என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "environment"

    • இந்திய நாட்டில் முதன்முறையாக சுற்றுச்சூழலுடன் சேர்ந்து காலநிலை மாற்றத்திற்கும் ஒரு அமைச்சகத்தை உருவாக்கிய பெருமை நமது ஆட்சியையும் சேரும்.
    • மரங்களை எல்லாம் வெட்டுவதற்கு நீர்வளத் துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்வதாக பல்வேறு தரப்புகளில் இருந்து செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது.

    காங்கயம்:

    கீழ்பவானி வாய்க்கால் கரையில் உள்ள மரங்களை வெட்டுவது சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய பேராபத்தை உருவாக்கும் என தமிழக நீர்வளத்துறை அமைச்சருக்கு தி.மு.க. சுற்றுச்சூழல் அணி கடிதம்‌ எழுதியுள்ளது.

    இது குறித்து தி.மு.க. சுற்றுச்சூழல் அணி மாநில செயலாளர் கார்த்திகேயசிவசேனாபதி நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-

    ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களின் வழியாக செல்லக்கூடிய கீழ்பவானி வாய்க்காலின் இரு கரைகளிலும் இலட்சக்கணக்கான 50 ஆண்டுகளாக வளர்ந்த பெரிய மரங்கள் இருப்பது அறிந்ததே. பல வருடங்களுக்கு முன்பு ஆய்வு செய்தபோது கூட அம்மரங்களைக் கண்டு ரசித்ததாக கோவையிலே விவசாயிகளிடம் பேசும் போது நீங்கள் கூறினீர்கள். இப்பொழுது இந்த மரங்களை எல்லாம் வெட்டுவதற்கு நீர்வளத் துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்வதாக பல்வேறு தரப்புகளில் இருந்து செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது. அப்படி வெட்டுவதற்கு உறுதியாக அனுமதிக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன் தங்கள் கவனத்திற்கு இச்செய்தியை கொண்டு வருகிறோம்.

    ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டங்களில் இருந்து பாசன விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், சூழலியலாளர்கள் தொடர்ந்து இரண்டு நாட்களாக நேரிலும் அலைபேசியிலும் மின்னஞ்சல் மூலமும் செய்திகளை அனுப்பி வருகிறார்கள். காலநிலை மாற்றம் என்ற மிகப்பெரிய ஆபத்து மனித குலத்திற்கு இன்று அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு சுற்றுச்சூழலை காக்கும் பொருட்டு இந்திய நாட்டிலேயே தி.மு.க.வின் 18 வது அணியாக கழக சுற்றுச்சூழல் அணியை உருவாக்கியவர் தலைவர் மு.க.ஸ்டாலின்.

    அதேபோல 2021ம் வருடம் ஆட்சிக்கு வந்த பிறகு இந்திய நாட்டில் முதன்முறையாக சுற்றுச்சூழலுடன் சேர்ந்து காலநிலை மாற்றத்திற்கும் ஒரு அமைச்சகத்தை உருவாக்கிய பெருமை நமது ஆட்சியையும் சேரும். அதுபோக தமிழ்நாட்டின் பரப்பிலே 33 சதவிகிதம் வனப்பரப்பாக மாற்றியே ஆக வேண்டும் என்ற ஐக்கிய நாட்டின் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு முதல்வர் அயராது பாடுபட்டு வருகின்றார். இச்சூழலிலே வளர்ந்த 60 மற்றும் 70 வருடங்களாக இருக்கக்கூடிய மிகப் பெரிய மரங்களை வெட்டுவது சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய பேராபத்தை உருவாக்கும். பல்லுயிர் தன்மை அழியும்.

    ஆதலால் அப்படி ஏதாவது ஒரு திட்டத்தை ஈரோடு பொதுப் பணித்துறை அதிகாரிகள் முன் வைத்தால் அதனை அமைச்சர் நிராகரித்து, இங்கே இருக்கக்கூடிய மரங்களையும், வாழ்வாதாரத்தையும், சுற்றுச்சூழலையும் பாதுகாத்திட வேண்டும். ஈரோடு, கரூர், திருப்பூர் பகுதி விவசாயிகளின் சார்பாகவும் பல லட்சம் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் சார்பாகவும் கேட்டுக் கொள்கின்றேன் .இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 4 ஆயிரம் ஏக்கர் உளுந்து மற்றும் பச்சை பயறு பயிரிடுவதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    • பயறு வகை பயிர்களை பயிரிடுவதன் மூலம் மண்வளம்மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது.

    வேதாரண்யம்:

    தலைஞாயிறு பகுதியில் நெல் அறுவடைக்குப்பின் உளுந்து, பயறு சாகுபடி செய்து விவசாயிகள் பயன்பெறலாம் என தலைஞாயிறு வேளாண்மை உதவி இயக்குனர் கருப்பையா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    5 ஆயிரம் ஏக்கர் இலக்கு தலைஞாயிறு வட்டாரத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் நெல் தரிசில் பயறு சாகுபடியை ஊக்கப்படுத்தும் திட்டத்தின் கீழ் 4 ஆயிரம் ஏக்கர் உளுந்து மற்றும் பச்சை பயறு பயிரிடுவதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    உளுந்து மற்றும் பச்சைபயறு பயிரிடுவதற்கு தேவைப்படும் உயர் விளைச்சல் தரும் சான்று விதைகள், உயிர் உரங்கள், நுண்ணூட்ட கலவை ஆகியவை மானிய விலையில் கொத்தங்குடி, நீர்முளை, பனங்காடி, தலைஞாயிறு ஆகிய வேளாண்மை கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டு, தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

    குறைந்த நாட்களில் அதிக மகசூல் விவசாயிகள் நெல் அறுவடைக்கு பின் பயறு வகை பயிர்களை பயிரிடுவதன் மூலம் மண்வளம்மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது.

    இதை சாகுபடி செய்வதால் குறைந்த நாட்களில் விவசாயிகளுக்கு அதிக மகசூல் கிடைக்கிறது. தலைஞாயிறு பகுதியில் தற்போது நெல் அறுவடை பணிகள் நிறைவு பெறும் நிலையில், உளுந்து, பயறு சாகுபடி செய்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அன்னை சத்யா விளையாட்டு அரங்கம் அருகிலிருந்து விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டிகள் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவிற்கு நடைபெற உள்ளது.
    • வெற்றி பெறுபவர்களுக்கு பரிசும் மற்றும் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

    தஞ்சாவூா்:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் (சி.ஐ.டி.யூ) கும்பகோணம் மண்டலம் சார்பில் சுற்றுச்சூழலை பாதுகாத்திட வேண்டும்.

    பொது போக்குவரத்தை பலப்படுத்திட, விபத்தை தடுத்திட, பொதுத் துறையை பாதுகாத்திட வலியுறுத்தி வருகிற 12-ம் தேதி காலை 6 மணி அளவில் தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கம் அருகிலிருந்து விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டிகள் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவிற்கு நடைபெற உள்ளது. நுழைவு கட்டணம் ரூ. 200 மட்டும். முன் பதிவிற்கு நாளை (வியாழக்கிழமை) கடைசி நாள் ஆகும். நாளை மாலை 6 மணிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும்.

    போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசும் மற்றும் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

    மாரத்தானில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவ-மாணவிகள் மற்றும் ஆண்கள், பெண்கள் 9894377805, 7010411396 ஆகிய செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வீரமரசன்பேட்டை கிராமத்தில் மாதிரி கிராம சுற்றுச் சூழல் மற்றும் சமுதாய விழிப்புணர்வு நடந்தது.
    • மண்வளம் மற்றும் சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு பேரணி நடந்தது.

    பூதலூர்:

    பூதலூர் அருகே உள்ள வீரமரசன்பேட்டை கிராமத்தில் தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் 2022-23 மாதிரி கிராம சுற்றுச் சூழல் மற்றும் சமுதாய விழிப்புணர்வு பயிற்சி பூதலூர் வேளாண்மை உதவி இயக்குநர் ராதா தலைமையில் நடைபெற்றது.

    வேளாண் அலுவலர் சுரேஷ் வரவேற்றார்.

    தஞ்சை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கோமதி தங்கம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நீர்வள நில வள திட்ட கையேயட்டினை வழங்கி நீர்வள நில வள திட்ட முக்கியத்துவங்களை எடுத்து கூறினார்.

    வேளாண்கல்லூரி நோயியல் பேராசிரியர் ராமலிங்கம், பூச்சியல் துறை பேராசிரியர் சேகர் ஆகியோர் கலந்து கொண்டு வேளாண்மை தொழில்–நுட்பங்களை விளக்கி பேசினார்கள்.

    வீரமரசன்பேட்டை ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி மாணவர்கள் விவசாயிகளுக்கு மண்வளம் மற்றும் சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு பேரணி நடந்தது.

    தமிழ்நாடு நீர்வள நிலவளம் திட்டத்தின் கீழ் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளிக்கு தகவல்கல்வி பரிமாற்ற திட்டத்தின் கீழ் தொலைக்காட்சி வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் எழிலரசி, மற்றும் முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    துணை வேளாண்மை அலுவலர் ஜெயராமன் நன்றி கூறினார்.

    நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் எழிலமுது மற்றும் அட்மா திட்டத்தின் பாலமுருகன் மற்றும் பலர் செய்து இருந்தனர்.

    • நஞ்சராயன் குளம் பறவைகள் சரணாலயத்தில் உலக சுற்றுச்சூழல் விழிப்புணா்வு முன்னோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
    • நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிக்கண்ணா கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் செய்திருந்தாா்.

    திருப்பூர்:

    திருப்பூா் வனச் சரகம், சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம் ஆகியவை சாா்பில் நஞ்சராயன் குளம் பறவைகள் சரணாலயத்தில் உலக சுற்றுச்சூழல் விழிப்புணா்வு முன்னோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நாட்டு நலப் பணித் திட்டம் அலகு- 2 ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து திருப்பூா் வனச் சரக அலுவலா் சுரேஷ்கி ருஷ்ணா பேசியதாவது:-

    நஞ்சராயன் பறவைகள் சரணாலயத்தை இப்பகுதியில் வசிக்கக்கூடிய ஒவ்வொரு வருக்கும் சொந்தமானதாக கருத வேண்டும். ஒருமுறை பயன்படு த்தப்பட்ட நெகிழிப்பையை சரணாலயத்துக்குள் போடக்கூடாது. நெகிழி பைகளால் பறவைகளுக்கு பெரும் ஆபத்து ஏற்படுவதுடன், உடல் நலத்துக்கும் கேடு விளைவிக்கும். சரணாலயத்து க்கு வரக்கூடிய பறவைகளைப் பாதுகாக்க வேண்டும், எந்த ஒரு தீங்கையும் விளைவிக்க க்கூடாது. இன்றைய காலகட்டத்தில் சுற்றுச் சூழலைப் பாதுகாப்பது மிகவும் அவசியமானது என்றாா். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிக்கண்ணா கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் செய்திருந்தாா்.

    • பெண்கள் மற்றும் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர்.
    • முடிவில் ஊராட்சி செயலாளர் ரெங்கராசு நன்றி கூறினார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த வெள்ளப்பள்ளம் கிராமத்தில் தேசிய தலித் கண்காணிப்பகம், புதுடெல்லி தலித் மனித உரிமைக்கான தேசிய அமைப்பு, மதுரை காஸ்கோ சேவை நிறுவனம் மற்றும் வெள்ளப்பள்ளம் ஊராட்சி மன்றம் ஆகியவை இணைந்து உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு பேரணி நடந்தியது. ஊராட்சி தலைவர் துரைசாமி தலைமை தாங்கி பேரணியை தொடங்கி வைத்தார்.

    முன்னதாக பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வது, தனிப்பது, பேரிடருக்கான முன்னெச்சரிக்கை தயார்படுத்துவது மற்றும் அரசு செயல்படுத்தி வரும் சமூக பாதுகாப்பு செயல்பாடுகள் குறித்து மாநில அளவிலான பயிற்சியாளர் அன்னப்பூ ரணி, மாநில அளவிலான தேசிய கண்காணிப்பு ஒருங்கிணைப்பாளரும், காஸ்கோ நிறுவனருமான துரைபாண்டி ஆகியோர் பெண்கள் மற்றும் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை நாகை மாவட்ட தலித் கூட்டமைப்பு தலைவர் முருகேசன் செய்திருந்தார். முடிவில் ஊராட்சி செயலாளர் ரெங்கராசு நன்றி கூறினார்.

    • பிளாஸ்டிக் மாசுபாட்டை வெல்வோம் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியப்படி பேரணியாக புறப்பட்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் , பள்ளிக்கல்வித்துறை மற்றும் கவின்மிகு தஞ்சை இயக்கத்தின் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இன்று காலை தஞ்சாவூர் ரெயில் நிலையம் முன்பு பிளாஸ்டிக் மாசுபாட்டை வெல்வோம் என்பதனை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணியை நடத்தியது. இப்பேரணியினை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில் மாணவ- மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு பிளாஸ்டிக்கை தவிர்ப்போம், மண்வளம் காப்போம், துணிப்பையை பயன்படுத்து வோம் என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியப்படி பேரணியாக புறப்பட்டனர்.

    இந்தப் பேரணி ஜூபிடர் தியேட்டர் முன்பு முடிவடைந்தது.

    இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் விஜயபிரியா, உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சித்ரா, தாசில்தார் சக்திவேல், மாநகர நல அலுவலர் சுபாஷ் காந்தி, கவின்மிகு தஞ்சை இயக்கம் தலைவர் டாக்டர் ராதிகா மைக்கேல், பொறியாளர் முத்துக்குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • தொண்டி அருகே சுற்றுச்சூழல் தின விழா நடந்தது.
    • 150-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    தொண்டி

    தொண்டி அருகே வட்டாணம் சமுதாயக் கூடத்தில் வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனம் சார்பாக உலக சுற்றுச்சூழல் தினம் திட்ட மேலாளர் சந்திர எபினேசர் தலை மையில் கொண்டா டப்பட்டது. வட்டாணம் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சுந்தாயி முன்னிலை வகித்தார்.

    ஆசிரியர் குந்தப்பன் வரவேற்று பேசினார். பஞ்சாயத்து தலைவர்கள் ராமநாதன் மற்றும் மோகன் உட்பட சுமார் 150-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட அனை வருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

    • ஆமை முட்டையிடும் காலம் முடிவுக்கு வந்துள்ளது.
    • உண்மையில், ஆமைக் குஞ்சு பொரிப்பில் இந்த ஆண்டு சிறந்த ஆண்டாக அமைந்துள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் முதல் ஏப்ரல் முதல் வாரம் வரை கடலோரப் பகுதியில் அதிகாலை நேரங்களில் ஆமைகள் முட்டையிடும். இம்முட்டைகளை நீண்ட காலமாக நாய்களும், பறவைகளும் சிதைப்பதால், கடல் ஆமைகள் அழிந்து வரும் உயிரினங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

    இந்நிலையில், தமிழக கடலோரப் பகுதியில் மீன் வளத்தை அதிகரிக்கும் நோக்கில், அழிந்து வரும் கடல் ஆமைகளை பாதுகாக்கும் விதமாக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு, வனத்துறை சார்பில் பெசன்ட் நகர் உள்ளிட்ட 3 இடங்களில் ஆமைக் குஞ்சு பொரிப்பகங்கள் அமைக்கப்பட்டன. தொடர்ந்து படிப்ப டியாக தமிழக கடலோரப் பகுதிகளில் பல இடங்களில் பொரிப்பகங்கள் அமைக்கப்பட்டு கடந்த 2016-ம் ஆண்டு முதல் தமிழக கடலோர மாவட்டங்களில் ஆமை முட்டையிடும் பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள இடங்களில் ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு, பொரிப் பகங்களில் அடைகாத்து, குஞ்சுகள் வெளியே வந்த பிறகு, கடலில் விடப்பட்டு வருகிறது.

    இப்பணிகள் தொடங்கப்பட்டு 7 ஆண்டுகள் நிறை வடைந்துள்ள நிலையில், இதுவரை இல்லாத அளவாக இந்த ஆண்டு அதிக எண்ணிக்கையில் ஆமைக் குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளன.

    இது தொடர்பாக சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை செயலர் சுப்ரியா சாகு, தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

    இந்த ஆண்டு ஆமை முட்டையிடும் காலம் முடிவுக்கு வந்துள்ளது. இந்த ஆண்டு 35 ஆமைக் குஞ்சு பொரிப்பகங்கள் அமைக்கப்பட்டன. அங்கு குஞ்சு பொரிக்கப்பட்ட 1 லட்சத்து 83 ஆயிரம் ஆமைக் குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளன.

    கடந்த 7 ஆண்டுகளில் இது அதிகபட்ச அளவாகும். இதற்காகப் பணியாற்றிய தன்னார்வலர்கள் மற்றும் வன களப்பணியாளர்களின் அளப்பரிய பங்களிப்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உண்மையில், ஆமைக் குஞ்சு பொரிப்பில் இந்த ஆண்டு சிறந்த ஆண்டாக அமைந்துள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சுற்றுச்சூழலை பாதிக்காமல் களைச் செடிகளை நீக்கலாம்.
    • உள்ளே உருவாகும் வெப்பம் களை விதைகளை அழித்துவிடும்.

    கீழக்கரை

    பயிர்களுக்கு கிடைக்கும் நீர், ஊட்டச்சத்து, சூரிய ஒளி ஆகியவற்றை களைச் செடிகள் உட்கொண்டு பற்றாக்குறை நிலையை ஏற்படுத்துகிறது. ரசாயனங்களைக் கொண்டு களைச் செடிகளை அகற்றுவது தற்போது வழக்கமாகிவிட்டது. ஆனால் ரசாயனங்கள் சுற்றுச்சூழலை மாசு படுத்துகின்றன.களை கொல்லிகளை பயன்படுத்து வதன் மூலம் மண் மற்றும் நீரின் தன்மை பாதிக்கப்ப டுகிறது. அங்கக வேளாண் முறையில் சுற்றுச்சூழலை பாதிக்காமல் பல்வேறு முறைகளில் களைச் செடிகளை நீக்க முடியும்.

    களை வித்துக்கள் உழவுமுறைக்கு தகுந்தாற்போல் பரவிக் கிடக்கும். பொதுவாக உழவு செய்யாத நிலத்தில் அவை மேல்மட்டத்தில் 5 செமீ ஆழம் வரை ஊடுருவி இருக்கும். இயற்கை கலப்பை கொண்டு உழுத நிலத்தில் களை வித்துக்கள் சீராக பரவி இருக்கும். களை வித்துக்களின் பரவுத் தன்மை வளர்ச்சி ஆகியவை உழவு முறையின் அடிப்படை யில் கட்டுப்படுத்தபடு கின்றன.

    சுத்தமான பயிர் வித்துக்களை உபயோகித்தல், புல் வெட்டுதல், மக்கிய குப்பைகளை மட்டும் உபயோகித்தல், வயல் ஓரங்களில் உள்ள இடங்களை சுத்தமாக வைத்தல் போன்ற முறைகளை பின்பற்றினால் களை செடிகளை நீக்க முடியும். பயிர் சுழற்சியில் மண்ணின் வளம் மேம்படுவது மட்டுமல்லாமல் களைகளின் வளர்ச்சியும் கட்டுப்படுத்தப்படுகிறது.

    சில மூடு பயிர்கள் சிவப்பு கிராம்பு, எண்ணெய் விதைச் செடிகள், தீவனப்பயிர்கள், முள்ளங்கி போன்றவை வேகமாகவும் அடர்த்தியாகவும் வளரக் கூடியவை. இவை நிலத்தை மூடுவதுபோல வளர்ந்து களை வளர்ச்சியை கட்டுப்படுத்தும். பயிர் வரிசைக்கு இடையில் நிலக்கடலை, தட்டைபயறு, கொள்ளு போன்றவற்றை ஊடுபயிராக வளர்த்தும் களைச் செடிகளைக் கட்டுப்படுத்த முடியும்.

    நிலப்போர்வை நிலத்தை மூடி களைச் செடிகளின் விதை முளைப்பதை தடுக்க வல்லது. ஒளி ஊடுருவதைத் தடுப்பதால் களைச் செடிகள் கட்டுப்படுத்த படுகின்றன. வைக்கோல், புல், மரப்பட்டை, மக்கிய குப்பை மற்றும் கழிவுகள் போன்றவற்றை நில போர்வையாக பயன்படுத்த லாம். வைக்கோல், புல் விதையின்றி சுத்தமாக இருத்தல் மிக அவசியம். இவை மக்கக்கூடியவை. ஆகவே மண் வளத்திற்கும் உகந்தது. செந்துார மரங்களின் இலை, பனை ஓலைகள் போன்றவற்றை பயன்படுத்தலாம். அங்கக மூடாக்கு நிலப்போர்வை அமைத்து ஆண்டு முழுவதும் களைகள் பெருகாமல் கவனித்து கொள்ளலாம்.

    வெயில் மற்றும் குளிர் காலங்களின் போது அங்கக உழவர்கள் நிலத்தை மண் வெப்பமூட்டும் முறையின் மூலம் மேற்பரப்பில் உள்ள களை விதைகளை அழிக்கமுடியும். இதில் பிளாஸ்டிக் விரிப்புகளை உழவு செய்த நிலத்தின் மீது விரித்து அவற்றின் ஓரங்களை இறுக மூடி விட வேண்டும். உள்ளே உருவாகும் வெப்பம் களை விதைகளை அழித்துவிடும்.

    பயிர் பாகங்களில் குறிப்பாக வேர்ப்பகுதியில் சுரக்கும் ஒருவித வேதி பொருள் களையை வளர விடாமல் தடுக்கிறது. உதாரணமாக சோளம், மக்காசோளம், வெள்ளரி, கடுகு, சூரியகாந்தி மற்றும் சோயாமொச்சை ஆகிய பயிர்களை களை தடுப்பு பயிராக பயன்படுத்தலாம். இவ்வாறு மேற்கொண்ட உத்திகளை பயன்படுத்தி அங்கக வேளாண்மை செய்யும் விவசாயிகள் களைகளைக் கட்டுப்படுத்தலாம்.

    மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநர் சிவகாமி தெரிவித்துள்ளார்.

    • ஜி-20 மாநாட்டில் இந்தியா சுற்றுப்புற சூழல் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது.
    • கருத்தரங்கத்தில் 130 தேசிய தரைப்படை, கப்பற்படை மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் தேசிய மாணவர் படை சார்பில் ஜி-20 அமைப்பின் தலைமைத்துவமும், சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு பற்றிய விழிப்பணர்வும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். தேசிய மாணவர் படையின் கடற்படை அதிகாரி வீ.சிவஇளங்கோ வரவேற்று பேசினார்.

    கல்லூரி தாவரவியல் துறைதலைவர் சி.பி.பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், ஜி-20 மாநாட்டில் இந்தியா சுற்றுப்புற சூழல் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. இதில் மாணவர்களின் பங்களிப்பு மிக அவசியம், என்றார். தேசிய மாணவர் தரைப்படை அதிகாரி லெப்டினன்ட் சிவமுருகன் நன்றி கூறினார்.

    தூத்துக்குடி 29-வது தரைப்படை கம்பெனி ஆபீஸர் கமாண்டிங் லெப்டினன்ட் கர்ணல் பிரகோஷ் உத்தரவின் பேரில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில், தேசிய மாணவர் படை அதிகாரிகள் சேக்பீர் முகம்மது காமில், சத்யன், ஐசக் கிருபாகரன், சூரிய பொன்முத்து ேசகரன் மற்றும் கே.ஏ. மேல்நிலைப்பள்ளி எல்.கே. மேல்நிலைப்பள்ளி, டி.டி.டி.ஏ. மேல்நிலைப்பள்ளி, புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆதித்தனார் கல்லூரியை சேர்ந்த 130 தேசிய தரைப்படை, கப்பற்படை மாணவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் ஆலோசனைப்படி தேசிய மாணவர்படை அதிகாரிகள் சிவமுருகன், சிவ இளங்கோ மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.

    • இளமை தோற்றத்துடன்தான் காட்சி அளிக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கிறது.
    • வயதையும், தோற்ற பொலிவையும் மரபணுவும், சுற்றுச்சூழல் காரணிகளும் பாதிக்கலாம்.

    முதுமை பருவத்தை எட்டினாலும் கூட இளமை தோற்றத்துடன்தான் காட்சி அளிக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கிறது. அதற்காக அழகு சாதன பொருட்களை சார்ந்திருப்பது மட்டும் பயனில்லை. உணவுப்பழக்கமும், வாழ்க்கை முறையுமே இளமை தோற்றத்தை தக்க வைக்க துணைபுரியும்.

    சருமத்தின் வயதையும், தோற்ற பொலிவையும் மரபணுவும், சுற்றுச்சூழல் காரணிகளும் பாதிக்கலாம். உணவு, தூக்கம், மனஅழுத்தம் போன்றவை சருமத்தின் தோற்றத்தை நிர்ணயிக்கின்றன. சில உணவு பழக்கங்கள் முதுமைக்கு முன்கூட்டியே வித்திடக்கூடும் என்பது மருத்துவ நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.

    சர்க்கரை:

    அதிகப்படியான சர்க்கரையை உட்கொள்வது கிளைகேஷன் எனப்படும் செயல்முறைக்கு வழிவகுக்கும். அதில் உள்ளடங்கி இருக்கும் சர்க்கரை மூலக்கூறுகளும், சருமத்தில் உள்ள கொலாஜன்களும் பிணைக்கப்படும். அவை சருமத்தை கடினமாக்கும். அதனால் தோல் சுருக்கங்கள் எட்டிப்பார்க்கும்.

    பதப்படுத்தப்பட்ட- பொரித்த உணவுகள்:

    இந்த உணவுகளில் பெரும்பாலும் ஆரோக்கியமற்ற கொழுப்புகளும், அதிக அளவு சோடியமும் கலந்திருக்கும். அவை உடலில் வீக்கத்திற்கு வழிவகுக்கும். அதே பழக்கத்தை தொடரும்போது நாள்பட்ட அழற்சிக்கு வித்திடும். கொலாஜன் செயல்பாட்டிலும் பாதிப்பை ஏற்படுத்தி தோல் வயதாவதை துரிதப்படுத்தும்.

    மதுப்பழக்கம்:

    மது அருந்துவது சருமத்தை நீரிழப்பு செய்து சரும வறட்சிக்கும், சுருக்கங்களை ஏற்படுத்தும் கோடுகளுக்கும் வழி வகுத்துவிடும். காபி அதிகம் பருகுவதும் நீரிழப்புக்கு வித்திடும். மந்தமான, வறண்ட மற்றும் வயதான தோற்றமுடைய சருமத்தை ஏற்படுத்தும். இந்த பழக்கங்களை தவிர்த்தாலே முதுமையை தாமதப்படுத்திவிடலாம்.

    முதுமைக்கான காரணங்கள்:

    * செலரி, சிட்ரஸ் பழங்கள் போன்ற சில உணவு பொருட்கள் சருமத்தை அதிக உணர்திறன் கொண்டதாக மாற்றும் சோராலென்ஸ் எனப்படும் சேர்மங்களை கொண்டிருக்கின்றன. அவற்றை சாப்பிட்டு கடுமையான சூரிய ஒளி படும் பகுதியில் நேரத்தை செலவழித்தால் விரைவில் வயதாகும் அறிகுறிகள் எட்டிப்பார்க்க தொடங்கும்.

    * சர்க்கரை அதிகம் கலந்த உணவுகள், ஆரோக்கியமற்ற கொழுப்புகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் உடலில் அழற்சியை ஏற்படுத்தும். நாளடைவில் தோலின் வயதை விரைவுபடுத்திவிடும். இதன் விளைவாக சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படும்.

    * சில உணவுகள், அதிக வெப்பத்தில் சமைக்கப்படும்போது ப்ரீ ரேடிக்கல்கள் எனப்படும் தீங்கு விளைவிக்கும் மூலக்கூறுகளை உருவாக்குகின்றன. இவை சரும செல்களுக்கு தீங்கு விளைவித்து, வேகமாக சருமம் முதிர்ச்சி நிலையை அடைய வைக்கின்றன.

    ×