search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SSLC exam"

    • தேர்வை 12,616 பள்ளிகளில் இருந்து 9.10 லட்சம் மாணவ, மாணவிகள், 28,827 தனி தேர்வர்கள், 235 சிறை கைதிகள் உட்பட மொத்தம் 9.38 லட்சம் பேர் எழுதுகின்றனர்.
    • பொதுத் தேர்வுக்கான அறை கண்காணிப்பாளர் பணியில் 48,700 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

    சென்னை:

    தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்கி ஏப்ரல் 8-ந்தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாளில் தமிழ் உள்ளிட்ட மொழி பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வை 12,616 பள்ளிகளில் இருந்து 9.10 லட்சம் மாணவ, மாணவிகள், 28,827 தனி தேர்வர்கள், 235 சிறை கைதிகள் உட்பட மொத்தம் 9.38 லட்சம் பேர் எழுதுகின்றனர்.

    இதையொட்டி, மாநிலம் முழுவதும் 4,107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுத் தேர்வுக்கான அறை கண்காணிப்பாளர் பணியில் 48,700 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

    இந்நிலையில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுதவுள்ள எனதருமை மாணவச் செல்வங்களே... All the best!

    நீங்கள் பதற்றமின்றித் தேர்வை எதிர்கொள்ளத்தான் வினாத்தாளைப் படித்துப் பார்க்க முதலில் 10 நிமிடங்கள் வழங்கப்படுகிறது. அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

    இதனை மற்றுமொரு தேர்வாகக் கருதி நம்பிக்கையோடு எழுதி வெற்றி பெறுங்கள்.

    பெற்றோர்களும் உங்கள் பிள்ளைகள் உரிய நேரத்தில் தேர்வு மையத்துக்குச் சென்றிடுவதை உறுதிசெய்யுங்கள் என பதிவிட்டுள்ளார்.

    • மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
    • அறைக்குள் செல்போன் போன்ற மின்னணு, மின்சார சாதனங்கள் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கி ஏப்ரல் 8-ந்தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாளில் தமிழ் உள்ளிட்ட மொழி பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது.

    இந்த தேர்வை 12,616 பள்ளிகளில் இருந்து 9.10 லட்சம் மாணவ, மாணவிகள், 28,827 தனி தேர்வர்கள், 235 சிறை கைதிகள் உட்பட மொத்தம் 9.38 லட்சம் பேர் எழுதுகின்றனர்.

    இதையொட்டி, மாநிலம் முழுவதும் 4,107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுத் தேர்வுக்கான அறை கண்காணிப்பாளர் பணியில் 48,700 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். முறைகேடுகளை தடுக்க 4,591 நிலையான மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட கலெக்டர், முதன்மை கல்வி அலுவலர், வருவாய் துறை அதிகாரிகள் தலைமையிலும் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    304 வினாத்தாள் கட்டு காப்பு மையங்களில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிப்பறை வசதிகள் சிறந்த முறையில் அமைக்கப்பட்டுள்ளன.

    மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அறைக்குள் செல்போன் போன்ற மின்னணு, மின்சார சாதனங்கள் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆள்மாறாட்டம் செய்வது, தேர்வு அதிகாரியிடம் முறைகேடாக நடப்பது, விடைத்தாள் மாற்றம் செய்வது ஆகிய ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால், மாணவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதிகபட்சம் 3 ஆண்டு அல்லது நிரந்தரமாக தேர்வு எழுத தடை விதிக்கப்படும்.

    ஒழுங்கீன செயலை ஊக்கப்படுத்த முயன்றால், பள்ளி அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 12-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறும். தேர்வு முடிவு மே 10-ந்தேதி வெளியாகும் என தேர்வுத்துறை தெரிவித்து உள்ளது.

    • 10 ஆயிரத்து 156 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இது 91.28 சதவீதம் ஆகும்.
    • மாநில அளவில் தென்காசி மாவட்டம் 10-ம் இடத்தை பெற்றுள்ளது.

