search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister Sengottaiyan"

    அடிப்படை வசதிகளை மேம்படுத்த அரசு பள்ளிகளுக்கு உதவிட முன்வாருங்கள் என்று முன்னாள் மாணவர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் அழைப்பு விடுத்து இருக்கிறார்.
    சென்னை:

    பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அரசு பள்ளிகளில் பயின்று தற்போது பல்வேறு தொழில் நிறுவனங்களில் உயர்ந்த பதவியில் இருக்கும் முன்னாள் மாணவர்களும், தற்போது தொழில் அதிபர்களாக உள்ள முன்னாள் மாணவர்களும், சமூக அக்கறை கொண்ட நிறுவனங்களும், தங்களுடைய சமூக பொறுப்புணர்வு நிதி மூலம் அரசு பள்ளிகளை தத்தெடுக்க வேண்டும்.

    அதன்மூலம், பள்ளிகளின் உட்கட்டமைப்பு, சுற்றுச்சுவர், வர்ணம் பூசுதல், இணையதள வசதிகள், சுகாதாரமான கழிவறைகள், ஆய்வகங்கள், நூலகங்கள் போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்திட வாருங்கள் என இருகரம் கூப்பி அழைக்கின்றேன். 2018-19-ம் ஆண்டு எங்களுடைய அழைப்பினை ஏற்று ரூ.58 கோடி மதிப்பில் 519 அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டன. அதை செய்தவர்களுக்கு நன்றிகளை தெரிவிக்கிறேன்.



    கல்வி என்ற ஒப்பற்ற செல்வத்தை அடுத்த தலைமுறையினருக்கு வழங்க சேவை மனப்பான்மையும், அன்பு உள்ளமும், தர்ம சிந்தனையும் கொண்ட முன்னாள் மாணவர்களையும், தொழில் நிறுவனங்களையும் தாங்கள் கல்வி பயின்ற மற்றும் தங்கள் நிறுவனத்துக்கு அருகில் இருக்கும் அரசு பள்ளிகளுக்கு உதவிட முன்வாருங்கள் என்று அன்போடு மீண்டும் அழைக்கின்றேன்.

    அரசு பள்ளிகளை தத்தெடுக்க விரும்பும் சமூக அக்கறை கொண்ட நிறுவனங்களுக்கு எந்த தடையும் தாமதமும் இன்றி உடனடியாக பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்க அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டு இருக்கிறது.

    அரசின் பணியோடு, தங்களின் பங்களிப்பும் இணையும்போது தான் கல்வியின் தரம் மேலும் சிறக்கும், வளம் பெறும். எனவே அனைவரும் வாருங்கள் ஒன்று சேர்ந்து வளம் மிகு அரசு பள்ளிகளுக்கு மேலும் பலம் சேர்க்க கரம் கோர்த்து செயல்படுவோம்.

    இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
    ஏற்கனவே அறிவித்தபடி ஜூன் 3-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் விடுமுறையை தள்ளி வைக்க வாய்ப்பு இல்லை என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு ஏப்ரல் கடைசி வாரம் கோடை விடுமுறை விடுவது வழக்கம்.

    இந்த ஆண்டு பாராளுமன்றம், சட்டசபை இடைத்தேர்தல் ஏப்ரல் மாதம் முதல் மே மாதம் வரை நடந்தது. இதனால் பள்ளிகளுக்கு முன்னதாகவே அரசு பொது தேர்வுகளும் ஆண்டு இறுதி தேர்வுகளும் நடத்தப்பட்டன.

    முன்னதாகவே தேர்வுகள் முடிவடைந்ததால் பல தனியார் பள்ளிகளில் ஏப்ரல் 16-ந் தேதியே விடுமுறை விடப்பட்டது. அதைத் தொடர்ந்து அரசு பள்ளிகளுக்கும் வழக்கத்தைவிட 2 வாரங்களுக்கு முன்னதாகவே விடுமுறை விடப்பட்டது.

    கோடை விடுமுறை முடிந்து வருகிற ஜூன் 3-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது. இந்த நிலையில், வெயில் கடுமையாக இருப்பதால் பள்ளிகளுக்கு மேலும் 2 வாரம் விடுமுறையை நீடிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்தது.


