என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "stock market"

    • பங்குச்சந்தையில் Short Selling முறையில் பில் கேட்ஸ் பந்தயம் கட்டி இருந்தார்
    • இந்தப் பந்தயத்தால் பில் கேட்ஸ் போன்ற பெரும் கோடீஸ்வரர் கூட திவாலாவது உறுதி.

    சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை கடத்தி பணக்காரர்களுக்கு போகப் பொருளாக விநியோகித்து வந்தவர் அமெரிக்க தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன்.

    இதற்கென தனி தீவே அவர் வைத்திருந்தார். கடந்த 2019 இல் கைதாகி சில மாதங்களிலேயே நியூ யார்க் சிறையில் அவர் தற்கொலை செய்துகொண்டார்.

    எப்ஸ்டீன் தனது வாடிக்கையாளர்களுடனான உரையாடல்கள், புகைப்படங்கள், வீடியோக்களை ஆவணப்படுத்தி வைத்திருந்தார். இவை எப்ஸ்டீன் கோப்புகள் என்று அழைக்கப்படுகின்றன.

    அமெரிக்க நீதித்துறை உத்தரவுப்படி இந்த லட்சக்கணக்கான கோப்புகள் பகுதி பகுதியாக வெளியாகி வருகின்றன.

    அண்மையில் வெளியான கோப்புகளில் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் ரஷிய பெண்களுடன் பாலியல் உறவு வைத்து பால்வினை நோய்க்கு ஆளாகி, அதற்கு ரகசியமாக மருந்து எடுத்துக்கொண்டதாக கூறப்பட்டிருந்தது.

    இந்நிலையில் நியூயார்க் டைம்ஸ் செய்தியின்படி, சமீபத்தில் தனது தொண்டு நிறுவனமான கேட்ஸ் பவுண்டேசன் ஊழியர்கள் மத்தியில் பேசிய பில் கேட்ஸ், தான் ரஷிய பெண்கள் இருவருடன் தொடர்பு வைத்திருந்ததாக ஒப்புக்கொண்டார்.

    மேலும் எப்ஸ்டீனுடன் நட்பு கொண்டது தான் செய்த மிகப்பெரிய தவறு என்றும் இதனால் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும்   தகவல் வெளியாகி உள்ளது. 

    இந்நிலையில் இந்த செய்தியை பகிர்ந்த ஒரு எக்ஸ் பயனர் "டெஸ்லா பங்குகளை வீழ்த்த நினைப்பவர்கள் நல்ல மனது உள்ளவர்கள் கிடையாது என்று நான் அடிக்கடி சொல்லியிருக்கிறேன்" என்று பதிவிட்டிருந்தார்.

    இதற்கு பதிலளித்த டெஸ்லா நிறுவன தலைவர் மஸ்க் "கர்மா உண்மையானது" என்று பதிவிட்டுள்ளார்.

    எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனப் பங்குகள் வீழ்ச்சியடையும் என சுமார் 500 மில்லியன் டாலர் (சுமார் ரூ.4,150 கோடி) தொகையை Short Selling முறையில் பில் கேட்ஸ் முன்பொருமுறை பந்தயம் கட்டியிருந்தார்.

    இதுவே மஸ்க், தற்போது 'கர்மா உண்மையானது' என பதிலளிக்க காரணமாகும்.  கடந்த எட்டு ஆண்டுகளாக பில் கேட்ஸ் இந்த ஷார்ட் பொசிஷனை தொடர்ந்து வைத்திருப்பதாக மஸ்க் முன்பு கூறியிருந்தார்.

    ஒருவேளை டெஸ்லா உலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாக மாறினால், இந்தப் பந்தயத்தால் பில் கேட்ஸ் போன்ற பெரும் கோடீஸ்வரர் கூட திவாலாவது உறுதி என்று மஸ்க் எச்சரித்திருந்தார்.