    நெல்லை:

    தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் கடந்த 6-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி வரை நடைபெற்றது. இதன் முடிவுகள் இன்று வெளியானது.

    நெல்லை

    நெல்லை மாவட்டத்தில் 11 ஆயிரத்து 126 மாணவர்களும், 11 ஆயிரத்து 274 மாணவிகளும் என 22 ஆயிரத்து 400 பேர் தேர்வு எழுதினர்.

    இதில் 10 ஆயிரத்து 156 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இது 91.28 சதவீதம் ஆகும். மாணவிகள் 10 ஆயிரத்து 942 பேர் தேர்வாகி 97.06 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தமாக நெல்லை மாவட்டத்தில் 21 ஆயிரத்து 98 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 94.19 சதவீதமாகும்.

    தமிழக அளவில் நெல்லை மாவட்டம் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 9-வது இடத்தை பிடித்தது. கடந்த ஆண்டு 29-வது இடத்தில் இருந்தது. தற்போது 9-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

    தென்காசி

    தென்காசி மாவட்டத்தில் 9 ஆயிரத்து 303 மாணவர்கள், 9 ஆயிரத்து 357 மாணவிகள் என மொத்தம் 18 ஆயிரத்து 660 பேர் தேர்வு எழுதினர்.

    இதில் 8 ஆயிரத்து 521 மாணவர்களும், 9 ஆயிரத்து 41 மாணவிகளும் என மொத்தம் 17 ஆயிரத்து 562 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 94.12 சதவீதமாகும். மாநில அளவில் தென்காசி மாவட்டம் 10-ம் இடத்தை பெற்றுள்ளது.

    தூத்துக்குடி

    தூத்துக்குடி மாவட்டத்தில் 10 ஆயிரத்து 752 மாணவர்கள், 11 ஆயிரத்து 249 மாணவிகள் என மொத்தம் 22 ஆயிரத்து 1 பேர் தேர்வு எழுதினர்.

    இதில் 10 ஆயிரத்து 33 மாணவர்களும், 10 ஆயிரத்து 996 மாணவிகளும் என மொத்தம் 21 ஆயிரத்து 29 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இது 95.58 சதவீதமாகும். தூத்துக்குடி மாவட்டம் தமிழக அளவில் 5-வது இடத்தை பிடித்தது.

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.
    • மாணவ-மாணவிகள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

    சென்னை:

    தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல் 6-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை நடைபெற்றது. பிளஸ்-1 பொதுத்தேர்வு மார்ச் 13-ந்தேதி முதல் ஏப்ரல் 5-ந்தேதி வரை நடைபெற்றது.

    10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 9.40 லட்சம் மாணவ-மாணவிகளும், பிளஸ்-1 பொதுத்தேர்வை 7.70 லட்சம் மாணவ-மாணவிகளும் எழுதினார்கள். இதற்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 15-ந்தேதி தொடங்கி மே 4-ந்தேதி வரை நடைபெற்றது.

    இந்த நிலையில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-1 தேர்வு முடிவுகள் நாளை (வெள்ளிக்கிழமை) வெளியிடப்படுகிறது. 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் காலை 10 மணிக்கும், பிளஸ்-1 தேர்வு முடிவுகள் மதியம் 2 மணிக்கு வெளியாகிறது. சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.

    மாணவ-மாணவிகள் தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண் விவரங்களை www.tnresults.nic.in, www.dge.in.gov.in ஆகிய இணையதளத்தில் மாணவ-மாணவிகள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தெரிந்து கொள்ளலாம்.

    அதே போல் ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை அலுவலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

    மேலும் மாணவ-மாணவிகள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மாணவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதி மொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்கும், தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது வழங்கிய செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்பட உள்ளன.

    • எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு கடந்த 6-ந்தேதி தொடங்கியது.
    • இந்த தேர்வை 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் எழுதுகிறார்கள்.

    சென்னை :

    பிளஸ்-2, பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு முடிவு பெற்ற நிலையில், அவர்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இதையடுத்து எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு கடந்த 6-ந்தேதி தொடங்கியது. இந்த தேர்வை 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தமிழ்நாடுமற்றும் புதுச்சேரியில் எழுதுகிறார்கள்.

