search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலெக்டர்"

    • அனைத்து நிறுவனங்களிலும் உள்ளூர் புகார்குழு ஏற்படுத்துமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
    • அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களில் உள்ள புகார் குழு ஏற்படுத்தப்பட்ட வேண்டும்.

    சென்னை:

    சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சென்னை மாவட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரியும் நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள், அரசு சாரா நிறுவனங்கள், வியாபார நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், மென் பொருள் தொழில்நுட்ப நிறுவனம் போன்ற நிறுவனங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் தீர்வு) சட்டம் 2013 ன் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

    பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களை தடுக்க அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களில் உள்ள புகார் குழு ஏற்படுத்தப்பட்ட வேண்டும். இக்குழுவில் குறைந்தபட்சம் 5 உறுப்பினர்களை கொண்டு அமைக்க வேண்டும். அவற்றில் அதிகபட்சமாக (3) பெண் உறுப்பினர்கள் இருக்கவேண்டும்.

    இச்சட்டத்தின் கீழ் புகார் அளிக்க ஏதுவாக நிறுவனம் புகார்பெட்டி ஒன்றை அமைக்க வேண்டும். புகார்கள் பெறப்பட்டவுடன் உள்ளக புகார்குழு உறுப்பினர்களை கொண்டு விசாரணை மேற்கொள்ளப்படும். 10 க்கும் குறைவாக உள்ள பெண் பணியாளர்கள் அல்லது வீட்டு வேலை செய்பவர்கள் பாதிக்கப்பட்டால் அந்நபர் தனது முதலாளிக்கு எதிராக நேரடியாக மாவட்டங்களில் செயல்படும் உள்ளூர்புகார் குழுவில் மனு அளிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    உள்ளூர் புகார்குழுவில் பதிவு செய்யப்படும் புகார் மற்றும் நடவடிக்கை குறித்து வருடத்திற்கு ஒரு முறை மாவட்ட சமூகநல அலுவலகத்தில் அறிக்கையாக ஒவ்வொரு நிறுவனமூம் வருடாந்திர அறிக்கையாக வழங்கப்பட வேண்டும்.

    உள்ளக புகார்குழு அமைக்கப்படாமல் இருந்தாலோ அல்லது புகார் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படாமல் இருந்தாலோ, சம்மந்தப்பட்ட நிறுவனங்களின் உரிமம் அல்லது பதிவு ரத்து செய்யப்படும்.

    இப்புகார்குழு ஏற்படுத்தாத நிறுவனங்களின் உரிமையாளருக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் செலுத்த நேரிடும். பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக புகார்களை www.shebox.nic.in என்ற இணையதள முகவரியில் புகார்களை பதிவு செய்யலாம். எனவே, சென்னை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து நிறுவனங்களிலும் உள்ளூர் புகார்குழு ஏற்படுத்துமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • காங்கயத்தில் இருந்து திருப்பூர் நோக்கி இறந்த ஆடுகளை பாடை கட்டி தூக்கி வந்தனர்.
    • விவசாயிகள் மற்றும் போலீசார் இடையே லேசான தள்ளு முள்ளு ஏற்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சுற்றுவட்டார பகுதிகளில் தெருநாய்களால் ஆடுகள் தொடர்ந்து வேட்டையாட்டப்பட்டு வருகிறது. ஆடுகளை கடித்து கொன்று வருவதால், கால்நடை விவசாயிகள் கடும் பொருளாதார இழப்பை சந்தித்து வருகின்றனர்.

    நேற்று முன்தினம் வீராணம்பாளையம் செந்தில்குமார் என்பவருக்கு தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த ஆடுகளை நாய்கள் கடித்ததில், ரூ. 1 லட்சம் மதிப்பிலான 7 ஆடுகள் உயிரிழந்தன.

