என் மலர்
நீங்கள் தேடியது "Power"
- சேலம் மின்னாம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (19-ந் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
- இந்த தகவலை மின் செயற்பொறியாளர் குணவர்த்தினி தெரிவித்துள்ளார்.
சேலம்:
சேலம் மின்னாம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கூட்டாத்துபட்டி விளாம்பட்டி,ஏரிபுதூர், நீர்முள்ளிக்குட்டை, கோலாத்துக்கோம்பை, எஸ்.என். மங்கலம், ஏ.என்.மங்கலம், ஜலகண்டாபுரம், அனுப்பூர்,பூசாரிப்பட்டி, பாலப்பட்டி, தேங்கல்பாளையம், குள்ளம்பட்டி, காட்டூர், வலசையூர்,குப்பனூர், தாதனூர், ஆச்சாங்குட்டப்பட்டி, வெள்ளியம்பட்டி, கத்திரிப்பட்டி, பூவனூர் ஆகிய பகுதிகளில் நாளை (19-ந் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது. இந்த தகவலை மின் செயற்பொறியாளர் குணவர்த்தினி தெரிவித்துள்ளார்.
- நந்தினி மாணவிகள் தலைவராகவும், ஐஸ்வர்யா துணைத் தலைவராகவும் பதவி ஏற்றுக்கொண்டனர்.
- வேலைவாய்ப்பு மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என்று டி.எஸ்.பி. புஷ்பராஜ் கூறினார்.
நெல்லை:
நெல்லை தாழையூத்து அருகே உள்ள சங்கர் நகர் சங்கர் பாலிடெக்னிக் கல்லூரியில் பெண்கள் முன்னேற்றப் பிரிவு தொடக்க விழா நடைபெற்றது. மாணவி ரோகினி வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் சங்கர சுப்ரமணியன் கலந்து கொண்டு மகளிர் முன்னேற்றப் பிரிவை தொடங்கி வைத்தார்.
விழாவில் நந்தினி மாணவிகள் தலைவராகவும், ஐஸ்வர்யா துணைத் தலைவராகவும் பதவி ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து அனைத்து மாணவிகளும் மகளிர் எழுச்சி பாடலை பாடினர். நிர்வாக அதிகாரி சீனிவாசன் வாழ்த்தி பேசினார். விழாவில் தாழையூத்து டி.எஸ்.பி. புஷ்பராஜ் கலந்து கொண்டு பேசுகையில், வேலைவாய்ப்பு மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து அவர், சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் மறைக்கப்பட்ட பிரச்சனைகள் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கைகள் குறித்தும், போக்சோ சட்டம் குறித்தும், பாலியல் குற்றங்க ளிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது மற்றும் குண்டர் சட்டங்கள் குறித்து மாணவிகளுக்கு விளக்கி கூறினார்.
பின்னர் தாழையூத்து அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சீதாலட்சுமி, சமூக அச்சுறுத்தல்கள், மொபைல் மிரட்டல்கள் குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியும், சமுதாயத்தில் சுயமரியாதை பெறுவதை வலியுறுத்தியும் பேசினார்.
மேலும் மீட்பு எண் 1930 குறித்து எடுத்து கூறினார். அப்போது மாணவிகள் எழுப்பிய கேள்விகளுக்கு இன்ஸ்பெக்டர் சீதாலட்சுமி விளக்கம் அளித்தார். முன்னதாக நூலகர் விஜயலட்சுமி விருந்தினர்களை அறிமுகப்படுத்தினார். மாணவி சந்தியா நன்றி கூறினார்.
- மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் மின்தடை செய்யப்படுகிறது.
- காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
அவிநாசி
சேவூா், வடுகபாளையம் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால், கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை 5 -ந் தேதி (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
மின் தடை ஏற்படும் பகுதிகள்
சேவூா் துணை மின் நிலையம்: சேவூா், ராமியம்பாளையம், அசநல்லிப்பாளையம், புலிப்பாா், போத்தம்பாளையம், சந்தைப்புதூா், பந்தம்பாளையம், சூரிபாளையம், பாப்பங்குளம், வாலியூா், தண்ணீா்பந்தல்பாளையம், முதலிபாளையம், கூட்டப்பள்ளி, புஞ்சை தாமரைகுளம், சாவக்கட்டுப்பாளையம், நடுவச்சேரி, சாலைப்பாளையம், கருக்கங்காட்டுப்புதூா், தளிஞ்சிப்பளையம் மற்றும் மாரப்பம்பாளையம்.
