search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர்"

    • அதிகப்படியான நிலத்தடி நீர் எடுக்கப்படுவதால் நிலத்தடி நீர் மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.
    • 12,202 விவசாய பாசனத்திற்கு தரப்படும் நீரின் மூலம் 27,212 எக்டர்நிலம் பாசன வசதி பெறுவதால் 2.50 லட்சம் மக்கள் பயனடைவர்.

    புதுச்சேரி:

    புதுடெல்லியில் 37-வது தேசிய நதிநீர் இணைப்பு நிறுவனத்தின் ஆண்டு பொதுக்கூட்டம் நடந்தது. அதில் புதுச்சேரி மாநிலம் சார்பில் பங்கேற்ற பொதுப் பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் பேசியதாவது:-

    கோதாவரி காவிரி நதி நீர் இணைப்பின் முதல் சாத்திய கூறின் அறிக்கையின் படி, 7,000 மில்லியன் கனமீட்டர் நீர் கிடைக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

    தற்போது மறுமதிப் பீட்டின் அடிப்படையில் கிருஷ்ணா நதியின் பேடி வரதா இணைப்பையும் சேர்த்து 4,713 மில்லியன் கனமீட்டர் நீர் கிடைக்கும் என கணக்கிடப்பட்டு, அதில் புதுச்சேரிக்கு குடிநீர் மற்றும் பொது பயன்பாட்டிற்கு 27 மில்லியன் கனமீட்டர், தொழில் துறைக்கு 35 மில்லியன் கனமீட்டர் என, 62 மில்லியன் கனமீட்டர், அதாவது 2.20 ஆயிரம் மில்லியன் கன அடி நீர் அளிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் விவசாயத் திற்கு நீர் பங்களிப்பு தரப்படவில்லை. புதுச்சேரி குடிநீர் பொதுப்பயன்பாடு, தொழிற்துறை மற்றும் விவசாயம் அனைத்திற்கும் நிலத்தடி நீரையே நம்பியுள்ளது. அதிகப்படியான நிலத்தடி நீர் எடுக்கப்படுவதால் நிலத்தடி நீர் மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

    எனவே புதுச்சேரி விவசாயிகளை பாதுகாக்க தேசிய நீர் வளர்ச்சி நிறுவனம் விவசாய பாசனத்திற்காக புதுச்சேரி பிரதேசத்திற்கு மேலும் 75 மில்லியன் கன மீட்டர் அதாவது 2.75 டி.எம்.சி., நீர் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சங்கராபரணி-தென்பெண்ணை ஆறுகளை இணைப்பதன் மூலம் புதுச்சேரியில் உள்ள 25 படுகையணை மற்றும் 56 ஏரிகளில் 47 மில்லியன் கன மீட்டர் நீரை தேக்கி வைக்க முடியும்.

    12,202 விவசாய பாசனத்திற்கு தரப்படும் நீரின் மூலம் 27,212 எக்டர்நிலம் பாசன வசதி பெறுவதால் 2.50 லட்சம் மக்கள் பயனடைவர்.

    எனவே புதுச்சேரி மாநிலத்தில் உள்ள சங்கராபரணி-தென்பெண்ணை ஆறுகளை இணைக்கும் திட்டத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    கோதாவரி-காவிரி நதி நீர் இணைப்பின் மூலம் புதுச்சேரி மாநிலம் அதற்கு உண்டான நீர் பங்கீட்டளவை மற்ற மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிப்பது போல் அளிக்க வேண்டும்.

    இந்த நீர் பங்களிப்பு காவிரி நீர் ஆணையத்தால் அளிக்கப்பட்டுள்ள நீரின் அளவான 7 ஆயிரம் மில்லியன் கனஅடியுடன் கூடுதலாக தரவேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மாவட்ட வளர்ச்சிப் பணிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • அமைச்சர் உதயநிதி பங்கேற்றார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து அமைச் சர்கள் உதயநிதி ஸ்டாலின், சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு நடத்தினர்.