    இந்நிலையில் காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்கள் நேற்று காத்திருப்பு போராட்டத்தை துவங்கினர். தொடர்ந்து காங்கயம் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடையவே, இன்று ஆடுகளை பாடை கட்டி திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திற்கு எடுத்து வந்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து இன்று காலை காங்கயத்தில் இருந்து திருப்பூர் நோக்கி இறந்த ஆடுகளை பாடை கட்டி தூக்கி வந்தனர்.

    திருப்பூர் மாநகர எல்லையான நல்லூர் சிக்னல் அருகே வரும் போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் விவசாயிகள் மற்றும் போலீசார் இடையே லேசான தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து விவசாயிகள், பாடை கட்டி தூக்கி வந்த இறந்த ஆடுகளை சாலையில் போட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதனிடையே இன்று திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் இப்பிரச்சனை எதிரொலித்தது.

    • எனது சொத்துக்கான ஆவணங்கள் அனைத்தையும் 2 மகன்கள் பெற்று கொண்டு விவசாயம் செய்து வருகின்றனர்.
    • வயதான காலத்தில் எங்களை கொடுமைப்படுத்துகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜத்திடம், ஒரத்தநாடு அருகே உள்ள பின்னையூர் கிராமத்தை சேர்ந்த முதியவர் ராசு (வயது 74) தனது மனைவியுடன் வந்து கண்ணீர் மல்க கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது :-

    எங்களுக்கு 4 மகன்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. எனது மகன்கள் என்னையும், என் மனைவியையும் சரிவர பராமரிக்காமல் அடித்து துன்புறுத்துகின்றனர். எனக்கு 7 ஏக்கர் நிலம், 3 மீன் குட்டைகள், 250 தென்னை மரம், 2 மாடி வீடு போன்ற சொத்துக்கள் உள்ளன.

    எனது சொத்துக்கான ஆவணங்கள் அனைத்தையும் 2 மகன்கள் பெற்று கொண்டு விவசாயம் செய்து வருகின்றனர். ஆனால் மருமகளில் ஒருவர் நாங்கள் கட்டிய வீட்டை எங்களை குடியிருக்க விடாமலும், உணவு கொடுக்காமலும் என்னையும், எனது மனைவியையும் தகாத வார்த்தைகளால் திட்டி மன உளைச்சலை ஏற்படுத்தி வருகிறார். இதனால் நாங்கள் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகிறோம். வயதான காலத்தில் எங்களை கொடுமைப்படுத்துகின்றனர்.

    எனவே எனது பெரிய மகனிடம் இருந்து சொத்து ஆவணங்களை மீட்டு தர வேண்டும். அவ்வாறு மீட்டு தந்தால் 4 மகன்களுக்கு பாகம் பிரிக்க உதவியாக இருக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அரசு ஆதி திராவிடர் மாணவிகள் விடுதியில் 50 பேர் தங்கி உள்ளோம்.
    • அரசு மாணவியர் விடுதியில் ஆய்வு செய்த அதிகாரி மீது மாணவிகள் புகார் கூறி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஆதிதிராவிடர் நல மாணவிகள் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். நேற்று இவர்கள் விருதுநகர் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர்.

    தொடர்ந்து கலெக்டர் ஜெயசீலனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    சிவகாசியில் உள்ள அரசு ஆதி திராவிடர் மாணவிகள் விடுதியில் 50 பேர் தங்கி உள்ளோம். ஒரு அறை 2 கழிவறை உள்ளது. இது போதுமானதாக இல்லை. இதனால் கடும் சிரமம் அடைந்து வருகின்றோம். இதனால் கல்லூரிக்கு உரிய நேரத்தில் செல்ல முடியவில்லை. பல நேரங்களில் தண்ணீர் மோட்டார் அடிக்கடி பழுதடைந்து விடுகிறது. இதையும் சரி செய்வதில்லை.

    இந்த நிலையில் விடுதியை காலி செய்யுமாறு கட்டிட உரிமையாளர் கூறி வருகிறார். இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.

