search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Notification"

    • காங்கிரஸ் கட்சியால் மட்டுமே மாநிலத்துக்கு நியாயம் செய்ய முடியும்.
    • கடந்த தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்த தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை.

    திருப்பதி:

    ஆந்திரா மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் சர்மிளா திருப்பதி மாவட்டம், காளஹஸ்தியில் ரோடு ஷோ நடத்தினார்.

    மாநிலம் பிரிக்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆகியும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து பெற எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

    இந்த இரண்டு கட்சியை சேர்ந்தவர்களும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க தவறிவிட்டனர். காங்கிரஸ் கட்சியால் மட்டுமே மாநிலத்துக்கு நியாயம் செய்ய முடியும். காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் ரூ.2 லட்சம் வரையிலான விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும்.

    ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க காங்கிரஸ் கட்சி உறுதி அளித்து உள்ளது. கடந்த தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்த தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை.

    அரசில் காலியாக உள்ள 2.3 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்புவோம். கடந்த 10 ஆண்டுகளாக மாநிலத்திற்கு நிரந்தரமாக ஒரு தலைநகரை கூட இவர்களால் ஏற்படுத்த முடியவில்லை. முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திராவுக்கு 3 தலை நகரங்களை ஏற்படுத்துவேன் என கனவு கண்டு வாக்குறுதி அளிக்கிறார்.

    இவர்களால் மாநிலத்திற்கு எந்த நன்மையும் செய்ய முடியாது. காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்த 5 ஆண்டுகளில் ஆந்திராவுக்கு விரிவான வளர்ச்சியை உருவாக்க முடியும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • 35 நாட்களுக்கு மேலாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
    • விவசாயிகள், பொதுமக்கள் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்து உப்பாறு அணை உள்ளது. இந்த அணையை நம்பி 6500 க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் விவசாயம் செய்து வந்தனர். இந்நிலையில் உப்பாறு அணைக்கு தண்ணீர் வந்து பல ஆண்டுகள் ஆன நிலையில் அணைக்கு திருமூர்த்தி அணையில் இருந்து உபரி தண்ணீர் திறந்து விட வேண்டும் என கூறி கடந்த ஒரு வருடமாக பல்வேறு போராட்டங்களை விவசாயிகள் நடத்தி வருகின்றனர்.

    35 நாட்களுக்கு மேலாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விவசாயத்திற்கு கூட தண்ணீர் வேண்டாம். குடிநீர் மற்றும் கால்நடைகளுக்கு தண்ணீர் கிடைக்கும் வகையில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    இந்நிலையில் உப்பாறு அணைக்கு தண்ணீர் திறந்து விடப்படாததை கண்டித்து அணை பகுதியை சேர்ந்த விவசாய கிராமங்களான கெத்தல் ரேவ், தாசம்பட்டி, பொன்னாளிபாளையம், வண்ணாம்பட்டி, தேர் பாதை, தொண்டாமுத்தூர், ரங்கம் பாளையம், நடுப்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.அரசியல்வாதிகள் யாரும் எங்கள் ஊருக்குள் வரக்கூடாது என தெரிவித்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளில் 15 தொகுதிகள் தற்போது காங்கிரஸ் வசம் உள்ளன.
    • தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதி பற்றி தெரிவித்தது மட்டுமின்றி, ராஜ்யசபா தொகுதி ஒன்றையும் கேட்டுள்ளதாக தெரிகிறது.

    திருவனந்தபுரம்:

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் 5 ஆண்டு பதவிக்காலம் வருகிற மே மாதம் முடிவடைவதால், 18-வது பாராளுமன்றத்துக்கான தேர்தல் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் அடுத்த மாதம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தலில் களமிறங்க தயாராகி வருகின்றன.

    அனைத்து மாநிலங்களிலும் பிரதான கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. கேரள மாநிலத்தை பொறுத்தவரை பாரதிய ஜனதா, காங்கிரஸ், மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் தேர்தல் பணியை தொடங்கிவிட்டது மட்டுமின்றி, தங்களது கூட்ட ணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தையை நடத்தி வருகின்றன.

    கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளில் வயநாடு, திருவனந்தபுரம், கோழிக்கோடு, அட்டிங்கல், இடுக்கி, பத்தினம்திட்டா, சாலக்குடி, எர்ணாகுளம், வடகரை, கண்ணூர், மாவேலிக்கரை, பாலக்காடு, திருச்சூர், ஆலத்தூர், காசர்கோடு ஆகிய 15 தொகுதிகள் தற்போது காங்கிரஸ் வசம் உள்ளன.

    அந்த தொகுதிகள் மட்டுமின்றி, மீதமுள்ள 5 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் என்ற இலக்குடன் காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது. அதற்கு தகுந்தாற்போல் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றன.

    காங்கிரஸ் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகளுக்கிடையே தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் கேரள காங்கிரஸ் தலைவர் கே.சுதாகரன், எதிர்க்கட்சி தலைவர் சதீசன், த.மு.மு.க. தலைவர் குஞ்சாலிக்குட்டி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் பனக்காடு சயீத் சாதிக் அலி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு பற்றி இரு கட்சி தலைவர்களும் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. ஆனால் தங்களுக்கிடையே நடந்த பேச்சுவார்த்தை திருப்தி கரமாக இருந்ததாக கூறி யுள்ளனர். இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதி பற்றி தெரிவித்தது மட்டுமின்றி, ராஜ்யசபா தொகுதி ஒன்றையும் கேட்டுள்ளதாக தெரிகிறது.

    அதுபற்றி காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுதாகரன் கூறும்போது, ராஜ்யசபா சீட் காலியாகும்போது, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஏற்க தயாராக இருந்தால், அதை அவர்களுக்கு நாங்கள் வழங்குவோம் என்று தெரிவித்தார். தங்களது தொகுதி பங்கீடு முடிவுகளை நாளை (27-நதேதி) அறிவிப்போம் என்று இரு கட்சிகளும் தெரிவித்துள்ளன.

    • ரெயில்பாதை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்சார ரெயில்கள் சேவை குறைக்கப்பட்டுள்ளது.
    • நள்ளிரவு முதல் அதிகாலை வரையில் கூடுதலாக பஸ் போக்குவரத்து சேவையை அறிவித்து உள்ளது.

    சென்னை:

    சென்னை கடற்கரை- தாம்பரம், செங்கல்பட்டு, அரக்கோணம் மார்க்கத்தில் ரெயில்பாதை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்சார ரெயில்கள் சேவை குறைக்கப்பட்டுள்ளது.

    இதனால் புறநகர் மின்சார பயணிகள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். நேற்று விடுமுறை நாளில் குறைவான அளவில் சேவை இருந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

    இதையடுத்து மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு முதல் அதிகாலை வரையில் கூடுதலாக பஸ் போக்குவரத்து சேவையை அறிவித்து உள்ளது.

    இது தொடர்பாக மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    மின்சார ரெயில் வழித் தடத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் 22-ந் தேதி வரை இரவு 11.45 மணி முதல் அதிகாலை 4.30 மணிவரை சென்னை கடற்கரை-முதல் தாம்பரம் வரை உள்ள வழித்தடத்தில் வழக்கமாக இயங்கும் பஸ்களுடன் கூடுதலாக 20 பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • இணைய வழியிலும் விற்பனை செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • முதல் கட்டமாக 5 லட்சம் டன் அரிசியை மத்திய அரசு ஒதுக்க உள்ளது.

    புதுடெல்லி:

    விலைவாசி உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சாதாரண மக்களின் சுமையைக் குறைக்கும் வகையில் 'பாரத் அரிசி' என்ற பெயரில் சில்லரை சந்தையில் ரூ.29-க்கு ஒரு கிலோ அரிசி விற்பனை செய்யும் திட்டத்தை மத்திய அரசு நேற்று அறிவித்தது.