    இதுவரை தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் தேர்வு முடிந்துள்ள நிலையில், நாளை (வியாழக்கிழமை) சமூக அறிவியல் தேர்வுடன் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நிறைவு பெறுகிறது. இதனைத்தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணி வருகிற 25-ந்தேதி முதல் அடுத்த மாதம் (மே) 3-ந்தேதி வரை வேலைநாட்களில் நடைபெற உள்ளது. விடைத்தாள் திருத்தி மதிப்பெண்ணை ஆன்லைன் வாயிலாக வருகிற 25-ந்தேதி முதல் அடுத்த மாதம் 4-ந்தேதி வரை பதிவேற்றம் செய்யப்படும் வகையில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுவதற்கு ஏற்றவாறு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அரசு தேர்வுத்துறை சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

    மதிப்பீட்டு பணியை செய்து முடிக்க தேவையான ஆசிரியர்களின் எண்ணிக்கையினை சரியாக கணக்கிட்டு பாடவாரியான, பயிற்று மொழி வாரியான ஆசிரியர்களை உடனடியாக பணிவிடுவிப்பு செய்து முகாம் பணிக்கு அனுப்பி வைக்குமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

    மேலும் தமிழ் வழியில் கற்பிக்கும் ஆசிரியர்கள் தமிழ்வழி விடைத்தாள்களையும், ஆங்கில வழியில் கற்பிக்கும் ஆசிரியர்கள் ஆங்கில வழி விடைத்தாள்களையும் மட்டுமே மதிப்பீடு செய்ய வேண்டும். அதற்கேற்றவகையில் தமிழ், ஆங்கில வழிகளில் கற்பிக்கும் ஆசிரியர்களை கணக்கிட்டு நியமனம் செய்திட வேண்டும்.

    மதிப்பீட்டு பணியினை மேற்கொள்ள தங்களுடைய ஆளுகைக்குட்பட்ட அரசு பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் அனைத்திலிருந்தும் எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பு பாடங்களை கற்பிக்கும் தகுதிவாய்ந்த பாட ஆசிரியர்களை தவறாமல் பணியில் இருந்து விடுவித்து தேர்வாளர்களாக நியமனம் செய்யவேண்டும்.

    எந்தவொரு பள்ளியில் இருந்தும் ஆசிரியர்கள் விடுபடாது கண்காணித்தல் வேண்டும். தனியார் பள்ளிகள் தங்களுடைய ஆசிரியர்களை முகாம் பணிக்கு முழு எண்ணிக்கையில் அனுப்பி வைத்தால் மட்டுமே அப்பள்ளிக்கான தேர்வு முடிவு வெளியிடப்படும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கடலூர் வண்டிப்பாளையத்தை சேர்ந்த ஆதிலட்சுமி என்கிற மாணவி 10-ம் வகுப்பு தேர்வு எழுதி வருகிறார்.
    • ஆதிலட்சுமியின் தந்தை ரவி காவலாளியாக பணிபுரிந்து வந்தார்.

    கடலூர்:

    தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு தேர்வு கடந்த 6-ந்தேதி தொடங்கி வருகிற 20-ந்தேதி வரை நடைபெறுகிறது. கடலூர் மாவட்டத்தில் 445 பள்ளிகளை சேர்ந்த 34 ஆயிரத்து 794 மாணவர்கள் 149 தேர்வு மையங்களில் தேர்வு எழுதி வருகின்றனர்.

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், கடலூர் வண்டிப்பாளையத்தை சேர்ந்த ஆதிலட்சுமி என்கிற மாணவி 10-ம் வகுப்பு தேர்வு எழுதி வருகிறார். இவரது தந்தை ரவி காவலாளியாக பணிபுரிந்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று மாலை திடீரென்று ரவிக்கு உடல்நிலை பாதிக்கப்படடு, கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதனை அறிந்த மாணவி ஆதிலட்சுமி மற்றும் அவரது குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சி அடைந்து கதறி அழுது துடித்தனர். இன்று 10-ம் வகுப்பு கணித பாடத்தேர்வு நடைபெற உள்ள நிலையில் ஆதிலட்சுமி காலையில் தேர்வு எழுத பள்ளிக்கு வந்தார்.