    எனவே, பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீடிக்கும். 3-ந் தேதி திறக்க வாய்ப்பு இல்லை. அரசு புதிய தேதியை முடிவு செய்யும் என்று கூறப்பட்டது.

    இந்த நிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ‘ஏற்கனவே அறிவித்தபடி ஜூன் 3-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும். விடுமுறையை தள்ளி வைக்க வாய்ப்பு இல்லை’ என்று அறிவித்துள்ளார்.

    எனவே, திட்டமிட்டப்படி வருகிற 3-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன. விடுமுறைக்கு சொந்த ஊர் சென்றவர்கள் திரும்புகிறார்கள்.
    பள்ளி கல்வித்துறையில் தொடர்ந்து 6 பாட திட்டங்களும் நீடிக்கும். மொழி பாட திட்டங்களை பொறுத்தவரையில் இருமொழி கொள்கை தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.
    சென்னை:

    11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 2 மொழி பாடங்களுக்கு பதிலாக ஒரு மொழி பாடத்தை அமல்படுத்துவதற்கான பரிந்துரையை தமிழக அரசுக்கு பள்ளி கல்வித்துறை அனுப்பியிருப்பதாக தகவல் வெளியானது.



    இதுதொடர்பாக தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று இரவு விளக்கம் அளித்து கூறியதாவது:-

    பள்ளி கல்வித்துறையை பொறுத்தவரையிலும் தொடர்ந்து 6 பாட திட்டங்களும் நீடிக்கும். மொழி பாட திட்டங்களை பொறுத்தவரையில் இருமொழி கொள்கை தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும். எந்த விதமான மாற்றங்களும் பள்ளி கல்வித்துறையில் இதுவரை செயல்படுத்தப்படவில்லை. செயல்படுத்தப்போவதும் இல்லை.

    மாணவர்களுக்கு எந்த குழப்பமும் இல்லை. தற்போது இருக்கும் பாடதிட்டங்கள் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகிறதோ? அதேதான் தொடர்ந்து செயல்படுத்தப்படும். மொழி பாட திட்டமாக தமிழும், ஆங்கிலமும் இருக்கும். தொடர்ந்து 6 பாட திட்டங்களும் இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    இடைத்தேர்தலில் 22 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். #ministersengottaiyan #admk

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

    இந்தியாவிலேயே சட்டம்-ஒழுங்கை பேணி காக்கும் மாநிலமாக, தடையில்லா மின்சாரம் வழங்கும் மாநிலமாக, கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் தருகிற மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. தமிழகத்தில் பள்ளி கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை உருவாக்கி இருக்கிறோம். எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளை கொண்டு வருவதற்கான பணிகள் ஜனவரி மாதம் நிறைவேற்றப்படும்.

    வருகிற ஜூலை மாத இறுதிக்குள் பள்ளிகளில் 6 முதல் 8 வரை ஸ்மார்ட் வகுப்பறைகள் கொண்டு வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 9, 10, 11, 12ம் வகுப்புகள் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டு இணையதள வசதி ஏற்படுத்தப்படும். அதேபோல் அனைத்து மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு பள்ளிகளிலும் அரசு சார்பில் இலைப்ரரி என்ற முறையில் கம்ப்யூட்டர் மூலமாக அவர்கள் கற்றுக்கொள்வதற்கு நூலக வசதி கொண்டு வரப்படும்.

    இந்த ஆண்டு பிளஸ்-1, பிளஸ்-2 முடித்த 15 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும். அதேபோல் 8, 9, 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கணினி வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் புதிதாக கல்விக்காக தனி டி.வி. சேனலை கொண்டு வருவதற்கும், ரோபோ மூலமாக கல்வி கற்றுக் கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, தனியார் பள்ளிக்கூடங்களை மிஞ்சும் அளவுக்கு தரமான சீருடைகள் வழங்கப்படும். கடந்த 2 ஆண்டுகளில் பள்ளிகளில் பாடத்திட்டங்கள் மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு, இந்த ஆண்டு 1 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் பாடத்திட்டங்களை மாற்றும் பணி நிறைவு பெற்றுவிட்டது. இடைத்தேர்தலில் 22 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும்.