    இந்த கூட்டத்தில், விருது நகர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், முதல்வரின் முகவரி திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது தீர்வு வழங்குதல், தீர்வு வழங்க எடுத்துக்கொள்ளும் சராசரி கால அளவு, பட்டா மாறுதலுக்கு பெறப்பட்ட விண்ணப்பங்கள், அதன் நிலவரங்கள், இசேவை மையங்கள் வட்டார அளவில் தற்போது வரை பெறப்பட்டுள்ள விண்ணப் பங்கள்,

    நிலுவை விவரங்கள், பாலின விகிதம், ஊரக, நகர்ப்புறப் பகுதி களில் குறைந்த எடையுடன் பிறந்த குழந்தைகள், அரசு மருத்துவ மனைகளில் நோய் வாய்ப்பட்டு பிறந்த குழந்தைகள் சேர்க்கை மற்றும் அதற்கான காரணங்கள், கருவுற்ற வளர் இளம் பெண்கள், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு மருத்துவ உதவி, தாய்மார்கள் இறப்பு,

    அங்கன்வாடி மற்றும் பள்ளிகளில் மேற்கொள்ளப் படும் பரிசோதனைகள், RBSK திட்டத்தின் கீழ் 7 முக்கிய அறுவை சிகிச்சை யின் செயல்திறன், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் நோய் கண்டறியப்படு வதின் செயல்பாடுகள், முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காந் பீட்டு திட்டம், இன்னுயிர் காப்போம் திட்டம், நம்மைக் காக்கும்-48,

    உழவர் சந்தைகளின் செயல்பாடு கள், ஆவின் கூட்டுறவுச் சங்கங்களின் செயல்திறன், சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை புதிய தொழில்முனைவோர் மற்றும் நடுத்தர மேம்பாட்டுத் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்க ளின் மூலம் செயல் படுத்தப் பட்டுள்ள பணிகள் மற்றும் மேற்கொள்ள உள்ள பணிகள், இலக்கு நிர்ணயம் செய்யப்பட்ட பணிகள், முடிவுற்ற பணிகள், நிலுவை யில் உள்ள பணிகள் குறித்தும் துறை வாரியாக ஆய்வு மேற் கொண்டு, நிலுவையில் உள்ள பணிகள் மற்றும் நடைபெற்று வரும் பணி களை தரமாக விரைந்து முடித்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களை அறிவுறுத்தி னர்.

    நிகழ்ச்சியில் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை அரசு செயலர் தாரேஸ் அகமது, தனுஷ் எம்.குமார் எம்.பி., ராமநாதபுரம் நவாஸ்கனி எம்.பி. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள்,

    எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், தங்கபாணடியன், ரகு ராமன், சிவகாசி மேயர் சங்கீதா இன்பம் , விருதுநகர் நகர் மன்றத்தலைவர் மாதவன், விருதுநகர் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் சுமதி ராஜசேகர், வாழ்ந்து காட்டுவோம், தாட்கோ அலுவலர்கள் உட்பட உள்ளாட்சி பிரதி நிதிகள் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்,

    சென்னை போன்ற பெருநகரங்களில் வாகனப்புகையே காற்று மாசடைவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலர்களின் பயன்பாட்டிற்காக ரூ.3.42 கோடி மதிப்பீட்டிலான 25 மின் வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    மேலும், உலக சுற்றுச்சூழல் தினம் நாளை கொண்டாடப்படுவதையொட்டி சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு சிறப்பான பங்களிப்பு ஆற்றியதற்காக மதுரை, விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்களுக்கு பசுமை விருதும் மற்றும் ஐந்து தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்களைப் பாராட்டும் வகையில் ரூபாய் ஒரு லட்சம் பரிசுத் தொகையுடன் பசுமை முதன்மையாளர் விருதுகளையும் வழங்கினார்.

