என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்டார்ட் அப் கொள்கை"

    • ஸ்டார்ட்அப் நிறுவனத்திற்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் கிளவுட் சேவைத்தொகை திருப்பி தரப்படும்.
    • உலகளாவிய கிளவுட் நிறுவனங்களிடமிருந்து 40% வரை தள்ளுபடி வழங்கப்படும்

    தமிழ்நாடு ஸ்டார்ட் அப் டேட்டா வவுச்சர் திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளதாக அமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "2025–26 நிதியாண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு ஸ்டார்ட்அப் டேட்டா வவுச்சர் திட்டம், கிளவுட் உள்கட்டமைப்பு செலவுகளைக் குறைப்பதன் மூலம் ஸ்டார்ட்அப்களை விரைவாக அளவிடவும் எளிதாக புதுமைகளை உருவாக்கவும் உதவும் வகையில் தற்போது அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளது.

    * ஸ்டார்ட்அப் நிறுவனத்திற்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் என 3 ஆண்டுக்கு ரூ.15 லட்சம் வரை கிளவுட் சேவைத்தொகை திருப்பி தரப்படும்.

    * அமேசான் வெப் சர்வீசஸ், மைக்ரோசாப்ட் அஸூர் போன்ற உலகளாவிய கிளவுட் நிறுவனங்களிடமிருந்து (AWS, Google Cloud, Microsoft Azure, Oracle, RailTel, Sify, முதலியன) கிளவுட் சேவை செலவுகளில் 5% முதல் 40% வரை தள்ளுபடி வழங்கப்படும்

    மொத்த செலவு: ரூ.10 கோடி.

    தகுதி:

    StartUpTN, iTNT Hub மற்றும் ELCOT–STPI FinBlue ஆகியவற்றால் பரிந்துரைக்கப்படும் தொடக்க நிறுவனங்கள்.

    இந்தத் திட்டம் இந்தியாவில் தொடக்க நிறுவனங்களுக்கு மிகவும் உகந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாட்டின் நிலையை வலுப்படுத்துகிறது.

    சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், வேலைவாய்ப்புக்கான ஸ்டார்ட் அப் கொள்கை மற்றும் திறன் மேம்பாடு தொடர்பான கருத்தரங்கை கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார்.
    சென்னை:

    சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்புக்கான தொடக்கநிலைக் கொள்கை மற்றும் திறன் மேம்பாடு தொடர்பான ஒரு நாள் கருத்தரங்கம் இன்று நடைபெற்றது. மாநில பல்கலைக்கழகங்கள் சார்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கை கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது பல்கலைக்கழகங்களின் பணி, மாணவர்களின் வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடு தொடர்பான பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

    தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது, உயர்கல்வியில் தமிழகம் முதன்மை இடம் பெற்று திகழ்வதாகவும், தொழில்துறையில் வளம்கொண்ட மாநிலமாக திகழ்வதாகவும் கூறினார்.

    ‘நமது இளைஞர்களுக்கு கல்வியுடன் தொழில் திறன் பயிற்சியும் அளிக்க வேண்டும் என்பது அவசியம். அந்த பயிற்சி நமது தேவைக்கும் சூழலுக்கும் ஏற்றதாக இருக்க வேண்டும். விரைவாக வழங்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும். இதனை திட்டமிட்டு வடிவமைக்கக் கூடிய பொறுப்பு நமது பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கும், கல்வியாளர்களுக்கும், தொழில்துறை நிறுவனங்களைச் சேர்ந்தவர்களுக்கும் தான் உள்ளது.

    தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் இளைஞர்களின் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில் அவர்களுக்கு ஏற்ற திறன் பயிற்சிகளை அளித்து வருகிறது’ என்றும் அமைச்சர் பேசினார்.

    கருத்தரங்கில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா, உயர்கல்வித்துறை செயலாளர் சுனில் பாலிவால் மற்றும் மாநில பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் பங்கேற்றனர். #AnnaUniversityConference
    ×