என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Purchase"

    • கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்.
    • இறவை பாசனதிட்ட மின்மோட்டார்களை பழுதுபார்த்து சீரமைக்க வேண்டும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா அலுவலகத்தில் வட்டார அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கோட்டாட்சியர் ஜெயராஜ பெளலின் தலைமையில் நடந்தது.

    கூட்டத்தில் சமூக நலத்துறை தனிப்பிரிவு தாசில்தார் ரமேஷ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பக்கிரிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மின்சாரம், தோட்டக்கலை உள்பட பல துறை அதிகாரிகள் தங்களது துறைகளில் உள்ள திட்டம் குறித்து விளக்கினர்.

    கூட்டத்தில் வேதாரண்யம் விவசாயிகள் கலந்துகொண்டு தங்கள் பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் உதவியாளர்கள் கிராமங்களில் தங்கி பணியாற்ற வேண்டும், வடிகால் வாய்க்காலில் மண்டிக்கிடக்கும் ஆகாயதாமரை செடிகளை அகற்றி தூர்வாரப்பட வேண்டும், கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும், தகட்டூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள இறவை பாசனதிட்ட மின்மோட்டார்களை பழுதுபார்த்து சீரமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினர்.

    இதற்கு பதிலளித்து கோட்டாட்சியர் ஜெயராஜ பெளலின் பேசியதாவது:-

    விவசாயிகளின் குறைகள் அனைத்தும் சம்மந்தப்பட்ட துறைகள் மூலம் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வேதாரண்யம் பகுதி முழுவதும் உள்ள ஆக்கிரமிப்பில் இருக்கும் அரசு புறம்போக்கு நிலங்கள், நீர்நிலைகளை மீட்டு, வடிகால் பகுதிகளில் உள்ள ஆகாயதாமரை செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    துணை தாசில்தார் மாதவன் அனைவரையும் வரவேற்றார்.

    முடிவில் தனித்துறை ரமேஷ் நன்றி கூறினார்.

    • பொங்கலூர் மற்றும் காங்கயம் ஆகிய 4 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டது.
    • கொப்பரை கொள்முதல் கால நீட்டிப்புக்கான கருத்துரு மேல் நடவடிக்கைக்காக இயக்குனர், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    திருப்பூர்

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, பெதப்பம்பட்டி, பொங்கலூர் மற்றும் காங்கயம் ஆகிய 4 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டது. அதன்படி இந்த விற்பனை கூடங்களிலும் இதுவரை 9,844 விவசாயிகளிடமிருந்து ரூ.129 கோடி மதிப்பிலான 12,145 மெட்ரிக் டன் அரைவை தேங்காய் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் தேங்காய் கொப்பரைக்கு உரிய தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. கொப்பரை கொள்முதல் கால நீட்டிப்புக்கான கருத்துரு மேல் நடவடிக்கைக்காக இயக்குனர், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் திருப்பூர் மாவட்ட விவசாயிகள் பயன்பாட்டிற்காக பொள்ளாச்சியில் தென்னை சார்ந்த பொருட்களின் செயல்பாடுகளை ஊக்கப்படுத்தும் பொருட்டு முதன்மை பதப்படுத்தும் மையம் அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.

    • ரூ.28 லட்சத்து 94 ஆயிரம் மதிப்பீட்டில் நெல் கொள்முதல் நிலையம் கட்டுமான பணி.
    • ரூ.4 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பீட்டில் சத்திரகுளம் தூர்வாரப்பட்டு படித்துறைகள் அமைக்கும் பணி.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் உத்தமசோழபுரம், போலகம், புத்தகரம் ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மற்றும் 15-ஆவது நிதி குழு மானியத்தில் ரூ.11 லட்சத்து 46 ஆயிரம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டிட கட்டுமான பணிகளையும், கீழப்பூதனூர், பில்லாளி ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.28 லட்சத்து 94 ஆயிரம் மதிப்பீட்டில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் கட்டிட கட்டுமான பணிகளையும், நரிமணம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டிட கட்டுமான பணிகளையும், அம்பல் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பீட்டில் சத்திரகுளம் தூர்வாரப்பட்டு படித்துறைகள் அமைக்கும் பணிகளையும் மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி திட்டம்) பிருத்திவிராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் பசுபதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி இயக்குனர் கலைச்செல்வி, திருமருகல் ஊராட்சி ஒன்றிய ஆணையர் பாலமுருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) பாத்திமா ஆரோக்கியமேரி, ஒன்றிய பொறியாளர் செந்தில் மற்றும் அரசு அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் உடன் இருந்தனர்.