    மக்கள் நலமாகவும், வளமாகவும் வாழ்ந்திட தூய்மையான சுற்றுச்சூழல் மிகவும் அவசியமாகும். மக்கள் சார்ந்திருக்கும் நீர், காற்று மற்றும் நிலம் ஆகியவற்றை சீர்படுத்துவதிலும், தீவிர வானிலை மாற்ற நிகழ்வுகள் மற்றும் காலநிலை மாற்றத்திற்குரிய தாக்கங்களை குறைப்பதிலும் சூழல் அமைப்புகள் முக்கியமான அம்சங்களாக விளங்குகிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இயற்கை வளங்களையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பினையும் மேம்படுத்திட தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    சென்னை போன்ற பெருநகரங்களில் வாகனப்புகையே காற்று மாசடைவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இக்காற்று மாசினை குறைக்கும் முயற்சியாகவும், புவி வெப்பமயமாதலை தடுக்க ஏதுவாகவும் மற்றும் கரியமில வாயு வெளியேற்றத்தினை குறைப்பதற்காகவும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலர்களின் பயன்பாட்டிற்காக ரூ.3.42 கோடி மதிப்பீட்டிலான 25 மின் வாகனங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    மாவட்டத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக சிறப்பாக செயலாற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக 2021-ஆம் ஆண்டுக்கான பசுமை விருதினை மதுரை கலெக்டர் டாக்டர் எஸ். அனீஷ் சேகர், விழுப்புரம் கலெக்டர் த. மோகன் மற்றும் திருவண்ணாமலை கலெக்டர் பா.முருகேஷ் ஆகியோருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்.

    மாசு தடுப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பாக செயலாற்றி விருதுக்கு தேர்வான 79 பல்வேறு அமைப்புகளில், ராணிப்பேட்டை டேனரி எஃப்ளுயன்ட் டிரீட்மென்ட் கம்பெனி லிமிடெட், பெருந்துறை-அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திருப்பூர்-சுலோச்சனா காட்டன் ஸ்பின்னிங் மில்ஸ் பிரைவேட் லிமிடெட், நீலகிரி மாவட்டம்-கிளீன் குன்னூர் மற்றும் போரூர்-அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றிற்கு 2021-ஆம் ஆண்டிற்கான பசுமை முதன்மையாளர் விருதுடன், பரிசுத்தொகையாக ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    எதிர்கட்சி எம்.எல்.ஏ. வாக இருந்தாலும் மதுரைக்கு திட்டங்களை பெற்று தருவேன் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அறிக்கை விடுத்துள்ளார்.
    மதுரை

    முன்னாள் அமைச்சரும், மதுரை மேற்கு சட்டமன்ற உறுப்பினருமான செல்லூர் ராஜூ எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
    மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதியில் 3-வது முறையாக மக்கள் என்னை தேர்வு செய்திருக்கிறார்கள். மக்களின் நம்பிக்கையை நிறைவேற்றுகின்ற வகை
    யில் மதுரை மேற்கு தொகுதி மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து முதன்மை தொகுதியாக உருவாகிடும் வகையில் கடந்த 10 ஆண்டுகளில் அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சராக இருந்து பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறேன். அதில் சிலவற்றை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன்.

    மதுரை காளவாசல் அருகே போக்குவரத்து நெரிசலை குறைக்க உயர் மட்ட மேம்பாலம் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டில் உள்ளது. மேலும் மேற்கு தொகுதிக்கு உட்பட்ட அனைத்து கண்மாய்களும் தூர்வாரப்பட்டு தண்ணீர் தேக்கப்பட்டுள்ளன. மாடக்குளம், துவரிமான், கீழமாத்தூர் ஆகிய கண்மாய்களில் தண்ணீர் நிரம்ப வசதியாக கொடி மங்கலத்தில்வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. ஊராட்சி பகுதிகளில் உள்ள கிராம சாலைகள் மற்றும் குடிநீர் வசதிகளையும் மேம்படுத்தி உள்ளேன்.

    மேலும் மேற்கு தொகுதிக்குட்பட்ட பகுதிகள் மட்டுமின்றி மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும் வசிக்கும் அனைத்து மக்களும் பயன் பெறும் வகையில் மதுரையில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணுகின்ற வகையில் முல்லை பெரியாறு அணையில் இருந்து குழாய் மூலம் குடிநீர் கொண்டு வரும் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. 1,295 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டம் நிறைவேற்றப்படும் போது மதுரை மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை என்ற பேச்சே இருக்காது. மேலும் சோலை அழகுபுரம் முதல் அம்பேத்கார் நகர் வரை 973 வீடுகளுக்கு வீட்டு வசதி வாரியம் மூலம் வீட்டுமனை பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு முடியும் தருவாயில் உள்ளது. 

