search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "passing percentage"

    • பள்ளி தலைமையாசிரியர் காலை 8:30 மணிக்கே ஆஜராகி விட வேண்டும்.
    • கூட்ட பொருள் சார்ந்த புத்தகம் இல்லையெனில் தலைமையாசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    திருப்பூர் :

    திருப்பூரில் அனைத்து உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான மாதாந்திர கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி பேசியதாவது:-

    அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க செய்ய வேண்டும்.அதற்கேற்ப பள்ளி தரத்தை மேம்படுத்துவதில் தலைமையாசிரியர்கள் கவனம் செலுத்துவது அவசியம். 10-ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு, சனிக்கிழமைதோறும் ஆசிரியர்களை சுழற்சி முறையில் பாட வாரியாக வரவழைத்து, சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும். இதுதவிர தினமும் காலை, 8:30 மணிக்கும், மாலை 4:15 முதல், 5:30 மணிக்குள் சிறப்பு வகுப்புகள் நடத்தி கொள்ளலாம்.

    பள்ளி தலைமையாசிரியர் காலை 8:30 மணிக்கே ஆஜராகி விட வேண்டும். வகுப்பாசிரியர்கள் 'வாட்ஸ்அப்பில்' மட்டுமே தகவல்களை மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.தனிப்பட்ட முறையில் மாணவர்களுக்கு தகவல்கள், செய்திகள் அனுப்பப்படுவது தவிர்க்க வேண்டும். மாணவர்கள் தரப்பில் ஆசிரியர்கள் மீதான புகார்கள் பெறப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்.

    மாணவர்களின் புகார் பெட்டி வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்யப்பட்டு பதிவேடுகள் பராமரிக்கப்பட வேண்டும். திருப்பூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அனைத்து தொடக்க, மேல்நிலைப்பள்ளிகளில் சுகாதார பணியாளர்கள் வருகை சார்ந்த விவரம் ஒவ்வொரு மாதமும் 3-ந் தேதிக்குள் மாவட்ட கல்வி அலுவலருக்கு அனுப்பப்பட வேண்டும்.ஆசிரியர் மானியம், பிற பணப்பயன்கள் உடனுக்குடன் பெற்று வழங்கப்பட வேண்டும். நிரந்தர அங்கீகாரம் பெற்ற உதவிபெறும் பள்ளிகள் ஒவ்வொரு ஆண்டும் கட்டட உறுதி சான்று, கட்டட உரிமை சான்று, தீயணைப்பு, சுகாதார சான்று ஆகியவை பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

    மிதிவண்டி, லேப்டாப் சார்ந்த இருப்பு பதிவேடுகள், சிறப்பு நிலை, தேர்வுநிலை, தகுதிகாண் பருவம், பணிவரன்முறை சார்ந்த ஆசிரியர்களின் கருத்துருக்கள் முறையாக பராமரிக்க வேண்டும். சிறுபான்மை பள்ளி ஆசிரியர்கள் பிற அமைப்புகள், மதம் சார்ந்த அமைப்புகளில் பொறுப்புகளில் இருப்பதாக பல புகார்கள் பெறப்பட்டு வருகின்றன.இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு, நிரந்தர சிகிச்சை பெறுவோருக்கு விபத்து காப்பீடு, உதவித்தொகை பெற ஆவண செய்தல் வேண்டும் என்றார்.

    மேலும் அவர் பேசுகையில், ஆதிதிராவிடர் கல்வி உதவித்தொகை, சிறப்பு ஊக்கத்தொகை திட்டம், கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு தகுதியான மாணவர்கள் பட்டியலை தயார்நிலையில் இருப்பது அவசியம். அடுத்த மாதாந்திர கூட்டத்தில் இதுசார்ந்த விவரங்கள் கேட்கப்படும். எனவே அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் இவற்றை நகல் எடுத்து தயாராக வைத்திருக்க வேண்டும். கலெக்டர், மற்றும் உயர்கல்வி அதிகாரிகள் பார்வையிட வரும்போது கூட்ட பொருள் சார்ந்த புத்தகம் இல்லையெனில் தலைமையாசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.  

