என் மலர்
நீங்கள் தேடியது "Saplings"
- சமூகம் சார்ந்து செயல்பட ஏதுவாக மண்ணுக்கும் மக்களுக்கும் என்ற சமூகநல அறக்கட்டளையை தொடங்கி, நடத்தி வருகிறார்.
- கடந்த 9 ஆண்டுகளில் 45,000 மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வருகின்றனர்.
தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் சௌந்தரராஜா. தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய திரையுலகில் பல மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் சௌந்தரராஜா, நடிப்பு மட்டுமின்றி சமூகம் சார்ந்து பல்வேறு முன்னெடுப்புகளில் தன்னை ஆர்வமுடன் ஈடுபடுத்தி வருகிறார்.
சமூகம் சார்ந்து செயல்பட ஏதுவாக மண்ணுக்கும் மக்களுக்கும் என்ற சமூகநல அறக்கட்டளையை தொடங்கி, நடத்தி வருகிறார். அதன்படி நடிகர் சௌந்தரராஜா தனது மண்ணுக்கும் மக்களுக்கும் சமூகநல அறக்கட்டளை மூலம் இந்த ஆண்டு ஆகஸ்ட் 11 ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுக்க 25,000 மரக்கன்றுகளை நட்டு, வளர்க்க திட்டமிட்டுள்ளார்.

சென்னை ஆவடியில் உள்ள காவல் துறை கன்வென்ஷன் சென்டரில் நடந்த மண்ணுக்கும் மக்களுக்கும் சமூகநல அறக்கட்டளையின் ஒன்பதாவது ஆண்டு விழாவில் இதற்கான அறிவிப்பை நடிகர் சௌந்தரராஜா வெளியிட்டார். கடந்த 9 ஆண்டுகளில் 45,000 மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வருகின்றனர்.
நேற்று நடந்த விழாவில் அடுத்த ஆறு மாதங்களில் தமிழ்நாடு முழுக்க 25,000 மரக்கன்றுகளை நட்டு வளர்க்க திட்டமிட்டு, உறுதிமொழி ஏற்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 11-ம் தேதி தொடங்கி ஆறு மாதங்களுக்கு மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளையை சேர்ந்த உறுப்பினர்கள் மரக்கன்றுகளை நட்டு, பாதுகாத்து வளர்த்தும் வருகின்றனர்.

தமிழ்நாடு முழுக்க கண்மாய்கள், நீர்நிலைகளை சுற்றி பனை மரங்களை நடுவது, நாட்டு மரங்களை நடுவதும் அதை பாதுகாத்து வளர்த்தும் வருகின்றனர். மேலும், இயற்கை மற்றும் நீர்நிலைகளை பாதுகாக்கும் நோக்கில் பல்வேறு முன்னெடுப்புகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு வருகின்றனர். இயற்கைக்கும், சுற்றுச்சூழலுக்கும் மிக முக்கிய சேவைகளை செய்து வரும் மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையிலும், இயற்கை விவசாயத்தை போற்றும் வகையிலும், ஒவ்வொரு வருடமும் இயற்கை விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருதும், ரூ. 5000 ஊக்கத்தொகையும் வழங்கி வருகிறது.
இதுபோக தனி நபர்களுக்கு மரக்கன்று நடவும், விசேஷ நாட்களில் மரக்கன்று நட விரும்புபவர்கள் மரக்கன்றுகளை வாங்கிக் கொடுக்கும் பட்சத்தில் அவற்றை சரியான இடத்தில் நட்டு, அதனை பராமரிக்கும் பணிகளை மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை செய்து வருகிறார்கள். இதற்கான பணிகளில் 250 தன்னார்வலர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.
தமிழ் நாடு முழுக்க 25,000 மரக்கன்றுகளை நடும் திட்டத்தின் தொடக்கமாக சென்னை ஆவடியில் உள்ள போலீஸ் கன்வெஷன் சென்டரில் நடிகர் சௌந்தரராஜா தலைமையில் 100 மரக்கன்றுகள் நடப்பட்டன. மரக்கன்றுகள் நட்டு முடித்த ஒரு மணி நேரத்தில் அங்கு திடீரென கனமழை பெய்தது. 100 மரக்கன்றுகள் நட்டதும் மழை பெய்தது அங்கு இருப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியது. இது நல்ல தொடக்கத்தின் முன்னெடுப்பு என்று காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- 26,800 மரக்கன்றுகள் மதுக்கரை வனவியல் நாற்றங்கால்களில் வளர்க்கப்பட்டு நடவிற்கு தயார் நிலையில் உள்ளது.
