என் மலர்

    நீங்கள் தேடியது "erode district"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஈரோடு மாவட்டத்தில் மிலாடிநபி மற்றும் காந்தி ஜெயந்தி ஆகிய தினங்களை முன்னிட்டு மது கடைகளுக்கு விடுமுறை.
    • அன்றைய தினம் மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் மிலாடிநபி மற்றும் காந்தி ஜெயந்தி ஆகிய தினங்களை முன்னிட்டு 'மது விற்பனை இல்லாத நாளாக" அனுசரிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

    அதனைத்தொடர்ந்து வரும் 28-ந் தேதி மற்றும் 2-ந் தேதி ஆகிய 2 நாட்கள் முழுவதும் ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடைகள், அதனுடன் இயங்கும் பார்கள், கிளப்கள் மற்றும் ஓட்டல்களில் உள்ள பார்கள் ஆகியவை மூடப்பட்டிருக்கும்.

    அன்றைய தினங்களில் மதுபான விற்பனைகள் ஏதும் நடைபெறாது என்றும், அன்றைய தினம் மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஈரோடு திண்டலில் உள்ள வேளாளர் கல்லூரி வளாகத்தில் தொடங்கி வைக்கப்பட உள்ளது.
    • முதல் கட்டமாக 2 ஆயிரம் பேருக்கு நிதி உதவி வழங்கி திட்டம் தொடங்கி வைக்கப்பட உள்ளது.

    ஈரோடு:

    அமைச்சர் சு. முத்துசாமி மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்து பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    தமிழ்நாடு அரசின் முக்கிய திட்டமான கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டமானது வருகிற 15-ந் தேதி அண்ணா பிறந்த நாளையொட்டி செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

    இதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் இத்திட்டம் ஈரோடு திண்ட லில் உள்ள வேளாளர் கல்லூரி வளாகத்தில் தொடங்கி வைக்கப்பட உள்ளது. முதல் கட்டமாக 2 ஆயிரம் பேருக்கு நிதி உதவி வழங்கி திட்டம் தொடங்கி வைக்கப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • போதை பொருள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் போதை பொருள் விற்பனை நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில் கோபி, சித்தோடு, சென்னிமலை, சத்தியமங்கலம் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்த கோபி மொடச்சூர் பகுதியை சேர்ந்த முருகன் மகன் கோபாலகிருஷ்ணன் (வயது 21),

    சித்தோடு அம்மன் நகரை சேர்ந்த பாலநாதகுமார் (50), சென்னிமலை பாரதிநகரை சேர்ந்த சுப்ரமணி (57), சக்தி வடக்கு பேட்டையை சேர்ந்த இன்பராஜ் (53) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    இதையடுத்து அவர்களிடம் இருந்த போதை பொருள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தீரன் சின்னமலை நினைவு நாளை முன்னிட்டு நாளை மறுநாள் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.
    • இந்த உள்ளூர் விடுமுறை வங்கிகளுக்கு பொருந்தாது.

    ஈரோடு:

    சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாளை முன்னிட்டு நாளை மறுநாள் (வியாழக்கிழமை) ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.

    இந்த உள்ளூர் விடுமுறை வங்கிகளுக்கு பொருந்தாது. மேலும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு, மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும்.

    சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாள் அரசு வேலை நாளாக உள்ளதால் இவ்விடு முறையை ஈடு செய்யும் பொருட்டு ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வரும் 12-ந் தேதி (சனிக்கிழமை) பணிநாளாக அறிவித்து ஆணையிடப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து திடீரென மழை பெய்ய தொடங்கியது.
    • இந்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வந்தனர்.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களாக ஈரோடு புறநகர் பகுதிகளான சத்தியமங்கலம், தாளவாடி, அந்தியூர் பகுதியில் பலத்த மழை பெய்து வந்தது. பலத்த சூறாவளி காற்றால் தாளவாடி பகுதியில் மரங்கள் சாலையில் விழுந்து போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.