    கோவை மாவட்டம் 97.67 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. மொத்தம் 32 ஆயிரத்து 842 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் 14 ஆயிரத்து 375 பேரும், மாணவிகள் 18 ஆயிரத்து 467 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    கோவை:

    கோவை மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வை 33 ஆயிரத்து 627 பேர் எழுதினார்கள். அவர்களில் மாணவர்கள் 14 ஆயிரத்து 879 பேரும், மாணவிகள் 18 ஆயிரத்து 748 பேரும் ஆவார்கள். பிளஸ்-1 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.

    இதில் கோவை மாவட்டம் 97.67 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. மொத்தம் 32 ஆயிரத்து 842 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் 14 ஆயிரத்து 375 பேரும், மாணவிகள் 18 ஆயிரத்து 467 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 96.61 சதவீதமும், மாணவிகள் 98.50 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 1.48 சதவீதம் அதிகமாகும். மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ்-1 தேர்வில் மாநில அளவில் கோவை மாவட்டம் 3-வது இடம் பிடித்துள்ளது.

    கோவை கல்வி மாவட்டத்தில் 13 ஆயிரத்து 384 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். இவர்களில் 13 ஆயிரத்து 113 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி சதவீதம் 97.98 ஆகும். பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் 4 ஆயிரத்து 827 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். அவர்களில் 4 ஆயித்து 672 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி சதவீதம் 96.79 ஆகும். பேரூர் கல்வி மாவட்டத்தில் 6 ஆயிரத்து 746 பேர் தேர்வு எழுதினர். இதில் 6 ஆயிரத்து 591 பேர் தேர்ச்சியடைந்தனர். தேர்ச்சி சதவீதம் 97.70 ஆகும். எஸ்.எஸ்.குளம் கல்வி மாவட்டத்தில் 8 ஆயிரத்து 670 பேர் தேர்வு எழுதினர். இதில் 8 ஆயிரத்து 466 பேர் தேர்ச்சி பெற்றனர். மொத்த தேர்ச்சி சதவீதம் 97.65 ஆகும்.

    81 அரசு பள்ளிகளில் 7 ஆயிரத்து 624 பேர் தேர்வு எழுதினர். இவர்களில் 7 ஆயிரத்து 150 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 93.78 ஆகும். 16 மாநகராட்சி பள்ளிகளில் 1,728 பேர் தேர்வு எழுதினர். இதில் 1,612 பேர் தேர்ச்சியடைந்தனர். தேர்ச்சி சதவீதம் 93.29 ஆகும். 4 நகராட்சி பள்ளியில் 576 பேர் தேர்வு எழுதினர். இவர்களில் 545 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 94.62 ஆகும். 2 ஆதிதிராவிடர் பள்ளிகளில் 37 பேர் தேர்வு எழுதினர். இதில் 34 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 91.89 ஆகும். 7 சுய நிதி பள்ளியில் 714 பேர் பிளஸ்-1 தேர்வை எழுதினர். இதில் 698 பேர் தேர்ச்சியடைந்தனர். இது 97.76 சதவீதம் ஆகும். 1 ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் 131 பேர் தேர்வு எழுதினர். இதில் 130 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 99.24. 41 அரசு உதவி பெறும் பள்ளிகளில் 7 ஆயிரத்து 102 பேர் தேர்வு எழுதினர். இதில் 6 ஆயிரத்து 999 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 98.55 ஆகும். 203 மெட்ரிக் பள்ளிகளில் 15 ஆயிரத்து 715 பேர் தேர்வு எழுதினர். இதில் 15 ஆயிரத்து 674 பேர் தேர்ச்சியடைந்தனர். தேர்ச்சி சதவீதம் 99.74 ஆகும்.
    எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் இந்த ஆண்டு மாணவர்களை விட மாணவிகள் 3.7 சதவீதம் பேர் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். #SSLC #SSLCResult
    சென்னை:

    தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 14-ந்தேதி தொடங்கி 29-ந்தேதி வரை நடைபெற்றது.

