மதிப்பெண்ணை நோக்கிய கல்வி முறையை மாற்ற வேண்டும் - ஜகி வாசுதேவ் பேட்டி

மதிப்பெண்களை நோக்கிய கல்வி முறையை மாற்ற வேண்டும் என்று ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜகி வாசுதேவ் வலியுறுத்தினார். #JaggiVasudev
மதிப்பெண்ணை நோக்கிய கல்வி முறையை மாற்ற வேண்டும் - ஜகி வாசுதேவ் பேட்டி
Published on

இந்திய இளைஞர்களிடம் தெளிவான பார்வை மற்றும் உள்நிலையில் ஒரு சமநிலையை உருவாக்கும் நோக்கத்துடன் இளைஞரும் உண்மையும் என்ற முன்னெடுப்பை ஈஷா யோகா மையம் கையில் எடுத்துள்ளது. இதுகுறித்து விளக்குவதற்காக ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜகி வாசுதேவ இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாடு முழுவதும் கல்வித் திட்டத்தை மேம்படுத்துவதற்கு புதிய திட்டத்தை தயார் செய்து அரசுக்கு கொடுக்க உள்ளோம்.

கோவை, சென்னை, பெங்களூரு, மைசூரு, ஐதராபாத், டெல்லி, மும்பை, புனே, அகமதாபாத், சில்லாங், வாரணாசி என நாட்டின் பல்வேறு பகுதிகளில் 18 பல்கலைக்கழகங்களின் மாணவர்களை சந்திக்க உள்ளேன்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com