வடுகபாளையம் துணை மின் நிலையம்: வடுகபாளையம், அய்யம்பாளையம், நஞ்சை தாமரைகுளம், பிச்சாண்டாம்பாளையம், ஒட்டா்பாளையம் மற்றும் ஓலப்பாளையம்.
- நாளொன்றுக்கு 24 ஆயிரம் டன் நிலக்கரி எரியூட்டப்பட்டு 1,440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
- நிலக்கரி எரிப்பதால் 7 ஆயிரம் டன் வரை சாம்பல் வெளியேறுகிறது.
மேட்டூர்:
மேட்டூர் அனல்மின் நிலையத்தில், 840 மற்றும் 600 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 பிரிவுகள் செயல்பட்டு வருகிறது. நாளொன்றுக்கு 24 ஆயிரம் டன் நிலக்கரி எரியூட்டப்பட்டு 1,440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
நிலக்கரி எரிப்பதால் 7 ஆயிரம் டன் வரை சாம்பல் வெளியேறுகிறது. இவை உலர் சாம்பலாகவும், ஈர சாம்பலாகவும் வெளியேற்றப்பட்டு வருகிறது. நாள்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகளில் சாம்பல் சிமெண்ட் ஆலைகளுக்கும், செங்கல் உற்பத்திக்கும் கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில், தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி, மேட்டூர் அனல்மின் நிலையத்தை நேற்று பார்வையிட்டார். அப்போது ஈர சாம்பல் விநியோகம் முன்னறிவிப்பின்றி திடீரென நிறுத்தப்பட்டது.
சாம்பல் அதிக அளவில் காற்றில் கலந்து பறப்பதால் லாரிகள், அனல்மின் நிலையத்திலிருந்து வெளியேற்றப்பட்டது. இதனால் மேட்டூர்-எடப்பாடி சாலையிலும், மேட்டூர்-சேலம் சாலையிலும் 2 கிலோமீட்டர் தொலைவிற்கு, லாரிகள் நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டிருந்தன. ஈர சாம்பல் விநியோகம் நிறுத்தப்பட்டதால், அனல்மின் நிலையத்திற்கு ரூ.50 லட்சத்துக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது.
- கன மழை காரணமாக அங்குள்ள கபினி, கிருஷ்ணசாகர் அணைகள் நிரம்பி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
- 18 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருவதால் பூலாம்பட்டி கதவணையில் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
எடப்பாடி:
கர்நாடகா மாநிலத்தில் பெய்த கன மழை காரணமாக அங்குள்ள கபினி, கிருஷ்ணசாகர் அணைகள் நிரம்பி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 2 லட்சம் கன அடிக்கும் மேலாக உபரிநீர் வெளியேற்றப்பட்டது.
இதன் காரணமாக காவிரி ஆற்றில் கட்டப்பட்டுள்ள கதவணை மின் நிலையங்களில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 18 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருவதால் பூலாம்பட்டி கதவணையில் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மின் நிலையத்தில் வழக்கமாக 30 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்படும். அதன்படி இன்று மதியம் நிலவரப்படி 20 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது.
ஈரோடு:
ஈங்கூர் துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் மின் பாதைகளில் மாதாந்திர பராமரிப்புப்பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. இதனால் பெருந்துறை தெற்கு பகுதி, கொங்கு காலேஜ், நந்தா காலேஜ், மூலக்கரை, ஈங்கூர், பாலப்பாளையம், மு.பிடாரியூர் வடக்குப்பகுதி, வேலாயுதம்பாளையம், 1010 நெசவாளர் காலனி, பெருந்துறை ஆர்.எஸ்., பெருந்துறை ஹவுசிங்யுனிட் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.
- மாதாந்திர பராமரிப்பு பணி வருகிற 16-ந் தேதி நடைபெற உள்ளது.
நெல்லை:
மானூர் கிராமப்புற கோட்டத்திற்கு உட்பட்ட துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி வருகிற 16-ந் தேதி நடைபெற உள்ளது.
