search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "union minister"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பாகிஸ்தான் ஆக்ரமித்துள்ள காஷ்மீர் இரு பகுதிகளாக உள்ளது
    • கார்கில் பாதையை திறந்து விடுங்கள் என கோஷமிட்டனர்

    இந்திய ராணுவத்தின் மிக உயர்ந்த பதவி வகித்தவர், நான்கு நட்சத்திர அந்தஸ்து பெற்ற ஜெனரல். விஜய் குமார் சிங் (72).

    ஜெனரல். வி.கே. சிங், தனது பதவிக்காலம் முடிந்த பிறகு, ஆளும் பா.ஜ.க. அரசால் அமைச்சராக பதவியில் அமர்த்தப்பட்டவர். இவர் தற்போது சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சரவையில் அமைச்சராக உள்ளார்.

    ராஜஸ்தான் மாநிலத்தில் பா.ஜ.க. சார்பாக நடந்து வரும் பரிவர்த்தன் சங்கல்ப யாத்திரையில் கலந்து கொண்டு பல மத்திய அமைச்சர்களும் உரையாற்றி வருகின்றனர். இந்த யாத்திரையின் ஒரு பகுதியாக அம்மாநில டவுஸா மாவட்டத்தின் தலைநகர் டவுஸாவில் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஜெனரல். வி.கே. சிங் கலந்து கொண்டார்.

    இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்குமிடையேயான உறவு குறித்து கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

    1947 முதல் பாகிஸ்தான் ஆக்ரமித்துள்ள காஷ்மீர் (PoK) பகுதியில் மொத்தம் சுமார் 40 லட்சம் மக்கள் தொகை கொண்ட இப்பிராந்தியத்தில் 97 சதவீதம் பேர் இஸ்லாமியர்கள். இது, ஆஸாத் காஷ்மீர் மற்றும் கில்கிட்-பல்டிஸ்தான் என இரு பகுதிகளாக உள்ளது. சில நாட்களுக்கு முன் கில்கிட்-பல்டிஸ்தான் பகுதியில் ஸ்கர்டு (Skardu) டவுனில் பாகிஸ்தானின் புது சட்டங்களுக்கெதிராக ஒரு பேரணி நடைபெற்றது. அது பாகிஸ்தான் அரசுக்கெதிரான பேரணியாக மாறி, இந்தியாவின் கார்கில் பகுதிக்கு செல்லும் பாதை திறந்து விடப்பட வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்ட ஷியா பிரிவினர் கோஷமிட்டனர்.

    "பாகிஸ்தான் ஆக்ரமித்துள்ள காஷ்மீர் (PoK) பகுதி, தானாக இந்தியாவுடன் இணைந்து விடும். சிறிது காலம் காத்திருங்கள்" என இச்சம்பவம் குறித்த கேள்விக்கு பதிலளித்த வி.கே.சிங் தெரிவித்தார்.

    இவரது கருத்தை மகாராஷ்டிர மாநிலத்தின் சிவ சேனா (உத்தவ் பிரிவு) கட்சியின் சஞ்சய் ராவத் வரவேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சனாதனம் ஒழிக்கப்பட வேண்டியது என்றார் உதயநிதி
    • கஜேந்திர சிங் ஷெகாவத் மத்திய கேபினெட் அமைச்சராக உள்ளார்

    சில தினங்களுக்கு முன், தமிழக அமைச்சரவையின் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, ஒரு விழாவில் பேசும் போது, "சனாதனம் எதிர்க்கப்பட வேண்டியது அல்ல, ஒழிக்கப்பட வேண்டியது" என கருத்து தெரிவித்தார். இக்கருத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் இந்தியாவெங்கும் பலர் கருத்துக்கள் கூறி வருகின்றனர்.

    உதயநிதியின் கருத்து பெரும் சர்ச்சையை நாடு முழுவதும் உண்டாக்கியிருக்கிறது.

    இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க.வின் பாராளுமன்ற உறுப்பினர், கஜேந்திர சிங் ஷெகாவத் (55). மத்திய 'ஜல் சக்தி' மந்திரியாக இருக்கும் இவர், கேபினெட் அமைச்சராக பதவி வகிப்பவர்.

