என் மலர்
நீங்கள் தேடியது "StartUp"
- கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே பதிலளித்தார்.
- மாநாட்டில் ஸ்டார்ட்-அப்களுக்கு சுமார் ரூ.400 கோடி வரை முதலீடுகள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
பெங்களூரு நகர போக்குவரத்தில் பயணம் செய்வது விண்வெளியில் பயணிப்பதை விட மிகவும் கடினம் என்று இந்திய விண்வெளி வீரர் குழு கேப்டன் சுபான்ஷு சுக்லா நகைச்சுவையான கருத்தை தெரிவித்துள்ளார்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் நுழைந்த முதல் இந்திய விண்வெளி வீரர் என்ற வரலாற்றை ஜூலை மாதம் சுபான்ஷு சுக்லா படைத்தார். இந்தியாவின் முதல் விண்வெளி வீரர் ராகேஷ் சர்மாவுக்குப் பிறகு 41 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளிக்குச் சென்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.
இந்நிலையில் நேற்று பெங்களூரு தொழில்நுட்ப உச்சி மாநாட்டில் பேசிய சுக்லா, "நகரத்தின் மறுபக்கத்தில் உள்ள மராத்தஹள்ளியில் (பெங்களூருவில் இருந்து 34 கி.மீ. தொலைவில்) இருந்து மாநாடு நடைபெறும் இங்கு வருகிறேன். வழக்கமாக இந்த தொலைவை கடக்க ஒரு மணி நேரம் ஆகும்.
ஆனால் உங்கள் முன் எனது உரையை வழங்க எடுக்கும் நேரத்தை விட மூன்று மடங்கு அதிக நேரத்தை நான் இங்கு பயணித்து செலவிட்டேன். எனது மனஉறுதியை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்" என்று கூற அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்தது.
அவருக்கு பின் நிகழ்வில் பேசிய கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே,"விண்வெளியில் இருந்து பெங்களூரை அடைவது எளிது, ஆனால் மாரத்தஹள்ளியிலிருந்து வருவது கடினம் என சுபான்ஷு சுக்லா கூறினார். எதிர்காலத்தில் இதுபோன்ற தாமதங்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்வோம்" என தெரிவித்தார்.
பெங்களூருவில் போக்குவரத்து பிரச்சனை மோசமடைந்து வரும் நிலையில், சுக்லாவின் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.
அரசாங்க தரவுகளின்படி, கடந்த ஆண்டை விட சராசரி பயண நேரம் 54 நிமிடங்களிலிருந்து 63 நிமிடங்களாக அதிகரித்துள்ளது.
இதற்கிடையே பெங்களூரு சர்வதேச கண்காட்சி மையத்தில் நடைபெற்ற 28வது பெங்களூரு தொழில்நுட்ப உச்சி மாநாடு இன்று நிறைவடைந்தது.
இந்த மாநாட்டில் சுமார் 56 நாடுகளைச் சேர்ந்த 20,000க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். மாநாட்டில் சுமார் 46,300 க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் பங்கேற்றதாக கூறப்படுகிறது.
இந்த உச்சிமாநாட்டில் ஏஐ, தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பம், விண்வெளி, ஸ்டார்ட் அப் உள்ளிட்ட பிரிவுகளில் 1,015 பேரின் தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன. மாநாட்டில் ஸ்டார்ட்-அப்களுக்கு சுமார் ரூ.400 கோடி வரை முதலீடுகள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
- ஸ்டார்ட்அப் நிறுவனத்திற்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் கிளவுட் சேவைத்தொகை திருப்பி தரப்படும்.
- உலகளாவிய கிளவுட் நிறுவனங்களிடமிருந்து 40% வரை தள்ளுபடி வழங்கப்படும்
தமிழ்நாடு ஸ்டார்ட் அப் டேட்டா வவுச்சர் திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளதாக அமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "2025–26 நிதியாண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு ஸ்டார்ட்அப் டேட்டா வவுச்சர் திட்டம், கிளவுட் உள்கட்டமைப்பு செலவுகளைக் குறைப்பதன் மூலம் ஸ்டார்ட்அப்களை விரைவாக அளவிடவும் எளிதாக புதுமைகளை உருவாக்கவும் உதவும் வகையில் தற்போது அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளது.
* ஸ்டார்ட்அப் நிறுவனத்திற்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் என 3 ஆண்டுக்கு ரூ.15 லட்சம் வரை கிளவுட் சேவைத்தொகை திருப்பி தரப்படும்.