    ஆனால் அதே நேரம் ஈரோடு மாநகர் பகுதியில் மழை பெய்யாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் காலை முதல் மாலை வரை வழக்கம் போல் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது.

    ஆனால் மாலை நேரத்தில் வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து திடீரென மழை பெய்ய தொடங்கியது.

    ஈரோடு மாநகர் பகுதியில் மாலை 5 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை சுமார் ஒரு மணி நேரம் கொட்டி தீர்த்தது. இந்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.

    இதேப்போல் வரட்டுப்ப ள்ளம், பவானி, நம்பியூர் பகுதியிலும் பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் அதிக பட்சமாக வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் 21 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

    மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:

    வரட்டுபள்ளம்-21.60, பவானி-14, ஈரோடு-9.50, நம்பியூர்-2, குண்டேரி ப்பள்ளம்-2.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வ.உ.சி. பூங்கா மைதானத்தில் ஈத்கா தொழுகை மைதானத்தில் முஸ்லீம்கள் சிறப்பு கூட்டு தொழுகையில் ஈடுபட்டனர்.
    • ஈகை திருநாளை கொண்டாடும் வகையில் ஏழைகளுக்கு குர்பானி வழங்கப்பட்டது.

    ஈரோடு:

    பக்ரீத் பண்டிகையை யொட்டி ஈரோடு வஉசி பூங்கா மைதானத்தில் அமைந்துள்ள ஈத்கா தொழுகை மைதானத்தில் இன்று காலை ஏராளமான முஸ்லீம்கள் சிறப்பு கூட்டு தொழுகையில் ஈடுபட்டனர்.

    இதேபோல ஈரோடு டவுன் போலீஸ் ஸ்டேஷன் பள்ளிவாசல், ரெயில்வே காலனி பள்ளிவாசல், வளையல்கார வீதி பள்ளிவாசல், கருங்கல்பா ளையம் பள்ளிவாசல், ஓடைப்பள்ளம், கருங்கல்பா ளையம், எல்லப்பாளையம், கொக்கராயன்பேட்டை, கொல்லம்பாளையம், மாணிக்கம்பாளையம், வெண்டிபாளையம், நஞ்சப்பாநகர், பி.பெ.அக்ரஹாரம், பூம்புகார்தோ ட்டம்,

    வி.வி.சி.ஆர்., திண்டல், ஆர்.என்.புதூர் உள்ளிட்ட பல்வேறு பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றது. பெரியார் நகர் பகுதியில் பெண்கள் மட்டுமே பங்கேற்ற சிறப்பு தொழுகை நடந்தது.

    இதே போல கோபி, சத்தி, பவானி, பவானிசாகர், பெருந்துறை, நம்பியூர், புளியம்பட்டி உள்பட மாவட்டம் முழு வதும் 150-க்கும் மேற்பட்ட பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்ற தோடு, ஈகை திருநாளை கொண்டாடும் வகையில், ஏழைகளுக்கு குர்பானி வழங்கப்பட்டது.

    இதேபோல் அந்தியூர் பர்கூர் சாலையில் அமைந்து ள்ள மஜீதேனூர் பள்ளி வாசலில்இன்று காலை 7.30 மணி அளவில் அந்தியூர், புதுப்பாளையம், தவிட்டு ப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இஸ்லாமி யர்கள் சிறப்பு தொழுகைகள் செய்து ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

    இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஈரோடு மாவட்டம் முழுவதும் 24 மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளது.
    • இந்த கடைகளில் பணியாற்றிய பணியாளர்கள் மது கடைகளில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஈரோடு:

    தமிழக சட்டசபையில் நடைபெற்ற மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தின் போது, தமிழ்நாட்டில் 500 மது கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை தொடர்ந்து எந்தெந்த கடைகளை மூடலாம் என்பது குறித்து அந்தந்த மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டனர்.

