என் மலர்
நீங்கள் தேடியது "கல்வி முறை"
- இது பாரம்பரிய கற்பித்தல் மாதிரியையே தலைகீழாக மாற்றுகிறது.
- சீனாவில் மாணவரின் தனிப்பட்ட தேவைகள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப கற்றல் செயல்முறை இருக்கிறது.
20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து இந்தியாவை விட சீனா மிக வேகமாக முன்னேறியுள்ளது.
கல்வி, பொருளாதாரம் மற்றும் சமூக நிலைகளில் இரு நாடுகளுக்கும் இடையில் பெரிய இடைவெளி உள்ளது.
உலக அரங்கில் சீனாவின் எழுச்சிக்கு பெரும்பாலும் செயல்முறை கல்வி (Practical education) மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவதே காரணம் என்று பல கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கல்வியை நவீனமயமாக்குவது சீனாவை நவீனமயமாக்குவதற்கு மிக முக்கியமானது. குறிப்பாக சமீப காலங்களில் கல்வியில் மனப்பாடம் செய்யும் கற்றல் முறையை குறைத்துள்ளது.
அதை தாண்டி, நிஜ உலக சூழ்நிலைகளுக்குப் பொருந்தக்கூடிய திறன்களை வளர்ப்பதற்கு அதிகளவில் செயல்முறை கற்றலுக்கு சீன கல்விமுறை முக்கியத்துவம் கொடுக்க தொடங்கி உள்ளது.

விவசாயம், கைவினைப்பொருட்கள் செய்தல் முதல் தொழில்நுட்ப திறன்கள் வரை செயல்முறையாக கற்றுத் தரப்படுகிறது. கல்விச் சுற்றுலாக்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
மாணவர்களின் கற்றல், விமர்சன ரீதியாக சிந்திக்கும் திறன், புதுமைகளை உருவாக்குதல் மற்றும் பிரச்சினைகளைத் தீர்க்கும் திறனை வளர்ப்பதே இதன் குறிக்கோள்.
இது பாரம்பரிய கற்பித்தல் மாதிரியையே தலைகீழாக மாற்றுகிறது. ஆசிரியர்கள் வகுப்பில் பாடம் நடத்தி, மாணவர்கள் வீட்டில் வீட்டுப்பாடம் செய்யும் வழக்கமான முறைக்குப் பதிலாக, மாணவர்கள் வீட்டிலேயே பாடம் கற்க ஊக்குவிக்கப்படுகிறது. ஆன்லைன் விரிவுரைகள் மூலம் இது சாத்தியப்படுகிறது.

அதே நேரத்தில் வகுப்பறை நேரம், விவாதங்கள், சிக்கல்களை தீர்க்கும் திறன் மற்றும் கற்றுக்கொண்டதை நடைமுறைப்படுத்துவது குறித்த பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
அடுத்ததாக கேமிஃபிகேஷன். இது கற்பித்தல் செயல்பாட்டில் விளையாட்டு கூறுகளை இணைப்பதாகும். சீனாவில், ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வி இரண்டிலும் கேமிஃபிகேஷன் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.
மாணவர்களை ஊக்குவிக்கவும் அவர்களின் கற்றல் அனுபவத்தை மேம்படுத்தவும் புள்ளிகள், நிலைகள் மற்றும் வெகுமதிகள் போன்றவை இதன் மூலம் நிர்ணயிக்கப்படுகின்றன.
டிஜிட்டல் கருவிகள் மற்றும் தளங்களின் வளர்ச்சியுடன், கற்றல் செயல்பாட்டில் மாணவர்களை ஈடுபடுத்த ஆசிரியர்கள் புதிய வழிகளைக் கண்டுபிடித்து வருகின்றனர்.

தொழில்நுட்பம் வகுப்பறை அனுபவத்தை மேம்படுத்துவதோடு கற்றலை மேலும் அணுகக்கூடியதாகவும் ஆக்குகிறது.
சீனாவில் குறிப்பாக மாணவரின் தனிப்பட்ட தேவைகள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப கற்றல் செயல்முறை இருக்கிறது.
இந்த தனிப்பட்ட கற்றல் அனுபவங்களை வழங்க செயற்கை நுண்ணறிவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு மாணவரின் தேவைகளுக்கும் ஏற்ப கற்றல் உள்ளடக்கத்தையும், கற்றலின் வேகத்தையும் மாற்றியமைக்கும் வழிமுறைகள் பயன்படுத்துகின்றன.