    • கறிக்கோழி பண்ணைகள் அதிகம் உள்ளதால் மக்காச்சோள தேவை அதிகம் உள்ளது.
    • கொள்முதல் விலை குவிண்டாலுக்கு 2500 ரூபாய்க்கு கொள்முதல் செய்தால் மட்டுமே ஓரளவு லாபம் ஈட்ட முடியும்.

    வீரபாண்டி : 

    திருப்பூர் மாவட்டத்தில் விவசாயம் முக்கிய பங்கு வகிக்கிறது. அதில் காய்கறி பயிர்கள், மக்காச்சோளம், வாழை உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. கறிக்கோழி பண்ணைகள் அதிகம் உள்ளதால் மக்காச்சோள தேவை அதிகம் உள்ளது.

    உள்ளூர் விளைச்சல் குறைவாக உள்ளதால் அண்டை மாநிலங்களிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. உள்ளூரில் மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகள் நல்ல விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பூர் அருகே உள்ள நொச்சிப்பாளையத்தை சேர்ந்த விவசாயி சிவநாதன் கூறுகையில், காய்கறிகளுக்கு போதிய விலை கிடைக்காததால் மக்காச்சோளம் பயிரிட்டோம்.

    தற்பொழுது குவிண்டால் 1800 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. ஏக்கருக்கு 25 முதல் 30 குவிண்டால் கிடைக்கும். கொள்முதல் விலை குவிண்டாலுக்கு 2500 ரூபாய்க்கு கொள்முதல் செய்தால் மட்டுமே ஓரளவு லாபம் ஈட்ட முடியும். எனவே மத்திய மாநில அரசுகள் விவசாய பொருள்களுக்கு விலை நிர்ணயம் செய்து விவசாயிகளிடமிருந்து மத்திய மாநில அரசுகள் நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் வேண்டும் என்றார்.

    .

    • விதை கொள்கலன்களில் விவர அட்டை உள்ளதா என கவனித்து வாங்க வேண்டும்.
    • விதைச்சான்று துறையின்கீழ் அறிவிக்கப்பட்ட ரகங்களை மட்டும் பயன்படுதத வேண்டும்.

    நெல்லை:

    நெல்லை விதை ஆய்வு துணை இயக்குனர் ராஜ்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விவசாயிகள் விதை விற்பனை உரிமம் பெற்ற நிலையங்களில் விதைச்சான்றுத் துறையினரால் சான்று செய்ய பெற்ற விதைகளை வாங்க வேண்டும். விதை கொள்கலன்களில் விவர அட்டை உள்ளதா என கவனித்து வாங்க வேண்டும்.

    சாக்குப் பைகளில் தமிழ்நாடு அரசு விதைச்சான்றளிப்புத் துறையால் சான்றளிக்கப்பட்ட ஆதார நிலை(வெள்ளைஅட்டை) அல்லது சான்றுநிலை(நீலநிற அட்டை)-ல் ஏதேனும் ஒன்றுடன் உற்பத்தியாளர் அட்டையும் சேர்த்து 2 அட்டைகள் பொருத்தப்பட்ட விதைகளை வாங்க வேண்டும்.

    விவர அட்டைகளில் விதையின் ரகம், உற்பத்தியாளர் முகவரி விதைச்சான்றளிப்புத் துறையின் முத்திரை காணப்படும். காலக்கெடு தேதியைக் கவனித்து, காலக்கெடு முடிவடையாத, விதைப்பதற்கு போதிய அவகாசம் உள்ள விதைகளை வாங்க வேண்டும்.

    விதைச்சான்று துறையின்கீழ் அறிவிக்கப்பட்ட ரகங்களை மட்டும் பயன்படுதத வேண்டும். அவரவர் பகுதிக்கு ஏற்ற ரகமா, முக்கியமாக அந்தப் பருவத்திற்கு ஏற்ற ரகம்ரானா எனக் கவனித்து வாங்க வேண்டும்.