    கடந்த 13-ந்தேதி மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் விடுதியில் ஆய்வு செய்தார். அப்போது அவர் எங்களையும், பெற்றோரையும் தரக்குறைவாக பேசி தகாத வார்த்தைகளால் திட்டினார். விசாரணை என்ற பேரில் குற்றவாளிகளை போல் நடத்தினார்.

    இதனால் எங்களுக்கு மிகுந்த மனஉளைச்சல் ஏற்பட்டுள்ளது. எனவே விடுதியில் அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். மேலும் எங்களிடம் தகாத முறையில் நடந்து கொண்ட மாவட்ட ஆதி திராவிடர் நல அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    அரசு மாணவியர் விடுதியில் ஆய்வு செய்த அதிகாரி மீது மாணவிகள் புகார் கூறி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக பெண் அதிகாரிகளை நியமித்து விசாரணை நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • நபிகள் நாயகம் பிறந்தநாளையொட்டி மதுக்கடைகள் அடைப்பு.
    • மதுக்கடைகள் நாள் முழுவதுமாக மூடப்பட வேண்டும் என்று கலெக்டர் உத்தரவு.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    நாளை (17-ந் தேதி) நபிகள் நாயகம் பிறந்தநாளையொட்டி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து இந்திய தயாரிப்பு மற்றும் அயல்நாட்டு டாஸ்மாக் மதுபான கடைகள் மதுபான சில்லறை விற்பனை கடைகள், ஆகியவை நாள் முழுவதுமாக மூடப்பட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 7 வகுப்பு படித்து வந்த மாணவிகள் குழுவாக சேர்ந்து குடிப்பதற்கு சுத்தமான குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று தலைமை ஆசிரியர் ராமகிருஷ்ண திரிபாதியிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
    • இந்த விவகாரம் அம்மாவட்ட கலெக்டரிடம் சென்ற நிலையில் ராமகிருஷ்ண திரிபாதி தலைமை ஆசிரியர் பதவியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    சத்தீஸ்கரில் அரசு இடைநிலைப் பள்ளியில் தாகத்துக்குத் குடிநீர் வசதி செய்து தரகோரிய மாணவிகளை சிறுநீரைக் குடிக்க தலைமையாசிரியர் வற்புறுத்தியுள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்தில் Phoolidumar என்ற பகுதியில் செயல்பட்டு வந்த அரசு இடைநிலைப் பள்ளியில் சுத்தமான குடிநீர் கிடைப்பதில் பிரச்சனை இருந்து வந்துள்ளது.

    7 வகுப்பு படித்து வந்த மாணவிகள் குழுவாக சேர்ந்து குடிப்பதற்கு சுத்தமான குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று தலைமை ஆசிரியர் ராமகிருஷ்ண திரிபாதியிடம் கோரிக்கை வைத்துள்ளனர். கோபமடைந்த ராமகிருஷ்ண திரிபாதி மாணவிகளை சாக்கடையைக் குடிக்க வற்புறுத்தியுள்ளார்.

    இதனால் திகைத்துப்போய் நின்ற மாணவிகளை மேலும் சிறுநீரைக் குடிக்கும்படி கூறியுள்ளார். இதனை அந்த மாணவிகள் தங்களது கிராமத் தலைவரிடம் கூறியுள்ளனர். இதனைத்தொடர்ந்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் அம்மாவட்ட கலெக்டரிடம் சென்ற நிலையில் ராமகிருஷ்ண திரிபாதி தலைமை ஆசிரியர் பதவியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

    • பீகார் தலைநகர் பாட்னாவில் போராட்டக்காரர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
    • உதவி கலெக்ட்ரை போலீஸ் அடிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பு.

    உள் இட ஒதுக்கீடு வழங்க மாநில அரசிற்கு அதிகாரம் உள்ளது என உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக பீகார் மாநிலத்தின் பலவேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது.

