search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இடைத்தேர்தலில் 22 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும்- செங்கோட்டையன் பேட்டி
    X

    இடைத்தேர்தலில் 22 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும்- செங்கோட்டையன் பேட்டி

    இடைத்தேர்தலில் 22 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். #ministersengottaiyan #admk

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

    இந்தியாவிலேயே சட்டம்-ஒழுங்கை பேணி காக்கும் மாநிலமாக, தடையில்லா மின்சாரம் வழங்கும் மாநிலமாக, கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் தருகிற மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. தமிழகத்தில் பள்ளி கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை உருவாக்கி இருக்கிறோம். எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளை கொண்டு வருவதற்கான பணிகள் ஜனவரி மாதம் நிறைவேற்றப்படும்.

    வருகிற ஜூலை மாத இறுதிக்குள் பள்ளிகளில் 6 முதல் 8 வரை ஸ்மார்ட் வகுப்பறைகள் கொண்டு வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 9, 10, 11, 12ம் வகுப்புகள் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டு இணையதள வசதி ஏற்படுத்தப்படும். அதேபோல் அனைத்து மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு பள்ளிகளிலும் அரசு சார்பில் இலைப்ரரி என்ற முறையில் கம்ப்யூட்டர் மூலமாக அவர்கள் கற்றுக்கொள்வதற்கு நூலக வசதி கொண்டு வரப்படும்.

    இந்த ஆண்டு பிளஸ்-1, பிளஸ்-2 முடித்த 15 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும். அதேபோல் 8, 9, 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கணினி வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் புதிதாக கல்விக்காக தனி டி.வி. சேனலை கொண்டு வருவதற்கும், ரோபோ மூலமாக கல்வி கற்றுக் கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, தனியார் பள்ளிக்கூடங்களை மிஞ்சும் அளவுக்கு தரமான சீருடைகள் வழங்கப்படும். கடந்த 2 ஆண்டுகளில் பள்ளிகளில் பாடத்திட்டங்கள் மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு, இந்த ஆண்டு 1 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் பாடத்திட்டங்களை மாற்றும் பணி நிறைவு பெற்றுவிட்டது. இடைத்தேர்தலில் 22 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும்.

    இவ்வாறு செங்கோட்டையன் கூறினார். #ministersengottaiyan #admk 

    Next Story
    ×