என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Birthday gatherings"
- எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை முன்னிட்டு 4 நாட்கள் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளது.
- சட்டமன்ற உறுப்பினர்கள் தாங்கள் சார்ந்த தொகுதிகளில் நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவார்கள்.
ஈரோடு:
அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அ.தி.மு.க. நிறுவன தலைவர் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்த நாளை முன்னிட்டு வரும் 19-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை 4 நாட்கள் பிறந்த நாள் பொது விழா பொதுக்கூட்டங்கள் கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும், கழக அமைப்பு செயல்பட்டு கொண்டிருக்கும் பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளது.
பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ள இடங்கள் அவற்றில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுவோர் விவரங்கள் அடங்கிய பட்டியல் இணைக்கப்ப ட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினர்கள் தாங்கள் சார்ந்த தொகுதிகளில் நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவார்கள்.
அதன்படி ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளிலும் பொதுக் கூட்டங்களில் பேசுபவர் விவரம் வருமாறு:
ஈரோடு மேற்கு தொகுதியில் 19-ந் தேதி நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான, கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ, ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.வி.ராமலிங்கம், நடிகர் காதல் சுகுமார், கோவை பலகுரல் தாமு ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.
பவானி தொகுதியில் 20-ந் தேதி நடைபெறும் பொது கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளருமான கே.சி.கருப்பணன் எம்.எல்.ஏ, திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகருமான சி.ஆர். சி.ரங்கநாதன், பி.ஏ. சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.
கோபிசெட்டிபாளையம் தொகுதியில் 20-ந் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ., நடிகர் வையாபுரி, குன்னூர் ஆர். விஜயலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.
அந்தியூர் தொகுதியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் செய்தி தொடர்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மகேஸ்வரி, கோவை அழகு, திருப்பூர் டி.ஏ.பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் 21-ந் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளருமான கே.வி.ராமலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ.வும், தேர்தல் பிரிவு துணைச் செயலா ளருமான இன்பத்துரை, குன்னூர் ஆர். விஜயலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.
மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 22-ந் தேதி நடைபெறும் பொது கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான திருப்பூர் சிவசாமி, ஈரோடு மாநகராட்சி முன்னாள் மேயரும், மகளிர் அணி மாவட்ட செயலாளருமான மல்லிகா பரமசிவம், சிட்கோ சீனு ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.
பெருந்துறை பகுதியில் 22-ந் தேதி நடைபெறும் பொதுக் கூட்டத்தில் ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கருப்பணன் எம். எல். ஏ, ஜெயலலிதா பேரவை இணைச்செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான ஜே.கே. என்கிற எஸ்.ஜெயக்குமார், புதூர் மணி, என். கோபாலன் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.
பவானிசாகர் சட்டமன்ற தொகுதியில் 22-ந் தேதி நடைபெறும் பொது கூட்டத்தில் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான பண்ணாரி, சிறுபான்மையினர் நலப்பிரிவு இணைச் செயலாளர் அப்துல் ஜப்பார், முன்னாள் எம்.எல்.ஏ. பூவை செழியன் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்