    நேற்று ஷெகாவத், பா.ஜ.க. சார்பாக ராஜஸ்தானின் பார்மர் பகுதியில் நடைபெற்ற பரிவர்த்தன் யாத்திரையில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

    அப்போது அதில் அவர் கூறியதாவது:-

    உயிரை தியாகம் செய்து நமது முன்னோர்கள் கட்டி காத்து வந்த சனாதன தர்மத்தை சிலர் அழிக்க நினைக்கின்றனர். அவர்களை இனியும் சகித்து கொள்ள முடியாது. சனாதன தர்மத்திற்கு எதிராக பேசுபவர்களுக்கு நான் ஒன்று சொல்லி கொள்ள விரும்புகிறேன்.

    நீங்கள் இவ்வாறு பேசினால் உங்கள் நாக்கை பிடுங்கி விடுவோம். எங்களை கீழ்த்தரமாக, அவமரியாதையுடன் பார்ப்பவர்கள் அனைவரின் கண்களும் பிடுங்கப்படும். சனாதனத்திற்கு எதிராக பேசும் எவரும் இந்தியாவில் ஒரு நிலையான அரசியல் செய்து விட முடியாது.

    இவ்வாறு கஜேந்திர சிங் தெரிவித்தார்.

    உதயநிதியின் சனாதனம் தர்மம் குறித்த கருத்து விவகாரம் தற்போது சற்று ஓய்ந்த நிலையில், பா.ஜ.க.வின் கேபினெட் அந்தஸ்திலுள்ள அமைச்சர் இவ்வாறு கடுமையாக கருத்தை தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நாட்டின் எல்லையை காப்பவர்களாக மீனவர்கள் இருக்கிறார்கள் என மத்திய மந்திரி எல்.முருகன் பேசினார்.
    • இந்திய பொருளாதாரத்தில் 8 சதவீதம் மீனவர்கள் பங்கு உள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத் தில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற் றும் பால் வளத்துறை மந் திரி புருஷோத்தம ரூபாலா 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவர் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் நேற்று காலை சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து தனுஷ்கோடி சென்று பார்வையிட்டார்.

    பின்னர் ராமேசுவரம் வந்த மத்திய மந்திரி புருஷோத்தம ரூபாலாவும், மத்திய இணை மந்திரி எல்.முருகனும் துறைமுக கடல் பகுதியில் மீன்வளத்துறை மூலம் நடைபெற்று வரும் துறைமுக சீரமைப்பு பணிகளை பார்வையிட்ட–னர். அப்போது முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனும் உடன் இருந்தார்.

    அதன்பின்னர் எல்.முருகன் நிருபர்களிடம் கூறி–ய–தாவது:-

    சாகர் பரிக்கிரமா யாத்தி ரையானது கடந்த 4 மாதத் திற்கு முன்பு குஜராத்தில் தொடங்கி பல மாநிலங்களில் உள்ள கடற்கரையோர பகுதிகளில் உள்ள மீனவர்களை சந்தித்து வருகிறோம். தமி ழகத்தில் கன்னியாகுமரி, தூத்துக்குடி பகுதிகளுக்கு சென்று மீனவர்களை சந்தித்துவிட்டு, தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் கடற்கரை பகுதிகளை பார்த்துவிட்டு, திட்டங்களை ஆய்வு செய்தோம். ராமேசு வரத்தில் துறைமுக பணி களை பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளோம்.

    இங்குள்ள மீனவர்கள் ராமேசுவரம் கடல் பகுதியில் புதிய துறை முகம் கட்டித்தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து மாநில அரசு ஆய்வு நடத்தி வருவதால் அந்த ஆய்வு முடிந்த பின்னர் இதுபற்றி முடிவு செய்யப்ப டும். ஏர் ஆம்புலன்ஸ் இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டு உள்ள தமிழக மீனவர்களின் படகு களை மத்திய வெளியுறவு துறை மூலம் மீட்க நடவ டிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    கன்னியாகுமரி, தூத்துக் குடி, திருநெல்வேலி ஆகிய பகுதி மீனவர்களை சந்தித்த போது மீனவர்கள் வைத்த பிரதான கோரிக்கை என்ன வென்றால், கடலுக்குள் மீன் பிடிக்க செல்லும்போது மீனவர்களுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் உடன டியாக அவர்களை மீட்டு காப்பாற்ற வசதியாக ஏர் ஆம்புலன்ஸ் வசதி வேண்டு மென்று கோரிக்கை வைத் துள்ளனர். இது குறித்து அரசிடம் பேசி ஏர் ஆம்பு லன்ஸ் கொண்டுவர நடவ டிக்கை எடுக்கப்படும்.

    ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு செல்லும் மீனவர்கள் மற்ற மாநிலங்களில் உள்ள கடல் பகுதிக்கு செல்லும்போது, அந்த துறைமுகப் பகுதிக்குள் சென்று படகுகளை நிறுத்த வசதியாக குறிப்பாக ஒடிசா, குஜராத், மங்களூரு போன்ற கடல் பகுதிகளுக்கு சென் றால் அங்குள்ள துறைமு கத்தில் படகுகளை நிறுத்த வசதியாக தேசிய அடையாள அட்டை வேண்டுமென கேட்டுள்ளனர்.

    இந்த கோரிக்கை குறித் தும் பரிசீலனை செய்யப்ப டும். ரூ.38,500 கோடி நிதி பிரதமர் மோடி, மீன்வளத்து றைக்கு மட்டும் ரூ.38 ஆயிரத்து 500 கோடி நிதி ஒதுக்கீடு செய்த தால் ஏராள மான பணிகள் நடந்துள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் ரூ.1500 கோடி நிதி ஒதுக் கப்பட்டுள்ளது. இந்திய பொருளாதாரத்தில் 8 சத வீதம் மீனவர்களின் பங்கு உள்ளது. நாட்டை காப்ப வர்களாகவும், நாட்டின் எல்லையை காப்பவர்களா கவும் மீனவர்கள் இருந்து வருகின்றனர்.

    மீனவர்கள் முன்னேற்றத் துக்காகவே மத்திய அரசு நீலப்புரட்சி திட்டத்தின் கீழ் ஆழ்கடல் மீன்பிடி படகு களை வழங்கியுள்ளது. அதை மீனவர்கள் நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். இருநாட்டு குழு தமிழக மீனவர்கள் பிரச்சி னைக்கு நிரந்தர தீர்வு காண இந்தியா-இலங்கை என இருதரப்பிலும் அதிகாரிகள் மட்டத்திலும், அமைச்சர்கள் மட்டத்திலும் குழு அமைக் கப்பட்டுள்ளது. இதுவரை அதிகாரிகள் மட்டத்தில் கூட்டம் நடைபெற்றுள்ளது.

    கொரோனா உள்ளிட்ட சூழ்நிலையால் இருநாட்டு அமைச்சர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெற வில்லை. அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தை நடை பெற வேண்டும் என்று வெளியுறவுத்துறை மூலம் கேட்கப்பட்டுள்ளது. அதன் மூலம் தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. கச்சத்தீவு விவகாரத்தில் அரசியல் செய்ய விரும்பவில்லை. கச்சத்தீவை யார் தாரை வார்த்தது என்பது அனை வருக்குமே தெரியும். கச்சத் தீவை மீட்பது குறித்து உரிய நேரத்தில் அதற்கான நடவ டிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மீன்வளத்துறை துணை இயக்குனர் பிரபாவதி, பா.ஜ.க. மாவட்ட தலைவர் தரணி முருகேசன், மாவட்ட பார்வையாளர் முரளிதரன், நகர் தலைவர் ஸ்ரீதர் உள் ளிட்ட பலர் உடன் இருந்த னர். விசைப்படகு மீனவர் சங்க பிரதிநிதிகள் சேசு ராஜா, தேவதாஸ், எமெரிட், சகாயம், நாட்டு படகு மீனவர் சங்க தலைவர் எஸ்.பி.ராயப்பன் ஆகியோர் மீன்வளத்துறை மத்திய மந்திரியிடம் மீனவர்களின் கோரிக்கைகளை விளக்கி கூறினர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பாசி வளர்ப்பு பூங்கா அமைக்க மத்திய மந்திரி எல்.முருகன் ஆய்வு செய்தார்.
    • நிர்மலாதேவி, தீபா உட்பட பலர் கலந்து கொன்டனர்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ள கடலோர கிராமமான திருப் பாலைக்குடியில் மீன்துறை மூலம் பாசி–வளர்ப்பு பூங்கா ரூ.11 கோடிமதிப்பில் துவங் கப்பட உள்ளது.

    இந்த இடத்தை மத்திய மீன்வளத்துறை அமைச்சர் எல்.முருகன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய் தார். அப்போது பாசி வளர்ப்பு பூங்கா பணிகள் விரைவில் தொடங்கி முடி–வ–டையும் வகையில் மேற் கொள்ள அதிகாரிக–ளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதா–கவும் அவர் தெரிவித்தார்.