    தற்போது உலகக் கோடீஸ்வரர் பட்டியலில் முதலிடத்தில் எலான் மஸ்க் இருக்க, முதல் 10 இடங்களில் கூட பில் கேட்ஸ் இல்லை என்பதும் கவனிக்கத்தக்கது. 

    இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் அண்மையில் வெளியான எப்ஸ்டீன் கோப்புகளில் எலான் மஸ்க்கின் பெயரும் இடம் பெற்றுள்ளது.

    Short Selling என்பது பங்குச்சந்தையில் பங்குகள் விலை குறையும் போது லாபம் ஈட்டும் ஒரு உத்தியாகும். இதில், ஒரு நிறுவனத்தின் பங்குகளின் விலை வருங்காலத்தில் குறையும் என்று கணித்து கடன் வாங்கி அந்த பங்குகளை வாங்குவார்கள்.

    அதை அதிக விலைக்கு விற்பார்கள். கணித்தபடி, அந்த பங்குகளின் விலை குறையும்போது அவற்றை மீண்டும் குறைந்த விலைக்கு வாங்கி, கடனைத் திருப்பிச் செலுத்தி லாபம் பார்ப்பார்கள். 

    • புரோக்கர்கள் தங்களின் சொந்த வர்த்தகத்திற்காக கடன் பெறுவதற்கு இனி அனுமதி கிடையாது
    • BSE, ANGEL ONE, MCX, GROWW போன்ற தரகு நிறுவன பங்குகளின் விலை 5 - 10% வரை சரிவை சந்தித்தது

    பங்குச்சந்தை புரோக்கர் நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் வழங்குவதில் இருந்த தளர்வுகளை நீக்கி, புதிய கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து ரிசர்வ் வங்கி அதிரடி காட்டியுள்ளது.

    இதன்படி, இனி புரோக்கர்களுக்கு வங்கிகள் கடன் வழங்கும் போது, அந்தப் பணத்திற்கு இணையான 100% பிணையை கட்டாயமாகப் பெற்றிருக்க வேண்டும். முக்கியமாக, புரோக்கர்கள் தங்களின் சொந்த வர்த்தகத்திற்காக (Proprietary Trading) வங்கிகளிடம் இருந்து கடன் பெறுவதற்கு இனி அனுமதி கிடையாது என்று ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

    ரிசர்வ் வங்கியின் இந்த புதிய கட்டுப்பாடுகளால் பங்குச்சந்தை தரகு நிறுவனங்களான BSE, ANGEL ONE, MCX, GROWW போன்ற தரகு நிறுவன பங்குகளின் விலை 5 - 10% வரை சரிவை சந்தித்தது

    • அமெரிக்கா விதிக்கும் பரஸ்பர வரி 25%-லிருந்து 18%-ஆகக் குறைக்கப்படும் என்று டிரம்ப் தெரிவித்தார்
    • இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்யப்போவதாக டிரம்ப் அறிவிப்பு

    பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டால் பங்குச்சந்தைகளில் கடும் சரிவு ஏற்பட்டது. பட்ஜெட்டில், பங்குகளை வாங்குவதற்கும் விற்பதற்குமான வரி சற்றே உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் முதியீட்டாளர்கள் பீதியடைந்தனர்.

    எனவே மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1500 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி சுமார் 500 புள்ளிகள் வரை சரிந்தது.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரதமர் மோடி இருவரும் நேற்று தொலைபேசியில் பேசினார். இதுகுறித்து டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், " ரஷிய எண்ணெயை வாங்குவதை நிறுத்துவதற்கும், அமெரிக்கா மற்றும் சாத்தியமானால் வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் வாங்குவதற்கும் பிரதமர் மோடி ஒப்புக்கொண்டார்.

    பிரதமர் மோடி மீதான நட்பு மற்றும் மரியாதையாலும், அவரது வேண்டுகோளின் படியும், உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தத்திற்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம். இதன்படி அமெரிக்கா விதிக்கும் பரஸ்பர வரி 25%-லிருந்து 18%-ஆகக் குறைக்கப்படும்" என்று தெரிவித்தார்.