    இந்த அரிசி அடுத்த வாரம் முதல் கடைகளில் கிடைக்கும். இணைய வழியிலும் விற்பனை செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் முதல் இந்த அரிசி சந்தைகளில் கிடைக்கும். 5 கிலோ மற்றும் 10 கிலோ பைகளாக இவை விற்பனை செய்யப்படும். 'பாரத்' அரிசி விற்பனைக்காக முதல் கட்டமாக 5 லட்சம் டன் அரிசியை மத்திய அரசு ஒதுக்க உள்ளது.

    ஏற்கனவே 'பாரத் ஆட்டா' என்ற பெயரில் ரூ.27.50-க்கு ஒரு கிலோ கோதுமை மாவும், 'பாரத்' பருப்பு என்ற பெயரில் ரூ.60-க்கு ஒரு கிலோ சென்னாவையும் (வெள்ளை கொண்டைக் கடலை) மத்திய அரசு சில்லரை சந்தையில் விற்பனை செய்து வருகிறது.

    • தமிழ்நாடு முழுவதும் வருகிற 5-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை 9 மண்டலங்களுக்கு உட்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று தரவுகளை பெறுவார்கள்.
    • நேரடியாக அமைப்புகளின் பிரதிநிதிகளை அழைத்து வந்தோ அல்லது அவர்களிடம் தரவுகளைப் பெற்று வந்தோ குழுவினரிடம் ஒப்படைக்க வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அ.தி.மு.க.வின் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த குழுவினர் தமிழ் நாடு முழுவதும் வருகிற 5-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை 9 மண்டலங்களுக்கு உட்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று தரவுகளை பெறுவார்கள்.

    5-ந்தேதி (திங்கள்) சென்னை மண்டலத்துக்கு உட்பட்ட சென்னை, திரு வள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்தவர்களிடம் வேலப்பன்சாவடியில் உள்ள கஜலட்சுமி திருமண மண்டபத்தில் காலை 9 மணி முதல் கருத்து கேட்பார்கள்.

    மாலை 5 மணிக்கு வேலூர் சத்துவாச்சேரியில் உள்ள கிருஷ்ணா மகாலில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களிடம் கருத்து கேட்கப்படும்.

    6-ந்தேதி (செவ்வாய்) காலை 10.30 மணி முதல் மாடூர் ஏ.என்.பி. மஹாலில் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களிடம் கருத்து கேட்கப்படும்.

    மாலை 5 மணிக்கு சேலம் மண்டலத்துக்குட்பட்ட சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்தவர்களிடம் சூரமங்கலம் மெயின் ரோட்டில் உள்ள ஜி.வி.என். திருமண மண்டபத்தில் வைத்து கருத்து கேட்கப்படும்.

    7-ந்தேதி (புதன்கிழமை) காலை 10 மணி முதல் தஞ்சாவூர் மண்டலத்தில் உள்ள புதுக்கோட்டை ரோடு பி.எல்.ஏ. மஹாலில் தஞ்சாவூர், நாகப் பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களிடம் கருத்து கேட்கப்படும்.

    மாலை 5 மணிக்கு திருச்சி மண்டலகத்துக்குட்பட்ட திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்தவர் களிடம் கருமண்டபத்தில் உள்ள எஸ்.பி.எஸ். மஹாலில் வைத்து கருத்து கேட்கப்படும்.

    8-ந்தேதி (வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு திருநெல்வேலி மண்டலம், திருவனந்தபுரம் ரோட்டில் உள்ள நேருஜி கலையரங்கத்தில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களிடம் கருத்து கேட்கப்படும்.

    9-ந்தேதி (வெள்ளிக் கிழமை) மாலை 4 மணிக்கு மதுரை மண்டலம், காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல், விருது நகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களிடம் கருத்து கேட்கப்படும்.

    10-ந்தேதி (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு கோவை மண்டலம், காளப்பட்டி ரோட்டில் உள்ள சுகுணா ஆடிட்டோரியத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களிடம் கருத்து கேட்கப்படும்.