    மாடக்குளம் முனியாண்டி புரத்தில் உள்ள மக்களுக்கு பாதாள சாக்கடை, தார்சாலை, பேவர் பிளாக், நியாயவிலைக்கடை, அங்கன்வாடி, சத்துணவு கூடம், ஆழ்குழாய்க் கிணறுகள் போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மாடக்குளம் அய்யனார் கோயில் அருகில் சமுதாயக் கூடம் கட்டப் பட்டுள்ளது. பரவை ஊர்மெச்சிக்குளத்தில் இருந்த அரசு தொடக்கப் பள்ளி தற்போது உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. சமயநல்லூரிலிருந்து துவரிமான் இணைக்கும் வகையில் வைகை ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டுள்ளது. தொகுதி மேம்பாடு மட்டுமின்றி மதுரை நகரின் வளர்ச்சிக்காக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் 1000 கோடிக்கு மேல் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.சில பணிகள் நடந்து வருகிறது.

    மேலும் மதுரை நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்க வைகையாற்றில் நவீன சாலை அமைக்கும் பணி முடியும் தருவாயில் உள்ளது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு 345 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. தெப்பக்குளத்தில் ஆண்டு முழுவதும் தண்ணீர் தேக்க வசதியாக ஏவி மேம்பாலம் அருகே தடுப்பணை கட்டப்பட்டு பனையூர் வாய்க்காலில் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு தெப்பகுளம் கடல் போல் காட்சியளிக்கிறது.

    வாக்களித்த மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்ய வேண்டும் என்பது தான் எனது விருப்பம் ஆகும். தற்போது எதிர்க் கட்சி எம்.எல்.ஏ.வாக இருந்தாலும் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய திட்டங்களை தொடர்ந்து பெற்று வருகிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    கட்டுமான தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.
    சிவகங்கை

    சிவகங்கை தனியார் மண்டபத்தில்  ெதாழிலாளர் நலத்துறையின் சார்பில்   728 கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.12.6 லட்சம் மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார்.

    கட்டுமானத் தொழி லாளர்கள் நலவாரியத்தின் தலைவர் பொன்.குமார் முன்னிலை வகித்தார். விழாவில் அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் கலந்து கொண்டு கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

    விழாவில் அவர் பேசுகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்ற அடிப்படையில், தமிழகத்தில் ஏழை எளிய அடித்தட்டு மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.குறிப்பாக தொழிலாளர் நலத்துறையின் சார்பில் தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்கள், சமூக பாதுகாப்பு மற்றும் நல வாரியம், அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவா ரியம் ஆகியவைகளில் பதிவு செய்யப்பட்ட தொழி லாளர்களின் நலன் கருதி, அவர்களை பயன்பெற செய்யும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார்.

    சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 37 ஆயிரத்து 139 கட்டுமானத் தொழிலாளர்கள் கட்டுமான நலவாரியத்தின் கீழ் பதிவு செய்துள்ளனர். கடந்த ஓராண்டில் மட்டும் 28 ஆயிரத்து 401 தொழிலாளர்கள் கட்டுமானம் மற்றும் அமைப்புச்சாரா நல வாரியத்தில் புதியதாக பதிவு செய்யப்பட்டுள்ளனர். மேலும், 13 ஆயிரத்து 402 பதிவு பெற்ற அமைப்புச்சாரா மற்றும் கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ. 5 கோடியே 86 லட்சத்து 59 ஆயிரத்து 600 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

    தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள், சமூக பாதுகாப்பு மற்றும் நல வாரியத்தினை சார்ந்த தொழிலாளர்கள் ஆகியோர் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்களை அறிந்து கொண்டு, அதன் மூலம் பயன்பெற்று, வாழ்வில் வளம் பெற வேண்டும் என்றார். 