    டிரம்பின் இந்த அறிவிப்பால் இன்று இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் தொடங்கியது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 3657 புள்ளிகள் வரையும் தேசிய பங்குச்சந்தை எண் நிஃப்டி 1220 புள்ளிகள் வரையும் உயர்ந்து உயர்வுடன் தொடங்கியது.

    இந்நிலையில், இன்றைய பங்குச்சந்தை முடிவில் சென்செக்ஸ் 2072 புள்ளிகள் உயர்ந்து 83,739 புள்ளிகளிலும் நிஃப்டி 639 புள்ளிகள் உயர்ந்து 25,727 புள்ளிகளிலும் வர்த்தகமானது.

    • அமெரிக்கா விதிக்கும் பரஸ்பர வரி 25%-லிருந்து 18%-ஆகக் குறைக்கப்படும் என்று டிரம்ப் தெரிவித்தார்.
    • அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தத்திற்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம்.

    பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டால் பங்குச்சந்தைகளில் கடும் சரிவு ஏற்பட்டது. பட்ஜெட்டில், பங்குகளை வாங்குவதற்கும் விற்பதற்குமான வரி சற்றே உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் முதியீட்டாளர்கள் பீதியடைந்தனர்.

    எனவே மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1500 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி சுமார் 500 புள்ளிகள் வரை சரிந்தது.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரதமர் மோடி இருவரும் நேற்று தொலைபேசியில் பேசியுள்ளனர்.

    இதுகுறித்து டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், " ரஷிய எண்ணெயை வாங்குவதை நிறுத்துவதற்கும், அமெரிக்கா மற்றும் சாத்தியமானால் வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் வாங்குவதற்கும் பிரதமர் மோடி ஒப்புக்கொண்டார்.

    பிரதமர் மோடி மீதான நட்பு மற்றும் மரியாதையாலும், அவரது வேண்டுகோளின் படியும், உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தத்திற்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம். இதன்படி அமெரிக்கா விதிக்கும் பரஸ்பர வரி 25%-லிருந்து 18%-ஆகக் குறைக்கப்படும்" என்று தெரிவித்தார்.

    டிரம்பின் இந்த அறிவிப்பால் இன்று இந்திய பங்குச்சந்தை தாறுமாறாக உயர்ந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 4000 புள்ளிகள் வரையும் தேசிய பங்குச்சந்தை எண் நிஃப்டி 1200 புள்ளிகள் வரையும் உயர்ந்து வர்த்தகமாகி வருகிறது.

    11 மணிநேர நிலவரப்படி சென்செக்ஸ் 84,000 புள்ளிகளிலும் நிஃப்டி 25,750 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகிறது.

    • சம்மன்களை அதிகாரப்பூர்வ வழிகளில் வழங்குவதற்கான முந்தைய முயற்சிகளை இந்தியா இரண்டு முறை நிராகரித்தது.
    • அதானி குழுமம் இந்தக் குற்றச்சாட்டுகளை ஆதாரமற்றவை என்று கூறி நிராகரித்துள்ளது

    அதானி குழுமப் பங்குகள் இன்று 10% வீழ்ச்சியடைந்துள்ளன. குறிப்பாக அதானி கிரீன், அதானி என்டர்பிரைசஸ், அதானி எனர்ஜி மற்றும் அதானி போர்ட்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களின் பங்குகள் 10% வரை சரிவைக் கண்டுள்ளன. கௌதம் அதானி மற்றும் சாகர் அதானி ஆகியோருக்கு மின்னஞ்சல் வாயிலாக நேரடியாக சம்மன் அனுப்ப அமெரிக்க நீதிமன்றத்தின் அனுமதியை அந்நாட்டின் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் கோரியுள்ள நிலையில் அதானி குழும பங்குகள் சரிவைக் கண்டுள்ளன.