    பீகார் தலைநகர் பாட்னாவில் போராட்டக்காரர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். போலீசார் நடத்திய தடியடியில், அடையாளம் தெரியாமல் உதவி கலெக்டர் ஸ்ரீகாந்தை காவலர் ஒருவர் லத்தியால் தாக்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    பின்னர் சுற்றியிருந்த போலீசார் அவர் யார் தெரியுமா அவர்தான் உதவி கலெக்டர் என்று அடித்த போலீசாரிடம் விளக்கினர். பின்னர் அந்த இடத்தில் இருந்து உதவி கலெக்டர் சென்றார்.

    உதவி கலெக்ட்ரை போலீஸ் அடிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

    • உங்கள் கல்வி ஒன்று தான் முக்கியம் என்ற கலெக்டர் மாணவியிடம் எதிர்கால திட்டங்கள் குறித்தும் கேட்டார்.
    • மாவட்ட கலெக்டராக பணியாற்ற வாய்ப்பு தரப்படும் என மாவட்ட கலெக்டர் மணிகண்டன் அறிவிப்பு வெளியிட்டார்.

    காரைக்கால்:

    காரைக்கால் மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் மாவட்ட நிர்வாக செயல்பாடுகள் மற்றும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணுதல் மற்றும் வளர்ச்சி திட்ட செயல்பாடுகளை நேரடியாக அறிந்து கொள்ளும் வகையிலும், எதிர்காலத்தில் மாணவர்கள் சிறந்த குடிமக்களாக விளங்கவும், பள்ளி மாணவர்களுக்கு ஒருநாள் மாவட்ட கலெக்டராக பணியாற்ற வாய்ப்பு தரப்படும் என மாவட்ட கலெக்டர் மணிகண்டன் அறிவிப்பு வெளியிட்டார்.

    இதனை தொடர்ந்து, காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த 3 மாணவ, மாணவிகள் இதுவரை ஒருநாள் கலெக்டராகி, கலெக்டர் மணிகண்டனுடன் பணியாற்றியுள்ளனர். அந்த வரிசையில், காரைக்காலை அடுத்த நிரவி ஹுசைனியா அரசு உயர் நிலை பள்ளியில் 9-ம் வகுப்பு பயிலும் மாணவி தஸ்னீம் அர்ஷியா என்ற மாணவி, காரைக்கால் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளால், பேச்சாற்றல், அறிவு திறன் போன்ற செயல்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    அம்மாணவி மாவட்ட கலெக்டர் மணிகண்டனுடன் இணைந்து, பல்வேறு பணிகளில் ஈடுபட்டார். மேலும், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் மற்றும் பல்வேறு பணிகளில் மாணவி மாவட்ட கலெக்டர் மணிகண்டனுடன் இணைந்து செயல்பட்டார். மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் மணிகண்டன், அனைத்து அதிகாரிகளிடமும் இம்மாணவியை அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து, கலெக்டர் மணிகண்டன் கூறுகையில், ஒவ்வொரு மாணவர்களும் தங்கள் தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு உங்கள் கல்வி ஒன்று தான் முக்கியம் என்ற கலெக்டர் மாணவியிடம் எதிர்கால திட்டங்கள் குறித்தும் கேட்டார்.

    அதற்கு மாணவி தஸ்னீம் அர்ஷியா பேசுகையில், ஒரு கலெக்டருக்கான அதிகாரம், செயல்பாடு இவை அனைத்தையும், இன்றைய நாள் கண்கூடாக கண்டேன். எதிர்கலத்தில் நானும் ஐ.ஏ.எஸ். மாவட்ட கலெக்டராகி மக்களுக்கு சிறப்பான பணியை செய்வேன். என உறுதி அளித்தார். இந்நிகழ்வில் மேல்நிலைக் கல்வி துணை இயக்குனர் ராஜேஸ்வரி, முதன்மை கல்வி அதிகாரி விஜயமோகனா, மாணவியின் பெற்றோர் முகமது கியாசுதீன், நூருல் ஹையாத், பள்ளியின் முதல்வர் மற்றும் பெற்றோர்கள் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    • அம்மையகரம் அரசு உயர்நிலை பள்ளிக்கு கலெக்டர் பிரசாந்த் சென்றார்.
    • சின்னசேலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 2 பஞ்சாயத்து அலுவலகங்களுக்கு ஒரு அதிகாரி என நியமனம் செய்யப்பட்டு உள்ளது.

