search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பூலாம்பட்டி காவிரி கதவணையில் மின் உற்பத்தி மீண்டும் தொடக்கம்
    X

    பூலாம்பட்டி காவிரி கதவணையில் மின் உற்பத்தி மீண்டும் தொடக்கம்

    • கன மழை காரணமாக அங்குள்ள கபினி, கிருஷ்ணசாகர் அணைகள் நிரம்பி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
    • 18 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருவதால் பூலாம்பட்டி கதவணையில் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

    எடப்பாடி:

    கர்நாடகா மாநிலத்தில் பெய்த கன மழை காரணமாக அங்குள்ள கபினி, கிருஷ்ணசாகர் அணைகள் நிரம்பி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 2 லட்சம் கன அடிக்கும் மேலாக உபரிநீர் வெளியேற்றப்பட்டது.

    இதன் காரணமாக காவிரி ஆற்றில் கட்டப்பட்டுள்ள கதவணை மின் நிலையங்களில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 18 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருவதால் பூலாம்பட்டி கதவணையில் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மின் நிலையத்தில் வழக்கமாக 30 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்படும். அதன்படி இன்று மதியம் நிலவரப்படி 20 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது.

    Next Story
    ×