    இவ்வாறு செங்கோட்டையன் கூறினார். #ministersengottaiyan #admk 

    பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை காலை சரியாக 9.30 மணிக்கு திட்டமிட்டபடி வெளியிடப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். #Plus2Result #TNMinister #Sengottaiyan
    கோபி:

    கோபி அருகேயுள்ள குள்ளம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளிக் கூடத்தில் அமைச்சர் செங்கோட்டையன் ஓட்டு போட்டார். வாக்களிப்பதற்கு முன்பாக அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் பல சிறப்பான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பொங்கலன்று பரிசாக ரூ.1,000 கொடுத்தது போல தேர்தல் முடிந்த பிறகு வறுமைக்கோட்டிற்கு கீழ்உள்ளவர்களுக்கு ரூ.2,000 வழங்கப்படும்.

    வீட்டு வரி, குடிநீர் வரி ஆகியவற்றை குறைக்கவும், கேபிள் டி.வி. கட்டணமும் குறைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தின் போது கூறியுள்ளார். பாண்டிச்சேரி உள்பட 39 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும். அதில் திருப்பூர் பாராளுமன்ற தொகுதியானது அதிக வாக்குகள் பெற்ற தொகுதியாக இருக்கும்.



    நாளை 19 ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் காலை சரியாக 9-30 மணிக்கு திட்டமிட்டபடி வெளியிடப்படும். மாணவ, மாணவிகள் எஸ்எம்எஸ், ஆன்லைன் மூலமாகவும் தங்களது தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம்.

    பிளஸ் 2 தேர்வில் அனைத்து மாணவர்களும் நல்ல முறையில் வெற்றி பெற்று மேல்படிப்பிற்குச் செல்லவும் வாழத்துக்களை தெரிவிக்கிறேன். தோல்வியடைந்த மாணவர்கள் சோர்வும், மனஅழுத்தமும் இல்லாமலும், துவண்டு விடாமலும் ஜூன் மாதத்தில் நடைபெற உள்ள உடனடி தேர்வை எழுதி வெற்றி பெற்று இதே ஆண்டில் கல்லூரிக்குச் செல்லலாம்.

    இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் முதன் முதலாக கல்வியாண்டின் துவக்கத்திலேயே மாணவ, மாணவிகள் பிளஸ்2, பிளஸ்1, 10 ம் வகுப்பு ஆகிய பொதுத் தேர்வுகளுக்கான தேதிகளும், தேர்வு முடிவுகளுக்கான தேதிகளும் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.

    புதிய பாடத்திட்டங்களை செயல்படுத்த ஆசிரிய, ஆசிரியைகளுக்கு விரைவில் பயிற்சி அளிக்கப்படும். அரசு பள்ளிகளில் ஜூன் மாதம் முதல் எல்.கே.ஜி. யு.கே.ஜி. வகுப்புகள் துவங்கப்பட உள்ளது. 13 லட்சத்து 35 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு ஜூன் மாதம் மடிகணினி வழங்கப்படும்.

    கோடை விடுமுறையில் தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது. இதுபற்றி தகவல் கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    நீட் தேர்வை பொருத்த வரை தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசிடம் தேவையில்லை என்று வலியுறுத்தி வருகிறது. ஆனால், திமுக, மற்றும் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. இந்த ஆண்டு நீட் தேர்விற்கு 10 கல்லூரிகளில் 5 ஆயிரம் பேருக்கு பயிற்சியளிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வேலூர் பாராளுமன்றத் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டது குறித்து கேட்டதற்கு தேர்தல் கமி‌ஷனும், உயர்நீதிமன்றமும் இதுபற்றி முடிவெடுத்துள்ளது என்றார். #Plus2Result #TNMinister #Sengottaiyan
    ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த குள்ளம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த 123-வது வாக்கு மையத்தில் தமிழக கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் வாக்களித்தார். #Loksabhaelections2019 #Sengottaiyan

    கோபி, ஏப். 18-

    தமிழகம் முழுவதும் இன்று பாராளுமன்ற தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த குள்ளம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த 123-வது வாக்கு மையத்தில் தமிழக கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஓட்டு போட்டார்.