இதனையொட்டி மானூர், மாவடி, தெற்குபட்டி, களக்குடி, எட்டான்குளம், பிள்ளையார்குளம், குறிச்சி குளம் உள்ளிட்ட பகுதிகளில் அன்றையதினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.
இந்த தகவலை தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின்பகிர்மான கழக நெல்லை கோட்ட செயற்பொறியாளர் ஜான்பிரிட்டோ தெரி வித்துள்ளார்.
- சேலத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவிலில் கடந்த மாதம் 26ந் தேதி பூச்சாட்டுதலுடன் ஆடித்திருவிழா தொடங்கி நடந்து வருகிறது.
- தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜை செய்யப்படுகிறது.
சேலம்:
சேலத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவிலில் கடந்த மாதம் 26ந் தேதி பூச்சாட்டுதலுடன் ஆடித்திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜை செய்யப்படுகிறது.
இதனால் சேலம் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

விடுமுறை நாளான நேற்று கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்கள் தங்களது வீடுகளில் இருந்து சமைத்து கொண்டு வந்த ராகி கூழ், கம்மங்கூழ், மோர், சர்க்கரை பொங்கல், தயிர்சாதம், லெமன் சாதம், புளி சாதம் உள்ளிட்டவைகளை பொதுமக்களுக்கு அன்னதானமாக வழங்கினர்.
ஆடித் திருவிழாவையொட்டி இன்று (திங்கட்கிழமை) இரவு 8 மணிக்கு சக்தி அழைப்பு நிகழ்ச்சி நடக்கிறது. நாளை மறுநாள் (புதன்கிழமை) மற்றும் 11, 12ந் தேதி ஆகிய 3 நாட்களில் பக்தர்கள் பொங்கல் வைத்தல், மாவிளக்கு நேர்த்திக்கடன் செலுத்தலாம் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதனால் கோவிலுக்கு விடிய, விடிய அதிகளவில் பக்தர்கள் வருவார்கள் என்பதால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொங்கல் வைக்கும் இடமான கோவில் பின்புறம் பக்தர்களின் வசதிக்காக தண்ணீர், அடுப்பு போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வருகிற 16ந் தேதி காலை 10.30 மணிக்கு பால்குட விழாவும், தொடர்ந்து உற்சவர் அம்மனுக்கு அபிஷேகம், அலங்கார ஆராதனையும் நடக்கிறது.
- தூத்துக்குடி தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் செல்வகுமார் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
- ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களின் காத்திருப்பு போராட்டத்தை வாபஸ் பெற்று பணிக்கு திரும்பினர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் என்.டி.பி.எல். அனல்மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யு) சார்பில் கடந்த 2 நாட்களாக அனல்மின் நிலையம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து தூத்துக்குடி தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் செல்வகுமார் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. சி.ஐ.டி.யு. சார்பில் நிர்வாகிகள் ரசல், பேச்சுமுத்து, அப்பாத்துரை, கணபதிசுரேஷ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தையில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகள் உடனடியாக செய்து கொடுக்கவும், ஓய்வூதியம் தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நடந்து வருவதால் அது தொடர்பாக பின்னர் முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதில் உடன்பாடு ஏற்பட்டதால் ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களின் காத்திருப்பு போராட்டத்தை வாபஸ் பெற்று பணிக்கு திரும்பினர்.
- அம்மாபேட்டை பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
- அம்மாபேட்டை பகுதியில் நாளை மின் விநியோகம் இருக்காது என கோபி மின்பகிர்மான வட்ட பவானி கோட்ட செயற்பொறியாளர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
அம்மாப்பேட்டை:
கோபி மின்பகிர்மான வட்டம் பவானி கோட்டம் கோனேரிப்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது.
இதையொட்டி நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அம்மாப்பேட்டை, நெரிஞ்சிப்பேட்டை, சிங்கம்பேட்டை,சித்தார்,சின்னப்பள்ள ம்,ஆனந்தம்பாளையம் குட்டமுனியப்பன்கோயில்,கேசரிமகலம்,காடப்பநல்லூர், கல்பாவி,பூதப்பாடி,எஸ்.பி.கவுண்டனூர்,குறிச்சி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என கோபி மின்பகிர்மான வட்ட பவானி கோட்ட செயற்பொறியாளர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.