search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "girl students"

    • ஏர்வாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கழிப்பறை வசதி செய்து தர கோரிக்கை வைத்தனர்.
    • சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 18 லட்சம் மதிப்பீட்டில் கழிப்பறை கட்டிடம் அமைக்கப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் ஏர்வாடி பேரூராட்சி, ஏர்வாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கழிப்பறை வசதி சரியாக இல்லாத காரணத்தால் கழிப்பறை வசதி செய்து தருமாறு பள்ளி மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்ட மன்ற உறுப்பினருமான ரூபி மனோகரனிடம் கோரிக்கை வைத்தனர்.

    அவர்களது கோரிக்கையையேற்று சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 18 லட்சம் மதிப்பீட்டில் கழிப்பறை கட்டிடம் அமைக்கப்பட்டது. அதனை பள்ளி மாணவி களின் பயன்பாட்டிற்காக ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. திறந்த வைத்தார்.

    நிகழ்ச்சியில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் அழகியநம்பி, மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர்கள் சந்திரசேகர், செல்லப்பாண்டி, கக்கன், பேரூராட்சி தலைவர் தஸ்லிமா அயூப்கான், ஏர்வாடி நகர காங்கிரஸ் தலைவர் ரீமா பைசல், தி.மு.க. நகர செயலாளர் அயூப்கான்,களக்காடு தெற்கு வட்டார தலைவர் அலெக்ஸ், பாளை வடக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் கனகராஜ், பாளை மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் கணே சன், வார்டு கவுன்சிலர்கள் அலிமா, ஜன்னத், மீரா சாகிப், தஸ்லிமா முகைதீன், மாவட்ட செய்தி தொடர்பாளர் அன்வர் சரீப், ஏர்வாடி காங்கிரஸ் நகர பொருளாளர் பொன் ராஜ், நகர துணை தலைவர் சாகுல் ஹமீது, காங்கிரஸ் முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினர் ஜேம்ஸ் போர்டு, மாவட்ட தி.மு.க. பிரதிநிதி கல்பத்து, காங்கிரஸ் கமிட்டி நிர்வா கிகள் பீர், அப்பாஸ், சினான், ஜாபர் அமானு ல்லா, ஷேக், அப்துல் ரகுமான், மீரான் டேனியல், முத்துராமலிங்கம், சுதா, ஜெயந்தி, லதா மற்றும்

    காங்கிரஸ் கட்சி, கூட்டணி கட்சி தோழமைகள் மற்றும் பள்ளி மாணவிகள், ஆசிரியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில் மாணவிகளுக்கு உணவு வழங்கப்பட்டது.
    • அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

    பனைக்குளம்

    அ.தி.மு.க. பொதுச்செய லாளர் எடப்பாடி பழனிசாமி பிறந்த தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் எம்.ஏ. முனியசாமி அறிவுரை யின்படி மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய கவுன்சிலருமான ஆர்.ஜி.மருதுபாண்டியன் இதற்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

    முதல் கட்டமாக மண்டபம் மேற்கு ஒன்றியம் பட்டணம் காத்தான் முதல் நிலை ஊராட்சி பகுதிகளில் கட்சி நிர்வாகிகள் முன்னி லையில் அ.தி.மு.க கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கினர். இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைந்திட வேண்டியும், எடப்பாடி பழனிசசாமி நீண்ட ஆயுள் காலம் வாழ்ந்திட வேண்டியும் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது.

    இதைத்தொடர்ந்து வாலாந்தரவை கிராமத்தில் உள்ள செஸ்ட் ஏஞ்சலின் மன வளர்ச்சி குன்றியோர் பள்ளியில் உள்ள குழந்தை களுடன் ஒன்றிணைந்து அ.தி.மு.க. நிர்வாகிகள் முன்னிலையில் பிறந்தநாள் கேக் வெட்டப்பட்டு குழந்தைகளுக்கு வழங்கப்பட்டன. இதைத்தொடர்ந்து மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி ஒன்றிய செயலாளர் ஆர்.ஜி.மருது பாண்டியன் தலைமையில் நடந்தது.