    காலை 7.30 மணிக்கெல்லாம் அமைச்சர் செங்கோட்டையன் வாக்காளர்களுடன் வரிசையில் நின்று ஓட்டு போட்டார்.

    ஓட்டுப்பதிவு 7 மணி என்றாலும் காலை 6.30 மணிக்கெல்லாம் வாக்கு மையத்தில் வரிசையில் நிற்க தொடங்கினர்.

    சரியாக காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியதும் பொதுமக்கள் வரிசையில் வந்து அமைதியாக ஓட்டு போட்டு தங்ளது ஜனநாயக கடமையாற்றினர். * * * தர்மபுரி-1 * * * பெங்களூரு தெற்கு தொகுதியில் அடங்கிய கிரி நகரில் ஓட்டுபோட காலை 7 மணிக்கே காத்திருந்த வாக்காளர்கள். * * * அமைச்சர் செங்கோட்டையன் ஓட்டு போட்டபோது எடுத்த படம். * * * ஓட்டு போட அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வரிசையின் நின்ற காட்சி.

    தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ். முஸ்தபா தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை சந்தித்து அமைச்சர் செங்கோட்டையன் மீது புகார் மனு கொடுத்துள்ளார்.
    சென்னை:

    தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ். முஸ்தபா தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை சந்தித்து அமைச்சர் செங்கோட்டையன் மீது புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    நடைபெறும் பாராளுமன்ற தேர்தலுக்காக அனைத்துக் கட்சியினரும் விதிகளுக்குட்பட்டு பிரசாரம் செய்து வருகின்றனர். இதை மீறும் வகையில் ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தேர்தல் பிரசாரத்தின்போது இஸ்லாமிய சமூகம் குறித்து அவதூறாக பேசியுள்ளார்.

    எனவே அவரது அமைச்சர் பதவியை பறிக்க தேர்தல் கமி‌ஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல் ராமநாதபுரம் தொகுதி பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரன் பிரசாரம் செய்யும்போது மதவாதத்தை தூண்டும் வகையில் பேசியுள்ளார்.

    எனவே அவரது வேட்பு மனுவை நிராகரித்து தேர்தலில் நிற்க தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    ஸ்டாலின் எப்போதும் தளபதி தான், ஒருபோதும் முதல்வர் ஆக முடியாது என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். #Sengottaiyan #MKStalin
    ஈரோடு:

    கவுந்தப்பாடியில் ஈரோடு புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்த நாள் விழா- அ.தி.மு.க.வின் 2 ஆண்டு சாதனை விளக்கம் மற்றும் பாராளுமன்ற தேர்தல் பணி ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    கட்சியில் உள்ள ஒவ்வொரு தொண்டனும் முக்கியம். பணியாற்றும் தொண்டர்களுக்கு விரைவில் எதிர் காலம் காத்திருக்கிறது. தொண்டர்களில் நலனில் அக்கறை கொண்ட முதல்வர் பல திட்டங்கள் வைத்துள்ளார்.

    விரைவில் பாராளுமன்ற தேர்தல் வர உள்ளது. அது முடிந்த பின்பு கட்சி தொண்டர்களில் குறைகளை அவர் தீர்ப்பார். பாராளுமன்ற தேர்தலை பொறுத்தவரை தர்மயுத்தத்தில் எப்படி ஸ்ரீகிருஷ்ணரிடம் ஸ்ரீசக்கரம் இருந்ததோ அதே போல் முதல்வர் மற்றும் துணை முதல்வரும் தேர்தல் வியூகம் அமைத்துள்ளார்கள்.

