search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "teacher job"

    • ஈரோடு மாவட்டத்தில் 2022-23-ம் கல்வி ஆண்டில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனம் மேற்கொள்ளப்பட உள்ளது.
    • இது சார்பான காலிப்பணியிட விவரங்கள் முதன்மைக்கல்வி, மாவ ட்டக்கல்வி, வட்டாரக்கல்வி அலுவலகங்ககளின் அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட்டு உள்ளது.

    ஈரோடு:

    கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

    தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும், ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 2022-23-ம் கல்வி ஆண்டில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனம் மேற்கொள்ளப்பட உள்ளது.

    தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து மூலமான விண்ண ப்பங்களை நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் வாயிலாகவோ உரிய கல்வி தகுதிச்சான்றுகளுடன் தொடர்புடைய மாவட்ட கல்வி அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

    இது சார்பான காலிப்பணியிட விவரங்கள் முதன்மைக்கல்வி, மாவ ட்டக்கல்வி, வட்டாரக்கல்வி அலுவலகங்ககளின் அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட்டு உள்ளது.

    விண்ணப்பங்களை வரும் 6-ந் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

    குறித்த நேரத்திற்கு பிறகு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்படமாட்டாது. தகவல் பலகையில் வெளி யிடப்படும் காலிப்பணியிட விவரங்கள் மாறுதலுக்கு உட்பட்டது.

    விண்ணப்பங்கள் ஈரோடு கல்வி மாவட்டம் - deoerode2016@gmail.com, பவானி கல்வி மாவட்டம் - deobhavani6@gmail.com, கோபிசெட்டிபாளையம் கல்வி மாவட்டம் - deogobi@gmail.com, பெருந்துறை கல்வி மாவட்டம்-deoperundurai@gmail.com, சத்தியமங்கலம் கல்வி மாவட்டம்-deosathy@gmail.com ஆகிய மின்னஞ்சல் முகவரியில் அனுப்பலாம்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது 239 பார்வையற்றோர் ஆசிரியர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். #TNAssembly #Sengottaiyan
    சென்னை:

    சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது மயிலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ. நடராஜ் ஆசிரியர் தகுதி தேர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட வேலைவாய்ப்பு குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:-

    தமிழ்நாட்டில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. ஆசிரியர் தகுதித் தேர்வில் மாற்றுத்திறனாளிகள் 4691 பேர் கலந்து கொண்டனர். இதில் 945 பேர் தேர்ச்சி பெற்றனர். மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு என்ற அடிப்படையில் இந்த தேர்வு நடந்தது.

    இதில் தற்போது 239 பார்வையற்றோர் ஆசிரியர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். முன்பு தகுதித் தேர்வில் 90 மதிப்பெண் பெற்றால்தான் வேலைவாய்ப்பு என்ற நடைமுறை இருந்தது. மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா அந்த மதிப்பெண்ணை 82 ஆக குறைத்தார். அதன் அடிப்படையில் தற்போது இவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    தற்காலிக ஆசிரியர்களை 750 ரூபாய் என்ற சம்பள அடிப்படையில் பணியமர்த்த அரசு முடிவு செய்தது. தற்போது இதுதொடர்பாக வழக்கு நடந்து வருவதால் தற்காலிக ஆசிரியர்களை தற்போது நியமிக்க இயலவில்லை.

    இவ்வாறு அவர் பேசினார். #TNAssembly #Sengottaiyan
    ஆண்டிப்பட்டி அருகே ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.4 லட்சம் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி அருகே சக்கம்பட்டியை சேர்ந்தவர் முனியாண்டி. ஓவியம் வரையும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரிடம் ஆண்டிப்பட்டி காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த ஆனந்தன் என்பவர் அரசு பள்ளியில் ஓவிய ஆசிரியர் வேலை காலியாக இருப்பதாகவும், தனக்கு அதிகாரிகளை தெரியும்.

    எனவே அந்த வேலையை உங்களுக்கு வாங்கி தருகிறேன் என கூறி உள்ளார். இதற்காக ரூ.4 லட்சம் செலவாகும் என தெரிவித்துள்ளார். அதன்படி முனியாண்டி, ஆனந்தனிடம் ரூ.4 லட்சம் பணத்தை கொடுத்துள்ளார். ஆனால் 4 வருடங்களுக்கு மேலாகியும் ஆனந்தன் சொன்னபடி வேலையை வாங்கி தரவில்லை.

    இதனால் தனது பணத்தை திருப்பி தருமாறு ஆனந்தன் வீட்டிற்கு சென்று முனியாண்டி கேட்டுள்ளார். இதற்கு ஆனந்தன் பணத்தை திருப்பி தர முடியாது. இனிமேல் பணம் கேட்டு இங்கு வந்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.

    இது குறித்து ஆண்டிப்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்த ஆனந்தனை கைது செய்தனர்.#tamilnews
    ×