search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Turtle Eggs"

    • முட்டைகள் பாதுகாக்கப் பட்டு குஞ்சு பொறித்தும் அவை மீண்டும் கடலில் விடப்பட உள்ளது.
    • ஆமைகள் முட்டையிடும் பருவத்தில் அதனை கண்காணித்து தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்

    பொன்னேரி:

    நவம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை ஆமைகள் முட்டையிடும் காலம் ஆகும். ஆமை முட்டைகள் 45 முதல் 60 நாட்களில் குஞ்சுபொரித்து விடும். தற்போது சென்னை கடற்கரை மற்றும் பழவேற் காடு கடற்கரை பகுதிகளில் ஏராளமான ஆமைகள் முட்டையிட்டு வருகின்றன.

    இந்த நிலையில் பழவேற்காடு பகுதியில் ஆமை முட்டைகளை பாதுகாக்கும் வகையில் வனத்துறையினர், சமூக ஆர்வலர்களுடன் இணைந்து ஆமை முட்டைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் இதுவரை சுமார் 1200-க்கும் மேற்பட்ட ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர். இந்த முட்டைகள் பாதுகாக்கப் பட்டு குஞ்சு பொறித்தும் அவை மீண்டும் கடலில் விடப்பட உள்ளது.

    இதற்கிடையே பழவேற்காடு பகுதியில் முட்டையிட கரைக்கு வரும் ஏராளமான ஆமைகள் இறந்து வருகின்றன. படகுகள் மற்றும் வலைகளில் சிக்கி காயம் அடைந்து அவை இறப்பதாக ஆமைகள் பாதுகாப்பு அமைப்பினர் தெரிவித்து உள்ளனர். ஆமைகள் முட்டையிடும் பருவத்தில் அதனை கண்காணித்து தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    • ஆமை முட்டையிடும் காலம் முடிவுக்கு வந்துள்ளது.
    • உண்மையில், ஆமைக் குஞ்சு பொரிப்பில் இந்த ஆண்டு சிறந்த ஆண்டாக அமைந்துள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் முதல் ஏப்ரல் முதல் வாரம் வரை கடலோரப் பகுதியில் அதிகாலை நேரங்களில் ஆமைகள் முட்டையிடும். இம்முட்டைகளை நீண்ட காலமாக நாய்களும், பறவைகளும் சிதைப்பதால், கடல் ஆமைகள் அழிந்து வரும் உயிரினங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

    இந்நிலையில், தமிழக கடலோரப் பகுதியில் மீன் வளத்தை அதிகரிக்கும் நோக்கில், அழிந்து வரும் கடல் ஆமைகளை பாதுகாக்கும் விதமாக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு, வனத்துறை சார்பில் பெசன்ட் நகர் உள்ளிட்ட 3 இடங்களில் ஆமைக் குஞ்சு பொரிப்பகங்கள் அமைக்கப்பட்டன. தொடர்ந்து படிப்ப டியாக தமிழக கடலோரப் பகுதிகளில் பல இடங்களில் பொரிப்பகங்கள் அமைக்கப்பட்டு கடந்த 2016-ம் ஆண்டு முதல் தமிழக கடலோர மாவட்டங்களில் ஆமை முட்டையிடும் பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள இடங்களில் ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு, பொரிப் பகங்களில் அடைகாத்து, குஞ்சுகள் வெளியே வந்த பிறகு, கடலில் விடப்பட்டு வருகிறது.

    இப்பணிகள் தொடங்கப்பட்டு 7 ஆண்டுகள் நிறை வடைந்துள்ள நிலையில், இதுவரை இல்லாத அளவாக இந்த ஆண்டு அதிக எண்ணிக்கையில் ஆமைக் குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளன.

    இது தொடர்பாக சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை செயலர் சுப்ரியா சாகு, தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

    இந்த ஆண்டு ஆமை முட்டையிடும் காலம் முடிவுக்கு வந்துள்ளது. இந்த ஆண்டு 35 ஆமைக் குஞ்சு பொரிப்பகங்கள் அமைக்கப்பட்டன. அங்கு குஞ்சு பொரிக்கப்பட்ட 1 லட்சத்து 83 ஆயிரம் ஆமைக் குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளன.

    கடந்த 7 ஆண்டுகளில் இது அதிகபட்ச அளவாகும். இதற்காகப் பணியாற்றிய தன்னார்வலர்கள் மற்றும் வன களப்பணியாளர்களின் அளப்பரிய பங்களிப்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உண்மையில், ஆமைக் குஞ்சு பொரிப்பில் இந்த ஆண்டு சிறந்த ஆண்டாக அமைந்துள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×