    விதை வாங்கும்போது விற்பனை ரசீது கண்டிப்பாக கேட்டு வாங்க வேண்டும். விற்பனை ரசீதில் பயிர், ரகம், குவியல் எண் மற்றும் காலக்கெடு ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளதா என கவனித்து வாங்க வேண்டும். விற்பனை ரசீதில், வாங்குபவர்கள் கண்டிப்பாக கையெழுத்திட்டு வாங்க வேண்டும்.

    விதையின் கொள்கலன் கிழிபடாமல் நன்றாக தைக்கப்பட்டு, சீல் இடப்பட்டுள்ளதா எனக் கவனித்து வாங்க வேண்டும். விதை வாங்கும் போது மேற்கூறிய கருத்துக்களை கவனித்தில் கொண்டால், தரமான விதை கொண்டு அதிக மகசூல் பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விவசாயிகள் கொட்டியுள்ள நெல்லை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும்.
    • ரங்கநாதபுரத்தில் உடனடியாக நெல் கொள்முதல் நிலையம் திறக்க கோரி கோஷங்கள் எழுப்பினர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா முன்னிலை வகித்தார். மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த விவசாயிகள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    அப்போது பாபநாசம் வட்டம் விழுதியூர் ஊராட்சி மன்ற தலைவர் கலையரசி தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.செந்தில்குமார், ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், ஒன்றிய நிர்வாகிகள் திருநாவுக்கரசு, ராஜேந்திரன் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :-

    விழுதியூர் பகுதியில் கடந்த காலங்களில் இரண்டு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வந்தது. தற்போது ஒரு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. ஊராட்சி எல்லைக்குட்பட்ட ரெங்கநாதபுரத்தில் கடந்த காலங்களில் செயல்பட்டு வந்த மற்றொரு நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லை கொட்டி வைத்து விவசாயிகள் ஒரு வார காலமாக காத்து கிடக்கும் அவலம் உள்ளது. உடனடியாக ரெங்கநாதபுரம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் கொட்டியுள்ள நெல்லை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.பின்னர் மனுவை அளித்துவிட்டு அவர்கள் அனைவரும் கலெக்டர் அலுவலகம் முன்பு நின்று தரையில் நெல்லை கொட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ரங்கநாதபுரத்தில் உடனடியாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க கோரி கோஷங்கள் எழுப்பினர். இந்த நூதன போராட்டத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • எதிர்பாராத பருவம் தவறிய தொடர் மழையால் சாகுபடி பயிர்கள் கடும் சேதம்.
    • 22 சதவீத ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்வதற்கு உத்தரவிட வேண்டும்.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை பகுதியில் பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை இன்று அமைச்சர் சக்கரபாணி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அவரிடம்,

    தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சாமு.தர்மராஜன் தலைமையில் விவசாயிகள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    காவிரிபாசன பகுதியில் சம்பா தாளடி நெல் சாகுபடி பணிகள் முழுமையாக முடிந்து நெல் அறுவடை தொடங்கிய நிலையில் எதிர்பாராத பருவம் தவறிய தொடர் பெரு மழையால் சாகுபடி பயிர்கள் கடும் சேதம் அடைந்துள்ளன.

    அறுவடை முடிந்தும் வரப்புகளிலும் நெல் தரிசு நிலத்திலும் ஊடு பயிராக வளர்ந்த உளுந்து, பாசிப்பயிர், நிலக்கடலை மற்றும் புஞ்சை தானிய பயிர்களும் சேதமடைந்துள்ளன.

    இதனால் பெரும் பாதிப்புகளுக்கு ஆளாகி உள்ள விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் முழு இழப்பீட்டு தொகை கிடைப்பதை உறுதி செய்து தமிழ்நாடு அரசின் நிவாரண நிதியும் சேர்த்து ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 35 ஆயிரம் வழங்கிட வேண்டும்.

    தொடர்ந்து பனிப்பொழிவு மற்றும் பெரும் மழையின் காரணமாக காற்றில் ஈரம் அதிகரித்துள்ள நிலையில் அரசு நேரடி நெல் கொள்ளுதல் நிலையங்களில் 22 சதவீதம் வரையிலான ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்வதற்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்நிகழ்வில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.செந்தில்குமார், ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், நகரச் செயலாளர் ராஜாராமன், ஒன்றிய நிர்வாகிகள் செல்வம், ராஜமாணிக்கம், ராமலிங்கம், திருநாவுக்கரசு, உத்திராபதி, ராம்குமார், ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • கடந்த சில ஆண்டுகளாகவே கோழிப் பண்ணை தொழில் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது.
    • குறைந்தபட்ச விலையாக ஒரு முட்டை பண்ணைக்கொள்முதல் விலை ரூ.5.50 ஆக நிர்ணயம் செய்ய வேண்டும்.