    இதில் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர்கள் ராஜேந்திரன், பாரதி நகர் மாரியப்பன், முன்னாள் அரசு வழக்கறிஞர் கருணா கரன், ஜெயலலிதா பேரவை மாவட்ட இணை செயலாளர் ஜெய கார்த்திகேயன், இளைஞரணி துணை செயலாளர் சுமன், ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் கோபால், பிரதிநிதி முருகேசன், சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளர் அன்வர் அலி, முன்னாள் ஒன்றிய துணைச் செய லாளர் சண்முகவேல், ஒன்றிய மாணவரணி தலைவர் பரமகுரு, நகர் மாணவர் அணி செயலாளர் காளிதாஸ், ரோஸ் நகர் கிளைச்செயலாளர் கண்ணன், ஊராட்சி துணைத்தலைவர் வினோத், பாரதி நகர் இளைஞர் பாசறை செய லாளர் சுந்தர், பட்டணம் காத்தான் விக்கி உள் பட பலர் கலந்து கொண்டனர். அப்போது மாணவர்களுடன், ஒன்றிய செயலாளர் ஆர். ஜி.மருது பாண்டியன் உணவு சாப்பிட்டு மகிழ்ந்தார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மண்டபம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் செய்திருந்தனர். முடிவில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

    • சங்கரன் கோவில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரி மாணவிகளும் கலந்து கொண்டு பல போட்டிகளில் வென்றனர்.
    • வெற்றி பெற்ற மாணவிகளை கல்லூரி முதல்வர் அப்துல் காதிர் பாராட்னார்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்ட பிற்பட்டோர் நலத்துறை விடுதி களில் தங்கி படிக்கும் அனைத்து மாணவ-மாணவி களுக்கான மாவட்ட அளவிலான கட்டுரை போட்டி, பேச்சுப்போட்டி, நீளம் தாண்டுதல், ஓட்டப்பந்தயம் போன்ற போட்டிகள் பிற்பட்டோர் நலத்துறை சார்பில் தென்காசியில் நடத்தப்பட்டது. இப்போட்டிகளில் சங்கரன் கோவில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரி மாணவிகளும் கலந்து கொண்டு பல போட்டிகளில் வென்றனர்.

    முதலாமாண்டு பி.பி.ஏ. மாணவி மாரியம்மாள் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதல் பரிசையும், நீளம் தாண்டுதல் போட்டியில் 3-ம் பரிசையும் வென்றார். 3-ம் ஆண்டு கணிதவியல் பயிலும் கீர்த்திகா நீளம் தாண்டுதலில் முதல் பரிசையும், கட்டுரை போட்டியில் 3-ம் பரிசையும், 2-ம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவி ஜென்சி பேச்சு போட்டியில் முதல் பரிசையும், 2-ம் ஆண்டு பி.ஏ. ஆங்கிலம் பயிலும் காயத்ரி கட்டுரை போட்டியில் 2-வது பரிசையும், 2-ம் ஆண்டு பி. காம்., மாணவிகள் சிவப்பிரியா ஓட்டப்பந்தயத்தில் 2-வது பரிசையும், மகேஸ்வரி நீளம் தாண்டுதல் போட்டியில் 2-வது பரிசையும், 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 3-வது பரிசையும் வென்றனர்.

    வெற்றி பெற்ற மாணவிகளுக்கு தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் கேடயங்களையும், சான்றிதழ்களை யும் வழங்கினார். வெற்றி பெற்ற அனைத்து மாணவிகளை யும் கல்லூரி முதல்வர் அப்துல் காதிர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். விடுதி காப்பாளர் ரத்னமுத்து உடனிருந்தார்.

    • கரூர் காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 4 மாணவிகளை தீயணைப்புத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்
    • மாணவிகள் விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்தனர்

    கரூர்:

    கரூர் மாவட்டம் காவிரி ஆற்றின் மாயனூர் கதவணை அருகே புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அரசு நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகளான தமிழரசி, சோபியா, இனியா, லாவண்யா ஆகிய 4 மாணவிகள் குளிக்க சென்றனர்.முன்னதாக அவர் அங்கு நடைபெற்று வரும் விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்தனர். பின்னர் போதிய இடைவேளை கிடைத்ததால் அவர்கள் காவிரி ஆற்றுக்கு சென்றிருந்தனர்.அப்போது மாணவி ஒருவர் திடீரென்று ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். அவரை மீட்கும் முயற்சியில் மற்ற மாணவிகள் 3 பேரும் காவிரி ஆற்றில் இறங்கினர். துரதிஷ்டவசமாக அவர்களும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். அவர்களை தேடும் முயற்சியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதில் ஒரு மாணவியின் உடல் மட்டும் மீட்கப்பட்டுள்ளது.