    சம்மன்களை அதிகாரப்பூர்வ வழிகளில் வழங்குவதற்கான முந்தைய முயற்சிகளை இந்தியா இரண்டு முறை நிராகரித்ததால், அவை தோல்வியடைந்ததாக அமெரிக்கப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு முதல் அதானி குழுமத்தின் நிறுவனர் கௌதம் அதானி மற்றும் அவரது மருமகன் சாகர் அதானி ஆகியோருக்கு அறிவிப்புகளை வழங்க அமெரிக்க ஒழுங்குமுறை ஆணையம் முயற்சித்து வருகிறது. அமெரிக்காவில் இந்தியப் பெருநிறுவனம் ஒன்று தொடர்புடைய மிக முக்கியமான சட்ட வழக்காக இது கருதப்படுகிறது.

    இந்த நிகழ்வுகளைத் தொடர்ந்து, அதானி கிரீன் நிறுவனத்தின் பங்குகள் 10% சரிந்து ஒருநாள் வர்த்தகத்தில் குறைந்தபட்ச விலையான ரூ. 823-ஐ எட்டின. அதே சமயம் குழுமத்தின் முன்னணி நிறுவனமான அதானி என்டர்பிரைசஸின் பங்குகள் 8% சரிந்து ரூ. 1,936-ஐத் தொட்டன. மேலும், அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் பங்கு 5% சரிந்து ரூ. 1,343-க்கும், அதானி எனர்ஜி நிறுவனத்தின் பங்கு 8% சரிந்து ஒரு பங்கின் விலை ரூ. 852-க்கும் சரிந்தது.

    முன்னதாக அதானி கிரீன் எனர்ஜி தயாரிக்கும் மின்சாரத்திற்கான கொள்முதல் ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக, இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கும் திட்டத்தில் அதானி குழுமத்தின் நிர்வாகிகள் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டுகள் எழுந்தது. அதானி குழுமம் இந்தக் குற்றச்சாட்டுகளை ஆதாரமற்றவை என்று கூறி நிராகரித்துள்ளது. மேலும், தனது நிலைப்பாட்டைத் தக்கவைக்கத் தேவையான அனைத்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளையும் எடுக்கப்போவதாக அக்குழுமம் தெரிவித்துள்ளது. 

    • வழக்கமாக பொங்கல் பண்டிகை அன்று பங்கு சந்தை செயல்படும்
    • நாளை எவ்வித பங்கு வர்த்தகமும் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதே நாளில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மாநகராட்சித் தேர்தல் நடைபெற உள்ளது.

    இந்நிலையில், நாளை மும்பை மாநகராட்சியில் தேர்தல் நடைபெற உள்ளதால் மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை எவ்வித பங்கு வர்த்தகமும் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வழக்கமாக பொங்கல் பண்டிகை அன்று செயல்படும் பங்கு சந்தைக்கு இந்தாண்டு உள்ளாட்சி தேர்தலால் விடுமுறை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் அவருக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது.
    • வீட்டில் பிணமாக கிடந்த மூன்று பேரிpf உடல்களை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார் கற்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சிவபூபதி (வயது45). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் குறிஞ்சி நகர் பகுதியில் குடும்பத்துடன் வாடகை வீட்டில் தங்கி உள்ளார்.

    ஆன்லைன் நெட்வொர்க் ஷேர் மார்க்கெட் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி பார்வதி. இவர்களுக்கு நரேந்திரபூபதி (14) லதீஷ் பூபதி (11) ஆகிய இரண்டு மகன்கள் இருந்தனர்.

    இவர்கள் ஓசூர் சமத்துவபுரம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். சிவபூபதி ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் அவருக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது.

    இந்த நிலையில் இன்று காலை அவரது வீட்டில் நீண்ட நேரமாக கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அவரது சகோதரர் போலீசார் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தனர். அப்போது வீட்டில் சிவபூபதி தூக்கில் தொங்கியவாறு கிடந்தார். அருகில், இரண்டு மகன்களும் கழுத்து நெரிக்கப்பட்டு உயிரிழந்து கிடந்தது தெரிய வந்தது.