- விவசாய நிலங்களில் வரப்புகளில், பயிர்களுக்கு இடையில் அல்லது முழுமையாக நடவு செய்ய மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது.
திருப்பூர் :
வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை மூலம் விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போர்வை இயக்கம் என்ற புதிய வேளாண் காடுகள் வளர்ப்பு திட்டத்தில் விவசாய நிலங்களில் வரப்புகளில் அல்லது பயிர்களுக்கு இடையில் அல்லது முழுமையாக நடவு செய்ய மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது.
சுல்தான்பேட்டை வட்டாரத்திற்கு 1,300 பெரு நெல்லி, 15,700 மகாகனி, 4,500 குமிழம், 5,300 மலை வேம்பு என மொத்தம் 26,800 மரக்கன்றுகள் மதுக்கரை வனவியல் நாற்றங்கால்களில் வளர்க்கப்பட்டு நடவிற்கு தயார் நிலையில் உள்ளது. விவசாயிகள் இம்மரக்கன்றுகளை பெற சுல்தான்பேட்டை வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் பதிவு செய்து பரிந்துரை படிவம் பெற்று வனத்துறை நாற்றாங்காலில் நேரடியாக மரக்கன்றுகளை பெற்றுக் கொள்ளலாம் என வேளாண்மை உதவி இயக்குனர் விஜய கல்பனா தெரிவித்துள்ளார்.
- பொது சுகாதாரத் துறை சார்பில் வட்டார அளவில் பல்வேறு நிகழ்வுகள் மற்றும் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
- இதன்படி, சேலம் மாவட்டம் ஆத்தூர் சுகா தார மாவட்டம், பேளூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
வாழப்பாடி:
தமிழக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை தொடங்கப்பட்டு 100-ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி தமிழகத்தின் அனைத்து சுகாதார மாவட்டங்களிலும் பொது சுகாதாரத் துறை சார்பில் வட்டார அளவில் பல்வேறு நிகழ்வுகள் மற்றும் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன்படி, சேலம் மாவட்டம் ஆத்தூர் சுகா தார மாவட்டம், பேளூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதில், ஆத்தூர் சுகாதாரப் பணிகள் (பொறுப்பு) துணை இயக்குனர் வித்யா மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார்.
பேளூர் வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம் மற்றும் மருத்துவ அலுவலர்கள், மருத்துவ பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு, பனை விதைகள் உள்பட 100 மரக்கன்றுகளை சுகாதார நிலைய வளாகத்தில் நட்டு, முறையாக பராமரித்து வளர்ப்பதென உறுதிமொழி ஏற்றனர். இறுதியில் சுகாதார ஆய்வாளர் செல்வபாபு நன்றி கூறினார்.
- பூசனூர் மற்றும் புளியங்குளம் கிராமத்தில் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சியை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
- நிகழ்ச்சியில் வேளாண்மை துணை இயக்குனர் சாந்திராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், பூசனூர் மற்றும் புளியங்குளம் கிராமத்தில் மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை திட்டத்தின் கீழ் பழக்கன்றுகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சியை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் வேளாண்மை துணை இயக்குனர் சாந்திராணி, வேளாண்மை உதவி இயக்குனர் மனோரஞ்சிதம், உதவி பொறியாளர் தமிம்அன்சாரி, விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, விளாத்திகுளம் மத்தியஒன்றிய செயலாளர் ராமசுப்பு, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், மகேந்திரன், டேவிட்ராஜ் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் ராஜபாண்டி, பூசனூர் ஊராட்சி மன்ற தலைவர் சோலையம்மாள், புளியங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி, ஒன்றிய பொருளாளர் முனியசாமி, கிளை செயலாளர் பரமசிவம், கருப்பசாமி, முனியசாமி , வார்டு செயலாளர் மாரிராஜ், வார்டு கவுன்சிலர் செல்வகுமார் சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி வட்டார விவசாயிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
- மரக்கன்றுகளின் விவரங்களை உழவன் செயலியில் பதிவு செய்து கொள்ளவும்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி வட்டார விவசாயிகளுக்கு தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமைப் போர்வைக்கான இயக்கம் திட்டத்தின் கீழ் இம்மாதத்திற்குள் மகோகனி, செம்மரம், வேங்கை, தேக்கு , ரோஸ்வுட் ஆகிய மரக்கன்றுகள் பரமத்தி வேளாண்மை விரிவாக்க மையத்திற்கு வரவுள்ளது.