    இந்த ஆண்டு மாநிலம் முழுவதும் பள்ளிகள் மூலமாகவும், தனி தேர்வுகள் மூலமாகவும் 9 லட்சத்து 76 ஆயிரத்து 19 பேர் தேர்வு எழுதி இருந்தனர். இவர்களில் மாணவிகள் எண்ணிக்கை 4 லட்சத்து 68 ஆயிரத்து 570. மாணவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 69 ஆயிரத்து 289.

    விடைத்தாள்கள் திருத்தும் பணி முடிவடைந்து இன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

    10-ம் வகுப்பில் மொத்தம் 95.2 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட அதிகமாகும். கடந்த ஆண்டு 94.5 சதவீதம் மாணவ-மாணவிகள்தான் தேர்ச்சி அடைந்து இருந்தனர்.

    இந்த ஆண்டு மாணவிகள் 97 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 93.3 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 3.7 சதவீதம் பேர் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இந்த ஆண்டு மாநிலம் முழுவதும் 12,548 பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் பொதுத் தேர்வை எழுதி இருந்தனர். இந்த பள்ளிகளில் 6,100 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன.

    அரசு பள்ளிகளில் 92.48 சதவீதம் அளவுக்கு மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு உதவி பெறும் பள்ளிகளில் 94.53, மெட்ரிக் பள்ளிகள் 99.05, இருபாலர் பள்ளிகளில் 95.42 சதவீதம் தேர்ச்சி கிடைத்துள்ளது.

    பெண்கள் பள்ளிகளில் 96.89 சதவீதமும், ஆண்கள் பள்ளிகளில் 88.94 சதவீதமும் தேர்ச்சி கிடைத்துள்ளது.

    பாட வாரியாக தேர்ச்சியை கணக்கிட்டால் மொழி பாடத்தில் 96.12 சதவீத பேரும், ஆங்கிலத்தில் 93.35 சதவீத பேரும், கணிதம் பாடத்தில் 96.46 சதவீதம் பேரும், அறிவியல் பாடத்தில் 98.56 சதவீதம் பேரும், சமூக அறிவியலில் 97.07 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    தேர்வு எழுதிய 4,816 மாற்றுத் திறனாளி மாணவர்களில் 4,395 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சிறைக் கைதிகளில் 152 பேர் 10-ம் வகுப்பு தேர்வு எழுதி இருந்தனர். அவர்களில் 110 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

    இன்று காலை 9.30 மணிக்கு 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதும் அவற்றை 3 இணைய தளங்கள் மூலம் மாணவ-மாணவிகள் பார்த்தனர். இதன் மூலம் மாணவ-மாணவிகள் உடனுக்குடன் தேர்வு முடிவுகளை தெரிந்து கொண்டனர்.

    மேலும் பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டு இருந்தன. தனித்தேர்வர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டன.

    இவை தவிர கலெக்டர் அலுவலகங்களிலும், நூலங்களிலும் இலவசமாக தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. இதனால் மாணவ-மாணவிகள் மிக எளிதாக தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள முடிந்தது.

    வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள் தாங்கள் படித்த பள்ளி அல்லது தேர்வு எழுதிய பள்ளியின் தலைமை ஆசிரியர் மூலம் மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம். வருகிற 2-ந்தேதி முதல் மதிப்பெண் பட்டியல்களை இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மே 6-ந்தேதி முதல் மாணவர்கள் www.dge.tn.nic என்ற இணைய தளத்தில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்வு துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

    சி.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகள் மே மாத இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சி.பி.எஸ்.சி. 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை மே மாதம் மூன்றாவது வெளியிட முடிவு செய்துள்ளனர்.

    சி.பி.எஸ்.சி. 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை மே மாதம் நான்காவது வாரம் வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்த ஆண்டு முதல் 10-ம் வகுப்பு சி.பி.எஸ்.சி. மாணவர்களுக்கு சான்றிதழுடன் மதிப்பெண் பட்டியலும் சேர்த்து வழங்க ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள். #SSLC #SSLCResult

    தேனி மாவட்டத்தில் நடந்து முடிந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.50 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். #SSLC #SSLCResult
    தேனி:

    தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. தேனி மாவட்டத்தில் 8,104 மாணவர்களும், 7,754 மாணவிகளும் என மொத்தம் 15,858 பேர் தேர்வு எழுதினர். இதில் 7,404 மாணவர்கள், 7,424 மாணவிகள் என மொத்தம் 14,828 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 91.36 சதவீதமும், மாணவிகள் 95.74 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒட்டுமொத்த தேர்ச்சி சவீதம் 93.50 ஆகும்.

