search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Head Teachers"

    • தலைமை ஆசிரியர்கள் மாவட்டத்திற்குள் இடமாறுதல் பெறுவத ற்கான கலந்தாய்வு தொடங்கியது.
    • அவர்களுக்கு வேண்டிய பள்ளிகளில் இடம் மாறுதல் பெற்று சென்றனர்.

    ஈரோடு, மே.15 -

    தமிழகத்தில் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு இடமாறுதலுக்கான கலந்தாய்வு கடந்த 8-ந் தேதி தொடங்கப்படுவதாக இருந்தது. ஆனால் நிர்வாக காரணங்களுக்காக இந்த கலந்தாய்வு ஒத்தி வைக்கப்பட்டது.

    கலந்தாய்வு

    இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆசிரியருக்கான பொது மாறுதல் கலந்தாய்வு இன்று தொடங்கியுள்ளது. இதன்படி ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் இன்று காலை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாவட்டத்திற்குள் இடமாறுதல் பெறுவத ற்கான கலந்தாய்வு தொடங்கியது.

    இதற்காக இன்று காலை முதலே முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்திற்கு தலைமை ஆசிரியர்கள் ஆர்வமுடன் வந்திருந்தனர். இன்று காலை அவர்க ளுக்கான இடம் மாறுதல் பெறுவதற்கான கலந்தாய்வு தொடங்கியது.

    மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குழந்தை ராஜன் தலைமை யில் இந்த கலந்தாய்வு நடந்தது. தலைமை ஆசிரி யர்கள் இதில் கலந்து கொண்டு அவர்களுக்கு வேண்டிய பள்ளிகளில் இடம் மாறுதல் பெற்று சென்றனர்.

    இதைத் தொடர்ந்து நாளை(செவ்வாய்க்கிழமை) நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வும், அரசு மேல்நி லைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் வெளி மாவட்டங்களில் இடம் மாறுதல் பெறு வதற்கான கலந்தாய்வும் நடக்கிறது. முதுகலை ஆசிரியர்கள், கணினி ஆசிரியர்கள், தொழிற்கல்வி ஆசிரியர்கள் மாவட்ட த்திற்குள் இடம் மாறுதல் பெறுவதற்கான கலந்தாய்வு நாளை மறுநாளும், வெளி மாவட்டம் இட மாறுதல் பெறுவதற்கான கலந்தாய்வு வருகிற 18-ந் தேதியும் நடக்கிறது.

    பட்டதாரி ஆசிரியர்கள் ஒன்றியத்து க்குள் மாறுதலு க்கான கலந்தாய்வு 19-ந் தேதியும், வெளி மாவட்ட த்துக்கான கலந்தாய்வு 20-ந் தேதியும், உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட த்துக்குள் மாறுதலுக்கான கலந்தாய்வு 19-ந் தேதியும், வெளி மாவட்டத்து க்கான மாறுதல் 20-ந் தேதியும் நடைபெறுகிறது. பட்டதாரி ஆசிரியர்கள் ஒன்றியத்துக்குள் மாறுதலுக்கான கலந்தாய்வு 22-ந் தேதியும், தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு 23-ந் தேதியும் நடைபெற உள்ளது.

    கலை, இசை, தையல், இடைநிலை ஆசிரியர்க ளுக்கு மாவட்ட த்துக்குள் இடமாறு தலுக்கான கலந்தாய்வு 23-ந் தேதியும், வெளி மாவ ட்டத்துக்கான கலந்தாய்வு 24-ந் தேதியும் நடக்கிறது. இடைநிலை ஆசிரியர் ஒன்றியத்துக்குள் கலந்தா ய்வு 24-ந் தேதியும், பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்டத்துக்குள் இடமாறுதல் கலந்தாய்வு 25-ந் தேதியும், வெளி மாவட்டத்திற்கான கலந்தாய்வு 26-ந் தேதியும் நடைபெற உள்ளது.

    தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 1500 தலைமை ஆசிரியர்கள் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். #MinisterSengottaiyan
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் நிகழ்ச்சி இன்று காலை நடந்தது. அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தனர்.

    அதன் பிறகு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    வழக்கம் போல் ஆகஸ்ட் மாதம் 15-ந் தேதி தான் கீழ் பவானி வாய்க்கால் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும். ஆனால் முதன் முறையாக 1-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.



    தமிழகத்தில் நல்ல மழை பெய்து அணைகள் நிரம்பி உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் மலர்ச்சி ஏற்பட்டு உள்ளது. இது இந்த அரசுக்கு கிடைத்த பெரிய வெற்றி ஆகும்.

    தமிழகம் முழுவதும் உள்ள 1500 தலைமை ஆசிரியர்கள் பணி விரைவில் நிரப்பப்படும். இது தொடர்பாக ஐகோர்ட்டில் வழக்கு நடந்து வந்தது. இந்த வழக்கில் தமிழக அரசுக்கு சாதகமான தீர்ப்பு வந்துள்ளது.

    ஆகவே விரைவில் 1500 தலைமை ஆசிரியர்கள் பணி நிரப்பப்படும்.

    அத்திக்கடவு-அவினாசி திட்டம் பற்றிய ஆய்வு பணி நடந்து வருகிறது. விரைவில் இது நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். பாண்டியாறு, புன்னம் புழா திட்டம் ஓய்வு பெற்ற தலைமை பொறியாளர் மூலம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    சத்தியமங்கலம் வனப்பகுதி தாளவாடியில் பெய்யும் மழை தண்ணீர் எல்லாம் கர்நாடகத்துக்கு சென்று கொண்டிருக்கிறது.

    இதை தடுத்து தாளவாடியில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். #MinisterSengottaiyan
    விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக முதன்மை கல்வி அதிகாரி கூறினார்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட குறைந்து உள்ளது. தரவரிசை பட்டியலில் விழுப்புரம் மாவட்டம் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இது பற்றி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முனுசாமியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் 60 சதவீதத்துக்கும் குறைந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    வரும் கல்வியாண்டில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகளில் திடீர் ஆய்வுகள் நடத்தப்பட்டு கல்வி சார்ந்த செயல்பாடுகள் குறித்து ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் ஆகியோரிடம் கேட்டறிந்து தகுந்த அறிவுரைகளும், மாணவர் களின் தேர்ச்சியை அதிகரிக்க தகுந்த ஆலோசனைகளும் வழங்கப்படும். அதுபோல் மாதந்தோறும் தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டமும் நடத்தப்பட்டு உரிய ஆலோசனை வழங்கப்படும்.

    மேலும் பள்ளிகளில் தினமும் காலை, மாலை வேளைகளில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்படும். வாரந்தோறும் ஒவ்வொரு பாடம் முடிந்ததும் மாணவ-மாணவிகளுக்கு குறுந்தேர்வுகள் நடத்தப்படும்.

    இதுதவிர மாதந்தோறும் பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடத்தி மாணவர்களின் செயல்பாடுகள் மற்றும் கல்வித்தரத்தை மேம்படுத்துவது தொடர்பாக அறிவுரைகள் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×