    குறிப்பாக பள்ளி, கல்லூரிக்கு மிக அருகில் இருக்கும் மது கடைகள், பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் பகுதியில் உள்ள மது கடைகள், மத வழிபாட்டு தலங்கள் அருகே உள்ள கடைகள் போன்றவற்றை மூடுவதற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

    இதேபோல் வருமானம் குறைவாக உள்ள கடைகள், பணியாளர்கள் எண்ணி க்கை குறைவாக உள்ள கடைகள், அருகருகே இருக்கும் கடைகள்.

    இது மட்டும் இல்லாமல் மது கடைகளை மூட வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தரப்பில் இருந்து தொடர்ந்து புகார் கூறப்பட்ட கடைகள் ஆகிய வற்றையும் கணக்கெடுப்பின் பணியின் போது அதிகாரி கள் ஆய்வு மேற்கொண்டனர்.

    இதன்படி எந்தெந்த கடைகளை மூட வேண்டும் என்ற பட்டியலை ஈரோடு மாவட்ட டாஸ்மாக் அதிகாரி கள் சேகரித்தனர். அதன் பிறகு இது குறித்து ஆலோசி க்கப்பட்டது. இதில் இறுதியாக ஈரோடு மாவட்டம் முழுவதும் 24 மதுபான கடைகள் மூடப்ப டும் என தெரிவிக்கப்பட்டது.

    அதன்படி ஈரோடு மாநகரில் ஈரோடு ரெயில் நிலையம் எதிர்புறம் உள்ள டாஸ்மாக் கடை, அகில் மேடு வீதியில் உள்ள 2 டாஸ்மாக் கடைகள், சம்பத் நகரில் உள்ள ஒரு கடை, சூரம்பட்டி நால்ரோட்டில் உள்ள ஒரு கடை, சென்னி மலை ரோட்டில் உள்ள ஒரு கடை, கனிராவுத்தர் குளம் பகுதியில் உள்ள ஒரு கடை உள்பட மாநகர் பகுதியில் 8 கடைகளும், இதேப்போல் மாவட்டம் முழுவதும் உள்ள 16 கடைகள் என 24 மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளது.

    இந்த கடைகளில் பணியாற்றிய பணியாளர்கள் அருகருகே இருக்கும் மற்ற மது கடைகளில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அரசின் இந்த நட வடிக்கைக்கு பொதுமக்களும், சமூக ஆர்வலர்க ளும் வரவேற்பு தெரிவித்து ள்ளனர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இல்லாத பகுதிகளில் இ-சேவை மையங்கள் நிறுவி செயல்படுத்த தொடங்கப்பட்டு உள்ளது.
    • ஈரோடு மாவட்டத்தில் முதற்கட்டமாக 513 இ-சேவை மையங்கள் செயல்பட அனு மதி வழங்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    தமிழ்நாட்டில் அனைத்து பொதுமக்களும் இ-சேவை மையம் தொடங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

    படித்த இளைஞர்கள், தொழில் முனைவோர்களை ஊக்கு விக்கும் வகையில் இ-சேவைமையம் இல்லாத பகுதிகளில் இ-சேவை மையங்கள் நிறுவி செயல்படுத்த தொடங்கப்பட்டு உள்ளது.

    இ-சேவைமையங்களின் எண்ணிக்கையை அதிகரித்து இ-சேவை மையத்தில் மக்கள் காத்தி ருக்கும் நேரத்தை குறைத்து, மக்களுக்கு சிறந்த மற்றும் நேர்த்தியான சேவையை வழங்குவதே இன் நோக்கமாகும்

    இத்திட்டம் மூலம் ஈரோடு மாவட்டத்தில் முதற்கட்டமாக 513 இ-சேவை மையங்கள் செயல்பட அனு மதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தில் இதுவரை பயன்பெறாத தொழில்முனைவோர் https://tnesevai.tn.gov.in/ (அல்லது) (https://.tnega.tn.gov.in/ என்ற இணைய முகவரியில் விண்ணப்பித்து பயன் பெறலாம்.

    விண்ணப்பதாரர்கள் வரும் 30-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். கிராமப்புறங்களில் இ-சேவை மையம் செயல்படுத்து வதற்கான விண்ணப்ப கட்டணம் ரூ.3 ஆயிரம் மற்றும் நகர்புற த்திற்கான கட்டணம் ரூ.6 ஆயிரம் ஆன்லைன் முறை யில் செலுத்தப்பட வேண்டும்.

