search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "evaluation"

    • 'உலகின் சிறந்த 38 காபிகள்' பட்டியலில் 'கியூபன் எஸ்பிரெசோ' முதலிடம் பெற்றது
    • தென்னிந்தியாவில் பிரபலமாக உள்ள பில்டர் காபி ஒரு பாரம்பரிய காபி

    'டேஸ்ட் அட்லஸ்' என்ற உலகின் பிரபல உணவு மற்றும் பயண நிறுவனம் சமீபத்தில் உலகளாவிய 'காபி' தரம் மதிப்பீடு குறித்து ஆய்வு நடத்தியது.

    புகழ்பெற்ற 'உலகின் சிறந்த 38 காபிகள்' பட்டியலில் 'கியூபன் எஸ்பிரெசோ' முதலிடம் பெற்றது. இந்தியாவின் புகழ்பெற்ற தென் இந்திய 'பில்டர் காபி' 2-வது இடத்தை பிடித்தது.

    'கியூபன் எஸ்பிரெசோ' என்பது கியூபாவில் தோன்றிய ஒரு வகை எஸ்பிரெசோ ஆகும். இது வறுத்த காபி கொட்டை,பழுப்பு சர்க்கரை பயன்படுத்தி இயந்திரத்தில் தயாரிக்கப்பட்ட காபி. தென்னிந்தியாவில் பிரபலமாக உள்ள பில்டர் காபி ஒரு பாரம்பரிய காபி.

    தரவரிசையில் உலகின் முதல் 10 இடங்களை பிடித்த காபிகளின் பட்டியல் வருமாறு:-

    1. கியூபா எஸ்பிரெசோ (கியூபா)

    2. தென்னிந்திய காபி (இந்தியா)

    3. எஸ்பிரெசோ பிரெடோ (கிரீஸ்)

    4. பிரெடோ கப்புசினோ (கிரீஸ்)

    5. கப்புசினோ (இத்தாலி)

    6. துருக்கிய காபி (துருக்கி)

    7. ரிஸ்ட்ரெட்டோ (இத்தாலி)

    8.பிராப்பே (கிரீஸ்)

    9. ஈஸ்காபி (ஜெர்மனி)

    10. வியட்நாமிய ஐஸ் காபி (வியட்நாம்)

    • ரூ. 30 கோடி திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது.
    • சட்டமன்றத்தில் அவற்றிற்கான நிதி ஒதுக்கும் பணி துறை சார்பில் நடைபெற்று வருகிறது.

    நாகப்பட்டினம்:

    சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் பேசியதாவது:-

    நாகப்பட்டினம் நாகூர் நகரங்களில் மிகப் பெரிய அளவுக்கு போக்குவரத்து நெருக்கடி இருக்கிறது.

    நாகப்பட்டினம் விழுப்புரம் சாலை, கிழக்கு கடற்கரை சாலைப் பணிகள் நடந்து வருகின்றன.

    இப்போது நாகப்பட்டி னத்திற்கு ஒரு புறநகர் பேருந்து நிலையம் அவசியமாகிறது. ஏற்கெனவே முதலமைச்சரிடம் 10 கோரிக்கைகளில் ஒன்றாக இதை எழுதிக் கொடுத்திருக்கிறோம்.

    30 கோடி ரூபாய்க்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது.

    தஞ்சாவூரில் நடந்த ஆய்வுக் கூட்டத்திலும் நான் வலியுறுத்தி அமைச்சரிடம் கேட்டுக் கொண்டேன்.

    எனவே மிக மிக அவசியமான ஒரு கோரிக்கை.

    நாகப்பட்டினத்தில் வேளாங்கண்ணி, நாகூர், சிக்கல் சிங்காரவேலர் ஆலயம் போன்ற திருத்தலங்கள் உள்ளன. பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.

    அதை கருத்தில் கொண்டு இந்தக் கோரிக்கையை நிறைவேற்றித் தர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு எம்.எல்.ஏ பேசினார்.

