தலைமையில் நடைபெற்றது.

    இது குறித்து அவா் வெளியி ட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதா வது:-

    நீலகிரி மாவட்டத்தில் பிரதம மந்திரியின் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயனடையும் வகையில் வட்டார அளவில் சிறப்பு முகாம்கள் ஜூன் 26-ந்தேதி முதல் நடத்தப்படுகிறது. இயற்கை வேளாண்மைக்காக தோட்டக்கலைத் துறை மூலம் நடப்பு ஆண்டில் ரூ. 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தின் வழி காட்டு நெறிமுறை களின்படி மாதந்தோறும் அங்கக வேளாண்மைக்கான கூட்டம் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தோட்டக்கலைத் துறையி ன்கீழ் அரசு ரோஜா பூங்கா அருகில் அமைந்துள்ள குளிா்பதன கிடங்கு விரைவில் விவசாயிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

    தனியாா் விற்பனை நிலையங்களில் உரத்தின் விலை கடந்த ஓராண்டில் அதிக அளவில் உயா்ந்து ள்ளதாக தகவல் வந்த நிலையில், அங்கு ஆய்வு செய்யுமாறு சம்பந்த ப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறு த்தப்பட்டுள்ளது.

    தென்மேற்கு பருவமழை யையொட்டி அபாயக ரமான நிலையில் உள்ள மரங்கள் மற்றும் மரக்கிளை களை வெட்டுவதற்காக வருவாய்த் துறை அலுவ லா்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. தோட்டக்கலைத் துறையின் மூலம் 2023-24 ஆம் ஆண்டில் தேசிய தோட்ட க்கலை இயக்கம் திட்டத்தி ன்கீழ் நிழல்வலை குடில் 50 சதவீதம் மானியத்தில் அமைக்கவும், 2023-2024 ஆம் ஆண்டில் 20 யூனிட் தேனீ வளா்ப்பு க்கும் இலக்கு நிா்ணயிக்கப்ப ட்டுள்ளது.

    எனவே, தேவைப்படும் விவசாயிகள் விண்ண ப்பித்து பயன்பெறலாம். கடந்த ஆண்டு வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் 274 தேயிலை அறுவடை இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு சிறப்புப்பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 60 லட்சம் மதிப்பில் ஆயிரம் தேயிலை அறுவடை இயந்திரங்கள் விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள ப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் உழவா் உற்பத்தியாளா் சந்தைக்கு சி.சி.டி.வி. காமிரா மற்றும் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • கண்காட்சி இயற்கை முறையில் உணவுப் பொருட்கள், காய்கறிகள், பழவகைகளை விற்பனை செய்தனர்.
    • இங்கிருந்த இளவட்டக் கல்லை இளைஞர்கள் தூக்கி ஆரவாரம் செய்தனர்.

    கண்ணமங்கலம்:

    தமிழ் மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்கு இயற்கை விவசாயம் முக்கிய பங்கு வகித்தது.

    அனைத்து தொழில்களை விட மக்கள் விவசாயத்தை கவுரவ தொழிலக செய்து வந்தார்கள்.

    விவசாயம் செய்பவர்களை இந்த சமூகம் சுய மரியாதையுடன் வாழவைத்தது. தமிழர்கள் பல விதமான பயிர் வகைகள், மண்வகைகள், நீர்ப்பாசன முறைகளை அறிந்திருந்தனர். அதனால் விவசாயம் பெரும் வளர்ச்சி அடைந்தது.

    தற்போது செயற்கை உரம், பூச்சிக்கொல்லி மரபணு மாற்றப்பட்ட காய்கறிகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் எனவே இயற்கை விவசாயத்திற்கு மீண்டும் திரும்ப வேண்டும் என விவசாய ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    ஆட்கள் பற்றாக்குறையால் பழைய விவசாய கருவிகள் எல்லாம் தற்போது காணாமல் போய்விட்டன.

    இயற்கை விவசாயம் பழங்கால விவசாய கருவிகளை தற்போது உள்ளவர்களும் அறிந்து கொள்ளும் வகையில் திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தில் கண்காட்சி நடந்தது.