    நாமக்கல்:

    நாமக்கல் பகுதியில் தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கம், முட்டைக் கோழிப்பண்ணையாளர்கள் பெடரேசன், முட்டைக் கோழிப்பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி போன்ற பல்வேறு கோழிப் பண்ணையாளர்கள் சங்கங்கள் உள்ளன.

    இந்நிலையில் கடந்த மாதம் ஒரு முட்டை ரூ.5.65 ஆக விற்பனையானது, படிப்படியாக விலை சரிவடைந்து, தற்போது ஒரு முட்டை ரூ.4.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. என்.இ.சி.சி. ரூ. 4.60 விலை நிர்ணயம் செய்துள்ள போதும், முட்டை வியாபாரிகள் ரூ.4-க்கு குறைவாக முட்டையை கொள்முதல் செய்கின்றனர். கோழி முட்டை விலை கடும் சரிவால் கடந்த 2 வாரங்களாக பண்ணையாளர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு வருகிறது. நாமக்கல் மண்டலத்தில் கோழிப்பண்ணை தொழிலில் உள்ளவர்களுக்கு நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.5 கோடி நஷ்டம் ஏற்படுகிறது.

    இதையொட்டி, எந்த சங்கத்தையும் சேராத கோழிப்பண்ணையாளர்களின் கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. இதில் ஏராளமான கோழிப் பண்ணையாளர்கள் கலந்து கொண்டு தொழிலின் தற்போதைய நிலை குறித்து விவாதித்தனர்.

    கடந்த சில ஆண்டுகளாகவே கோழிப் பண்ணை தொழில் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது. முட்டை விற்பனை விலையில் ஏராளமான குளறுபடிகள் ஏற்பட்டு வருகிறது. என்.இ.சி.சி. அறிவிக்கும் விலையை விடக் குறைந்த விலையிலேயே முட்டைகளை வியாபாரிகள் வாங்குகின்றனர். முட்டை விலையில் மைனஸ் என்பதே இருக்க கூடாது. தீவன மூலப்பொருட்கள் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முட்டை விலையை உற்பத்தி செலவின் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். என்.இ.சி.சி. மண்டல வாரியாக விலை நிர்ணயம் செய்யாமல் இந்தியா முழுவதும் ஒரே விலை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    குறைந்தபட்ச விலையாக ஒரு முட்டை பண்ணைக்கொள்முதல் விலை ரூ.5.50 ஆக நிர்ணயம் செய்ய வேண்டும். முட்டை விலையை தினசரி நிர்ணயம் செய்ய வேண்டும். முட்டையில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை மற்றும் முட்டை பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலையை நாமக்கல் பகுதியில் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து கோழிப் பண்ணையாளர்களும் ஒன்று சேர்ந்து இந்த தொழிலை காப்பாற்ற வேண்டும். கடும் நெருக்கடி நிலையில் கோழிப் பண்ணை தொழிலை நடத்தவும் முடியாமல், விடவும் முடியாமல் உள்ளதாக பல பண்ணையாளர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    • அறுவடை நேரத்தில் பெய்த மழையால் பயிர்கள் பாதிக்கப்பட்டது.
    • கொள்முதல் நேரத்தில் பெய்யும் மழையால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

    நாகப்பட்டினம்:

    டெல்டா மாவட்டங்களில் இரு தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

    அதன்படி நாகை மாவட்டத்தில் இன்று பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. ஏற்கனவே அறுவடை நேரத்தில் பெய்த மழையால் பயிர்கள் பாதிக்கப்பட்டது.

    தற்போது கொள்முதல் நேரத்தில் பெய்யும் மழையால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

    மழையால் வலிவலம், திருக்குவளை, வாழக்கரை, ஈசனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நெல் மூட்டைகளை தார்ப்பாய் கொண்டு மூடும் பணியில் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    அது தவிர ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை தைத்து அவற்றை பாதுகாப்பாக அடுக்கும் பணியும் தற்போது நடைபெற்று வருகிறது.