    அதற்கு பதிலளித்த அமைச்சர் கே.என்.நேரு, தஞ்சாவூர் ஆய்வுக் கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்களும் உள்ளாட்சிப் பிரதிநிதி களும் முன்வைத்த கோரிக்கைகளின் அடிப்ப டையில் தான் சட்டமன்ற த்தில் அவற்றிற்கான நிதி ஒதுக்கும் பணி, துறையின் சார்பில் நடைபெற்று வருகின்றது.

    முதலமைச்சர் கேட்ட 10 கோரிக்கைகளில் ஒன்றாக இதை நீங்கள் எழுதிக் கொடுத்திருக்கிறீர்கள்.

    எனவே நிச்சயமாக இது முதல் - அமைச்சரின் அனுமதியைப் பெற்று ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

    இது நடக்கும். இவ்வாறு அமைச்சர் பதிலளித்தார்.

    • ரூ.28 லட்சத்து 94 ஆயிரம் மதிப்பீட்டில் நெல் கொள்முதல் நிலையம் கட்டுமான பணி.
    • ரூ.4 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பீட்டில் சத்திரகுளம் தூர்வாரப்பட்டு படித்துறைகள் அமைக்கும் பணி.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் உத்தமசோழபுரம், போலகம், புத்தகரம் ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மற்றும் 15-ஆவது நிதி குழு மானியத்தில் ரூ.11 லட்சத்து 46 ஆயிரம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டிட கட்டுமான பணிகளையும், கீழப்பூதனூர், பில்லாளி ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.28 லட்சத்து 94 ஆயிரம் மதிப்பீட்டில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் கட்டிட கட்டுமான பணிகளையும், நரிமணம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டிட கட்டுமான பணிகளையும், அம்பல் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பீட்டில் சத்திரகுளம் தூர்வாரப்பட்டு படித்துறைகள் அமைக்கும் பணிகளையும் மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி திட்டம்) பிருத்திவிராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் பசுபதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி இயக்குனர் கலைச்செல்வி, திருமருகல் ஊராட்சி ஒன்றிய ஆணையர் பாலமுருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) பாத்திமா ஆரோக்கியமேரி, ஒன்றிய பொறியாளர் செந்தில் மற்றும் அரசு அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் உடன் இருந்தனர்.

    இந்தியாவில் மதிப்பெண் அடிப்பையில் மாணவர்களை மதிப்பீடு செய்வது கல்வி முறையின் தரத்தை குறைக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். #Indiaeducationsystem
    புதுடெல்லி:

    இந்தியாவில் உள்ள பல கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே கல்வி கற்றுக் கொடுக்கப்படுகின்றன. இதனால் மாணவர்கள் மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மனப்பாடம் செய்து தேர்வு எழுதிகின்றனர். அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் படிக்கவில்லை.

    இதுகுறித்து பேசிய இந்திய விண்வெளி கழகத்தின் முன்னாள் தலைவர், ஜி.மாதவன் நாயர், மதிப்பெண் அடிப்படையிலான கல்வி முறை மிகவும் பழைய நடைமுறை. இது ஆரோக்கியமானது அல்ல. அறிவை வளர்த்து கொள்ள உதவுவது கிடையாது.


    மணிப்பால் குளோபல் கல்வி சர்வீஸ் தலைவர் கூறுகையில், இப்போது உள்ள கல்வி முறை மதிப்பெண்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறது. மாணவர்களை உற்றாகப்படுத்த படிப்பை தவிர மற்ற துறைகள் குறித்து கற்றுக்கொடுக்க வேண்டும். செயல்முறை கல்வி மிகவும் முக்கியம்.

    ஒவ்வொரு மாணவர்களுக்கு தனித்தனி திறமைகள் உள்ளன. அவர்கள் அனைவரையும் ஒரே கல்வி முறையில் திணிப்பது சரியன்று. அவர்களுக்கு ஏற்றவாறு கல்வி அளிக்க வேண்டும். இந்தியாவில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான தரமற்ற பொறியியல் கல்லூரிகள் உள்ளன. அதன் தரத்தை மேம்படுத்த வேண்டும்.

    அதிக எண்ணிக்கையில் கல்லூரிகள் இருப்பதை விட குறைந்த எண்ணிக்கையில் தரமான கல்லூரிகள் இருக்க வேண்டும் எனக்குறிப்பிட்டார். #Indiaeducationsystem

    ×