    கண்ணமங்கலம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் இயற்கை விவசாயிகள் ஊர்தோறும் உணவுத் திருவிழா நடைபெற்றது.

    கண்ணமங்கலம் மற்றும் அதைச்சுற்றியுள்ள கிராமங்களில் இயற்கை முறையில் விவசாயம் செய்யும் தானியங்கள், உணவு வகைகள் வைக்கப்பட்டிருந்தன.

    நாட்டு வகை மாடுகள், இளவட்டக்கல், விவசாய பயன்பாட்டுக்கு உண்டான பழைய கருவிகள், ஏர் கலப்பைகள் உள்பட பல்வேறு வகையான பொருட்கள், மூலிகைகள் கண்காட்சியில் வைத்திருந்தனர்.

    இங்கிருந்த இளவட்டக் கல்லை இளைஞர்கள் தூக்கி ஆரவாரம் செய்தனர்.

    இந்த கண்காட்சி இயற்கை முறையில் உணவுப் பொருட்கள், காய்கறிகள், பழவகைகளை விற்பனை செய்தனர். இதனை ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் உண்டு மகிழ்ந்தனர். மேலும் இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளை தங்கள் வீடுகளுக்கு வாங்கிச் சென்றனர். 

    • கிருஷ்ணன், தோட்டத்தில் இயற்கை முறையில் பருத்தி விவசாயம் செய்து வருகிறார்.
    • இங்கிலாந்து நாட்டிலிருந்து தமிழகத்திற்கு சுற்றுலா வந்த விக்கி, கிலோமினா, ஆகியோர் பார்வையிட்டனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே இயற்கை விவசாயம் செய்து வருபவர் பால கிருஷ்ணன்(வயது 41).இந்நிலையில் இவரது தோட்டத்தில்,இயற்கை முறையில் பருத்தி விவசாயம் செய்து வருகிறார்.

    இதனை நேற்று இங்கிலாந்து நாட்டிலிருந்து தமிழகத்திற்கு சுற்றுலா வந்த விக்கி, கிலோமினா, ஆகியோர் பார்வையிட்டனர். அங்குள்ள பருத்தி தோட்ட த்தை பார்வையிட்டு விவசாய பணிகள் குறித்த விவரங்களை கேட்ட றிந்தனர்.தமிழர்களின் கலாசாரம், விருந்தோம்பல் தங்களை மிகவும் கவர்ந்ததாக இங்கிலாந்து நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணி கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

    • தேயிலை தொழிற்சாலையில் 800-க்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
    • விவசாயம் இதுவரை மேற்கொள்ளாதவர்களுக்கு ரூ.12 வழங்கப்பட்டுள்ளது

    ஊட்டி

    தமிழக கேரள எல்லையையொட்டி கிண்ணக்கொரை கிராமம் உள்ளது. இங்குள்ள கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையில் 800-க்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். கிண்ணக்கொரை பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களை இயற்கை முறையில் மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்ததை அடுத்து, தோட்டக்கலை துறைமூலம் அதற்கான பணிகள் நடந்து வருகிறது. இதில், விவசாயிகள் படிப்படியாக இயற்கை விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர். இத்தொழிற்சாலையில் உறுப்பினர்கள் கடந்த மாதம் வினியோகித்த தேயிலைக்கு சராசரி விலையாக கிலோவுக்கு, ரூ.10 வழங்க முடிந்தது. ஆனால், இயற்கை விவசாயம் முழுமையாக மேற்கொண்டவர்களுக்கு, கிலோவுக்கு, ரூ.18 விலை வழங்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை நிர்வாக இயக்குனர் ரவிசந்திரன் கூறுகையில், இயற்கை விவசாயம் மேற்கொண்ட விவசாயிகளுக்கு கிலோவுக்கு ரூ.18, இயற்கை மேற்கொள்வதாக எழுதி கொடுத்தவர்களுக்கு கிலோவுக்கு ரூ.14, இயற்கை விவசாயம் இதுவரை மேற்கொள்ளாதவர்களுக்கு ரூ.12 வழங்கப்பட்டுள்ளது என்றார்.