மரக்கன்றுகள் தேவைப்படும் விவசாயிகள் தேவைப்படும் மரக்கன்றுகளின் விவரங்களை உழவன் செயலியில் பதிவு செய்து கொள்ளவும் அல்லது தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்கள் மற்றும் பரமத்தி வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு பரமத்தி வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தசாமி தெரிவித்துள்ளார்.
- மரக்கன்றுகள் நட்டு அதனை முறையாக பராமரிப்பது இத்திட்டத்தின் முக்கிய நோக்கம்.
- ஓராண்டு முடிவதற்குள்ளாகவே 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் இலக்கு முடிவடைந்தது.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் நிர்வாகம், மாவட்ட பசுமை குழு, கவின்மிகு தஞ்சை இயக்கம், தன்னார்வ மற்றும் சேவை அமைப்புகள் சார்பில் வீட்டுக்கு ஒரு விருட்சம் என்ற திட்டத்தின் கீழ் ஓராண்டில் 1 லட்சம் மரக்கன்றுகள் வளர்க்கும் திட்டம் உலக புவி தினமான 22-4-22 அன்று தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் முதல் மரக்கன்றை நட்டு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார். அன்றிலிருந்து மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டத்தின் கீழ் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மரக்கன்றுகளை நட்டு வந்தார்.
இந்த நிலையில் திட்டம் தொடங்கி ஓராண்டு முடிவதற்குள்ளாகவே 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் இலக்கு முடிவடைந்தது. அதன்படி இன்று தஞ்சை பழைய கலெக்டர் அலுவலக வளாகத்தில் 1 லட்சமாவது மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி 1 லட்சமாவது மரக்கன்று நட்டு வைத்தார். அப்போது இந்த திட்டம் வெற்றிகரமாக குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாகவே முடிவடைந்ததை முன்னிட்டு அனைவரும் கைத்தட்டி வரவேற்றனர்.
பின்னர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-
வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டத்தின் கீழ் ஓராண்டில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தில் இன்று 1 லட்சமாவது மரக்கன்று நடப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் பசுமை பரப்பு மற்றும் வனப்பரப்பினை அதிகப்படுத்துவது , பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள், பொது மக்களிடம் மரம் வளர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது தான் இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
இதனால் வரை வீடுகள், கல்லூரிகள், பள்ளிகள், கோவில் வளாகங்கள், மருத்துவமனை வளாகங்கள், தொழிற்சாலை வளாகங்கள், ஆற்று படுகைகள், மற்றும் பொது இடங்களில் பாதுகாக்கப்பட்ட வகையில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இதில் தன்னார்வ அமைப்புகள் சார்பில் 25 ஆயிரம் மரக்கன்றுகளும், பள்ளிகள் சார்பில் 25 ஆயிரம் மரக்கன்றுகளும், கல்லூரிகள் சார்பில் 15 ஆயிரம் மரக்கன்றுகளும், நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் 15 ஆயிரம் மரக்கன்றுகளும், பேரூராட்சி நிர்வாகம் சார்பில் 10 ஆயிரம் மரக்கன்றுகளும், இதர அரசுத்துறைகள் சார்பில் 10 ஆயிரம் மரக்கன்றுகளும் நடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில் நடப்பட்டுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வகையான மரக்கன்றுகளை நல்ல முறையில் பராமரித்து வளர்க்கும் பணியை சம்பந்தப்பட்ட பள்ளி, கல்லூரி இணை செயல்பாடுகளின் பொறுப்பாளர்களும் , அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தன்னார்வ அமைப்பு நிர்வாகிகளும் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்.
திருவையாறு அரசு இசைக் கல்லூரியில் ஏற்படுத்தப்பட்டுள்ள இசைவனம், அன்னை வேளாங்கண்ணி கலைக் கல்லூரியில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஆரோக்கிய வனம், சமுத்திரம் ஏரியில் பறவைகள் வனம், மாவட்ட கடற்கரை பகுதிகளில் ஆழி வனம் ஆகவே சிறப்புக்குரியதாகும்.