மென்பொருளின் உதவியுடன், ஆசிரியர்கள் ஒவ்வொரு மாணவரின் தனிப்பட்ட தேவைகள் மற்றும் கற்றல் பாணிகளைப் பூர்த்தி செய்யும் வகையில் பாடத்திட்டத்தை வடிவமைக்கின்றனர்.
தொழில்நுட்பங்களால் வேகமாக மாறி வரும் உலகில் அதற்கு தகவமைத்து கொள்ளும் வகையில் அடுத்த தலைமுறையை சீனா முனைப்புடன் உருவாக்கி வருகிறது.
- எதிர்கால தொழில்நுட்பத்தில் இந்தியாவை உலகிலேயே சிறந்ததாக மாற்ற நாம் பாடுபட வேண்டும்.
- மும்மூர்த்திகள் இந்தியாவின் எதிர்காலத்தை மாற்றும்.
டெல்லியில் நடைபெற்ற ஸ்டார்ட்அப் தொழில் வளர்ச்சி சார்ந்த YUGM மாநாட்டில் பிரதமர் மோடி இன்று கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "இந்தியாவிற்கு AI வேலை செய்ய வைப்பதே எனது அரசாங்கத்தின் குறிக்கோள். எதிர்கால தொழில்நுட்பத்தில் இந்தியாவை உலகிலேயே சிறந்ததாக மாற்ற நாம் பாடுபட வேண்டும்.
21 ஆம் நூற்றாண்டின் தேவைகளைப் பூர்த்தி செய்ய நாட்டின் கல்வி முறையை நவீனமயமாக்க வேண்டிய அவசியம் உள்ளது. அதற்காகவே அரசு செயல்பட்டு வருகிறது: பிரதமர் மோடி 2013-14 ஆம் ஆண்டில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான மொத்த செலவு ரூ.60,000 கோடி மட்டுமே என்றும், அது இப்போது ரூ.1.25 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
யோசனையிலிருந்து முன்மாதிரிக்கும் தயாரிப்புக்கும் இடையிலான பயணம் மிகக் குறுகிய காலத்தில் முடிக்கப்படுவது மிகவும் முக்கியம். திறமை, மனோபாவம் மற்றும் தொழில்நுட்பம் என்ற மும்மூர்த்திகள் இந்தியாவின் எதிர்காலத்தை மாற்றும்.
இந்தியாவின் பல்கலைக்கழக வளாகங்கள், இளைஞர் சக்தி, புதுமையான கண்டுபிடிப்புகளை இயக்கும் துடிப்பான மையங்களாக உருவாகி வருகின்றன" என்று கூறினார்.
- இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்கள் தமிழகத்துடன் போட்டி போடும் அளவிற்கு முன்னேறியுள்ளது.
- இளைஞர்களுக்கு திறனுக்கு ஏற்ற கல்வி வழங்கப்படாததால், மாநில மற்றும் தேசிய வளர்ச்சியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்ற மாநாடு இன்று காலை தொடங்கியது.
மாநாட்டிற்கு கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். மாநாடு தொடங்கியவுடன் ஒடிசா ரெயில் விபத்தில் இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டி ஒருநிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழ்த்தாய் வாழ்த்து பாடல், தேசிய கீதம், பாரதியார் பாடல் இசைக்கப்பட்டு மாநாடு தொடங்கப்ப ட்டது. மாநாட்டில் கவர்னர் ஆர்.என். ரவி, துணை வேந்தர்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடி விட்டு பேசினார்.
கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-
இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்கள் தமிழகத்துடன் போட்டி போடும் அளவிற்கு முன்னேறியுள்ளது. தமிழகத்தில் உள்ள கல்வி முறையை இளைஞர்களின் திறன் மற்றும் காலத்திற்கு ஏற்ப மாற்ற வேண்டும்.
தமிழகத்தில் அடிப்படை கல்விக்கு மட்டுமின்றி உயர்கல்விக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
இளைஞர்களுக்கு திறனுக்கு ஏற்ற கல்வி வழங்கப்படாததால், மாநில மற்றும் தேசிய வளர்ச்சியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போது தேசிய கல்வி கொள்கையில், இளைஞர்களுக்கு, அவர்களின் திறமைக்கு ஏற்ப கல்வி வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களுக்கு அவர்கள் படித்த படிப்புக்கு ஏற்ற வேலை என்பது கிடைப்பது இல்லை. இன்றைய தலைமுறை இளைஞர்களிடம் பெரும்பாலும் ஆங்கில திறன் குறைபாடு உள்ளது. தொழில் நுட்பங்கள் வளர்ந்து வருவதால் அதற்கு ஏற்ப தமிழகத்தில் கல்வி முறைகளிலும் மாற்றம் கொண்டு வர வேண்டும்.