    கடந்த 2 ஆண்டுகளை ஒப்பிடுகையில், தேனி மாவட்டத்தில் தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு 97.10 சதவீதமும், 2018-ம் ஆண்டு 97.72 சதவீதமும் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்த ஆண்டு 4 சதவீதம் தேர்ச்சி குறைந்துள்ளது.

    மாநில அளவில் தேனி மாவட்டம் 27-வது இடத்தை பிடித்துள்ளது. அரசு பள்ளிகளை பொறுத்த வரையில் தேனி மாவட்டத்தில் 83 பள்ளிகளைச் சேர்ந்த 5,311 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 4,775 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 89.91 சதவீதம் ஆகும். #SSLC #SSLCResult

    அரசு பள்ளிகள் தேர்ச்சி விகிதத்தில் ராமநாதபுரம் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கடைசி இடத்தை பிடித்துள்ளது. #SSLC #SSLCResult
    அரசு பள்ளிகள் தேர்ச்சி விகிதத்தில் ராமநாதபுரம் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. அங்கு 131 அரசு பள்ளிகளில் 5757 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதியதில் 5657 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 98.26 சதவிகிதமாகும்.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் 130 அரசு பள்ளிகளை சேர்ந்த 4977 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள். 4863 பேர் வெற்றி பெற்று மாநில அளவில் 2-வது இடம் பிடித்தது. தேர்ச்சி விகிதம் 97.71 சதவீதமாகும்.

    97.64 சதவீதம் தேர்ச்சி பெற்று 3-வது இடத்தை ஈரோடு மாவட்டம் பிடித்துள்ளது. 11,113 பேர் தேர்வு எழுதியதில் 10,851 பேர் தேர்ச்சி பெற்றனர். 4-வது இடத்தை நாமக்கல் மாவட்டம் பிடித்தது. அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 97.63 ஆகும்.

    சென்னை மாவட்டத்தில் 28 அரசு பள்ளி மாணவ-மாணவிகள் தேர்வு எழுதியதில் 90.27 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

    திருவள்ளூர் மாவட்டம் கடைசி இடத்தை பிடித்துள்ளது. 229 பள்ளிகளை சேர்ந்த 16,747 பேர் தேர்வு எழுதியதில் 14,429 பேர் வெற்றி பெற்று 86.10 சதவீதம் பெற்றுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் 86.67 சதவீதமாகும். வேலூர் மாவட்டம் 86.85 சதவீதமும் பெற்றுள்ளன. #SSLC #SSLCResult

    விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக முதன்மை கல்வி அதிகாரி கூறினார்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட குறைந்து உள்ளது. தரவரிசை பட்டியலில் விழுப்புரம் மாவட்டம் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இது பற்றி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முனுசாமியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் 60 சதவீதத்துக்கும் குறைந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    வரும் கல்வியாண்டில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகளில் திடீர் ஆய்வுகள் நடத்தப்பட்டு கல்வி சார்ந்த செயல்பாடுகள் குறித்து ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் ஆகியோரிடம் கேட்டறிந்து தகுந்த அறிவுரைகளும், மாணவர் களின் தேர்ச்சியை அதிகரிக்க தகுந்த ஆலோசனைகளும் வழங்கப்படும். அதுபோல் மாதந்தோறும் தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டமும் நடத்தப்பட்டு உரிய ஆலோசனை வழங்கப்படும்.

    மேலும் பள்ளிகளில் தினமும் காலை, மாலை வேளைகளில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்படும். வாரந்தோறும் ஒவ்வொரு பாடம் முடிந்ததும் மாணவ-மாணவிகளுக்கு குறுந்தேர்வுகள் நடத்தப்படும்.

    இதுதவிர மாதந்தோறும் பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடத்தி மாணவர்களின் செயல்பாடுகள் மற்றும் கல்வித்தரத்தை மேம்படுத்துவது தொடர்பாக அறிவுரைகள் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×