    இந்த ஆய்வின்போது, மீன்துறை இணை இயக்குநர் பிரபாவதி, துணை இயக்கு–நர் கோபிநாத், ஆய்வாளர் அபுதாஹிர், மீனவ கூட் டுறவு சங்கத்தலை–வர்கள் பசுருல்ஹக், சுல்த்தான் செய்யது இபுராமுசா, மீன் துறை அலுவலர்கள் முரு–கேசன், ஷகிலாபானு, நிர் மலாதேவி, தீபா உட்பட பலர் கலந்துகொன்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா. கூட்டணி ஆட்சி முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் நடந்து வருகிறது.
    • இந்த நிலையில் அடுத்த வாரம் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீத்தாராமன் புதுவைக்கு வருகை தர உள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா. கூட்டணி ஆட்சி முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் நடந்து வருகிறது. இந்த நிலையில் அடுத்த வாரம் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீத்தாராமன் புதுவைக்கு வருகை தர உள்ளார்.

    அவரின் வருகையை யொட்டி புதுவை அரசு துறைகள் அனைத்தும் சுறுசுறுப்படைந்துள்ளன. துறைரீதியாக புதிய திட்டங்கள், ஏற்கனவே முடிந்துள்ள திட்டங்கள் குறித்து ஆய்வு கூட்டங்களை நடத்தி பட்டியலை தயாரித்து வருகின்றன.

    அமைச்சர் தொடங்கி வைக்க வேண்டிய திட்டங்கள் குறித்தும் மத்திய நிதித்துறை கேட்டுள்ளது. புதுவைக்கு வரும் மத்திய மந்திரி நிர்மலா சீத்தாராமன் திட்டங்களை தொடங்கி வைப்பதோடு, மாநிலத்தின் நிதி சிக்கல்கள் குறித்தும் முழுமையாக ஆய்வு செய்ய உள்ளார். இதற்காக மாநில நிதித்துறை முழுமையான நிதி பிரச்சினைகள் குறித்த அறிக்கையை தயாரித்து வருகிறது.

    புதுவையை நிதிக்குழு வில் இணைக்க வேண்டும். மாநில சிறப்பு நிதியுதவி திட்டத்தில் புதுவையை இணைத்து ரூ.2 ஆயரித்து 328 கோடி தர வேண்டும்.

    மத்திய அரசின் திட்டங்களுக்கு 100 சதவீத நிதியை வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை புதுவை அரசு வலியுறுத்த திட்டமிட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்து மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டு பேசினார்.
    • தமிழகத்தில் பா.ஜ.க. படிப்படியாக வளர்ந்து வருகிறது.

    திருப்பூர் :

    திருப்பூரில் இந்து மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டு பேசினார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நாடாளுமன்ற தேர்தலை குறிவைத்து தமிழ்நாட்டிற்கு வரவில்லை. ஒத்த கருத்துடைய கட்சிகளை பா.ஜ.க. கூட்டணியில் சேர்ப்பதற்கான முயற்சியாகவே பார்க்கலாம். தமிழகத்தில் பா.ஜ.க. படிப்படியாக வளர்ந்து வருகிறது. இங்கு திராவிட கட்சிகள் பல ஆண்டுகள் ஆண்ட நிலை–யில், அந்த போதையில் இருந்து தெளிந்த பிறகே மாற்றத்தை பற்றி பேச வேண்டும். சமீபத்தில் நடந்த ரெயில் விபத்து என்பது 21-ம் நூற்றாண்டில் நடந்திருப்பது கண்டிப்பாக ஒரு தலைகுனிவுதான். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரெயில் விபத்து நடந்த இடத்திற்கு செல்ல வேண்டிய அவசியமே இல்லை. ரெயில் விபத்து சதி என்று கூறப்படும் நிலையில் அப்படி இருந்தால் அது பயங்கரமாகும். இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இன்று சைக்கிள் பேரணிகள் நடைபெறுகின்றன.

    புதுடெல்லி:

    உலக சைக்கிள் தினமான இன்று, நாடு முழுவதும்  சைக்கிள் பேரணிகளுக்கு மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

    உடல் பருமன், சோம்பல், மன அழுத்தம், பதட்டம், நோய்கள் போன்றவற்றில் மக்கள் இருந்து விடுபடவும், சைக்கிள்  ஒட்டுவதை ஊக்குவிக்கும் வகையிலும் சைக்கிள் பேரணி நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தலைநகர் டெல்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் ஸ்டேடியத்தில் இருந்து இன்று காலை சைக்கிள் பேரணியை மத்திய விளையாட்டு மந்திரி  அனுராக் தாக்கூர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் 750 சைக்கிள் வீரர்கள் கலந்து கொண்டனர். அவர்களுடன் மந்திரி அனுராக் தாக்கூர் சைக்கிள் ஓட்டிச்
    சென்றார்.
    முன்னதாக செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