    இத்தகவல் அறிந்த ஆதிலட்சுமியின் தோழிகள் மற்றும் ஆசிரியர்கள் மாணவிக்கு ஆறுதல் கூறினர். இதனைத் தொடர்ந்து கண்கலங்கிய படி மாணவி ஆதிலட்சுமி தேர்வெழுதினார். இந்த சம்பவம் பள்ளி வளாகத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு நேற்று தொடங்கியது.
    • தமிழ் தாள் தேர்வை 9 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினார்கள்.

    சென்னை :

    எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகளுக்கான பொதுத் தேர்வு நேற்று தொடங்கியது. தமிழ் தாள் தேர்வை 9 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினார்கள்.

    எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு நேற்று நடந்த நிலையில், தமிழ் தாள் தேர்வை எவ்வளவு பேர் எழுதவில்லை என்ற விவரங்களை தேர்வுத் துறை வெளியிடவில்லை. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட தேர்வுத்துறை மற்றும் கல்வித் துறை அதிகாரிகளை தொடர்பு கொண்ட போதும், அவர்கள் முறையாக பதில் அளிக்கவில்லை.

    இந்த நிலையில் ஒவ்வொரு மாவட்டங்களில் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் பார்க்கும்போது, விழுப்புரத்தில் 960 பேரும், கள்ளக்குறிச்சியில் 968 பேரும், கடலூரில் 628 பேரும் தேர்வு எழுதாதது தெரியவந்துள்ளது.

    சென்னையை பொறுத்தவரையில், 800-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புக்கு ஓராண்டாக வரவில்லை என்று சொல்லப்படுகிறது. இவர்களும் இந்த 'ஆப்சென்ட்' பட்டியலில்தான் வருவார்கள்.

    அந்த வகையில் பிளஸ்-2 தேர்வை போலவே, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வையும் சுமார் 50 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதவில்லை என்ற தகவல்கள் நேற்று வெளியாகி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தின.

    ஏற்கனவே எஸ்.எஸ்.எல்.சி. செய்முறைத் தேர்வில் சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் ஆப்சென்ட் ஆனதால், பொதுத் தேர்விலும் அது எதிரொலிக்கும் என நினைத்து கல்வித் துறை திட்டமிட்டே புள்ளி விவரங்களை வெளியிடவில்லை என்று கல்வியாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதன் மூலம் பெரும்பாலான மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை எழுதவில்லை என்ற பேச்சு நேற்று பரபரப்பாக பேசப்பட்டது.

    அதிகாரப்பூர்வமாக தகவல்களை வெளியிடக்கூடிய தேர்வுத் துறைக்கு அனைத்து மாவட்டங்களிலும் இருந்து 'ஆப்சென்ட்' பட்டியல் வந்த நிலையிலும், அதை வெளியிட மறுப்பது ஏன்? என்பதுதான் கல்வியாளர்கள், அரசியல் தலைவர்கள் உள்பட பலரின் கேள்வியாக இருக்கிறது.

    • தமிழகம், புதுச்சேரி முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு இன்று தொடங்கியது.
    • நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதுவதற்காக 279 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது.

    நெல்லை:

    தமிழகம், புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு இன்று தொடங்கியது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதுவதற்காக 279 மையங்கள் அமைக்கப்பட்டி ருந்தது.

    நெல்லை

    நெல்லை மாவட்டத்தில் 11 ஆயிரத்து 2 மாணவர்களும், 11 ஆயிரத்து 895 மாணவிகளும் என மொத்தம் 22 ஆயிரத்து 897 பேர் எழுதினர். இதற்காக நெல்லை கல்வி மாவட்டத்தில் 36 மையங்களும், சேரன்மகா தேவி கல்வி மாவட்டத்தில் 18 மையங்களும், வள்ளியூர் கல்வி மாவட்டத்தில் 37 மையங்களும் என ெமாத்தம் மாவட்டம் முழுவதும் 91 மையங்கள் அமைக்கப்பட்டி ருந்தது.