    40 தொகுதியிலும் ஜெயிப்பது நாம் தான். ஸ்டாலின் எப்போதும் தளபதி தான் ஒருபோதும் முதல்வர் ஆக முடியாது. அந்த ராசியே ஸ்டாலினுக்கு இல்லை. கட்சி தொண்டர்கள் அயராத உழைப்பை வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற நாம் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். காழ்ப்புணர்ச்சியை மறந்து உழைப்போம் வெற்றி பெறுவோம் என்று கூறினார். #Sengottaiyan #MKStalin
    5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வால் பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். #PublicExam #Sengottaiyan
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள அக்கரை கொடிவேரி பகுதியில் அரசு நலத்திட்ட பணிகள் தொடக்க விழா நடந்தது.

    இதில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு திட்டபணிகளை தொடங்கி வைத்து பேசினார்.

    முன்னதாக அவர் நிருபர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக அரசு சார்பில் தினமும் பல்வேறு திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் யாவும் விரைவில் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டு உள்ளது.

    பொது மக்களின் அடிப்படை வசதிகள் யாவும் உடனுக்குடன் அரசு செயல்படுத்தி வருகிறது.



    இந்தியாவிலேயே பள்ளி கல்வி துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக செயல்பட்டு வருகிறது. கல்வித்துறைக்கு பல கோடி ஒதுக்கப்பட்டு மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு செயல்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது நிருபர்கள் “தமிழ்நாட்டில் 5 மற்றும் 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று கூறப்படுகிறதே?’ என்று கேட்டதற்கு அமைச்சர் செங்கோட்டையன் கூறும் போது, “மத்திய அரசு முடிவு செய்திருக்கலாம். ஆனால் தமிழக அரசு இன்னும் முடிவு செய்யவில்லை. எனினும் துறை ரீதியாக தயார் நிலையில் உள்ளோம். எனினும் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூடி தான் அது பற்றி முடிவு எடுக்க உள்ளோம். மக்கள் யாரும் இது பற்றி அச்சப்பட தேவையில்லை” என்று கூறினார். #PublicExam #Sengottaiyan
    தமிழகத்தில் 550 தேர்வு மையங்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். #NEET #NEETExam #Sengottaiyan
    நெல்லை:

    தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று நெல்லை வந்தார். தொடர்ந்து அவர் நெல்லையப்பர் கோவில் மற்றும் அதன் அருகில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோவில் ஆகிய கோவில்களில் சாமி தரிசனம் செய்தார்.

    பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடந்து வருகிறது. தமிழகம் அமைதி பூங்காவாகவும், மின் மிகை மாநிலமாகவும் உள்ளது. அடிப்படை திட்டங்களை நிறைவேற்றுவதில் இந்தியாவிலேயே முதலிடத்தில் தமிழகம் உள்ளது. தமிழகத்தில் தொழில் தொடங்க உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு 3 லட்சத்து 4 ஆயிரத்து 31 கோடி செலவில் புதிய தொழில்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.



    இதன் மூலம் 10 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெறுவார்கள். தமிழகம் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குகிறது. ‘நீட்’ தேர்வுக்காக 16 ஆயிரம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் மிகச்சிறந்த 4 ஆயிரம் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சி தமிழகத்தில் உள்ள 10 கல்லூரிகளில் நடைபெறும். பொதுத்தேர்வு முடிந்தவுடன் பயிற்சி நடக்கும்.

    இந்தியாவில் ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்த பின் 4-ல் ஒரு பங்கினர் வரி செலுத்தி வருகின்றனர். தற்போது இந்தியாவில் 2 லட்சத்து 81 ஆயிரம் சி.ஏ. படித்த ஆடிட்டர்கள் உள்ளனர். இது போதுமானது அல்ல. மேலும் காமர்ஸ் படித்தவர்கள் தேவைப்படுகிறார்கள். எனவே பிளஸ்-2 வில் காமர்ஸ் எடுத்து படிக்கும் மாணவர்கள் சி.ஏ. படித்து ஆடிட்டராக சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். பிளஸ்-2 படிக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு உத்தரவாதம் தரக்கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும்.

    ஆண்டுதோறும் 15 லட்சம் மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. இனி வரும் ஆண்டுகளில் 8, 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தோம். அதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. எனவே விரைவில் அவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும்.