* அமேசான் வெப் சர்வீசஸ், மைக்ரோசாப்ட் அஸூர் போன்ற உலகளாவிய கிளவுட் நிறுவனங்களிடமிருந்து (AWS, Google Cloud, Microsoft Azure, Oracle, RailTel, Sify, முதலியன) கிளவுட் சேவை செலவுகளில் 5% முதல் 40% வரை தள்ளுபடி வழங்கப்படும்
மொத்த செலவு: ரூ.10 கோடி.
தகுதி:
StartUpTN, iTNT Hub மற்றும் ELCOT–STPI FinBlue ஆகியவற்றால் பரிந்துரைக்கப்படும் தொடக்க நிறுவனங்கள்.
இந்தத் திட்டம் இந்தியாவில் தொடக்க நிறுவனங்களுக்கு மிகவும் உகந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாட்டின் நிலையை வலுப்படுத்துகிறது.
- எதிர்கால தொழில்நுட்பத்தில் இந்தியாவை உலகிலேயே சிறந்ததாக மாற்ற நாம் பாடுபட வேண்டும்.
- மும்மூர்த்திகள் இந்தியாவின் எதிர்காலத்தை மாற்றும்.
டெல்லியில் நடைபெற்ற ஸ்டார்ட்அப் தொழில் வளர்ச்சி சார்ந்த YUGM மாநாட்டில் பிரதமர் மோடி இன்று கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "இந்தியாவிற்கு AI வேலை செய்ய வைப்பதே எனது அரசாங்கத்தின் குறிக்கோள். எதிர்கால தொழில்நுட்பத்தில் இந்தியாவை உலகிலேயே சிறந்ததாக மாற்ற நாம் பாடுபட வேண்டும்.
21 ஆம் நூற்றாண்டின் தேவைகளைப் பூர்த்தி செய்ய நாட்டின் கல்வி முறையை நவீனமயமாக்க வேண்டிய அவசியம் உள்ளது. அதற்காகவே அரசு செயல்பட்டு வருகிறது: பிரதமர் மோடி 2013-14 ஆம் ஆண்டில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான மொத்த செலவு ரூ.60,000 கோடி மட்டுமே என்றும், அது இப்போது ரூ.1.25 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
யோசனையிலிருந்து முன்மாதிரிக்கும் தயாரிப்புக்கும் இடையிலான பயணம் மிகக் குறுகிய காலத்தில் முடிக்கப்படுவது மிகவும் முக்கியம். திறமை, மனோபாவம் மற்றும் தொழில்நுட்பம் என்ற மும்மூர்த்திகள் இந்தியாவின் எதிர்காலத்தை மாற்றும்.
இந்தியாவின் பல்கலைக்கழக வளாகங்கள், இளைஞர் சக்தி, புதுமையான கண்டுபிடிப்புகளை இயக்கும் துடிப்பான மையங்களாக உருவாகி வருகின்றன" என்று கூறினார்.
- தமிழ்நாட்டில் தற்போது 7600 StartUp நிறுவனங்கள் உள்ளன.
- சாதனை மாற்றத்தைச் சாத்தியமாக்க உழைத்த அமைச்சர் தா.மோ. அன்பரசனுக்கும், அதிகாரிகளுக்கும் எனது பாராட்டுகள்!
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
ஸ்டார்ட் அப் தரவரிசைப் பட்டியலில், கடந்த ஆட்சிக் காலத்தில் 2018-இல் கடைசித் தரநிலையில் இருந்த தமிழ்நாடு, நமது திராவிட மாடல் ஆட்சியில் 2022-ஆம் ஆண்டுக்கான தரவரிசையில் முதலிடத்தை அடைந்துள்ளது!
TANSEED புத்தொழில் ஆதார நிதி, பட்டியலினத்தவர்/பழங்குடியினர் தொழில் நிதியம், LaunchPad நிகழ்வுகள் என ஒட்டுமொத்தமாக நமது அரசு முன்னெடுத்த மறுசீரமைப்பு முயற்சிகளாலேயே தமிழ்நாடு இன்று சிகரத்தில் அமர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது 7600 StartUp நிறுவனங்கள் உள்ளன. அவற்றுள் 2022-ஆம் ஆண்டில் மட்டும் 2250 நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதே நாம் நிகழ்த்திய பாய்ச்சலுக்குச் சான்று.