    சின்னசேலம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் இன்று உங்களைத் தேடி உங்கள் ஊரில் சிறப்பு திட்ட முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் சின்னசேலம் பேரூராட்சி, பூண்டி, அமையாகரம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள அரசு அலுவலகங்கள்,ரேஷன் கடை கிராம நிர்வாக அலுவலகங்கள், இ-சேவை மையம் உள்ளிட்ட அரசு அலுவலர்களில் பணிகள் எவ்வாறு நடைபெறுகிறது என்பது குறித்து கலெக்டர் பிரசாந்த் ஆய்வு மேற்கொண்டார்.

    அம்மையகரம் அரசு உயர்நிலை பள்ளிக்கு கலெக்டர் பிரசாந்த் சென்றார். அப்போது அப்பள்ளியில் 6-ம் வகுப்பில் ஆங்கில பாடம் நடைபெற்று கொண்டிருந்தது. அதனை மாணவர்களுடன் அமர்ந்து கலெக்டர் பிரசாந்த் கவனித்தார். மேலும் பள்ளியிலும் ஆய்வு மேற்கொண்டார்.

    இன்று மாலை 4.30 மணியிலிருந்து 6 மணி வரை சின்னசேலம் தாலுக்கா அலுவலகத்தில் சின்னசேலம் பேரூராட்சி மற்றும் பூண்டி ஊராட்சிக்கு உட்பட்ட பொதுமக்களிடம் மனுக்களை வாங்குகிறார்.

    சின்னசேலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 2 பஞ்சாயத்து அலுவலகங்களுக்கு ஒரு அதிகாரி என நியமனம் செய்யப்பட்டு உள்ளது. அந்த அதிகாரியிடம் மாலை கிராம மக்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பஞ்சாயத்து அலுவலகத்திற்கு சென்று தங்களுடைய குறைகளை மனுக்களாக கொடுக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார். 

    • மாணவர்களின் தேர்ச்சிவிகிதத்தை அதிகரிப்பது குறித்து கலந்துரையாடினார்.
    • மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்ரவிச்சந்திரன் கலந்து கொண்டனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் 10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அரசு பள்ளிகளில் மாணவ-மாணவிகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதைத்தொடர்ந்து 60 சதவீதத்துக்கு கீழ் குறைவாக தேர்ச்சி பெற்ற அரசு பள்ளியின் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது.

    மாணவர்களின் தேர்ச்சிவிகிதத்தை அதிகரிப்பது குறித்து கலந்துரையாடினார். மேலும் 60 சதவீதத்துக்கு குறைவாக தேர்ச்சி பெற்றுள்ள அரசு பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

    அப்போது கலெக்டர் பிரபுசங்கர் பேசியதாவது:-

    பள்ளிகளில் மாதந்தோறும் மாணவ, மாணவிகளுக்கு தேர்வுகள் நடத்தி நன்றாக படிக்கும் மாணவர்கள், மிதமான முறையில் படிக்கும் மாணவர்கள், சரியாக படிக்காத மாணவர்கள் என கண்டறிந்து அவர்களை அட்டவணைப்படுத்த வேண்டும். பின்னர் அவர்களுக்கு ஏற்றார் போல் கல்வி பயிற்சி அளித்து தேர்ச்சி விகிதத்தினை அதிகரிக்கலாம். 10 மற்றும் 12-ம் வகுப்பில் அரசு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ மாணவிகளை தனித்தேர்வுகள் மூலம் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று உயர்கல்வி சேர்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக 10,12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ள அரசு பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களை பாராட்டி சான்றிதழ், மற்றும் கேடயத்தை கலெக்டர் பிரபுசங்கர் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்ரவிச்சந்திரன் கலந்து கொண்டனர்.