    • ஆலங்குளம் வட்டாரத்தில் கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லுரி இளங்கலை இறுதியாண்டு மாணவிகள் கிராமப்புற வேளாண் பயிற்சி அனுபவங்களை பெற்று வருகின்றனர்.
    • இயற்கை முறையில் விவசாயம் செய்வதன் நன்மைகளையும் , இயற்கை விவசாய சான்றிதழ் எவ்வாறு பெறுவது என்பது பற்றியும் மாணவிகள் விவசாயிகளுக்கு விளக்கினர்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் வேளாண் உதவி இயக்குநர் சிவகுருநாதன், துணை வேளாண் அலுவலர் முருகன், வேளாண் அலுவலர் சண்முகப்பிரியா ஆகியோர் மாணவிகளை வழி நடத்தி வருகிறார்கள்.

    இதன் ஒரு பகுதியாக மாணவிகள் பேபிசாலினி, ஹேனா குமாரி, இந்துஜா, கவிதா, கீர்த்தனா, லக்ஷயா ஆகியோர் ஆலங்குளம் அருகே மாறாந்தை கிராமத்தில் இயற்கை முறை வேளாண்மை குறித்து விவசாயிகளிடையே விளக்கி கூறினர். இயற்கை முறையில் விவசாயம் செய்வதன் நன்மைகளையும் இயற்கை விவசாய சான்றிதழ் எவ்வாறு பெறுவது என்பது பற்றியும் விவசாயிகளுக்கு விளக்கினர்.

    மேலும் இயற்கை விவசாய சான்றிதழ் பெறுவதால் கிடைக்கும் சலுகைகளையும், நன்மைகளையும் பற்றி விவசாயிகளிடையே எடுத்துரைத்தனர். செயற்கை உரங்களுக்கு மாற்றான இயற்கை உரங்களை பற்றிய துண்டு பிரசுரங்களை விவசாயிகளுக்கு வழங்கினர்.

    • தேர்வில் முதலிடம் மற்றும் இரண்டாமிடம் பிடித்த மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் சைக்கிள் பரிசளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. .
    • மங்கலம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தாஹாநசீர் தலைமை தாங்கினார்.

    மங்கலம் :

    மங்கலம் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் காலாண்டு தேர்வில் முதலிடம் மற்றும் இரண்டாமிடம் பிடித்த மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் சைக்கிள் பரிசளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது .

    மங்கலம் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் 10-ம்வகுப்பு காலாண்டு தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு மிதிவண்டியும்,இரண்டாம் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு இரண்டாம் பரிசாக ஹாட் பாக்சும் ,மூன்றாம் பரிசாக ஹாட் பாக்சும் வழங்கபட்டது.இந்த நிகழ்ச்சிக்கு மங்கலம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தாஹாநசீர் தலைமை தாங்கினார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நிர்வாகிகள் ,பள்ளி தலைமையாசிரியை ,பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் ,பெற்றோர் ஆசிரியர்சங்கத்தலைவர் ரபிதின், மங்கலம்-முன்னாள் மாணவர் பேரவை நிர்வாகி எபிசியண்ட் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முதல் முறையாக 10 மற்றும் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை ஒரே நேரத்தில் வெளியானது.
    • தேர்ச்சி பெற்றதை அறிந்ததும் மாணவர்களின் பெற்றோர் இனிப்பு தயார் செய்து தங்களது பிள்ளைகளுக்கு ஊட்டிவிட்டனர்.

    நெல்லை:

    கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பொதுத்தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த ஆண்டு 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு மே மாதத்தில் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டது.

    இந்நிலையில் முதல் முறையாக 10 மற்றும் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை ஒரே நேரத்தில் வெளியானது.