    விண்ணப்பதாரர்களுக்கு ரியபயனர் எண் மற்றும் கடவுச்சொல் (User ID & Password) விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள தொலை பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி வாயி லாக வழங்கப்படும்.

    மேலும் அருகே உள்ள இ-சேவைமையங்களின் தகவல்களை "Mugavari" ஆண்ட்ராய்டு மொபைல் செயலியைப் பயன்படுத்திக் காணலாம் அல்லது https://.tnega.tn.gov.inஇணைய தளத்தில் காணலாம் என கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவி த்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திம்பம் மலைப்பகுதியில் சிறப்பு இலக்கு படை முகாம் அமைக்கப்பட்டு உள்ளது.
    • டி.ஜி.பி. சைலேந்திரபாபு இன்று காலை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள குய்யனூர் வனப்பகுதியில் ஏற்கனவே அதிரடிப்படை முகாம் செயல்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் சத்தியமங்கலம் அருகே உள்ள திம்பம் மலைப்பகுதியில் 2-வதாக சிறப்பு இலக்கு படை (அதிரடிப்படை) முகாம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த அதிரடி ப்படை முகாமை டி.ஜி.பி. சைலேந்திரபாபு இன்று காலை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

    இதை தொடர்ந்து இன்று காலை திம்பம் அதிரடி ப்படை முகாம் அலுவல கத்தில் நடந்த நிகழ்ச்சியில் சிறப்பு இலக்கு படை காவல்துறை தலைவர் முருகன், இலக்கு படை போலீஸ் சூப்பிரண்டு ராஜன், இலக்கு படை சிறப்பு போலீஸ் சூப்பிரண்டு, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் இலக்கு படை போலீசார் பலர் கலந்து கொண்டனர்.

    திம்பம் சிறப்பு இலக்கு படையில் இலக்கு படை இன்ஸ்பெக்டர் ரங்கராஜ் தலைமையில் 30 பேர் கொண்ட போலீசார் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் திம்பம் மற்றும் சுற்று வட்டார பகுதிகள் மற்றும் வனப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இன்று காலை எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.
    • ஈரோடு மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் 7-வது இடத்தை பிடித்துள்ளது.

    ஈரோடு:

    தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் 6-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி முடிவடைந்தது. ஈரோடு மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 12,229 மாணவர்களும், 12,428 மாணவிகளும் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 24,657 பேர் எழுதினர்.

    இந்நிலையில் தேர்வு முடிந்து வினாத்தாள் திருத்தும் பணிகளும் நிறைவடைந்ததையொட்டி இன்று தமிழ்நாடு முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று காலை எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.

    ஈரோடு மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் 11,287 மாணவர்களும், 12, 022 மாணவிகளும் என மொத்தம் 23,309 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்ட ஒட்டு மொத்த தேர்ச்சி விகிதம் 94.53 சதவீதம் ஆகும். மாநில அளவில் ஈரோடு மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் 7-வது இடத்தை பிடித்துள்ளது.

    மாணவர்கள் 92.30 சதவீதம் பேரும், மாணவிகள் 96.73 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்று ள்ளனர். வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 180 அரசு பள்ளிகளை சேர்ந்த 6,163 மாணவர்களும், 6,588 மாணவிகளும் என மொத்தம் 12 ஆயிரத்து 751 பேர் எழுதினர்.

    இதில் 5,452 மாணவர்களும், 6,242 மாணவிகளும் என மொத்தம் 11 ஆயிரத்து 694 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி விகிதம் 91.71 ஆகும்.

    மாணவ, மாணவிகள் தேர்வு முடிவுகளை தங்கள் செல்போன்களிலும் தெரிந்து கொண்டனர். இன்னும் சில மாணவ, மாணவிகள் தங்கள் படித்த பள்ளியில் சென்று தேர்வு முடிவுகளை ஆர்வத்துடன் தெரிந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin