என் மலர்
நீங்கள் தேடியது "மரங்கள்"
- மரங்களை 2 நிமிடம் கட்டி பிடிப்பதால் மன அமைதி மற்றும் மன அழுத்தம் குறைகிறது.
- இதே நடைமுறையை ஆந்திராவில் உள்ள மற்ற பள்ளிகளிலும் கொண்டு வர உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம் முடிகுப்பாவில் உள்ள தனியார் பள்ளியில் மரத்தை கட்டிப்பிடிக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
அதன்படி நேற்று காலை பள்ளி வளாகத்தில் ஆசிரியர்கள், மாணவர்கள் ஒன்று கூடினர். பின்னர் ஆசிரியர்கள், மாணவர்கள் மரத்தை கட்டி பிடித்தனர்.
2 நிமிடங்கள் மரங்களை கட்டிப்பிடித்தபடி நின்றனர். மரத்தை கட்டி பிடித்ததால் ஒரு விதமான மன அமைதி கிடைக்கும், இந்த நடைமுறை தங்களுக்கு ஒரு புதுவிதமான அனுபவத்தை கொடுத்துள்ளது என தெரிவித்தனர்.
இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் கூறுகையில்:-
மரங்களை 2 நிமிடம் கட்டி பிடிப்பதால் மன அமைதி மற்றும் மன அழுத்தம் குறைகிறது. மேலும் ஆக்ஸிடோசின் என்ற ஹார்மோன் வெளிப்படுகிறது.
மரத்தை கட்டிப்பிடிக்கும் நிகழ்ச்சி வாரம் ஒரு முறை ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்றார். இதே நடைமுறையை ஆந்திராவில் உள்ள மற்ற பள்ளிகளிலும் கொண்டு வர உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- நடப்பு ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு டாட் பந்திற்கும் மரங்கள் நடப்பட்டு வருகிறது.
- இந்த ஐபிஎல் தொடரில் சிராஜ் 151 டாட் பந்துகளை வீசியுள்ளார்.
ஐபிஎல் 2025 இறுதிப் போட்டியில் பஞ்சாப் அணியை 6 ரன் வித்தியாசத்தில் வென்று ஆர்சிபி அணி கோப்பையை வென்றுள்ளது.
இதனையடுத்து நடப்பு ஐபிஎல் சீசனில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. அதில், அதிக டாட் பந்துகள் வீசிய பந்துவீச்சாளர் விருதை குஜராத் வீரர் முகமது சிராஜ் வென்றார். இந்த ஐபிஎல் தொடரில் அவர் 151 டாட் பந்துகளை வீசியுள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு டாட் பந்திற்கும் மரங்கள் நடப்படும் என்று பிசிசிஐ புதிய முன்னெடுப்பு எடுத்துள்ளது. அதன்படி நடப்பு ஐபிஎல் தொடரில் முகமது சிராஜ் தான் அதிக மரங்களை நட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்திய நாட்டில் முதன்முறையாக சுற்றுச்சூழலுடன் சேர்ந்து காலநிலை மாற்றத்திற்கும் ஒரு அமைச்சகத்தை உருவாக்கிய பெருமை நமது ஆட்சியையும் சேரும்.
- மரங்களை எல்லாம் வெட்டுவதற்கு நீர்வளத் துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்வதாக பல்வேறு தரப்புகளில் இருந்து செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது.
காங்கயம்:
கீழ்பவானி வாய்க்கால் கரையில் உள்ள மரங்களை வெட்டுவது சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய பேராபத்தை உருவாக்கும் என தமிழக நீர்வளத்துறை அமைச்சருக்கு தி.மு.க. சுற்றுச்சூழல் அணி கடிதம் எழுதியுள்ளது.
இது குறித்து தி.மு.க. சுற்றுச்சூழல் அணி மாநில செயலாளர் கார்த்திகேயசிவசேனாபதி நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-
ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களின் வழியாக செல்லக்கூடிய கீழ்பவானி வாய்க்காலின் இரு கரைகளிலும் இலட்சக்கணக்கான 50 ஆண்டுகளாக வளர்ந்த பெரிய மரங்கள் இருப்பது அறிந்ததே. பல வருடங்களுக்கு முன்பு ஆய்வு செய்தபோது கூட அம்மரங்களைக் கண்டு ரசித்ததாக கோவையிலே விவசாயிகளிடம் பேசும் போது நீங்கள் கூறினீர்கள். இப்பொழுது இந்த மரங்களை எல்லாம் வெட்டுவதற்கு நீர்வளத் துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்வதாக பல்வேறு தரப்புகளில் இருந்து செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது. அப்படி வெட்டுவதற்கு உறுதியாக அனுமதிக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன் தங்கள் கவனத்திற்கு இச்செய்தியை கொண்டு வருகிறோம்.
ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டங்களில் இருந்து பாசன விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், சூழலியலாளர்கள் தொடர்ந்து இரண்டு நாட்களாக நேரிலும் அலைபேசியிலும் மின்னஞ்சல் மூலமும் செய்திகளை அனுப்பி வருகிறார்கள். காலநிலை மாற்றம் என்ற மிகப்பெரிய ஆபத்து மனித குலத்திற்கு இன்று அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு சுற்றுச்சூழலை காக்கும் பொருட்டு இந்திய நாட்டிலேயே தி.மு.க.வின் 18 வது அணியாக கழக சுற்றுச்சூழல் அணியை உருவாக்கியவர் தலைவர் மு.க.ஸ்டாலின்.
அதேபோல 2021ம் வருடம் ஆட்சிக்கு வந்த பிறகு இந்திய நாட்டில் முதன்முறையாக சுற்றுச்சூழலுடன் சேர்ந்து காலநிலை மாற்றத்திற்கும் ஒரு அமைச்சகத்தை உருவாக்கிய பெருமை நமது ஆட்சியையும் சேரும். அதுபோக தமிழ்நாட்டின் பரப்பிலே 33 சதவிகிதம் வனப்பரப்பாக மாற்றியே ஆக வேண்டும் என்ற ஐக்கிய நாட்டின் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு முதல்வர் அயராது பாடுபட்டு வருகின்றார். இச்சூழலிலே வளர்ந்த 60 மற்றும் 70 வருடங்களாக இருக்கக்கூடிய மிகப் பெரிய மரங்களை வெட்டுவது சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய பேராபத்தை உருவாக்கும். பல்லுயிர் தன்மை அழியும்.
ஆதலால் அப்படி ஏதாவது ஒரு திட்டத்தை ஈரோடு பொதுப் பணித்துறை அதிகாரிகள் முன் வைத்தால் அதனை அமைச்சர் நிராகரித்து, இங்கே இருக்கக்கூடிய மரங்களையும், வாழ்வாதாரத்தையும், சுற்றுச்சூழலையும் பாதுகாத்திட வேண்டும். ஈரோடு, கரூர், திருப்பூர் பகுதி விவசாயிகளின் சார்பாகவும் பல லட்சம் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் சார்பாகவும் கேட்டுக் கொள்கின்றேன் .இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சமூக ஆர்வலரான ரா.பிரனேஷ் இன்பன்ட்ராஜ் இவர் இளம் விஞ்ஞானி, முனைவர் பட்டம், பல விருதுகளைப் பெற்றவர்.
- உலகத்தில் இருக்கும் முக்கிய பிரச்சனை பூமி வெப்பமயமாதல், நாம் நமது பஞ்ச பூதங்களை மாசில்லாமல் பாதுகாப்பது அவசியம், நோயில்லாமல் வாழ தூய்மையான காற்று அவசியம்.
தஞ்சாவூர்:
தஞ்சை பூக்கார முதல் தெருவை சேர்ந்தவர் ரா.பிரனேஷ் இன்பன்ட்ராஜ் (வயது 23). சமூக ஆர்வலரான இவர் இளம் விஞ்ஞானி, முனைவர் பட்டம், பல விருதுகளைப் பெற்றவர். லயன் தூதர்.
இவர் தஞ்சையில் பல இடங்களில் தனது சொந்த செலவில் மரக்கன்றுகள் வாங்கி நட்டு வருகிறார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
உலகத்தில் இருக்கும் முக்கிய பிரச்சனை பூமி வெப்பமயமாதல், நாம் நமது பஞ்ச பூதங்களை மாசில்லாமல் பாதுகாப்பது அவசியம். நோயில்லாமல் வாழ தூய்மையான காற்று அவசியம்.
இன்று காற்று மாசுபடுகிறது. மரங்களை அழிக்காமல் இருந்தாலே நாம் பெரும்பாலான பிரச்சனைகளை தவிர்த்து விடலாம். நடும் மரங்களை நாம் அனைவரும் ஒன்றாக பராமரித்தல் அவசியம்.
உலகில் மரங்களை நடுபவர்கள் மிகக் குறைவு.
ஆனால் மரங்களைப் பயன்படுத்துபவர்கள் அதிகம். மரம் மனிதனின் பயன்பாட்டிற்கு தன்னை அர்ப்பணிக்கிறது. மரங்களை நடுவது நிலையான தர்மத்திற்கு நிகரானது.
மரம் வளர்க்க முயல்பவர்களுக்கு துணை நிற்க வேண்டும்.
இதன் மூலம் இயற்கை வளங்களை நிச்சயம் பாதுகாக்க முடியும்.
பழங்காலத்தில் நமது முன்னோர்கள் 100 ஆண்டை கடந்தும் வாழ்ந்தார்கள் என்றால் அதற்கு முக்கிய காரணம் இயற்கையை பேணி பாதுகாத்தது தான். நாம் உயிர் வாழ ஆக்சிஜன் முக்கியமானது.
அந்த ஆக்சிஜனை மரங்கள் கொடுக்கிறது.
தவிர்க்க முடியாத காரணத்தால் ஒரு மரத்தை வெட்ட நேரிட்டால் அதற்கு பதில் 100 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும். மற்றப்படி மரங்களை வெட்ட நினைக்க கூடாது.
நான் ஆண்டுக்கு 500 மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க முடிவு செய்து அதறகான பணிகளை தொடங்கி விட்டேன். அனைவரும் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 12 கிலோமீட்டர் தூரம் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.
- சமூக ஆர்வலர்கள் கிளைகளை மட்டும் வெட்டுமாறு அறிவுறுத்தினர்.
பல்லடம் :
பல்லடத்தில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக சாலை விரிவாக்கம் செய்யக்கோரி பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்திருந்தனர். அந்த வகையில் பல்லடம் முதல் காரணம்பேட்டை வரை சுமார் 12 கிலோமீட்டர் தூரம் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. சாலை விரிவாக்க பணிகளுக்காக பல்லடம் அரசு மருத்துவமனை எதிரில் இருந்த நூறாண்டுகளுக்கு மேலான மரங்களை நேற்று வெட்ட முயன்றனர். அப்போது அதனை தடுத்த சமூக ஆர்வலர்கள் கிளைகளை மட்டும் வெட்டுமாறு அறிவுறுத்தினர்.
இதையடுத்து அங்கிருந்த மரங்களின் கிளைகள் மட்டும் வெட்டப்பட்டது. இதனால் நூறாண்டுக்கும் மேல் பழமையான மரங்கள் முழுமையாக வெட்டப்படாமல் காப்பாற்றப்பட்டதாக அங்கிருந்த பொதுமக்கள் தெரிவித்தனர்.
- அபிராமி நகர் பகுதியில் மரம் விழுந்ததில் 2 மின்கம்பங்கள் சேதமடைந்தது.
- இன்று காலை முதலே மாநகராட்சி ஊழியர்கள் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
வடவள்ளி,
கோவை வடவள்ளி பகுதியில் நேற்று இரவு காற்றுடன் கனமழை பெய்தது. மழையின் காரணமாக சுமார் 15-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தது.
அபிராமி நகர் பகுதியில் மரம் விழுந்ததில் 2 மின்கம்பங்கள் சேதமடைந்தது. மேலும் எஸ்.பி.கே. நகர், அருண் நகர், எம்.ஜி.ஆர் நகர், ராகவேந்திரா நகர், மகாராணி அவென்யூ உள்ளிட்ட பகுதியில் மரம் விழுந்தது. மேலும் பலத்த காற்று வீசியதால் மருதமலை சாலையில் உள்ள தனியார் தியேட்டர் முன்பு வைக்கப்பட்ட தகரம் சாய்ந்தது.
இதனால் வடவள்ளி சுற்றுவட்டார பகுதியில் நீண்ட நேரம் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர். அதேபோல வானங்கள் செல்ல வழி இல்லாமல் தவித்தனர். இன்று காலை முதலே மாநகராட்சி ஊழியர்கள் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
- 2007 இல், கிராமத் தலைவர் பாலிவால் என்பவரின் 17 வயது மகள் கிரண் நீரிழப்பு காரணமாக உயிழந்தார்.
- இதயம் உடைந்த பாலிவால் மகள் நினைவாக கிராமத்தின் நுழைவாயிலுக்கு அருகில் ஒரு மரத்தை நட்டார்.
'இன்னும் ஒரு மகன் பிறந்தால் நன்றாக இருக்குமே..' என்று பேராசைப்படும் ஒரு நாட்டில், ராஜஸ்தானில் உள்ள பிப்லாந்த்ரி என்ற ஒரு சிறு கிராமத்தில் பெண் குழந்தைகளைக் காப்பாற்றவும், அதே நேரத்தில் பசுமையைப் பாதுகாக்கவும் ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அங்கு ஒவ்வொரு முறை பெண் குழந்தை பிறக்கும்போதும் 111 மரங்களை நடுகிறார்கள்.
2007 இல், கிராமத் தலைவர் பாலிவால் என்பவரின் 17 வயது மகள் கிரண் நீரிழப்பு காரணமாக உயிழந்தார். இதயம் உடைந்த பாலிவால் மகள் நினைவாக கிராமத்தின் நுழைவாயிலுக்கு அருகில் ஒரு மரத்தை நட்டார். ஏன் இந்த நிகழ்வை ஒரு பரந்த திட்டமாக மாற்றக்கூடாது என்று அவர் எண்ணினார். விரைவில், மற்ற கிராமவாசிகளும் அவரது வழியைப் பின்பற்றத் தொடங்கினர்.
பளிங்குச் சுரங்கங்களினால் சுரண்டப்பட்ட மலைகளினால் நிலம் வறண்டு, பசுமை சிதைந்திருந்த இப்பகுதியில் இந்த மேன்மையான திட்டத்தால் 3,50,000 க்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளன. மா, நெல்லி முதல் சந்தனம், வேம்பு, மூங்கில் வரை. ஒரு காலத்தில் தரிசாக இருந்த நிலங்களில் மரங்கள் வளர்ந்து 1,000 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டுள்ளது.
மரம் நடுவதுடன், பெண் குழந்தைகளின் பெற்றோர்களும் 18 வயதுக்கு முன் தங்கள் மகள்களுக்குத் திருமணம் செய்து வைக்க மாட்டோம் என்றும், பள்ளிப் படிப்பை முடிக்க அனுமதிப்போம் என்றும் உறுதிமொழிப் பத்திரத்தில் கையெழுத்திடுகிறார்கள். கிராமவாசிகள் ஒவ்வொரு பெண்ணுக்கும் ரூ. 31,000 மதிப்பில் ஒரு நிலையான வைப்புக் கணக்கைத் தொடங்கி, அவள் 18 வயதை எட்டியதும், மகளின் கல்விக்காகவோ அல்லது திருமணத்திற்காகவோ அந்தத் தொகையைச் செலவிடுகிறார்கள்.
பிப்லாந்த்ரியின் வளர்ந்து வரும் காடு, நீர் மேலாண்மையை மேம்படுத்தும்போது இந்திய கிராமங்கள் எப்படி பசுமையாக மாறும் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
-சித்ரா ரங்கராஜன்
- இடி, மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது.
- மரம் முறிந்து ஒரு வீட்டின் மீது விழுந்ததில் மேற்கூரை சேதம்
பந்தலூர்
நீலகிரி மாவட்டத்தில் கோடை மழை அவ்வப்போது பரவலாக பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று காலை முதலே பந்தலூர் பகுதியில் வெயில் அடித்தது. பின்னர் மதியத்துக்கு மேல் வாகனம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து இடி, மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை ஒரு மணி நேரத்துக்கும் மேல் பலத்த மழையாக பெய்தது.
பந்தலூர், உப்பட்டி, பொன்னானி, பிதிர்காடு, நெலாக்கோட்டை, பாட்டவயல், அம்பலமூலா, அய்யன்கொல்லி, கொளப்பள்ளி, குறிஞ்சி நகர், சேரம்பாடி, எருமாடு, சேரங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் முக்கிய சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
மேலும் கால்வாய்களில் வெள்ளம் ஆறுபோல் ஓடியது. கொளப்பள்ளி குறிஞ்சி நகரில் உள்ள பகவதி அம்மன் கோவிலையொட்டி உள்ள மரம் முறிந்து ஒரு வீட்டின் மீது விழுந்தது. அப்போது வீட்டில் இருந்த செவ்வந்தி என்பவர் சத்தம் கேட்டு உடனே வெளியே ஓடி வந்தார். இதில் வீட்டின் மேற்கூரைகள் உடைந்தன. அதிர்ஷ்டவசமாக பெண் உயிர் தப்பினார். தகவல் அறிந்த கூடலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மார்ட்டின் மற்றும் வீரர்கள் மரத்தை வெட்டி அகற்றினர்.
இதேபோல் புஞ்சகொல்லியில் ஒரு வீட்டின் மீது மரக்கிளை முறிந்து விழுந்தது. பலத்த மழையால் பிதிர்காடு அருகே ஆணையப்பன் சோலையில் சாலையின் குறுக்கே மரம் முறிந்து விழுந்தது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் மின் கம்பிகள் மீது மரம் சாய்ந்ததால், மின்தடை ஏற்பட்டது. இதன் காரணமாக அப்பகுதி பொதுமக்கள் அவதியடைந்தனர். தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
ஊட்டியில் நேற்று மதியம் 12 மணியளவில் மழை பெய்தது. 3 மணி நேரம் விட்டு, விட்டு மழை பெய்தது. இதனால் சுற்றுலா தலங்களுக்கு வந்த சுற்றுலா பயணிகள், வேலைக்கு சென்ற பொதுமக்கள் அவதிப்பட்டனர். மழை காரணமாக ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அரவேணு,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மார்க்கெட் அருகில் ஒரு ராட்சத மரம் வேரோடு நடுரோட்டில் சாய்ந்தது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு படை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த மரத்தை வெட்டி சாலையில் இருந்து அப்புறப்படுத்தினார்.
இதற்கிடையே கோடநாடு சாலை புதூர் அருகே, ஒரு மரம் முறிந்து சாலையில் விழுந்தது இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது எனவே தீயணைப்பு படை போலீசார் உரிய குழுவினருடன் சம்பவ இடத்துக்கு சென்று, அங்கு கிடந்த மரத்தை வெட்டி அகற்றினர்.
- நெடுஞ்சாலைகளில் 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
- மகிழம், வேம்பு, புனியன், நாவல், சாக்குகொன்றை ஆகிய மர வகைகள் நடப்பட்டு வருகின்றன.
சங்கரன்கோவில்:
முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி கடந்த 7-ந் தேதி சென்னையில் நடந்தது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் சார்பில் மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது போல கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகளில் 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதன் மூலம் மாநில நெடுஞ்சாலைகளில் இடைவெளி இல்லாமல் மரங்கள் வளர்க்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.இதில் மகிழம், வேம்பு, புனியன், நாவல், சாக்குகொன்றை ஆகிய மர வகைகள் நடப்பட்டு வருகின்றன.
முதல்-அமைச்சரின் இந்த உத்தரவினை தொடர்ந்து சங்கரன்கோவில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நெல்லை சாலையில் மரக்கன்று கள் நடும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு உதவி கோட்ட பொறியாளர் உலகம்மாள் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் பெரியதுரை, நகர செயலாளர் பிரகாஷ், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர்கள் பலவேசம், முத்துமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க .செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து நெடுஞ்சாலை துறை பணி யாளர்களிடம் மரக்கன்றுகளை பத்திரமாக பாதுகாத்து அதை நல்ல முறையில் வளர்க்க வேண்டும் என ஆலோசனை வழங்கினார்.
இதில் தி.மு.க.வைச் சேர்ந்த வீரமணி, வீராசாமி, ஜெயக்கு மார் நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- 9 ஏக்கரில் முந்திரி விவசாயம் செய்து வந்தார்.
- பல லட்சம் மதிப்பிலான முந்திரி மரங்கள் எரிந்து நாசமானது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தொடுவாய் கிராமத்தைச் சேர்ந்த கலைவாணி என்பவருக்கு சொந்தமான 4 ஏக்கர் மற்றும் பழையாறு பகுதியைச் சேர்ந்த வைத்தியலிங்கம் என்பவருக்கு சொந்தமான 5 ஏக்கர் உள்பட 9 ஏக்கர் நிலப்பரப்பில் முந்திரி விவசாயம் செய்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று மதியம் இவர்களது முந்திரி தோப்பில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.
தகவலின் பெயரில் அங்கு விரைந்து வந்த பூம்புகார் மற்றும் சீர்காழி தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்க நீண்ட நேரம் முயற்சி செய்து தீயை அணைத்தனர்.
இந்த திடீர் தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான முந்திரி மரங்கள் எரிந்து நாசமாகி உள்ளது. மேலும் இது குறித்து சீர்காழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- சிவகிரி பேரூராட்சி பகுதியில் வடிகால் சுத்தம் செய்தல்,போஸ்டர்கள் அகற்றுதல் பணிகள் நடைபெற்றது.
- பேரூராட்சி தலைவர் கோமதிசங்கரி சுந்தரவடி வேலு உள்ளிட்டோர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
சிவகிரி:
சென்னை பேரூராட்சி இயக்குநர் உத்தரவின்பேரில், நெல்லை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் அறிவுரையின்படி, சிவகிரி பேரூராட்சி பகுதியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின்படி வடிகால் சுத்தம் செய்தல், பஸ் நிலையத்தில் போஸ்டர்களை அகற்றுதல் ஆகிய பணிகளை தொடர்ந்து சிவகிரி வனச்சரக அலுவலகம் அருகே மரக்கன்றுகள் நடும் பணி நடை பெற்றது. பேரூராட்சி தலைவர் கோமதிசங்கரி சுந்தரவடி வேலு, துணைத்தலைவர் லட்சுமிராமன், செயல் அலுவலர் வெங்கடகோபு ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு வைத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் அனைத்து கவுன்சிலர்கள், அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.