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று தேர்வு முடிவு வெளியா வதையொட்டி அதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் செய்திருந்தனர்.

    நெல்லை மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 9,091 மாணவர்களும், 10,999 மாணவிகளும் என மொத்தம் 20,090 பேர் எழுதினர். இதில் 8,505 மாணவர்களும், 10,796 மாணவிகளும் என 19,301 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    மாணவர்கள் 93.55 சதவீதம் பேரும், மாணவிகள் 98.15 சதவீதம் பேரும் என மொத்தம் 96.07 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளர்.

    தென்காசி மாவட்டத்தில் 7,939 மாணவர்களும், 8,772 மாணவிகளும் என மொத்தம் 16,705 பேர் தேர்வு எழுதினர்.

    இதில் 7,347 மாணவர்களும், 8,569 மாணவிகளும் என மொத்தம் 15,916 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.மாணவர்கள் 92.61 சதவீதம் பேரும், மாணவிகள் 97.69 சதவீதம் பேரும் என மொத்தம் 95.28 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் 8,900 மாணவர்களும், 10,473 மாணவிகளும் என மொத்தம் 19,379 பேர் தேர்வு எழுதினர்.

    இதில் 8,380 மாணவர்களும், 10,303 மாணவிகளும் என ெமாத்தம் 18,683 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 94.16 சதவீதம் பேரும், மாணவிகள் 98.38 சதவீதம் பேரும் என மொத்தம் 96.44 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    நெல்லை மாவட்டத்தில் 10-ம் வகுப்பு தேர்வை 11,485 மாணவர்களும், 11,805 மாணவிகளும் என மொத்தம் 23,290 பேர் எழுதினர். இதில் 9,488 மாணவர்களும், 11,171 மாணவிகளும் என 20,659 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    மாணவர்கள் 82.61 சதவீதம் பேரும், மாணவிகள் 94.63 சதவீதம் பேரும் என மொத்தம் 88.70 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளர்.

    தென்காசி மாவட்டத்தில் 9,638 மாணவர்களும், 9,718 மாணவிகளும் என மொத்தம் 19,356 பேர் தேர்வு எழுதினர்.

    இதில் 8,185 மாணவர்களும், 9,285 மாணவிகளும் என மொத்தம் 17,470 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    மாணவர்கள் 84.92 சதவீதம் பேரும், மாணவிகள் 95.54 சதவீதம் பேரும் என மொத்தம் 90.26 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் 10,839 மாணவர்களும், 11,461 மாணவிகளும் என மொத்தம் 22,294 பேர் தேர்வு எழுதினர்.

    இதில் 9,615 மாணவர்களும், 11,091 மாணவிகளும் என ெமாத்தம் 20,706 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    மாணவர்கள் 88.76 சதவீதம் பேரும், மாணவிகள் 96.77 சதவீதம் பேரும் என மொத்தம் 92.88 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    தேர்வு முடிவுகள் இன்று வெளியானதையொட்டி ஏராளமான மாணவர்கள் தங்களது பள்ளிகளுக்கு சென்று நண்பர்கள் மற்றும் தோழிகளுடன் சேர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சில மாணவ- மாணவிகள் வீடுகளில் இருந்தவாறே செல்போன் மற்றும் லேப்-டாப்களில் தங்களது தேர்வு முடிவுகளை தெரிந்து கொண்டனர்.

    தேர்ச்சி பெற்றதை அறிந்ததும் அவர்களின் பெற்றோர் இனிப்பு தயார் செய்து தங்களது பிள்ளைகளுக்கு ஊட்டிவிட்டனர். நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    • உயர்வகுப்பு மாணவர்களின் வருகை100 சதவீத அளவில் பூர்த்தியடையாமல் இருந்தது.
    • திருப்பூரில் கடந்தாண்டு 166 குழந்தை திருமணங்கள் பதிவாகின.