    அவரது மனைவி கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு சொந்த ஊருக்கு சென்று விட்டதால், உயிர் தப்பிவிட்டார்.

    இந்த சம்பவம் குறித்து ஓசூர் அட்கோ போலீசார் சம்பவ இடத்திற்கு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக ஓசூரில் சிவபூபதி வாழ்ந்து வருவதாகவும், ஆன்லைன் வர்த்தகத்தை சொந்த ஊரிலும், சென்னையிலும் அவர் செய்து வந்த நிலையில் அதே தொழிலை ஓசூரில் செய்து வந்துள்ளார்.

    வீட்டில் பிணமாக கிடந்த மூன்று பேரிpf உடல்களை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

    • அதானி குழுமப் பங்குகளின் சந்தை மதிப்பில் ரூ.12.5 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.
    • அப்போதைய செபி தலைவர் மாதபி பூரி புச் மற்றும் அவரது கணவர் தவால் புச் ஈடுபட்டதாகவும் ஹிண்டன்பர்க் குற்றம் சாட்டியிருந்தது.

    அதானி குழுமம் பங்குச் சந்தையில் மோசடி செய்ததாக அமெரிக்கவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையை "கட்டுக்கதை" என இந்தியப் பங்குச் சந்தை வாரியம் (செபி) நிராகரித்துள்ளது .

    அதானி குழுமத்திற்கு எதிராக எந்த முறைகேடுகளையும் கண்டறியவில்லை என்றும், எந்த அபராதமும் விதிக்கப்படவில்லை என்றும் செபி தெரிவித்துள்ளது.

    கடந்த ஆண்டு ஜனவரியில் அதானி குழுமத்திற்கு எதிராக வெளியான இந்த ஹிண்டன்பர்க் அறிக்கை பங்குச் சந்தையில் அதன் பங்குகளில் 50 சதவீதம் சரிவை ஏற்படுத்தியது. இதனால் அதானி குழுமப் பங்குகளின் சந்தை மதிப்பில் ரூ.12.5 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.

    அதானி மீதான முக்கிய குற்றச்சாட்டு, அவர் வெளிநாடுகளில் ஷெல் நிறுவனங்களை அமைத்தார், தனது சொந்த நிறுவனத்தின் பங்குதாரர்களிடம் முதலீடு செய்தார், பங்குகளின் விலையை உயர்த்தினார், மேலும் இந்த பங்குதாரர்கள் கடன்களைப் பெறுவதற்கு பிணையம் வழங்கினர் என்பதுதான்.

    அதானி குழுமத்துடன் தொடர்புடைய ரகசிய வெளிநாட்டு முதலீடுகளில் அப்போதைய செபி தலைவர் மாதபி பூரி புச் மற்றும் அவரது கணவர் தவால் புச் ஈடுபட்டதாகவும் ஹிண்டன்பர்க் குற்றம் சாட்டியிருந்தது.

    முன்னதாக, இந்த ஆண்டு துவக்கத்தில் ஹிண்டன்பர்க் நிறுவனம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    • ஜேன் ஸ்ட்ரீட் இந்திய சந்தையில் வர்த்தகம் செய்யத் தடை விதிக்கப்பட்டு, ரூ.4,843 கோடி லாபம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
    • மோடி அரசு யாருடைய விருப்பத்தின் பேரில் கண்களை மூடிக்கொண்டு இருந்தது?" என்று கேள்வி எழுப்பினார்.

