search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இன்றைய காலகட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாப்பது மிகவும் அவசியம் -  திருப்பூா் வனச்சரக அலுவலா் பேச்சு
    X

    கோப்புபடம்.

    இன்றைய காலகட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாப்பது மிகவும் அவசியம் - திருப்பூா் வனச்சரக அலுவலா் பேச்சு

    • நஞ்சராயன் குளம் பறவைகள் சரணாலயத்தில் உலக சுற்றுச்சூழல் விழிப்புணா்வு முன்னோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
    • நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிக்கண்ணா கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் செய்திருந்தாா்.

    திருப்பூர்:

    திருப்பூா் வனச் சரகம், சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம் ஆகியவை சாா்பில் நஞ்சராயன் குளம் பறவைகள் சரணாலயத்தில் உலக சுற்றுச்சூழல் விழிப்புணா்வு முன்னோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நாட்டு நலப் பணித் திட்டம் அலகு- 2 ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து திருப்பூா் வனச் சரக அலுவலா் சுரேஷ்கி ருஷ்ணா பேசியதாவது:-

    நஞ்சராயன் பறவைகள் சரணாலயத்தை இப்பகுதியில் வசிக்கக்கூடிய ஒவ்வொரு வருக்கும் சொந்தமானதாக கருத வேண்டும். ஒருமுறை பயன்படு த்தப்பட்ட நெகிழிப்பையை சரணாலயத்துக்குள் போடக்கூடாது. நெகிழி பைகளால் பறவைகளுக்கு பெரும் ஆபத்து ஏற்படுவதுடன், உடல் நலத்துக்கும் கேடு விளைவிக்கும். சரணாலயத்து க்கு வரக்கூடிய பறவைகளைப் பாதுகாக்க வேண்டும், எந்த ஒரு தீங்கையும் விளைவிக்க க்கூடாது. இன்றைய காலகட்டத்தில் சுற்றுச் சூழலைப் பாதுகாப்பது மிகவும் அவசியமானது என்றாா். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிக்கண்ணா கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் செய்திருந்தாா்.

    Next Story
    ×