    மாணவ, மாணவிகள் இன்று காலை 8 முதலே தேர்வு மையத்திற்கு வர தொடங்கினர். அவர்கள் பொதுத்தேர்வு எழுதுவதற்கு முன்பாக இறுதியாக ஒருமுறை தாங்கள் படித்ததை நினைவுபடுத்தி கொண்டனர்.

    பாளை மத்திய சிறையில் இன்று 12 கைதிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை எழுதினர். இதற்காக சிறை வளாகத்திலேயே தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது. இதுதவிர தனித்தேர்வர்க ளுக்காக 5 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி

    தூத்துக்குடி மாவட்டத்தில் 310 பள்ளிகளில் படிக்கும் 22 ஆயிரத்து 921 மாணவ-மாணவிகள் இன்று எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை எழுதினர். இவர்களுக்காக மாவட்டம் முழுவதும் 107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு ள்ளது.

    தேர்வை கண்காணிக்க 107 முதன்மை கண்காணிப்பா ளர்கள், 107 துறை அலுவலர்கள், 1200 அறை கண்காணிப்பா ளர்கள் மற்றும் 214 பறக்கும் படைகள் நியமிக்கப்பட்டு ள்ளனர்.

    தென்காசி

    தென்காசி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வினை மொத்தம் 20 ஆயிரத்து 27 மாணவ-மாணவிகள் எழுதினர். இவர்களுக்காக மாவட்டம் முழுவதும் 81 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு ள்ளது.

    இதில் தனித்தேர்வர்கள் 4 மையங்களில் தேர்வு எழுதனர். நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 279 மையங்களில் மொத்தம் 65 ஆயிரத்து 845 மாணவ-மாணவிகள் எழுதினர்.

    • பண்ருட்டியில் தந்தை இறந்த துக்கத்திலும் மாணவன் 10-ம் வகுப்பு தேர்வு எழுதிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    • உறவினர்கள், சந்துரு தேர்வு எழுதி விட்டு வந்த பிறகு தினகரனின் உடலை அடக்கம் செய்ய முடிவு செய்தனர்.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள அக்கடவல்லி கிராமத்தில் நேற்று பங்குனி உத்திர திருவிழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வேண்டுதல் நிறைவேறவும் நேர்த்தி கடனுக்காகவும் அலகு குத்தி கொண்டு வீதியுலாவந்தனர். அப்போது அதே ஊரைச் சேர்ந்த தினகரன் (47), திருத்துறையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம்வகுப்பு படித்து வரும் தனது ஒரே மகன் சந்துரு இன்று நடக்கும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக வேண்டிக்கொண்டு நேர்த்தி கடனுக்காக மகனுக்கு அலகு குத்தி அழைத்து வந்தார்.

    நேர்த்திக்கடன் முடிந்து மகனுக்கு போடப்பட்ட அலகை கழற்றிவைத்த போது தினகரனுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி சென்று தண்ணீர் எடுத்து வருவதற்குள் மனைவி, மகன் முன்னிலையில் அதே இடத்தில் சுருண்டு கீழே விழுந்தார். உடனடியாக காரில் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். தினகரனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் உயிர் இழந்து விட்டதாக கூறினார்.

    இதை கேட்டு அதிர்ச்சியடைந்த சந்துரு கதறி அழுதான். இருப்பினும் இன்று 10-ம் வகுப்புதேர்வு நடப்பதால் தான் தேர்வு எழுத செல்ல வேண்டும் என அவர் உறவினர்களிடம் தெரிவித்தார். அதனை ஏற்றுக்கொண்ட உறவினர்கள், சந்துரு தேர்வு எழுதி விட்டு வந்த பிறகு தினகரனின் உடலை அடக்கம் செய்ய முடிவு செய்தனர்.