மரக்கன்றுகள் நடுவதோடு அதனை முறையாக பராமரிப்பது இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இயற்கையை பராமரித்து மேம்படுத்த வேண்டும். 99 சதவீத மரங்கள் நல்ல உயிர்ப்புடன் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் கவின்மிகு தஞ்சை இயக்கம் தலைவர் டாக்டர் ராதிகா மைக்கேல், டாக்டர் சிங்காரவேல், ரெட் கிராஸ் டாக்டர் வரதராஜன், பொறியாளர் முத்துக்குமார், மருத்துவ கல்லூரி முன்னாள் முதல்வர் சங்கரநாராயணன், தாசில்தார் சக்திவேல், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் தமிழ்ச்செல்வன், உதவி இயக்குனர் சையது அலி, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- கமுதி அரசு மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
- தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் ராஜாராம் வரவேற்றார்.
முதுகுளத்தூர்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அரசு மருத்துவமனை வளாகத்தில் யோகம் பொது சுகாதார மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் 1,610 மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்தமிழ்ச்செல்விபோஸ் தலைமை தாங்கி மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார்.
மருத்துவமனை தலைமை மருத்துவர் விஜயா, தொண்டு நிறுவன இயக்குநர் தமயந்தி முன்னிலை வகித்தனர். தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் ராஜாராம் வரவேற்றார்.
இதில் வேம்பு உள்பட பல்வேறு மரக்கன்றுகள் நடப்பட்டன. தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த யோகேஷ்மணிராஜ், ஷியாம் பரணிதரன், வனச்சரக அதிகாரி பால்பாண்டியன் மற்றும் மருத்துவர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
- மரங்கள் மக்கள் இயக்கம் சார்பில் தொகுதி முழுவதும் சுமார் 1 கோடி மரக்கன்றுகள் நடுவதற்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- பணியை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்து சாலை ஓரங்களில் எந்த வகையான மரக்கன்றுகள் நடுவது என்பது பற்றி பொதுமக்களிடம் கருத்துகள் கேட்டு கலந்துரையாடினார்.
விளாத்திகுளம்:
மார்கண்டேயன் எம்.எல்.ஏ. முயற்சியால் விளாத்திகுளம் தொகுதியை பசுமையான தொகுதியாக மாற்றும் முயற்சியாக விளாத்திகுளம் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் மரங்கள் மக்கள் இயக்கம் சார்பில் தொகுதி முழுவதும் சுமார் 1 கோடி மரக்கன்றுகள் நடுவதற்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது சூரங்குடி- எட்டையாபுரம் வரையிலான சுமார் 35 கிலோமீட்டர் சாலையின் இரு புறங்களிலும் மரக்கன்றுகள் நடுவதற்கான சாலை ஓரங்களில் உள்ள சீமை கருவேலம் மரங்கள் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பணியை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்து சாலை ஓரங்களில் எந்த வகையான மரக்கன்றுகள் நடுவது என்பது பற்றி பொதுமக்களிடம் கருத்துகள் கேட்டு கலந்துரையாடினார்.
இந்நிகழ்ச்சியில் மரங்கள் மக்கள் இயக்க நிர்வாகி ராகவன், வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மகேந்திரன், விளாத்திகுளம் தொகுதி சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் மரக்கன்றுகளை நடும் முறை மியாவாக்கி என்று அழைக்கப்படுகிறது.
- வெவ்வேறு வகையான மரங்கள் நடும் போது அவை குறுகிய காலத்தில் அதிகப்படியான வளர்ச்சியை தருகிறது.
நெல்லை:
நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் 500 மரக்கன்றுகள் ஜப்பான் நாட்டின் மியாவாக்கி முறையில் நடப்பட்டது. இதனை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தொடங்கி வைத்தார்.
இந்த மியாவாக்கி முறை இடைவெளி இல்லா அடர் காடு என்ற தத்துவத்தின்படி, வெவ்வேறு மரக்கன்றுகளை ஒரே இடத்தில் வைப்பது இதன் அடிப்படை நோக்கமாகும். இந்த முறை குறிப்பிட்ட இடத்தில் ஆழமான குழிகள் தோண்டி அதில் குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் மரக்கன்றுகளை நடும் முறை மியாவாக்கி என்று அழைக்கின்றனர். இதன் மூலமாக அந்த நிலத்தின் வெப்ப நிலை குறையவும், காற்றில் ஈரப்பதத்தை தக்க வைக்கவும், பறவைகள் வாழ்விடமாகவும், பல்லுயிர் சூழல் உருவாக உதவுகிறது. மேலும் இதன் சிறப்பம்சம் வெவ்வேறு வகையான மரங்கள் நடும் போது மரங்கள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து போட்டி போட்டு குறுகிய காலத்தில் அதிகப்படியான வளர்ச்சியை தருகிறது.