    அமெரிக்க வர்த்தக நிறுவனமான ஜேன் ஸ்ட்ரீட் இந்திய பங்குச்சந்தையில் , ஜனவரி 2023 முதல் மே 2025 வரையிலான காலகட்டத்தில், பங்குகள், ஃபியூச்சர்ஸ் மற்றும் ஆப்ஷன்ஸ் (F&O) சந்தைகளில் ஒரே நேரத்தில் பந்தயம் கட்டி, குறியீடுகளை கையாண்டு லாபம் ஈட்டியதாக பங்குச் சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி கண்டறிந்துள்ளது.

    இதைத் தொடர்ந்து, ஜேன் ஸ்ட்ரீட் இந்திய சந்தையில் வர்த்தகம் செய்யத் தடை விதிக்கப்பட்டு, ரூ.4,843 கோடி லாபம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இதுகுறித்து பதிவிட்டுள்ள மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, "செபி இவ்வளவு காலம் ஏன் அமைதியாக இருந்தது? மோடி அரசு யாருடைய விருப்பத்தின் பேரில் கண்களை மூடிக்கொண்டு இருந்தது?" என்று கேள்வி எழுப்பினார்.

    ஃபியூச்சர்ஸ் மற்றும் ஆப்ஷன்ஸ் (F&O) சந்தை பெரிய முதலீட்டாளர்களுக்கு ஒரு விளையாட்டு மைதானமாக மாறிவிட்டதாகவும், சிறிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து பணத்தை இழந்து வருவதாகவும் 2024-ஆம் ஆண்டிலேயே தான் குறிப்பிட்டிருந்ததை அவர் சுட்டிக்காட்டினார்.

    • 15 செயலிகளுக்கு தமிழ்நாடு ஆன்லைன் கேமிங் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
    • இது தொடர்பாக செபி எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    18 ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்த 15 செயலிகளுக்கு தமிழ்நாடு ஆன்லைன் கேமிங் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    ஐபிஎல் சூதாட்டத்தை, பங்குச்சந்தை வர்த்தகம் (opinion trading) போன்று விளம்பரம் செய்து பொதுமக்களை ஏமாற்றியதாக 15 ஆன்லைன் கேமிங் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதில் பிரோபோ (Probo), எம்.பி.எல் (MPL) மற்றும் ஸ்போர்ட்ஸ் பாஸி (SportsBaazi) போன்ற முக்கிய நிறுவனங்களும் அடங்கும்.

    இது தொடர்பாக ஏற்கனவே பங்குச்சந்தை ஒழுங்குபடுத்தல் அமைப்பான செபி எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஐடிசி நிறுவன பங்கு 3 சதவீதம் அளவிற்கு சரிவை சந்தித்தது.
    • பஜாஜ் பைனான்ஸ், பாரதி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி, அதானி போர்ட்ஸ், ஹெச்சிஎல் டெக் பங்குகள் ஏற்றம் கண்டன.

    மும்பை பங்குச் சந்தை குறியீடு எண் சென்செக்ஸ் 239 புள்ளிகளும், இந்திய பங்குச் சந்தை குறியீடு எண் நிஃப்டி 73.75 புள்ளிகளும் சரிந்து இன்றைய வர்த்தகம் நிறைவடைந்தது.

    நேற்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 624.82 புள்ளிகளும், நிஃப்டி 174.95 புள்ளிகளும் சரிந்த நிலையில், இன்று 2ஆவது நாளாகவும் பங்குச் சந்தை சரிவை சந்தித்துள்ளது.