    தேர்தல் அறிக்கை குழுவினர் வரும்போது, மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டக் கழக செயலாளர் களும்,. நிர்வாகிகளும், அந்தந்த மாவட்டங்களில் உள்ள விவசாயிகள், விவசாய சங்கங்கள், விவசாயத் தொழிலாளர்கள், கைத்தறி மற்றும் விசைத்தறித் தொழிலாளர்கள், மோட்டார் வாகன உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள், மீனவர்கள், அரசு அலுவ லர்கள், ஆசிரியர்கள், ரெயில்வே தொழிற் சங்கங்கள், தொழில் முதலீட்டாளர்கள், சிறு, குறு தொழில் முதலீட்டாளர்கள், வணிகர் சங்கங்கள், வியாபாரிகள் சங்கம், அமைப்பு சாரா தொழிலாளர்கள், பொதுநலச் சங்கங்கள், மகளிர், சுயஉதவிக் குழுக்கள், மாணவர்கள், பொதுநலன் சார்ந்த அமைப்புகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களிடமும், பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் மத்திய அரசிடம் இருந்து அவர்களின் தேவைகள், எதிர்பார்ப்புகள் எவை எவை என்று, நேரடியாக அமைப்புகளின் பிரதிநிதிகளை அழைத்து வந்தோ அல்லது அவர்களிடம் தரவுகளைப் பெற்று வந்தோ குழுவினரிடம் ஒப்படைக்க வேண்டும்.

    • தேர்வுக்கு ஆன்லைன் வழியாக பிப்ரவரி மாதம் 28-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
    • பல்வேறு துறைகளில் உள்ள மொத்த காலி பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணி இடங்களுக்கு போட்டித் தேர்வு நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்து கொடுக்கிறது.

    அந்த வகையில் குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பினை இன்று வெளியிட்டுள்ளது. 6,244 காலி பணியிடங்களுக்கான தேர்வு ஜூன் மாதம் 9-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கு ஆன்லைன் வழியாக பிப்ரவரி மாதம் 28-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். கிராம நிர்வாக அலுவலர்-108, இளநிலை உதவியாளர் 2442 உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள மொத்த காலி பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது.

    விண்ணப்பத்தினை அளிப்பதற்கு மார்ச் 4-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது. நீதித்துறையில் சுருக்கெழுத்து தட்டச்சர் 441 பணியிடங்கள், தட்டச்சர்-1653, வனக் காவலர்-526, பல்வேறு துறை பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்படுகிறது.

    கிராம நிர்வாக அலுவலர், வனக்காப்பாளர், ஓட்டுனர் உரிமத்துடன் கூடிய காவலர் மற்றும் வனக்காவலர் (பழங்குடியின இளைஞர்) ஆகிய பதவிகளை தவிர மற்ற அனைத்து பதவிகளுக்கும் தேர்வர்கள் 1.7.2024 அன்று 18 வயது நிரம்பியதாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனகள் விதிக்கப்பட்டுள்ளன.

    • மாணவர்களுக்கு இனி பொதுத் தோ்வு முடிவில் மதிப்பெண்கள் மட்டுமே வழங்கப்படும்.
    • பிப்ரவரி 15-ந் தேதி பொதுத் தோ்வுகள் தொடங்க உள்ள நிலையில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    புதுடெல்லி:

    மாணவா்களிடையே தேவையற்ற போட்டி மனப்பான்மையைத் தவிா்க்கும் வகையில், தோ்வில் முதலிடம் பிடித்த மாணவா் என்பது போன்ற தனிப்பட்ட மாணவா்களின் பட்டியலை வெளியிடுவதை சி.பி.எஸ்.இ. ஏற்கெனவே நிறுத்திவிட்டது. அதன் தொடா்ச்சியாக, தற்போது ஒட்டுமொத்த மதிப்பெண் சதவீதம், தரவரிசை போன்ற விவரங்கள் வெளியீட்டையும் நிறுத்த சி.பி.எஸ்.இ. முடிவு செய்துள்ளது.

    இதுகுறித்து சி.பி.எஸ்.இ. தோ்வுக் கட்டுப்பாட்டாளா் சன்யம் பரத்வாஜ் கூறியதாவது:-

    10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இனி பொதுத் தோ்வு முடிவில் மதிப்பெண்கள் மட்டுமே வழங்கப்படும். மாணவா் பெற்ற ஒட்டுமொத்த மதிப்பெண் விவரம், ஒட்டுமொத்த மதிப்பெண் சதவீதம், தரவரிசை, அனைத்துப் பாடங்களில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவா்கள் பட்டியல் போன்ற விவரங்கள் வெளியிடப்படாது.