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் 172 நேரடி அரசு கொள்முதல் நிலையங்களில் சுமார் 75-க்கும் மேற்பட்ட திறந்தவெளி நேரடி கொள்முதல் நிலையங்களாக செயல்படுவதாகவும் அதை நிரந்தர கட்டிடமாக கட்டி தர வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • புதிதாக கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மைய கட்டிடத்தில் கட்டுமான பணிகள் ஆய்வு.
    • கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளின் எடை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    கும்பகோணம் ஒன்றியம் திருவலச்சுழி ஊராட்சியில் தஞ்சாவூர் -கும்பகோணம் இடையே தேசிய நெடுஞ்சாலை திட்டத்தின் கீழ் தார் ஊராட்சியில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவது குறித்தும், பட்டீஸ்வரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள ஆய்வகத்தில் மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் பாதுகாப்பாக வை க்கப்பட்டுள்ளது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

    மேலகொற்கை ஊராட்சி யில் புதிதாக கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையக் கட்டிடத்தில் கட்டுமான பணிகள் குறித்தும், பொது விநியோகத் திட்ட அங்காடியில் உணவுப் பொருட்களின் தரம் மற்றும் இருப்பு குறித்தும், கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வுசெய்யப்பட்டது.

    கொற்கை ஊராட்சி புதுச்சேரியில் செயல்படும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளின் எடை குறித்தும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    மேற்கண்ட பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த ஆய்வின்போது கும்பகோணம் தாசில்தார் வெங்கடேஸ்வரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வீரமணி, ராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • அரசு வாணிபக் கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை ஆத்தூர் ஒன்றிய கழக செயலாளர் திறந்து வைத்தார்.
    • கூட்டுறவு சங்க பணியாளர்களும், விவசா–யிகளும் கலந்து கொண்டனர்.

    ஆத்தூர்:

    தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினின் 70-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் கீரிப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விவசாயகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு வாணிபக் கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை ஆத்தூர் ஒன்றிய கழக செயலாளர் டாக்டர் வே.செழியன் திறந்து வைத்தார்.

    கீரிப்பட்டி பேரூராட்சி தலைவர் தேன்மொழி காங்கமுத்து தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுன்சிலர்கள் ஸ்ரீதரன், ஆதி மூலம், குமார், சுரேஷ், கனகராஜ், கணேசன், தமிழ்செல்வன், முருகேசன், ஜெயராமன் மற்றும் கழக மூத்த நிர்வாகிகள் ராம கோவிந்தன், சிக்கந்தர், ராமு ,சிவ சக்திவேல்,தர்மர், விமல சேகர், முத்துசாமி, சதிஷ்குமார், செந்தில், பழனிவேல் முருகேசன், தண்டபாணி, மகேஸ்வரி, சேட்டு, கருணாநிதி உள்ளிட்டோரும், கூட்டுறவு சங்க பணியாளர்களும், விவசா–யிகளும் கலந்து கொண்டனர்.

    • தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் தனியார் மய நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.
    • கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை உடனுக்குடன் இயக்கம் செய்ய வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் தனியார் மய நடவடிக்கைகளை கைவிட வேண்டும், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை உடனுக்குடன் இயக்கம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யூ.சி, சி.ஐ.டி.யு, ஐ.என்.டி.யூ.சி. உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் தஞ்சாவூர் கரந்தை நெல் கொள்முதல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நுகர் பொருள் வாணிபக் கழக

    ஏ .ஐ. டி. யூ. சி. தொழி–லாளர் சங்கத்தின் மாநில பொருளாளர் கோவிந்த–ராஜன் தலைமை வகித்தார்.

    மாநில பொதுச் செயலாளர் சந்திரகுமார் கோரிக்கைகளை விளக்கி சிறப்புரையாற்றினார்.

    ஆர்ப்பாட்டத்தில் மாநிலச் செயலாளர் தில்லைவனம், மாவட்ட செயலாளர் துரை.மதிவாணன், சங்க நிர்வாகிகள் தியாகராஜன், செல்வம், ஞானசேகரன், மேஸ்திரி ஆறுமுகம், சந்தான கிருஷ்ணன் மற்றும் சுமைத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

    ×