    மும்பை பங்குச் சந்தை குறியீடு எண் சென்செக்ஸ் நேற்றைய வர்த்தக முடிவில் 81,551.63 புள்ளியாக இருந்தது. இன்று காலை 4 புள்ளிகள் சரிவுடன் 81,457.61 புள்ளிகளுடன் வர்த்தகம் தொடங்கியது. அதன்பின் சற்று ஏறுவதும், இறங்குவதுமாக இருந்தது. அதிக பட்சமாக 81,613.36 புள்ளிகளிலும், குறைந்த பட்சமாக 81,244.02 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 239.31 புள்ளிகள் சரிந்து 81,312.32 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    இந்திய பங்குச் சந்தை குறியீடு எண் நிஃப்டி நேற்றைய வர்த்தக முடிவில் 24,826.20 புள்ளியாக இருந்தது. இன்று காலை 6 புள்ளிகள் உயர்ந்து 24,832.50 புள்ளிகளில் வர்த்தகமானது. அதிக பட்சமாக 24,864.25 புள்ளிகளிலும், குறைந்த பட்சமாக 24,737.05 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 73.75 புள்ளிகள் சரிந்து 24,752.45 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    ஐடிசி நிறுவனத்தின் பங்கு இன்று 3 சதவீதம் அளவிற்கு சரிந்தது. அந்த நிறுவனத்தின் கூட்டு நிறுவனமான BAT Plc, அதன் பங்குகளில் 2.5 சதவீதத்தை 1.51 பில்லியன் அமெரிக்க டாலருக்கு (12927 கோடி ரூபாய்) விற்பனை செய்ததால் ஐடிசி பங்கு கடும் சரிவை சந்தித்தது.

    மேலும் இந்தூஸ்இந்த், நெஸ்லே, அல்ட்ராடெக் சிமெண்ட், மஹிந்திரா அண்டு மஹிந்திரா, பவர் கிரிட், ஏசியன் பெயின்ட்ஸ், சன் பார்மா, டெக் மஹிந்திரா பங்குகளும் சரிவை சந்தித்தன.

    பஜாஜ் பைனான்ஸ், பாரதி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி, அதானி போர்ட்ஸ், ஹெச்சிஎல் டெக் பங்குகள் ஏற்றம் கண்டன.

    தெற்காசிய பங்குச் சந்தைகளில் தென்கொரிய பங்குச் சந்தை மற்றும் ஏற்றம் கண்டது. ஜப்பான், ஷாங்காய், ஹாங்காங் பங்குச் சந்தைகள் சரிவை எதிர்கொண்டது. அமெரிக்க பங்குச் சந்தைகள் மிகப்பெரிய அளவில் ஏற்றம் கண்டிருந்தது.

    • சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய இரண்டும் 1% வரை சரிந்தன.
    • பிஎஸ்இ சென்செக்ஸில் டாடா ஸ்டீல் (0.73%), இன்ஃபோசிஸ் (0.08%), மற்றும் ஐடிசி (0.07%) ஆகியவை லாபம் ஈட்டின.

    இந்திய பங்குச் சந்தை வணிகம் நேற்றைத் தொடர்ந்து இன்றும் சரிவுடன் முடிந்தது. சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய இரண்டும் 1% வரை சரிந்தன.

    சர்வதேச சந்தைகளின் பலவீனமான போக்கு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் விற்பனை, சந்தைகளில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது.

    இன்றைய வர்த்தக முடிவில், மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 872 புள்ளிகள் இழந்து 81,186 ஆக இருந்தது.

    தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 261 புள்ளிகள் சரிந்து 24,683 ஆக இருந்தது.

    டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு ரூ.85.63 ஆக உள்ளது. பிஎஸ்இ சென்செக்ஸில் டாடா ஸ்டீல் (0.73%), இன்ஃபோசிஸ் (0.08%), மற்றும் ஐடிசி (0.07%) ஆகியவை லாபம் ஈட்டின.

    மாருதி (-2.76%), மஹிந்திரா & மஹிந்திரா (-2.13%), அல்ட்ராடெக் சிமென்ட் (-2.04%), பவர் கிரிட் கார்ப்பரேஷன் (-2.01%), நெஸ்லே இந்தியா (-1.92%) ஆகியவை அதிக இழப்பை சந்தித்தன.

    நேற்றும் பங்குச் சந்தை சரிவுடனே காணப்பட்டது. சென்செக்ஸில் மட்டும் 443.67 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. இதன்மூலம் சமீபத்திய நிலவரப்படி, முதலீட்டாளர்களுக்கு ரூ. 5.47 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. 

    ×