    • ஆலங்குளம் வட்டாரத்தில் கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லுரி இளங்கலை இறுதியாண்டு மாணவிகள் கிராமப்புற வேளாண் பயிற்சி அனுபவங்களை பெற்று வருகின்றனர்.
    • இயற்கை முறையில் விவசாயம் செய்வதன் நன்மைகளையும் , இயற்கை விவசாய சான்றிதழ் எவ்வாறு பெறுவது என்பது பற்றியும் மாணவிகள் விவசாயிகளுக்கு விளக்கினர்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் வேளாண் உதவி இயக்குநர் சிவகுருநாதன், துணை வேளாண் அலுவலர் முருகன், வேளாண் அலுவலர் சண்முகப்பிரியா ஆகியோர் மாணவிகளை வழி நடத்தி வருகிறார்கள்.

    இதன் ஒரு பகுதியாக மாணவிகள் பேபிசாலினி, ஹேனா குமாரி, இந்துஜா, கவிதா, கீர்த்தனா, லக்ஷயா ஆகியோர் ஆலங்குளம் அருகே மாறாந்தை கிராமத்தில் இயற்கை முறை வேளாண்மை குறித்து விவசாயிகளிடையே விளக்கி கூறினர். இயற்கை முறையில் விவசாயம் செய்வதன் நன்மைகளையும் இயற்கை விவசாய சான்றிதழ் எவ்வாறு பெறுவது என்பது பற்றியும் விவசாயிகளுக்கு விளக்கினர்.

    மேலும் இயற்கை விவசாய சான்றிதழ் பெறுவதால் கிடைக்கும் சலுகைகளையும், நன்மைகளையும் பற்றி விவசாயிகளிடையே எடுத்துரைத்தனர். செயற்கை உரங்களுக்கு மாற்றான இயற்கை உரங்களை பற்றிய துண்டு பிரசுரங்களை விவசாயிகளுக்கு வழங்கினர்.

    • தச்சநல்லூர் சிதம்பராநகர் நல்லமுத்து இயற்கை வேளாண் மையத்தில், மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் சிலை திறப்பு விழா இன்று நடைபெற்றது.
    • ஈஷா யோகா மையம் சார்பில் விவசாயிகளுக்கு வேளாண் பயிற்சி அளிக்கப்பட்டது

    நெல்லை:

    தச்சநல்லூர் சிதம்பரா நகர் நல்லமுத்து இயற்கை வேளாண் மையத்தில், மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் சிலை திறப்பு விழா இன்று நடைபெற்றது.

    மக்கள் மருத்துவர் ராமகுரு தலைமை தாங்கினார். நம்மாழ்வார் சிலையை ஓவியர் சந்துரு திறந்து வைத்தார். நெல்லை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக எழுத்தாளர்கள் சுகா, ராமனுஜம், காந்தி கிராம பல்கலை கழக பேராசிரியர் டாக்டர் உதயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இதில் டாக்டர் பிரேம சந்திரன், ரமேஷ் ராஜா, சேசுராஜ், இயற்கை விவசாய சங்கம் சுப்பிரமணியம், நடராஜன், உஷாராமன், உழவர் கூட்டுப்பண்ணை கிருசி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து ஈஷா யோகா மையம் சார்பில் விவசாயிகளுக்கு வேளாண் பயிற்சி அளிக்கப்பட்டது. அப்போது இயற்கை விவசாயம் செய்வது எப்படி? என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

    • வேளாண்மைக் கல்லூரி இறுதிஆண்டு மாணவிகளுக்கு கிராம அளவிலான ஊரக வேளாண்மை பயிற்சி வேளாண்மை உதவி இயக்குனர் மணிவாசகம் முன்னிலையில் பூலாம்பட்டி கிராமத்தில் நடைபெற்றது.
    • இதில் வேளாண் தொழில்நுட்ப அலுவலர் மோகன்ராஜ் மற்றும் பூலாம்பட்டி பகுதி உதவி வேளாண்மை அலுவலர் சாந்திலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    சேலம்:

    எடப்பாடி வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் வேளாண்மைக் கல்லூரி இறுதிஆண்டு மாணவிகளுக்கு கிராம அளவிலான ஊரக வேளாண்மை பயிற்சி வேளாண்மை உதவி இயக்குனர் மணிவாசகம் முன்னிலையில் பூலாம்பட்டி கிராமத்தில் நடைபெற்றது.

    அந்த பகுதியை சேர்ந்த ஜெயலட்சுமியின் வயலில் இயற்கை விவசாயம் குறித்த இடுப்பொருட்கள் தயாரித்தல் பஞ்சகவ்யம், தேர்மோர் கரைசல், இயற்கை பூச்சி விரட்டி, வேஸ்ட் டீ கம்போஸ்ட், ஜீவாமிர்த கரைசல் தயாரித்தல் மற்றும் வெட்டி சீலியம் தயாரித்தல் பற்றிய செயல் விளக்கம் நேரில் அளிக்கப்பட்டது.

    இதில் வேளாண் தொழில்நுட்ப அலுவலர் மோகன்ராஜ் மற்றும் பூலாம்பட்டி பகுதி உதவி வேளாண்மை அலுவலர் சாந்திலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டு பாரம்பரிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் நோக்கங்கள், அதன் நன்மைகள் குறித்து விளக்கம் அளித்தனர்.

    • சாததான்குளம் ஒன்றியம் சாஸ்தாவிநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட பொத்தகாலன்விளையில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிரியல் துறை சார்பாக இயற்கை முறையில் காய்கனி சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு மாவட்ட அளவிலான பயிற்சி அளிக்கப்பட்டது.
    • பயற்சிக்கு தோட்டக்கலை உதவி இயக்குனர் ஜெபத்துரை தலைமை தாங்கினார்.

    சாத்தான்குளம்:

    சாததான்குளம் ஒன்றியம் சாஸ்தாவிநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட பொத்தகாலன்விளையில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிரியல் துறை சார்பாக இயற்கை முறையில் காய்கனி சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு மாவட்ட அளவிலான பயிற்சி அளிக்கப்பட்டது.

    பயற்சிக்கு தோட்டக்கலை உதவி இயக்குனர் ஜெபத்துரை தலைமை தாங்கினார். சாஸ்தாவிநல்லூர் விவசாய நல சங்க செயலர் லூர்து மணி பயிற்சியை தொடங்கி வைத்தார். சாஸ்தாவிநல்லூர் விவசாய நல சங்கத் துணைத் தலைவர் ரவிச்சந்திரன், சங்க செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார், சங்க பொருளாளர் ரூபேஷ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் தோட்டக்கலை விஞ்ஞானி வேல்முருகன், இயற்கை விவசாயம் பற்றி சிறப்பு பயிற்சி அளித்தார். உதவி வேளாண்மை அலுவலர் முனீஸ்வரி, பி.எம். கிசான் திட்டத்தைப் பற்றியும், அதை எவ்வாறு பதிவேற்றம் செய்வது குறித்தும் பேசினார். உதவி தோட்டக்கலை அலுவலர் அஜித்குமார் தோட்டக்கலை மானியங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.

    இதில் சாஸ்தாவிநல்லூர் விவசாய சங்க செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார், விவசாய நலச் சங்க உறுப்பினர்கள் ராஜ மனோகரன், செல்வஜெகன், ஜஸ்டின், வெலிங்டன், ஜூலியன், ராஜ், பிலவேந்திரன், அலெக்ஸ், பேச்சி, மெர்சி, லிவிங்ஸ்டன். சவரிராயன் உள்ளிட்ட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஜெபக்குமார், உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் முருகன், ஜேக்கப் ஆகியோர் செய்திருந்தனர்.

    ×