    அதன்படி சந்துருவை உறவினர்கள் இன்று காலை திருத்துறையூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு அழைத்து சென்றனர். அங்கு மாணவன், தேர்வை எழுதினார். தொடர்ந்து அவருக்கு ஆசிரியர்கள் ஆறுதல் கூறினர். இன்று மாலை தினகரன் உடல் அடக்கம் நடக்க உள்ளது.

    தந்தை இறந்த துக்கத்திலும் மாணவன் தேர்வு எழுதிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • தேர்வு மையங்களுக்குள் மின் சாதன பொருட்கள், செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது.
    • காப்பி அடித்தல், துண்டு சீட்டு வைத்து எழுதுதல், விடைத்தாள் மாற்றம் செய்தல் போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவதை தடுக்க பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடந்து முடிந்துள்ள நிலையில் 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது.

    பள்ளியில் படித்த மாணவர்கள், தனித் தேர்வர்கள் என 9 லட்சத்து 76 ஆயிரத்து 89 பேர் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்வு எழுதினார்கள்.

    5 லட்சத்து ஆயிரத்து 28 மாணவர்களும், 4 லட்சத்து 75 ஆயிரத்து 56 மாணவிகளும், 5 மூன்றாம் பாலினத்தவர்களும் பொதுத்தேர்வு எழுதுகிறார்கள். சிறைச்சாலைகளில் உள்ள 264 கைதிகளும், மாற்றுத்திறனாளிகள் 13,151 பேரும் இத்தேர்வை எழுத சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    12,639 பள்ளிகள், 4025 மையங்கள் மற்றும் 182 தனித்தேர்வர்களுக்கான மையங்களில் தேர்வு நடக்கிறது. சென்னை புழல் உள்ளிட்ட 9 ஜெயில்களிலும் கைதிகள் தேர்வு எழுதினர்.

    காலை 10 மணி முதல் பகல் 1.15 மணி வரை தேர்வு நடைபெறுகிறது. 10 மணி முதல் 10.10 மணி வரை வினாத்தாளை படிப்பதற்கு அவகாசம் கொடுக்கப்பட்டது. 10.10 மணி முதல் 10.15 மணி வரை விவரங்களை சரி செய்ய நேரம் ஒதுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 3 மணி நேரம் தேர்வு நடந்து முடிந்தது.

    முதல் நாளான இன்று தமிழ் தேர்வு நடந்தது. இதனையடுத்து 3 நாட்கள் அரசு விடுமுறையாகும். மீண்டும் 10-ந் தேதி ஆங்கில தேர்வு நடக்கிறது. ஒவ்வொரு தேர்வுக்கும் 2 அல்லது 3 நாட்கள் இடைவெளி விட்டு தேர்வு நடத்தப்படுகிறது. 20-ந்தேதி தேர்வு முடிகிறது.

    தேர்வு மையங்களுக்குள் மின் சாதன பொருட்கள், செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது.

    மாணவர்களை பரிசோதித்த பிறகே தேர்வு கூடத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். காப்பி அடித்தல், துண்டு சீட்டு வைத்து எழுதுதல், விடைத்தாள் மாற்றம் செய்தல் போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவதை தடுக்க பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

    வினாத்தாள் குறிப்பிட்ட நேரத்திற்குள் மையங்களுக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லவும், தேர்வு முடிந்தவுடன் விடைத்தாள்கள் காப்பு மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

    11, 12-ம் வகுப்பு தேர்வு எவ்வித குழப்பமும் இன்றி நடந்து முடிந்தது போல எஸ்.எஸ்.எல்.சி. தேர்வையும் நடத்தி முடிக்க கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    நடந்து முடிந்த 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 50 அயிரம் மாணவர்கள் தேர்வு எழுதாமல் ஆப்சென்ட் ஆனார்கள். தமிழ் உள்ளிட்ட முக்கிய பாட தேர்வுகளை அவர்கள் எழுதவில்லை.

