என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தென்னிந்தியா விவசாயத்தின் வாழும் பல்கலைக்கழகம்- பிரதமர் மோடி
    X

    தென்னிந்தியா விவசாயத்தின் வாழும் பல்கலைக்கழகம்- பிரதமர் மோடி

    • விவசாயத்திற்கு உதவி புரிய அரசாங்கம் அனைத்து வழிகளையும் திறந்துவிட்டுள்ளது.
    • இந்தியா இயற்கை விவசாயத்தில் உலக அளவிலான மையப் புள்ளியாக மாறி வருகிறது.

    கோவை கொடிசியாவில் தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் 3 நாள் இயற்கை வேளாண் மாநாடு இன்று தொடங்கியது. முதல் நாள் மாநாட்டில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்தார்.

    பின்னர் பிரதமர் மோடி உரையாற்றியதாவது:-

    இந்தியா இயற்கை விவசாயத்தில் உலக அளவிலான மையப் புள்ளியாக மாறி வருகிறது. கடந்த 11 ஆண்டுகளில் வேளாண் துறயைில் மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளன.

    விவசாயத்திற்கு உதவி புரிய அரசாங்கம் அனைத்து வழிகளையும் திறந்துவிட்டுள்ளது.

    இந்தியா இயற்கை விவசாயத்தில் உலக அளவிலான மையப் புள்ளியாக மாறி வருகிறது.

    இயற்கை விவசாயிகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    உயிரி உரங்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டதால் விவசாயிகள் ஆதாயங்கள் கிடைத்துள்ளன.

    தமிழ்நாட்டில் 35,000 ஹெக்டேர் நிலத்தில் இயற்கை வேளாண்மை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    தமிழ்நாட்டில் முருகப்பொருமானுக்கு தேனும் தினை மாவையும் பிரசாதமாக படைக்கிறோம். கேரளா, கர்நாடகாவிலும் சிறுதானயங்கள் தான் இறைவனுக்கு படைக்கப்படுகின்றன.

    இயற்கை வேளாண்மை நமது பாரதத்தின் சொந்த சுதேசி கருத்து, அது நமது பாரம்பரியத்திற்கு கொண்டு செல்கிறது.

    நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கு ரூ.18,000 கோடி நிதி அளிக்கப்பட்டுள்ளது. நாட்டில் சிறு, குறு விவசாயிகளுக்கு தற்போது வரை ரூ.4 லட்சம் கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

    ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லிகளால் விவசாய நிலத்தின் வளம் குறைகிறது. இயற்கை வேளாண்மை பாதையில் நாம் முன்னேற வேண்டும் என்பதே அத்தியாவசிய தேவை.

    இயற்கை வேளாண்மை நோக்கி நகர மத்திய அரசு விவசாயிகளுக்கு தொடர்ந்து ஊக்கம் அளித்து வருகிறது.

    நமது அரசாங்கம் இயற்கை வேளாண்மை மேற்கொள்ள நிறைய ஊக்கம் அளித்து வருகிறது.

    இயற்கை வேளாண்மையில் விவசாயிகள் சிறுகுறு தானியங்களை பயிரிட வேண்டும். ஒற்றைப் பயிர் மட்டும் சார்ந்து இருக்காமல், பல வகைப் பயிர்களை நமது நிலத்தில் நாம் பயிரிட வேண்டும். இயற்கை வேளாண்மை, ரசாயனம் இல்லாத வேளாண்மைக்கு நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

    நமது சூப்பர் உணவு உலகளாவிய சந்தைகளை சென்றுசேர வேண்டும்.

    தென்னிந்தியா விவசாயத்தின் வாழும் பல்கலைக்கழகமாக திகழ்ந்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×