இதுதவிர பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. படித்த மாணவர்களுக்கு பொறியியல் பட்டதாரிகளை விட நல்ல வேலை கிடைக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த மாநாட்டில் தமிழ்மொழியில் கிடைக்காத பாடப்புத்தகங்கள், குறிப்பு புத்தகங்கள், ஆய்வு பொருட்கள் பல்கலைக்கழகங்களால் கண்டறியப்பட்டு, தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களில் தமிழில் கற்பித்தல், கற்றல் செயல்முறையை ஊக்குவிக்கும் வகையில் தமிழ் மொழியில் மொழி பெயர்ப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
மாநாட்டில் பல்கலைக்கழக மானியக்குழு தலைவர் எம்.ஜெகதீஷ் குமார் காணொலி மூலம் பங்கேற்று துணை வேந்தர்களுடன் கலந்துரையாடினார்.
பாரதிய பாஷா சமிதி தலைவர் சாமு கிருஷ்ணா சாஸ்திரி, லக்னோ பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் அலோக் குமார் ராய், இந்திராகாந்தி தேசிய திறந்த வெளி பல்கலைக்கழக துணை வேந்தர் மற்றும் தலைவர் நாகேஸ்வரராவ் மற்றும் அனுவாதினி மொழி பெயர்ப்புக் கருவி நிறுவனர் புத்தா சந்திரசேகர் ஆகியோரும் மாநாட்டில் உரையாற்றினர்.
இந்த மாநாட்டில் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பல்கலைக்க ழகத்தின் துணை வேந்தர்கள் மற்றும் இந்தியாவின் பல்வேறு பல்கலைக்கழகத்தை சேர்ந்த துணை வேந்தர்கள், முக்கிய பிரமுகர்களும் பங்கேற்றனர். இன்று தொடங்கிய துணைவேந்தர்கள் மாநாடு நாளையும் நடக்கிறது.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்றுமுன்தினமே கவர்னர் ஆர்.என்.ரவி ஊட்டிக்கு வந்துவிட்டார். ஊட்டி ராஜ்பவனில் வருகிற 9-ந் தேதி வரை தங்கியிருக்கும் கவர்னர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதோடு, முக்கிய கோவில்களுக்கும் செல்ல உள்ளதாக தெரிகிறது. இதனையொட்டி ஊட்டியில் 700-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நன்மைக்கு எதிர்மாறாக செல்போன் பயன்பாடு மாறிவிட்டது. கல்வி சுமையால் தற்கொலை அதிகரித்துள்ளது. மதிப்பெண்ணை நோக்கிய கல்வி முறையை மாற்றாவிட்டால் தற்கொலைகளை தடுக்க முடியாது. பள்ளிகளில் 50 சதவீத நேரம் மட்டுமே கல்வி போதிக்க வேண்டும்.
நாடு முழுவதும் கல்வித் திட்டத்தை மேம்படுத்துவதற்கு புதிய திட்டத்தை தயார் செய்து அரசுக்கு கொடுக்க உள்ளோம்.
கோவை, சென்னை, பெங்களூரு, மைசூரு, ஐதராபாத், டெல்லி, மும்பை, புனே, அகமதாபாத், சில்லாங், வாரணாசி என நாட்டின் பல்வேறு பகுதிகளில் 18 பல்கலைக்கழகங்களின் மாணவர்களை சந்திக்க உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார். #JaggiVasudev
இந்தியாவில் உள்ள பல கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே கல்வி கற்றுக் கொடுக்கப்படுகின்றன. இதனால் மாணவர்கள் மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மனப்பாடம் செய்து தேர்வு எழுதிகின்றனர். அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் படிக்கவில்லை.
இதுகுறித்து பேசிய இந்திய விண்வெளி கழகத்தின் முன்னாள் தலைவர், ஜி.மாதவன் நாயர், மதிப்பெண் அடிப்படையிலான கல்வி முறை மிகவும் பழைய நடைமுறை. இது ஆரோக்கியமானது அல்ல. அறிவை வளர்த்து கொள்ள உதவுவது கிடையாது.

மணிப்பால் குளோபல் கல்வி சர்வீஸ் தலைவர் கூறுகையில், இப்போது உள்ள கல்வி முறை மதிப்பெண்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறது. மாணவர்களை உற்றாகப்படுத்த படிப்பை தவிர மற்ற துறைகள் குறித்து கற்றுக்கொடுக்க வேண்டும். செயல்முறை கல்வி மிகவும் முக்கியம்.
ஒவ்வொரு மாணவர்களுக்கு தனித்தனி திறமைகள் உள்ளன. அவர்கள் அனைவரையும் ஒரே கல்வி முறையில் திணிப்பது சரியன்று. அவர்களுக்கு ஏற்றவாறு கல்வி அளிக்க வேண்டும். இந்தியாவில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான தரமற்ற பொறியியல் கல்லூரிகள் உள்ளன. அதன் தரத்தை மேம்படுத்த வேண்டும்.
அதிக எண்ணிக்கையில் கல்லூரிகள் இருப்பதை விட குறைந்த எண்ணிக்கையில் தரமான கல்லூரிகள் இருக்க வேண்டும் எனக்குறிப்பிட்டார். #Indiaeducationsystem