    உடுமலை,

    உடுமலையில் கொரோனா ஊரடங்கு காலத்தில், பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் பாட வகுப்புகள் மட்டுமே நடத்தப்பட்டது.அப்போது மேல்நிலைபள்ளி மாணவர்கள் சிலர் குடும்ப பொருளாதாரச்சூழல் காரணமாக கட்டுமானம், விவசாயம் சார்ந்த பணிக்குச்சென்றனர்.இதையடுத்து அவ்வப்போது, நேரடி வகுப்புகள் துவங்கிய போதும் மாணவர்கள் சிலர், பல நாட்களாக பள்ளி செல்வதை தவிர்த்து வந்தனர்.

    அவர்களைகட்டாயப்படுத்தி பள்ளிக்கு வரவழைக்க ஆசிரியர்கள் கடும் முயற்சியில் ஈடுபட்டாலும், பயன் இல்லாமல் போனது.அவ்வகையில் பள்ளிகள் முழு அளவில் செயல்பட்டும் உயர்வகுப்பு மாணவர்களின் வருகை100 சதவீத அளவில் பூர்த்தியடையாமல் இருந்தது.

    நடந்து முடிந்த 10, 11 மற்றும் பிளஸ் -2 பொதுத்தேர்வில், ஆப்சென்ட் பட்டியல் அதிகரித்தே காணப்பட்டது.அதில்பெண் குழந்தைகளின் இடைநிற்றல் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து கல்வி மேம்பாட்டு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மூர்த்தி கூறியதாவது:-

    கிராமப்புற பள்ளிகளில் குறிப்பாக கொரோனா ஊரடங்கிற்கு பின் பெண் குழந்தைகளின் இடைநிற்றல் அதிகரித்துள்ளது. காரணம் குழந்தை திருமணங்கள். திருப்பூரில் கடந்தாண்டு 166 குழந்தை திருமணங்கள் பதிவாகின.இதில் பெற்றோர்களே பள்ளி படிப்பை நிறுத்தி வற்புறுத்தலின் பேரில் திருமணம் செய்து வைக்கும் சூழல் உள்ளது. அவிநாசி, பல்லடம், திருப்பூர் வடக்கில் அதிக குழந்தை திருமணங்கள் நடந்துள்ளன. இப்பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் இந்த ஆண்டு மாணவர்களை விட மாணவிகள் 3.7 சதவீதம் பேர் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். #SSLC #SSLCResult
    சென்னை:

    தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 14-ந்தேதி தொடங்கி 29-ந்தேதி வரை நடைபெற்றது.

    இந்த ஆண்டு மாநிலம் முழுவதும் பள்ளிகள் மூலமாகவும், தனி தேர்வுகள் மூலமாகவும் 9 லட்சத்து 76 ஆயிரத்து 19 பேர் தேர்வு எழுதி இருந்தனர். இவர்களில் மாணவிகள் எண்ணிக்கை 4 லட்சத்து 68 ஆயிரத்து 570. மாணவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 69 ஆயிரத்து 289.

    விடைத்தாள்கள் திருத்தும் பணி முடிவடைந்து இன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

    10-ம் வகுப்பில் மொத்தம் 95.2 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட அதிகமாகும். கடந்த ஆண்டு 94.5 சதவீதம் மாணவ-மாணவிகள்தான் தேர்ச்சி அடைந்து இருந்தனர்.

    இந்த ஆண்டு மாணவிகள் 97 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 93.3 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 3.7 சதவீதம் பேர் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இந்த ஆண்டு மாநிலம் முழுவதும் 12,548 பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் பொதுத் தேர்வை எழுதி இருந்தனர். இந்த பள்ளிகளில் 6,100 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன.

    அரசு பள்ளிகளில் 92.48 சதவீதம் அளவுக்கு மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு உதவி பெறும் பள்ளிகளில் 94.53, மெட்ரிக் பள்ளிகள் 99.05, இருபாலர் பள்ளிகளில் 95.42 சதவீதம் தேர்ச்சி கிடைத்துள்ளது.

    பெண்கள் பள்ளிகளில் 96.89 சதவீதமும், ஆண்கள் பள்ளிகளில் 88.94 சதவீதமும் தேர்ச்சி கிடைத்துள்ளது.