இந்தச் சாதனை மாற்றத்தைச் சாத்தியமாக்க உழைத்த அமைச்சர் தா.மோ. அன்பரசனுக்கும், அதிகாரிகளுக்கும் எனது பாராட்டுகள்!
இந்த இடத்தைத் தக்கவைக்கவும் மேலும் உயரங்களைத் தொட உழைக்கவும் வேண்டுகிறேன்! என கூறியுள்ளார்.
#StartUp தரவரிசைப் பட்டியலில்,
— M.K.Stalin (@mkstalin) January 17, 2024
கடந்த ஆட்சிக் காலத்தில் 2018-இல் கடைசித் தரநிலையில் இருந்த தமிழ்நாடு,
நமது #DravidianModel ஆட்சியில் 2022-ஆம் ஆண்டுக்கான தரவரிசையில் முதலிடத்தை அடைந்துள்ளது!
TANSEED புத்தொழில் ஆதார நிதி, பட்டியலினத்தவர்/பழங்குடியினர் தொழில் நிதியம், LaunchPad… https://t.co/hNapJChxvR
- நாட்டில் இருக்கும் முட்டாள்தனமான விதிமுறைகள் இங்கு புதுமைகளைத் தடுக்கின்றன.
- அதிக வரிகள், சிதைந்து வரும் உள்கட்டமைப்பு, மோசமான பொது சேவைகள் மற்றும் மக்கள் விரோத நிகழ்வுகளை மேற்கோள் காட்டினார்
இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனர் ஒருவரின் ரெட்டிட் சமூக வலைதள பதிவு தற்போது வைரல் ஆகி வருகிறது. இந்தியாவில் தொழில்முனைவோருக்கு இருக்கும் சவால்கள் மற்றும் வளர்ச்சிக்கான தடைகளை மேற்கோள் காட்டி அதிக சம்பளம் வாங்கும் தொழில் வல்லுநர்கள் மற்றும் தொழில்முனைவோரை இந்தியாவை விட்டு வெளியேறுங்கள் என்று அவர் அறைகூவல் விடுத்துள்ளார்.
தனது அடையாளத்தை வெளிப்படுத்திக்கொள்ளாத இந்த நிறுவனர் u/anonymous_batm_an என்ற ப்ரொபைலில் இந்த பதிவை இட்டுள்ளார். அதில், தான் புகழ்பெற்ற இந்திய பொறியியல் கல்வி நிறுவனத்தில் பட்டம் பெற்றதாகவும், பின்னர் அமெரிக்காவில் முதுகலைப் பட்டம் பெற்றதாகவும் கூறியுள்ளார்.

2018 இல் இந்தியாவுக்குத் திரும்பி நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். சராசரியாக ரூ. 15 லட்சம் சம்பளத்தில் கிட்டத்தட்ட 30 பேர் பணிபுரியும் அவரது ஸ்டார்ட்அப் நல்ல வளர்ச்சியை கண்டுள்ளது.
ஆனால் நாட்டில் இருக்கும் முட்டாள்தனமான விதிமுறைகள் இங்கு புதுமைகளைத் தடுக்கின்றன. எதையும் செய்ய அதிகாரம், அரசியல்வாதிகள் அல்லது பிரபலங்களுடன் தொடர்பு தேவை என்று தனது தற்போதைய பதிவில் ஆதங்கப்பட்டுள்ளார்.
அதிக வரிகள், சிதைந்து வரும் உள்கட்டமைப்பு, மோசமான பொது சேவைகள் மற்றும் மக்கள் விரோத நிகழ்வுகள் குறித்த புகார்கள் தொடர்ந்து வருகின்றன.
இந்தியாவின் சமூக-பொருளாதார ஏற்றத்தாழ்வை விமர்சித்துள்ள அவர், மக்கள் சமூக நிலையை செல்வம் மற்றும் தோற்றத்துடன் இணைத்து அதன் அடிப்படையிலேயே ஒருவருக்கு மதிப்பளிக்கும் போக்கு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் பயங்கரமான பொருளாதாரச் சரிவு மற்றும் ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடையும் என்று கணித்துள்ள இந்த நிறுவனர் இந்தியாவுக்கு மாற்றாக தொழில்முனைவோர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு செல்ல பரிந்துரைத்துள்ளார்.
சுருக்கமாக சொன்னால் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக இந்தியாவை மாற்றும் எண்ணம் இல்லாததால், ஆட்சியாளர்கள் உங்கள் பாப்கார்னுக்கு வரி விதிக்கும் இந்த நாட்டை விட்டு வெளியேறுங்கள்! என்று புலம்பித் தீர்த்துள்ளார்.