    எனவே, உயா் கல்வி நிறுவனங்கள் அல்லது வேலைவாய்ப்பு அளிக்கும் நிறுவனங்கள் சி.பி.எஸ்.இ. மாணவா்களின் பாட மதிப்பெண்களின் அடிப்படையில், அவா்கள் பெற்ற மொத்த மதிப்பெண்ணையும், மதிப்பெண் சதவீதத்தையும் கணக்கிட்டுக்கொள்ள வேண்டும்' என்றாா்.

    சி.பி.எஸ்.இ. 10, 12-ம் வகுப்பு பொதுத் தோ்வுகள் வரும் 2024, பிப்ரவரி 15-ந் தேதி தொடங்க உள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக விட்டுவிட்டு கனமழை கொட்டுகிறது.
    • ஐந்து மண்டலங்களிலும் ரூ.37.59 கோடி மதிப்பீட்டில் 12.461 கிலோ மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது.

    தாம்பரம்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. கடந்த சில நாட்களாக அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக விட்டுவிட்டு கனமழை கொட்டுகிறது. இன்று காலையும் பல்வேறு இடங்களில் மழைவெளுத்து வாங்கியது.

    கன மழை பெய்யும் போது புறநகர் பகுதியான தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பெருங்களத்தூர், சமத்துவபெரியார்நகர், அன்னை அஞ்சுகம் நகர், சிட்லபாக்கம், திருமலை நகர் மற்றும் முடிச்சூர், வரதராஜபுரம் ஆகிய இடங்கள் வெள்ளத்தில் மிதப்பது வாடிக்கையாக உள்ளது. இதைத்தொடர்ந்து தற்போது மழை வெள்ள பாதிப்பை தடுக்க தாம்பரம் மாநகராட்சி தீவிர நடவடிக்ைக எடுத்து உள்ளது.

    மழை வெள்ள பாதிப்பு மற்றும் தண்ணீர் தேக்கம் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்க தனியாக தொலை பேசி எண்கள், வாட்ஸ்அப் எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது தொடர்பாக தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் அழகுமீனா வெளியிட்டு உள்ள செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது:-

    தாம்பரம் மாநகராட்சிப் பகுதிகளில் மழை வெள்ள காலங்களில் பொது மக்களுக்குப் பாதிப்பின்றியும், போக்கு வரத்திற்கு இடையூறின்றி செல்லும் வகையிலும், மழைநீரானது சாலைகள் மற்றும் தெருக்களில் தேங்காமல் வடிந்து செல்லும் வகையில் மாநகராட்சிக்குட்பட்ட ஐந்து மண்டலங்களிலும் ரூ.37.59 கோடி மதிப்பீட்டில் 12.461 கிலோ மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது.

    மாநகராட்சிக்கு உட்பட்ட 5 மண்டலங்களில் 785 கி.மீ. நீளமுள்ள மழைநீர் வடிகால்கள், 62.75 கி.மீ நீளமுள்ள வரவு கால்வாய்கள் மற்றும் 6930 சிறுபாலங்கள் உள்ளன. இவற்றில் மழைநீர் தங்கு தடையின்றி செல்ல மழைநீர் வடிகால்கள், வரவு கால்வாய்கள் மற்றும் சிறுபாலங்களில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் தூர்வாருதல் பணிகள் முடிக்கப் பட்டுள்ளது. மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள சுரங்கப்பா தைகள் மற்றும் கடந்த காலங்க ளில் மழைநீர் தேங்கிய இடங்களில் மோட்டார் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. சுரங்கப்பாதைகளில் நீரினை உடனடியாக வெளியேற்றும் வகையில் 6 மோட்டார் பம்புகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    மாநகராட்சியில் உள்ள தாழ்வான பகுதிகளில் 80 எண்ணிக்கையிலான டீசல் மோட்டார் பம்புகள் மற்றும் மின் மோட்டார் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தடுப்பு பணிகளை மேற்கொள்ளத் தேவையான மணல் மூட்டைகள், மீட்பு பணிகளை மேற்கொள்ள 21 ஜே.சி.பி. எயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளது. கழிவு நீரேற்று நிலையங்களில் உள்ள மோட்டார் பம்புகள் பராமரிக்கப்பட்டு 24 மணிநேரமும் இயங்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தாம்பரம் மாநகராட்சி யுடன் வருவாய் துறை, நெடுஞ்சாலை துறை, மின்சார வாரியம், காவல் துறை, தீயணைப்பு துறை, நீர்வளத்துறை உள்ளிட்ட பிற சேவை துறைகளுடன் ஒருங்கிணைந்து வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மாநகராட்சியில் மழை தொடர்பான புகார் அளிக்க 24 மணி நேரம் இயங்கும் கட்டுப்பாட்டு அறை அமைத்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளவும், மீட்புப் பணிகளை மேற்கொள் ளவும் பணியா ளர்கள் மற்றும் அலுவலர்கள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் பொதுமக்கள் கட்டுப்பாட்டு அறையினைத் தொடர்புகொள்ள கட்ட ணமில்லா தொலைப்பேசி எண் 18004254355, 18004251600, வாட்ஸ்அப் எண். 8438353355 மற்றும் துணை ஆணையாளர் 9677257153 உதவி ஆணை யாளர்கள் 7397382213, 7397382214 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கம் மண்டலத்தில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் புதிய தண்ணீர் இரைக்கும் எந்திரங்கள், அதற்கான பைப்புகள்,மரம் அறுக்கும் எந்திரம், டார்ச் லைட், குடை கள் புதிய மண்வெட்டிகள், மீட்பு பணிக்காக கயிறுகள் மழையில் பயன்படுத்த ஊழியர்களுக்கான உடைகள், முதலுதவி உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. இவற்றை மண்டல தலைவர் ஜெய் பிரதீப் சந்திரன் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது உதவி பொறியாளர் பழனி, சுகாதார ஆய்வாளர் நாகராஜன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • ஊராட்சியை ஒரே மாவட்டத்தில் இணைக்க கோரி 6 கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்து உள்ளனர்
    • பொன்னமராவதி அருகே கிராமசபை கூட்டத்தில் மக்கள் ஆவேசம்

    பொன்னமராவதி,

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம் ஆர்.பாலக்குறிச்சி ஊராட்சிக்குப்பட்ட ரெகுநாதபட்டி கிராமத்தில் ஊராட்சி துணை தலைவர் ரெசினா பேகம் தலைமையில் கிராமசபை கூட்டம் நடந்தது. இதில் யூனியன் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பூமிநாதன் பங்கேற்றார்.

    கூட்டத்தில் ரெகுநாதம்பட்டி, சீகம்பட்டி, வைரம்பட்டி, கோபால்பட்டி விடத்தலாம்பட்டி உள்ளிட்ட 6 கிராம மக்கள் கலந்து கொண்டனர். தற்பொழுது வரை வருவாய் கிராமமாக புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஊராட்சியிலும் ,பாராளுமன்றம்,சட்டமன்ற தொகுதி சிவகங்கை மாவட்டத்திலும்,உள்ளாட்சி பிரதிநிதிகள் புதுக்கோட்டை மாவட்டத்திலும் இருப்பதால் 6 ஊர் கிராம மக்களும் ஏதோ ஒரு மாவட்டத்தில் தங்களது ஊராட்சியை முழுமையாக இணைக்க கோரி கிராம சபை கூட்டத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    காவல் நிலையம், மின் வாரியம் சிவகங்கை மாவட்டத்திலும் இருப்பதால் சாலை வசதி, சாலைப்போக்குவரத்து பேருந்து வசதி, குடிநீர் வசதி போன்ற பல்வேறு அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்ய முடியவில்லை. புதுக்கோட்டை மாவட்டத்திலோ அல்லது சிவகங்கை மாவட்டத்திலோ ஏதோ ஒரு மாவட்டத்தில் அரசு விரைவில் இணைக்க வேண்டும். என கோரிக்கை வைத்து வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    அதனை அதனை ஊராட்சி செயலாளர் சரவணன் வாசித்தார். இதில் நெடுஞ்சாலைதுறை உதவி பொறியாளர் பாலாஜி, பள்ளி தலைமைஆசிரியர் நாகலட்சுமி, ரேசன் கடை விற்பனையாளர்கள் முருகேசன், ரவிச்சந்திரன், நர்ஸ் கலைச்செல்வி, வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை உலகம்பட்டி சப் இன்ஸ்பெக்டர்( பொறுப்பு) சுப்பிரமணியன் மற்றும் போலீசார் இருந்தனர்.

    • விருதுநகர் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட வழிதடங்களின் விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • மேற்கண்ட தகவலை விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    பசும்பொன் முத்துராம லிங்க தேவரின் 116-வது தேவர் ஜெயந்தி மற்றும் 61-வது குருபூஜையை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் மற்றும் பிற மாவட்டங்களிலிருந்து ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னுக்கு செல்லும் வாகனங்கள் கீழ்கண்டவாறு உள்ள அனுமதிக்கப்பட்ட சாலை வழித்தடங்களில் மட்டுமே செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    அதன்படி சேத்தூர், முறம்பு, ராஜ பாளையம், ஸ்ரீவில்லி புத்தூர், அழகாபுரி, அருப்புக்கோட்டை, கா.விலக்கு, கண்ணார்பட்டி ஜங்சன், கமுதி, பசும்பொன்.

    சிவகாசி, திருத்தங்கல், விருதுநகர், அருப்புக் கோட்டை, கா.விலக்கு, கண்ணார்பட்டி ஜங்சன், கமுதி, பசும்பொன்.

    தோட்டிலோவன்பட்டி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, கா.விலக்கு, கண்ணார்பட்டி ஜங்சன், கமுதி, பசும்பொன்.

    பந்தல்குடி, அருப்புக் கோட்டை, கா.விலக்கு, கண்ணார்பட்டி ஜங்சன், கமுதி, பசும்பொன்.

    மல்லாங்கிணரில் இருந்து செல்லும் வாகனங்கள் அருப்புக்கோட்டை (கல்குறிச்சி), கா.விலக்கு, கண்ணார்பட்டி ஜங்சன், கமுதி, பசும்பொன்

    நரிக்குடி, பார்த்திப்ப னூர், அபிராமம், பசும் பொன்ஆகிய வழித்தடங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    தடை செய்யப்பட்ட வழித்தடங்கள்

    செங்கமல நாச்சியார்புரம் -கங்காகுளம், இரட்டை பாலம்-சிவகாசி பஸ் நிலையம், விளாம்பட்டி ஜங்சன்- எஸ்.எச்.என்.வி. பள்ளி, மீனாட்சிபுரம்- முஷ்டகுறிச்சி, மந்திரி ஓடை-முடுக்கன்குளம், காரியாபட்டி- புதுப்பட்டி, கல்குறிச்சி ஜங்சன்-கிருஷ்ணாபுரம், ராமலிங்கா மில்-குலசேகர நல்லூர், தமிழ்பாடி ஜங்சன்-ராமசா மிபட்டி, திருச்சுழி-மயிலி ஜங்சன், திருச்சுழி-பச்சேரி ஜங்சன், பூமாலைபட்டி ஜங்சன்-முத்துராமலிங்க புரம்புதூர், வீரசோழன் -மீனாகுளம், வீரசோழன்- கீழசெம்பூர் ஜங்சன், தேளி-தேளி (எல்லை), ரெட்டைகுளம்-ஆலாந்தூர், செங்குளம்-கருவக்குடி, கள்ளக்குறிச்சி-பூலாங்கால், ஒத்தக்கடை-எம்.ரெட்டியப்பட்டி, கட்டனூர்-பொட்டப் பச்சேரி, கட்டனூர்-கருவக் குடி ஜங்சன் ஆகிய பகுதிகள் தடை செய்யப்பட்ட வழி தடங்கள் ஆகும்.