    அதுபோன்ற நிலை 10-ம் வகுப்பு தேர்வில் நடக்கக்கூடாது என அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டது. இடைநின்ற மாணவர்களை தேர்வுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இன்று நடந்த தமிழ் தேர்வை எத்தனை பேர் எழுதவில்லை என்ற புள்ளி விவரத்தை தேர்வுத்துறை வெளியிடுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

    • சிறைக்கைதிகள் 264 பேரும், மாற்றுத்திறனாளிகள் 13 ஆயிரத்து 151 பேரும் எழுதுகின்றனர்.
    • பொதுத்தேர்வு நாளை தொடங்கி 20-ந்தேதிவரை நடைபெற இருக்கிறது.

    சென்னை :

    பிளஸ்-2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நிறைவுபெற்ற நிலையில், அடுத்ததாக பிளஸ்-1 மாணவர்களுக்கு இன்றுடன் (புதன்கிழமை) முடிவடைய உள்ளது. இதைத்தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவியருக்கான பொதுத்தேர்வு நாளை (வியாழக்கிழமை) தொடங்கி வருகிற 20-ந்தேதி (வியாழக்கிழமை) வரை நடைபெற இருக்கிறது.

    இந்த தேர்வை தமிழ்நாட்டில் இருந்து 4 லட்சத்து 66 ஆயிரத்து 765 மாணவர்களும், 4 லட்சத்து 55 ஆயிரத்து 960 மாணவிகளும் என மொத்தம் 9 லட்சத்து 22 ஆயிரத்து 725 பேரும், புதுச்சேரியில் இருந்து 7 ஆயிரத்து 911 மாணவர்களும், 7 ஆயிரத்து 655 மாணவிகளும் என மொத்தம் 15 ஆயிரத்து 566 பேரும் பள்ளி மாணவர்களாக எழுத இருக்கின்றனர்.

    இதுதவிர தனித்தேர்வர்களாக 26 ஆயிரத்து 352 மாணவர்கள், 11 ஆயிரத்து 441 மாணவிகள், 5 திருநங்கைகள் என மொத்தம் 37 ஆயிரத்து 798 பேரும் எழுதுகின்றனர். ஆக மொத்தம் இந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 9 லட்சத்து 76 ஆயிரத்து 89 மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் எழுத உள்ளனர்.

    மேலும் சிறைக்கைதிகள் 264 பேரும், மாற்றுத்திறனாளிகள் 13 ஆயிரத்து 151 பேரும் எழுதுகின்றனர். இந்த தேர்வுக்காக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 4 ஆயிரத்து 25 மையங்களில் 12 ஆயிரத்து 639 பள்ளிகளில் தேர்வு அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    ஏற்கனவே எஸ்.எஸ்.எல்.சி. செய்முறைத்தேர்வில் அதிகளவில் மாணவர்கள் 'ஆப்சென்ட்' தகவல் வந்ததால், செய்முறைத்தேர்வுக்கு கால நீட்டிப்பு செய்யப்பட்டது. அதன்படி கடந்த மாதத்தில் செய்முறைத்தேர்வு நிறைவுபெற்றது.

    இந்த நிலையில் பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது. ஏற்கனவே 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 50 ஆயிரம் மாணவர்கள் 'ஆப்சென்ட்' ஆன விவகாரம் விஸ்வரூபம் எடுத்தநிலையில், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முதல் நாளான தமிழ்தாள் தேர்வில் எவ்வளவு பேர் 'ஆப்சென்ட்' ஆவார்களோ என்ற கேள்வி இப்போதில் இருந்தே பல தரப்பில் எழுப்பப்பட்டுவருகிறது.

    இந்த காரணத்தினாலேயே, எப்போதும் அரசின் தேர்வுத்துறை, பொதுத்தேர்வுக்கு 2 நாட்களுக்கு முன்பு எவ்வளவு பேர் எழுதுகிறார்கள் என்ற அதிகாரப்பூர்வ புள்ளிவிவரத்தை வெளியிடும். ஆனால் தேர்வுக்கு இன்னும் ஒருநாள் மட்டுமே இருக்கும் நிலையில் இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

    தற்போது வெளியாகி இருக்கும் புள்ளிவிவரங்கள்கூட, கல்வித்துறை வட்டாரத்தில் வெளியான மறைமுக தகவல்களை அடிப்படையாக கொண்டவைதான். அதிகாரப்பூர்வமாக புள்ளிவிவரங்கள் வெளியிடாதது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் முறையாக பதிலளிக்கவில்லை.

