search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The rain poured down"

    • பொதுமக்கள் போராட்டம் - அதிகாரிகளுடன் வாக்குவாதம்
    • உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அருகே உள்ள தோளப்பள்ளி ஊராட்சி காமராஜபுரம் பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர்.

    தோளப்பள்ளி ஊராட்சி மன்ற பெண் தலைவர், போலியான சாதி சான்றிதழை கொடுத்து தேர்தலில் வெற்றி பெற்றதாக புகார் எழுந்தது.

    அதன்படி கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவின் பேரில், சிறப்பு விசாரணை குழு அமைத்து போலி ஜாதி சான்றிதழை கொடுத்து தேர்தல் வெற்றி பெற்ற ஊராட்சி மன்ற பெண் தலைவரின் கையெழுத்திடும் அதிகாரம் பறிக்கப்பட்டது. இதனையடுத்து ஊராட்சியில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்வது முற்றிலுமாக தடைப்பட்டது.

    காமராஜபுரம் பகுதியில் கழிவுநீர் செல்ல கட்டப்பட்ட கால்வாய் ஆங்காங்கே உடைந்து கிடக்கிறது. மழைக்காலங்களில் கழிவுநீரோடு மழை நீர் கலந்து குடியிருப்பு பகுதிகளில் புகுந்து விடுவதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு அந்த பகுதியில் பலத்த மழை பெய்தது. அப்போது கழிவுநீருடன் கலந்து மழை நீர் குடியிருப்பு பகுதிகளில் புகுந்தது. இதனால் பொதுமக்கள் நேற்று இரவு முழுவதும் தூக்கமின்றி தவித்தனர்.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலையில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த அணைக்கட்டு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வி மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது பொதுமக்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இது குறித்து உயர் அதிகாரிகளிடம் கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    • ஈரோடு மாவட்டத்தில் அதிகபட்சமாக சென்னிமலை பகுதியில் 93 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.
    • சத்தியமங்கலம் வனப்பகுதி தொடர்மழை காரணமாக பசுமையான சூழ்நிலை நிலவி வருகிறது.

    ஈரோடு:

    தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மழை தீவிரமடைந்து பரவலாக பெய்து வருகிறது. அதேபோல் ஈரோடு மாவட்டத்திலும் நேற்று முன்தினம் மாலை மழை பரவலாக பெய்ய தொடங்கியது.

    மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் நேற்று முன்தினம் மாலை பெய்ய தொடங்கிய மழை இரவு வரை நீடித்தது. பின்னர் மழையின் தாக்கம் குறைய தொடங்கியதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.

    இந்நிலையில் நேற்று மாவட்டம் முழுவதும் 2-வது நாளாக காலை 8 மணி முதல் பரவலாக மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. இடையிடையே கனமழையும் பெய்தது.

    இடைவிடாமல் பெய்த மழையால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப் பட்டனர். நேற்று காலை முதல் இரவு வரை தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முடங்கியது. மழை காரணமாக முக்கிய சாலை கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது.

    கடந்த 24 மணி நேரத்தில் ஈரோடு மாவட்டத்தில் அதிகபட்சமாக சென்னிமலை பகுதியில் 93 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

    இதேபோல் கொடுமுடி, மொடக்குறிச்சி, ஈரோடு, பெருந்துறை, நம்பியூர், கவுந்தப்பாடி, கொடிவேரி, பவானி, சத்தியமங்கலம், பவானிசாகர், அம்மா பேட்டை, வரட்டுபள்ளம், குண்டேரி பள்ளம் என மாவட்டம் முழுவதும் பரவலாக மழை கொட்டி தீர்த்தது.

    கனமழை காரணமாக இரவு நேரத்தில் கடும் குளிர் காற்று வீசியது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

    தொடர்ந்து இன்று 3-வது நாளாக ஈரோடு மாநகர் பகுதி, கொடுமுடி, சிவகிரி, மொடக்குறிச்சி கோபி. பெருந்துறை. அந்தியூர் பகுதிகளில் மழை பெய்து கொண்டே இருக்கிறது. இதனால் இன்று காலையும் மக்கள் கடும் அவதி அடைந்தனர். வெளியே எங்கும் செல்லா மல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.

    சத்தியமங்கலம் வனப்பகுதி தொடர்மழை காரணமாக பசுமையான சூழ்நிலை நிலவி வருகிறது. தாளவாடிய மலைப்பகுதியில் ஆங்காங்கே புதிய அருவிகள் தோன்றியுள்ளன. வனப்பகுதியில் சில இடங்களில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு :

    சென்னிமலை-93, கொடுமுடி-67, மொடக் குறிச்சி-63, ஈரோடு-56, பெருந்துறை-54, எலந்த குட்டைமேடு-52.60, நம்பியூர்-52, கவுந்தப்பாடி-49.20, கொடிவேரி-45, பவானி-44.4, அம்மாபேட்டை-39.40, சத்தியமங்கலம்-37, பவானிசாகர்-34.80, கோபி-32, வரட்டு பள்ளம்-31.60, குண்டேரி பள்ளம்-28.60. மாவட்டம் முழுவதும் 815.60 மி.மீ. மழை கொட்டி தீர்த்தது.

    ×