search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மத்திய அரசு அறிவிப்பு: ரூ.29-க்கு ஒரு கிலோ பாரத் அரிசி
    X

    மத்திய அரசு அறிவிப்பு: ரூ.29-க்கு ஒரு கிலோ 'பாரத்' அரிசி

    • இணைய வழியிலும் விற்பனை செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • முதல் கட்டமாக 5 லட்சம் டன் அரிசியை மத்திய அரசு ஒதுக்க உள்ளது.

    புதுடெல்லி:

    விலைவாசி உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சாதாரண மக்களின் சுமையைக் குறைக்கும் வகையில் 'பாரத் அரிசி' என்ற பெயரில் சில்லரை சந்தையில் ரூ.29-க்கு ஒரு கிலோ அரிசி விற்பனை செய்யும் திட்டத்தை மத்திய அரசு நேற்று அறிவித்தது.

    இந்த அரிசி அடுத்த வாரம் முதல் கடைகளில் கிடைக்கும். இணைய வழியிலும் விற்பனை செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் முதல் இந்த அரிசி சந்தைகளில் கிடைக்கும். 5 கிலோ மற்றும் 10 கிலோ பைகளாக இவை விற்பனை செய்யப்படும். 'பாரத்' அரிசி விற்பனைக்காக முதல் கட்டமாக 5 லட்சம் டன் அரிசியை மத்திய அரசு ஒதுக்க உள்ளது.

    ஏற்கனவே 'பாரத் ஆட்டா' என்ற பெயரில் ரூ.27.50-க்கு ஒரு கிலோ கோதுமை மாவும், 'பாரத்' பருப்பு என்ற பெயரில் ரூ.60-க்கு ஒரு கிலோ சென்னாவையும் (வெள்ளை கொண்டைக் கடலை) மத்திய அரசு சில்லரை சந்தையில் விற்பனை செய்து வருகிறது.

    Next Story
    ×