    உலக சைக்கிள் தினத்தையொட்டி பிரதமர் மோடியின் செய்தியை அனைவருக்கும் எடுத்துச் செல்ல விரும்புகிறோம். ஃபிட் இந்தியா இயக்கம், கேலோ இந்தியா இயக்கம், தூய்மை இந்தியா இயக்கம் மற்றும் ஆரோக்கியமான இந்தியா இயக்கம் அனைத்தையும் சைக்கிள் ஓட்டுவதன் மூலம் நிறைவேற்ற முடியும். இது காற்று மாசு அளவையும் குறைக்கும்

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 75 இடங்களில் இன்று சைக்கிள் பேரணிகள் நடைபெறுகின்றன.

    இதில் 1,29,000 இளைஞர்கள் பங்கேற்பார்கள் என்றும், இன்று ஒரே நாளில் 9,68,000 கிலோ மீட்டர் தூரத்திற்கும் அதிகமாக அவர்கள் சைக்கிள் மூலம் கடக்க உள்ளதாகவும் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்தி, ஆங்கிலத்தை விட எந்த மொழியும் குறைந்ததல்ல என்றும், மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
    காந்திநகர்:

    குஜராத் மாநிலம் காந்தி நகரில் நடைபெற்ற இரண்டு நாள் தேசிய கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் மத்திய கல்வி மந்திரி  தர்மேந்திர பிரதான் பேசியதாவது:

    மத்திய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கையில் உள்ளூர் மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. நாட்டின் அனைத்து மொழிகளும் தேசிய மொழிகள், எந்த மொழியும் தாழ்ந்ததல்ல.  

    குஜராத்தி தமிழ் பெங்காலி அல்லது மராத்தி என அனைத்து மொழிகளும் தேசிய மொழிகள். ஒவ்வொரு மொழிக்கும் அதன் சொந்த முக்கியத்துவம் இருப்பதால் எந்த மொழியும் ஹிந்தி அல்லது ஆங்கிலத்தை விட தாழ்ந்ததல்ல.  அதனால்தான் புதிய தேசிய கல்வி கொள்கையில் உள்ளூர் மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளோம்.

    சில மாநிலங்கள் புதிய தேசிய கல்வி கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை நாங்கள் அறிவோம். ஆனால் மத்திய அரசுக்கு அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை, ஏனென்றால் நீங்கள் நினைப்பது மக்களின் நலனுக்காக இருக்கும் என்று எங்களுக்குத் தெரியும், அதையும் நாங்கள் ஏற்றுக்கொள்வோம்.  பாடத்திட்டக் கட்டமைப்புகளை உருவாக்குவதில் அனைத்து மாநிலங்களும் பங்கேற்க வேண்டும்.

    காலனி ஆதிக்கத்தில் இருந்து நமது கல்வியை விடுவிக்க வேண்டும். 21ஆம் நூற்றாண்டில் அறிவு சார்ந்த இந்தியாவை உருவாக்க வேண்டும், அதற்கு பள்ளிக் கல்வியே அடித்தளமாக அமையும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.



    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    வேளாண் மற்றும் பால்வளத்துறைகளில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை தொடங்க வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    டெல்லியில் நடைபெற்ற ஸ்டார்ட் அப் இந்தியா மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மத்திய  அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை மந்திரி டாக்டர் ஜிதேந்திர சிங் பேசியதாவது:

    பிரதமர் நரேந்திர மோடியின் நடவடிக்கையின் மூலம் கடந்த கடந்த எட்டு ஆண்டுகளில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 300 லிருந்து 70 ஆயிரமாக அதிகரித்துள்ளது.  இந்தியாவின் எதிர்கால பொருளாதாரத்தை ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தீர்மானிக்கும். உலகப் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய தூணாக ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இருக்கும்.

    ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிப்பதில்  உலகில் மூன்றாவது மிகப்பெரிய நாடாக இந்தியா விளங்குகிறது. ஆராய்ச்சி, கல்வி, தொழில் துறை நிறுவனங்களுடன் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.

    தகவல் தொழில்நுட்பம்,கணினி, தகவல் தொடர்புத் துறையை தொடர்ந்து பிற துறைகளிலும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட வேண்டும். 

    வேளாண் மற்றும் பால்வளத்துறைகளில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை தொடங்க அதிக வாய்ப்புகள் உள்ளன.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print