    மேலும் தேவர் குருபூஜை நிகழ்வில் கலந்து கொள்ள செல்பவர்கள் தங்களது சொந்த வாகனங்களில், அனுமதிக்கப்பட்ட சாலை வழித்தடங்களில் மட்டுமே செல்ல வேண்டும். நடை பயணமாக, இரு சக்கர வாகனங்கள் மற்றும் வாடகை வாகனங்களில் செல்ல அனுமதி கிடையாது.

    வாகனங்களில் வெளிபுறத்தில் நின்றோ, நடனமாடி கொண்டோ மற்றும் மேற்கூரையில் அமர்ந்து கொண்டோ செல்லக்கூடாது.

    காவல்துறையினரின் முழுமையான தணிக்கைக்கு பின்பு வாகன அனுமதி சீட்டு பெற்று வாகனத்தில் முன்புறம் மற்றும் பின்புறம் ஒட்டி செல்ல வேண்டும். சோதனைச்சாவடியில் வாகன தணிக்கையின் போதும், காவல்துறை யினரால் அவ்வப்போது வழங்கப்படும் உத்தரவுக்கு கட்டுப்பட்டு நடப்பதோடு காவல்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

    மது அருந்திவிட்டு வாக னங்களில் செல்லக்கூடாது. மேலும் வாகனங்களில் ஒலிபெருக்கி, மது பானங்கள், பட்டாசு மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள், கல், கத்தி, கம்பு போன்ற பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் வாகனங்கள் பறி முதல் செய்யப்படும். வாகனங்களில் சென்று வரும் போது தேவையற்ற முறையில் பிற மதத்தினரையோ, சமுதாயத்தினரையோ புண்படுத்தும் வகையில் பேசுவதோ, கோஷங்கள் எழுப்புவதோ கூடாது.

    வாகனங்களில் உள்ள மேற்கூரை அகற்றப்பட வேண்டும். போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை வேகமாகவோ, ஆபத்தை விளைவிக்கும் வகையில் முந்தி செல்லவோ கூடாது. விதிகளை மீறினால் சம்பந்தப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேற்கண்ட தகவலை விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

    • வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் வாடகைக்கு குடிவருபவர்கள் பற்றி தகவல் தெரிவிக்க வேண்டும் என்று போலீசார் அறிவித்துள்ளனர்
    • அரவக்குறிச்சி டி.எஸ்.பி. அண்ணாதுரை, வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அறிவுறுத்தல்

    வேலாயு தம்பாளையம்,

    அரவக்குறிச்சி டி.எஸ்.பி. அண்ணாதுரை, வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பல்வேறு மாவட்டங்களில் இருந்து குற்றவாளிகள் வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளுக்கு வந்து வாடகைக்கு வீடு எடுத்து தங்கி பகல் மற்றும் இரவு நேரங்களில், கொள்ளை, வழிபறி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபடும் வாய்ப்பு உள்ளது.எனவே கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலைய எல்லைக்கு ட்பட்ட நொய்யல், குந்தா ணிபாளையம், நத்தமேடு, புன்னம்சத்திரம், புன்னம், குட்டக்கடை ,காகித ஆலை,குறுக்கு பாளையம், மூலிய மங்கலம் ,புகழூர், தவுட்டுப்பாளையம், கந்தம்பாளையம், கரப்பா ளையம், திருக்காடுதுறை, நன்செய் புகளூர் ,தோட்டக்குறிச்சி, வேலா யுதம்பாளையம், தளவாபா ளையம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புதிதாக வாடகைக்கு குடியமர்த்தும் நபர்களின் ஆதார்கார்டு, ரேஷன் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றை பெற்று, அதன் நகல்களை கொண்டு வந்து வேலா யுதம்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும். போலீசார் ஒப்புதலுக்கு பிறகே, அவர்களை வாடகைக்கு குடிஅமர்த்த வேண்டும். மேலும் வாடகைக்கு குடியிருப்ப வர்களின் செயல்பாடுகளில் சந்தேகம் இருப்பின் உடனடி யாக போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    ×