    • 10 பேருக்கு மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • கள்ளச்சாராயம் விஷ சாராயமாக மாறியதாலேயே அவர்கள் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியான நிலையில், அதனை மாவட்ட கலெக்டர் மறுத்துள்ளார். 

    கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டு வந்ததாகவும், அதனை அந்த பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் சிலர் வாங்கி குடித்ததாகவும் கூறப்பட்டது. கள்ளச்சாராயம் குடித்தவர்களுக்கு வாந்தி, மயக்கம், தலைவலி மற்றும் வயிற்று எரிச்சல் ஏற்பட்டதாகவும், இதனையடுத்து அவர்கள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10 பேருக்கு மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே பலியான 5 பேரையும் அவர்களது குடும்பத்தினர் தங்களது வீடுகளுக்கு கொண்டு வந்துள்ளனர். ஒரே தெருவில் உள்ள தங்கள் வீடுகளில் 5 பேரின் சடலங்களையும் வைத்து இறுதி சடங்கு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை நடத்தினார்கள். மேலும் வருவாய்த்துறையினரும் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    இதற்கிடையே 5 பேரும் கள்ளச்சாராயத்தால் இறந்தனர் என்ற குற்றச்சாட்டை மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் மறுத்துள்ளார். அவர்கள் வயிற்றுப் போக்கு, வலிப்பு நோய்களால் இறந்ததாக விளக்கம் அளித்துள்ளார்.

    கள்ளச்சாராயம் குடித்ததால் 5 பேர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியான நிலையில், வேறுசில உடல் பாதிப்பால் அவர்கள் உயிரிழந்ததாக கலெக்டர் கூறியுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.


    • சிறுபாலம் கட்டும் பணி நடைபெற்று வருவதை பார்வையிடுவதற்காக கலெக்டர் அருண் தம்புராஜ் வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
    • கலெக்டர் கார் டிரைவர் சாதுர்த்தியமாக மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் ஓரமாக நிறுத்தினார்.

    கடலூர்:

    நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதிகளில் நடைபெறும் திட்டப்பணிகள் மற்றும் நகராட்சி அலுவலகத்தை இன்று காலை கலெக்டர் அருண் தம்புராஜ் நேரில் வந்து திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது முள்ளிகிராம் பட்டு சாலையில் புதிதாக சிறுபாலம் கட்டும் பணி நடைபெற்று வருவதை பார்வையிடுவதற்காக கலெக்டர் அருண் தம்புராஜ் வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவ்வழியாக கலெக்டர் காரின் எதிர்புறத்தில் அதிவேகமாக 2 வாலிபர்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தபோது, திடீரென்று கலெக்டர் காரில் மோதுவது போல் வந்தனர். அப்போது கலெக்டர் கார் டிரைவர் சாதுர்த்தியமாக மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் ஓரமாக நிறுத்தினார். அப்போது காரில் இருந்த போலீஸ் மற்றும் அதிகாரி உடனடியாக கீழே இறங்கி அந்த 2 வாலிபர்களை பிடித்தனர்.

    அப்போது அவர்கள் அதிவேகமாக வந்ததற்கு அதிகாரியிடம் மன்னிப்பு கேட்டனர். இருந்தபோதிலும் போலீஸ் மற்றும் அதிகாரிகள் 2 பேரையும் கடும் எச்சரிக்கை செய்து பாதுகாப்பாக செல்ல வேண்டும் என அறிவுறுத்தினார்கள். இதனை தொடர்ந்து மீண்டும் ஆய்வு பணிகளில் கலெக்டர் அருண் தம்புராஜ் ஈடுபட்டார். இதன் காரணமாக சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

    ×