    பாட வாரியாக தேர்ச்சியை கணக்கிட்டால் மொழி பாடத்தில் 96.12 சதவீத பேரும், ஆங்கிலத்தில் 93.35 சதவீத பேரும், கணிதம் பாடத்தில் 96.46 சதவீதம் பேரும், அறிவியல் பாடத்தில் 98.56 சதவீதம் பேரும், சமூக அறிவியலில் 97.07 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    தேர்வு எழுதிய 4,816 மாற்றுத் திறனாளி மாணவர்களில் 4,395 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சிறைக் கைதிகளில் 152 பேர் 10-ம் வகுப்பு தேர்வு எழுதி இருந்தனர். அவர்களில் 110 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

    இன்று காலை 9.30 மணிக்கு 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதும் அவற்றை 3 இணைய தளங்கள் மூலம் மாணவ-மாணவிகள் பார்த்தனர். இதன் மூலம் மாணவ-மாணவிகள் உடனுக்குடன் தேர்வு முடிவுகளை தெரிந்து கொண்டனர்.

    மேலும் பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டு இருந்தன. தனித்தேர்வர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டன.

    இவை தவிர கலெக்டர் அலுவலகங்களிலும், நூலங்களிலும் இலவசமாக தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. இதனால் மாணவ-மாணவிகள் மிக எளிதாக தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள முடிந்தது.

    வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள் தாங்கள் படித்த பள்ளி அல்லது தேர்வு எழுதிய பள்ளியின் தலைமை ஆசிரியர் மூலம் மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம். வருகிற 2-ந்தேதி முதல் மதிப்பெண் பட்டியல்களை இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மே 6-ந்தேதி முதல் மாணவர்கள் www.dge.tn.nic என்ற இணைய தளத்தில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்வு துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

    சி.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகள் மே மாத இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சி.பி.எஸ்.சி. 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை மே மாதம் மூன்றாவது வெளியிட முடிவு செய்துள்ளனர்.

    சி.பி.எஸ்.சி. 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை மே மாதம் நான்காவது வாரம் வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்த ஆண்டு முதல் 10-ம் வகுப்பு சி.பி.எஸ்.சி. மாணவர்களுக்கு சான்றிதழுடன் மதிப்பெண் பட்டியலும் சேர்த்து வழங்க ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள். #SSLC #SSLCResult

    ஈரோடு அருகே மாணவர் விடுதியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 4 மாணவிகள் அதிரடி வெளியேற்றப்பட்டனர்.
    ஈரோடு:

    ஈரோடு பழையபாளையம் இந்திராகாந்தி வீதியை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 36). இவர் அந்த பகுதியில் விடுதி நடத்தி வருகிறார். இந்த விடுதியில் 4 மாணவிகள் உள்பட 21 பேர் தங்கி படித்து வந்தனர்.

    இந்த நிலையில் விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகளிடம் பால்ராஜ் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதையொட்டி கடந்த 15-ந்தேதி ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

    அதன்பேரில் பால்ராஜ் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார். அந்த பகுதியில் செயல்பட்டு வந்த விடுதியில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அங்கு மாணவர்கள் மட்டுமே தங்கி படிக்க அனுமதி பெறப்பட்டு இருந்ததாகவும் மாணவிகள் சட்டவிரோதமாகத் தங்கி இருந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து அந்த விடுதியில் தங்கி இருந்த 4 மாணவிகள் ஈரோடு கொள்ளுக்காட்டு மேட்டில் உள்ள அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

    இதுகுறித்து டவுன் டி.எஸ்.பி. ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

    ஈரோடு பழைய பாளையத்தில் செயல்பட்டு வந்த விடுதியில் புகார் வந்தது. இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது அங்கு மாணவர்கள் மட்டுமே தங்கி இருக்க அனுமதி பெறப்பட்டிருந்தது. 4 மாணவிகள் அங்கு சட்டவிரோதமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த மாணவிகள் பாதுகாப்பாக அரசு காப்பகத்தில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

    இதே போன்று வேறு எங்கேனும் அனுமதி இல்லாமல் விடுதிகள் செயல்படுகிறதா? என்று போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    மேலும் பொதுமக்களும் தங்கள் பகுதியில் செயல்படும் விடுதிகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம். அனுமதி இல்லாமல் செயல்படும் விடுதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×