    மேலும், தேர்வு முடிந்ததும் மாணவர்கள் 'ஆப்சென்ட்' விவரங்களை வெளியிடவும் அதிகாரிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. 'மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் அடி' என்பதுபோல, அதிகாரிகள் என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர்.

    • 12,639 பள்ளிகளிலும், 4,025 மையங்களிலும், 182 தனியார் மையங்களிலும் தேர்வு நடைபெறுகிறது.
    • சிறை கைதிகள் 264 பேரும், மாற்றுத்திறன் மாணவர்கள் 13,151 பேரும் தேர்வு எழுத சிறப்பு ஏற்பாடுகளை அரசு தேர்வுத்துறை மூலம் செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மாதம் 13-ந்தேதி தொடங்கி நேற்று முடிந்தது. பிளஸ்-1 தேர்வு 14-ந்தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று நாளையுடன் நிறைவுபெறுகிறது.

    இதையடுத்து 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை மறுநாள் (6-ந்தேதி) தொடங்குகிறது. இத்தேர்வை 9 லட்சத்து 97 ஆயிரத்து 89 பேர் எழுதுகிறார்கள். 5 லட்சத்து 1028 மாணவர்களும், 4 லட்சத்து 75 ஆயிரத்து 56 மாணவிகளும், 5 மூன்றாம் பாலினத்தவரும் தேர்வு எழுத உள்ளனர்.

    12,639 பள்ளிகளிலும், 4,025 மையங்களிலும், 182 தனியார் மையங்களிலும் தேர்வு நடைபெறுகிறது. சிறை கைதிகள் 264 பேரும், மாற்றுத்திறன் மாணவர்கள் 13,151 பேரும் தேர்வு எழுத சிறப்பு ஏற்பாடுகளை அரசு தேர்வுத்துறை மூலம் செய்யப்பட்டுள்ளது.

    பிளஸ்-2 தேர்வில் தமிழ் உள்ளிட்ட முக்கிய பாட தேர்வுகளை 50 ஆயிரம் மாணவர்கள் எழுதாத நிலையில் 10-ம் வகுப்பு தேர்வில் ஆப்சென்ட் இல்லாமல் முழு அளவில் மாணவர்களை தேர்வு எழுத வைக்க கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

    நாளை மறுநாள் தமிழ் தேர்வு தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து 7-ந்தேதி புனித வெள்ளி அரசு விடுமுறை நாளாகும். தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறைக்கு பிறகு 10-ந்தேதி (திங்கட்கிழமை) ஆங்கிலம் தேர்வு நடக்கிறது. 13-ந்தேதி கணிதம், 15-ந் தேதி விருப்ப மொழிப்பாடம், 17-ந்தேதி அறிவியல் தேர்வும் 20-ந்தேதி சமூக அறிவியல் தேர்வுடன் நிறைவுபெறுகிறது.

    மாணவர்கள் தேர்வு கூடங்களில் முறைகேடு மற்றும் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்வுத்துறை எச்சரித்துள்ளது. மேலும் தேர்வு மையங்களில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பாளர்கள் கட்டாயம் தேர்வு மையத்திற்கு செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை.

    துண்டு சீட்டு வைத்து எழுதுதல், காப்பி அடித்தல், ஆள் மாறாட்டம், விடைத்தாள் மாற்றம் செய்தல் போன்ற சம்பவங்களை தடுக்க பறக்கும் படையினர் அவ்வப்போது தேர்வு மையங்களில் ஆய்வு செய்கிறார்கள். அனைத்து மாவட்ட கலெக்டர்கள் அறிவுறுத்தலின் பேரில் முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் மேற்பார்வையில் எவ்வித தவறுக்கும் இடம் அளிக்காத வகையில் தேர்வை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    ×