கடந்த வாரம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராம் தலைமையில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பாப்கார்னுக்கான வரியை 5 முதல்18 சதவீதம் வரை வரி விதிக்க முடிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- டீப்சீக், ஆர்1 மற்றும் ஆர்1 ஜீரோ என்ற இரு ஏஐ மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
- நேற்று அமெரிக்க பங்குச்சந்தையில் வரலாறு காணாத வகையில் என்விடியாவின் பங்குகள் 17% வீழ்ச்சியை கண்டன.
வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு [ஏஐ] தொழில்நுட்பத்தின் அமெரிக்க நிறுவங்கள் மட்டுமே வல்லாதிக்கம் செலுத்திவந்த நிலையில் சீன நிறுவனம் புதிய ஏஐ மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது.
2023ஆம் ஆண்டில் சீன குவாண்ட் ஹெட்ஜ் ஃபண்ட் தலைவரான லியாங் வென்ஃபெங் என்பவரால் தொடங்கப்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனமான டீப்சீக் (Deepseek) அறிமுகப்படுத்தியுள்ள ஏஐ மாடல் அமெரிக்க நிறுவனங்களைக் கதிகலங்க வைத்துள்ளது.
டீப்சீக், ஆர்1 மற்றும் ஆர்1 ஜீரோ என்ற இரு ஏஐ மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ஆர்1 பயன்பாட்டுக்கு வந்துள்ளது. அமெரிக்காவின் ஓபன் ஏஐ - சாட்ஜிபிடி மற்றும் கூகுள் ஜெமினி ஆகியவை பிரீமியம் முறையில் நவீன வசதிகளை வழங்கிவரும் நிலையில், டீப்சீக் ஆர்1 அனைத்து நவீன வசதிகளையும் முற்றிலும் இலவசமாக வழங்குகிறது.

இதனால் சாட்ஜிபிடி ஐ விஞ்சி ஆப்பிளின் US ஸ்டோரிலும் உலகளவிலும் டீப்சீக் செயலி அதிகமான டவுன்லோட்களை கடந்துள்ளது. டீப்சீக் ஏஐ அறிமுகம் பங்குசந்தையிலும்பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்க தொழில்நுட்ப பங்குகள் நேற்று [திங்கள்கிழமை] பூகம்பத்தை சந்தித்துள்ளன.
என்விடியா கார்ப் இணை நிறுவனர் ஜென்சன் ஹுவாங் மற்றும் உலகின் முன்னணி பணக்காரர்கள் ஒரே நாளில் 108 பில்லியன் டாலர்கள் [ ரூ.9.34 லட்சம் கோடி] இழந்துள்ளனர் என்று ப்ளூம்பெர்க் அறிக்கை வெளியிட்டுள்ளது.
நேற்று அமெரிக்க பங்குச்சந்தையில் வரலாறு காணாத வகையில் என்விடியாவின் பங்குகள் 17% வீழ்ச்சியை கண்டன. இதனால் நிறுவனத்தின் சந்தை மதிப்பில் 589 பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டது.

டீப்சீக் வருகையால் செயற்கை நுண்ணறிவுடன் தொடர்புடைய நிறுவனங்களைக் கொண்ட பணக்காரர்களின் செல்வம் மிகவும் நஷ்டத்தை சந்தித்தது. என்விடியா கார்ப் இணை நிறுவனர் ஜென்சன் ஹுவாங் உடைய சொத்துமதிப்பில் நேற்று ஒரே நாளில் 20 சதவீதம் [20.1 பில்லியன் டாலர்கள்] குறைந்துள்ளது.

ஜென்சன் ஹுவாங்
Oracle Corp இணை நிறுவனர் லேரி எலிசன் உடைய சொத்தில் 12 சதவீதம் [22.6 பில்லியன் டாலர்கள்] குறைந்துள்ளது. ஏஐ தொழில்நுட்பத்தை அமெரிக்க நிறுவனங்கள் அதிக செலவு செய்து தயாரித்துள்ள நிலையில் டீப்சீக் நிறுவனம் 6 மில்லியன் டாலர்களில் அதை உருவாகிவிட்டது.
டீப்சீக் உடைய தாக்கம் தொடர்வதால் முதலீட்டாளர்கள் நடுக்கத்தில் உள்ளனர். டீப்சீக் வருகை அமெரிக்காவுக்கான எச்சரிக்கை மணி என அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.