    1 முதல் 5-ம் வகுப்பு வரையிலும், 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலும் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு புதிய வண்ண சீருடை வரும் கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்படும். இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதும் மாணவ-மாணவியர் தமிழகத்திலேயே எழுதலாம். இதற்காக வெளிமாநிலம் செல்ல அவசியமில்லை.

    தமிழகத்தில் 550 தேர்வு மையங்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதில் 1½ லட்சம் பேர் தேர்வு எழுதலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #NEET #NEETExam #Sengottaiyan
    இந்தாண்டு பொது தேர்வுக்கு புதிதாக 750 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். #MinisterSengottaiyan

    கோபி:

    கோபி அருகே உள்ள காசிபாளையத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    காசிபாளையம் பேரூராட்சியில் 300 நபர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதே பேரூராட்சியில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்கப்பணிகள் நடை பெறுகிறது.

    கோபி குடிநீர் திட்டத்திற்கு சுமார் ரூ.53 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதானால் நாள் தோறும் தடையற்ற குடிநீர் விநியோகம் செய்யப்படும்.

    கோபி நகராட்சி மத்தியில் அமைந்துள்ள குப்பைக் கிடங்கை அகற்றவேண்டும் என நீண்டநாட்களாக புகார் வந்துள்ளது. இதற்காக ரூ.62.20 லட்சம் செலவில் புதிய எந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளது. விரைவில் குப்பைகளை அப்புறப்படுத்தும் பணி நடைபெறும்.

    பள்ளி கல்வித்துறை சார்பில் 1.50 கோடி மரக் கன்றுகள் நட்டு மாணவர்களே பராமரிக்கும் திட்டம் விரைவில் முதல்வர் தொடங்கி வைக்கிறார்.

    8,9,10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில அரசின் 25 சதவிகித பங்குத் தொகையுடன் மத்திய அரசு ஸ்மார்ட் மடிக்கனிணிகள் இந்த மாதம் இறுதிக்குள் வழங்க நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது.

    இந்தாண்டு பொதுத் தேர்வுக்கு புதிதாக 750 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பாதுகாப்பிற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    கேள்வித்தாளில் எப்படி விடையளிக்க வேண்டும் என்றும் அதற்குறிய மதிப் பெண்கள் எவ்வாறு வழங்கப்படுகிறது என்றும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பள்ளிகளிலும் தட்டிகள் வைக்கப்பட்டுள்ளது.

    இன்னும் ஓராண்டிற்கு பிறகு தமிழக கல்வித்துறை இந்தியாவிற்கு மட்டுமல்ல உலகிற்கே வழிகாட்டியாக திகழும்.

    இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். #MinisterSengottaiyan

    தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது 239 பார்வையற்றோர் ஆசிரியர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். #TNAssembly #Sengottaiyan
    சென்னை:

    சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது மயிலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ. நடராஜ் ஆசிரியர் தகுதி தேர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட வேலைவாய்ப்பு குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:-

    தமிழ்நாட்டில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. ஆசிரியர் தகுதித் தேர்வில் மாற்றுத்திறனாளிகள் 4691 பேர் கலந்து கொண்டனர். இதில் 945 பேர் தேர்ச்சி பெற்றனர். மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு என்ற அடிப்படையில் இந்த தேர்வு நடந்தது.

    இதில் தற்போது 239 பார்வையற்றோர் ஆசிரியர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். முன்பு தகுதித் தேர்வில் 90 மதிப்பெண் பெற்றால்தான் வேலைவாய்ப்பு என்ற நடைமுறை இருந்தது. மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா அந்த மதிப்பெண்ணை 82 ஆக குறைத்தார். அதன் அடிப்படையில் தற்போது இவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    தற்காலிக ஆசிரியர்களை 750 ரூபாய் என்ற சம்பள அடிப்படையில் பணியமர்த்த அரசு முடிவு செய்தது. தற்போது இதுதொடர்பாக வழக்கு நடந்து வருவதால் தற்காலிக ஆசிரியர்களை தற்போது நியமிக்க இயலவில்லை.

    இவ்வாறு அவர் பேசினார். #TNAssembly #Sengottaiyan
    ×