search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Education System"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்கள் தமிழகத்துடன் போட்டி போடும் அளவிற்கு முன்னேறியுள்ளது.
    • இளைஞர்களுக்கு திறனுக்கு ஏற்ற கல்வி வழங்கப்படாததால், மாநில மற்றும் தேசிய வளர்ச்சியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்ற மாநாடு இன்று காலை தொடங்கியது.

    மாநாட்டிற்கு கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். மாநாடு தொடங்கியவுடன் ஒடிசா ரெயில் விபத்தில் இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டி ஒருநிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    தமிழ்த்தாய் வாழ்த்து பாடல், தேசிய கீதம், பாரதியார் பாடல் இசைக்கப்பட்டு மாநாடு தொடங்கப்ப ட்டது. மாநாட்டில் கவர்னர் ஆர்.என். ரவி, துணை வேந்தர்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடி விட்டு பேசினார்.

    கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-

    இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்கள் தமிழகத்துடன் போட்டி போடும் அளவிற்கு முன்னேறியுள்ளது. தமிழகத்தில் உள்ள கல்வி முறையை இளைஞர்களின் திறன் மற்றும் காலத்திற்கு ஏற்ப மாற்ற வேண்டும்.

    தமிழகத்தில் அடிப்படை கல்விக்கு மட்டுமின்றி உயர்கல்விக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

    இளைஞர்களுக்கு திறனுக்கு ஏற்ற கல்வி வழங்கப்படாததால், மாநில மற்றும் தேசிய வளர்ச்சியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    தற்போது தேசிய கல்வி கொள்கையில், இளைஞர்களுக்கு, அவர்களின் திறமைக்கு ஏற்ப கல்வி வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களுக்கு அவர்கள் படித்த படிப்புக்கு ஏற்ற வேலை என்பது கிடைப்பது இல்லை. இன்றைய தலைமுறை இளைஞர்களிடம் பெரும்பாலும் ஆங்கில திறன் குறைபாடு உள்ளது. தொழில் நுட்பங்கள் வளர்ந்து வருவதால் அதற்கு ஏற்ப தமிழகத்தில் கல்வி முறைகளிலும் மாற்றம் கொண்டு வர வேண்டும்.

    இதுதவிர பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. படித்த மாணவர்களுக்கு பொறியியல் பட்டதாரிகளை விட நல்ல வேலை கிடைக்கிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இந்த மாநாட்டில் தமிழ்மொழியில் கிடைக்காத பாடப்புத்தகங்கள், குறிப்பு புத்தகங்கள், ஆய்வு பொருட்கள் பல்கலைக்கழகங்களால் கண்டறியப்பட்டு, தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களில் தமிழில் கற்பித்தல், கற்றல் செயல்முறையை ஊக்குவிக்கும் வகையில் தமிழ் மொழியில் மொழி பெயர்ப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

    மாநாட்டில் பல்கலைக்கழக மானியக்குழு தலைவர் எம்.ஜெகதீஷ் குமார் காணொலி மூலம் பங்கேற்று துணை வேந்தர்களுடன் கலந்துரையாடினார்.

    பாரதிய பாஷா சமிதி தலைவர் சாமு கிருஷ்ணா சாஸ்திரி, லக்னோ பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் அலோக் குமார் ராய், இந்திராகாந்தி தேசிய திறந்த வெளி பல்கலைக்கழக துணை வேந்தர் மற்றும் தலைவர் நாகேஸ்வரராவ் மற்றும் அனுவாதினி மொழி பெயர்ப்புக் கருவி நிறுவனர் புத்தா சந்திரசேகர் ஆகியோரும் மாநாட்டில் உரையாற்றினர்.

    இந்த மாநாட்டில் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பல்கலைக்க ழகத்தின் துணை வேந்தர்கள் மற்றும் இந்தியாவின் பல்வேறு பல்கலைக்கழகத்தை சேர்ந்த துணை வேந்தர்கள், முக்கிய பிரமுகர்களும் பங்கேற்றனர். இன்று தொடங்கிய துணைவேந்தர்கள் மாநாடு நாளையும் நடக்கிறது.

    இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்றுமுன்தினமே கவர்னர் ஆர்.என்.ரவி ஊட்டிக்கு வந்துவிட்டார். ஊட்டி ராஜ்பவனில் வருகிற 9-ந் தேதி வரை தங்கியிருக்கும் கவர்னர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதோடு, முக்கிய கோவில்களுக்கும் செல்ல உள்ளதாக தெரிகிறது. இதனையொட்டி ஊட்டியில் 700-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மதிப்பெண்களை நோக்கிய கல்வி முறையை மாற்ற வேண்டும் என்று ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜகி வாசுதேவ் வலியுறுத்தினார். #JaggiVasudev
    சென்னை:

    இந்திய இளைஞர்களிடம் தெளிவான பார்வை மற்றும் உள்நிலையில் ஒரு சமநிலையை உருவாக்கும் நோக்கத்துடன் இளைஞரும் உண்மையும் என்ற முன்னெடுப்பை ஈஷா யோகா மையம் கையில் எடுத்துள்ளது. இதுகுறித்து விளக்குவதற்காக ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜகி வாசுதேவ இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-



    நன்மைக்கு எதிர்மாறாக செல்போன் பயன்பாடு மாறிவிட்டது. கல்வி சுமையால் தற்கொலை அதிகரித்துள்ளது. மதிப்பெண்ணை நோக்கிய கல்வி முறையை மாற்றாவிட்டால் தற்கொலைகளை தடுக்க முடியாது. பள்ளிகளில் 50 சதவீத நேரம் மட்டுமே கல்வி போதிக்க வேண்டும்.

    நாடு முழுவதும் கல்வித் திட்டத்தை மேம்படுத்துவதற்கு புதிய திட்டத்தை தயார் செய்து அரசுக்கு கொடுக்க உள்ளோம்.

    கோவை, சென்னை, பெங்களூரு, மைசூரு, ஐதராபாத், டெல்லி, மும்பை, புனே, அகமதாபாத், சில்லாங், வாரணாசி என நாட்டின் பல்வேறு பகுதிகளில் 18 பல்கலைக்கழகங்களின் மாணவர்களை சந்திக்க உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #JaggiVasudev
    ×