    விழாவில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார், தொழிலாளர் இணை ஆணையர் சுப்பிரமணியன்,   ஆவின் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றிய தலைவர்  சேங்கைமாறன், ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் மஞ்சுளா பாலசந்தர், சிவகங்கை நகர்மன்றத் தலைவர் துரைஆனந்த், ஒன்றியக்குழு உறுப்பினர் ஆரோக்கிய சாந்தாராணி, நகர்மன்ற துணைத்தலைவர் கார்கண்ணன், காஞ்சி ரங்கால் ஊராட்சி மன்றத்த லைவர் மணிமுத்து, தொழி லாளர் நலத்துறை உதவி ஆணையர்கள் கோட்டீ ஸ்வரி, ராஜ்குமார், நகர்மன்ற உறுப்பினர் சரவணன், சிவகங்கை வட்டாட்சியர் தங்கமணி  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
    நடப்பாண்டில் மீனவர் குடும்பம் ஒன்றுக்கு தலா ரூ.5000- வீதம் மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்கப்படுகிறது.
    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

    கடல் மீன்வளத்தைப் பேணிக்காத்திட, தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் கிழக்குக் கடற்கரை பகுதியில் ஏப்ரல் 15ஆம் நாளன்று தொடங்கி ஜுன் 14ஆம் நாள் வரையிலும், மேற்கு கடற்கரை பகுதியில் ஜுன் 1ம் நாளன்று தொடங்கி ஜுலை 31ஆம் நாள் வரையிலும் 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

    மீன்பிடி தடைக்காலத்தின் போது மீன்பிடி விசைப்படகுகள்/ இழுவலைப் படகுகளில் மீன்பிடிப்பு செய்யும் பணியாளர்கள் மற்றும் முழுநேர மீன்பிடிப்பினை சார்ந்த மீனவ குடும்பங்கள் முற்றிலுமாக தொழிலின்றி வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் மீனவர்கள் தங்களது குடும்பத்தினை சிரமமின்றி நடத்திச் செல்ல குடும்பம் ஒன்றுக்கு தலா ரூ.5000- வீதம் மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்கப்படுகிறது.

    நடப்பாண்டிற்கான மீன்பிடி தடைக்காலத்தில் தமிழகத்தில் உள்ள 14 கடலோர மாவட்டங்களில் உள்ள 1.90 லட்சம் கடல் மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை ரூ.5000- வீதம் ரூபாய் 95 கோடி வழங்கப்படும்.

    இத்திட்டத்தினை துவக்கி வைக்கும் விதமாக, சென்னை நந்தனத்தில் உள்ள மீனவர் நலத்துறை ஆணையர் அலுவலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,
    மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் திருவள்ளுர், சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களை சேர்ந்த மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரண தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக அனுப்பிடும் வகையிலான ஆணைகளை வழங்கினார்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


    திருப்பத்தூரில் 250 கே.வி.ஏ. திறன் கொண்ட புதிய டிரான்ஸ்பார்மர் அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.
    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் 250 கே.வி.ஏ. திறன் கொண்ட புதிய டிரான்ஸ்பார்மர், நாகப்பா மருதப்பா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் தெற்கு ரத வீதியில் மின்வாரியத்தின் சார்பாக சுமார் 7 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. 

    இதை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் ரிப்பன் வெட்டி இயக்கி வைத்தார். அமைச்சரை பேரூராட்சி தலைவர் கோகிலாராணி நாராயணன், 12-வது வார்டு கவுன்சிலர் பிளாசா ராஜேஸ்வரி சேகர் ஆகியாேர் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர். 

    மின்வாரிய செயற்பொ றியாளர் செல்லத்துரை புதிய மின்மாற்றி பற்றி விளக்கினார்.இந்நிகழ்ச்சி யில் உதவி செயற்பொறியாளர் கணேசன், உதவி பொறியாளர் முத்தரசி மற்றும் திருப்பத்தூர் மின்சார வாரிய அனைத்து பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    ×