இதன் அடிப்படையில் நெல்லை மாவட்ட காவல் அலுவலக தோட்டத்தில் மகாகனி, ஈட்டி, வேங்கை, புங்கை, வேம்பு, செம்மரம், இலுப்பை, நீர்மருது வகையான 500 மரக்கன்றுகளை ஜப்பான் நாட்டின் மியாவாக்கி முறையில் நட்டுவைக்கும் முறையை நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்.
- முதல்-அமைச்சர் மு. க.ஸ்டாலின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு கீழப்பாவூர்மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பாக பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் தென்னங்கன்றுகள் வழங்கி கொண்டாடினர்.
- நிகழ்ச்சியில் கீழப்பாவூர்மேற்கு ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
தென்காசி:
முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு. க.ஸ்டாலின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு கீழப்பாவூர்மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பாக, பாவூர்சத்திரம் பஸ் நிலையம் அருகில், கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் காவேரி சீனித்துரை தலைமையில், உதயநிதிஸ்டாலின் நற்பணி மன்ற இணை செயலாளர் சிவ அருணன் முன்னிலையில், பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் தென்னங்கன்றுகள் வழங்கி கொண்டாடினர். நிகழ்ச்சியில் கீழப்பாவூர்மேற்கு ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
- 1 கோடி மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகளை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் ஆய்வு செய்தார்.
- “பசுமை ராமநாதபுரம்” உருவாக்க திட்டமிடப் பட்டுள்ளது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் ஒன்றியம் தேவிபட்டினம் ஊராட்சியில் வேளாண்மை துறையின் மூலம் நாற்றங்கால் பண்ணை செயல்பட்டு வருவதை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பார்வையிட்டார். அவர் நாற்றங்கால் பண்ணையில் தென்னை மற்றும் பல்வேறு வகை மரக்கன்றுகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கப்படுவதை பார்வையிட்டு பேசியதாவது:-
வேளாண்மை துறையின் மூலம் 6 ஹெக்டேர் பரப்பளவில் நாற்றங்கால் பண்ணை அமைத்து விவசாயிகளுக்கு தேவையான மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது நெட்டை மற்றும் குட்டை ரக தென்னை நாற்றுகள் வளர்ந்து கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு மானிய திட்டத்தில் கன்றுகள் வழங்கப்பட்டு வருகிறது.
விவசாயிகள் தேவையான தென்னங்கன்று களை வாங்கி பயன்பெற வேண்டும். தமிழ்நாடு பசுமை இயக்கம் திட்டத்தின் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் 1 கோடி மரக்கன்றுகள் நடவு செய்து "பசுமை ராமநாதபுரம்" உருவாக்க திட்டமிடப் பட்டுள்ளது. அதனடிப்படையில் வேளாண்மை துறையின் மூலம் நாற்றங்கால் பண்ணைகளில் மரக்கன்றுகள் வளர்க்கப்படுகின்றன. இதில் மகோகனி, வில்வம், கொடுக்காபுளி, செம்மரம், சீதா, வன்னி, வாதம், மஞ்சள் கொன்னடி என பல்வேறு மரக்கன்றுகள் வளர்க்கப்படுகிறது.
ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் 25லட்சம் கன்றுகளும், பள்ளி கல்வித்துறையின் மூலம் 10லட்சம் கன்றுகளும், மகளிர் சுய உதவிக்குழு மூலம் 10 லட்சம் கன்றுகளும், வனத்துறையின் மூலம் 25 லட்சம் கன்றுகளும் என பல்வேறு துறைகள் மூலம் ஒருங்கிணைந்து நடப் பாண்டில் 1 கோடி மரக்கன்றுகள் மாவட்டத்தில் நடவு செய்யப்படுகின்றன. நடவு செய்வது மட்டுமின்றி 5 ஆண்டுகளுக்கு பராமரிக்கவும் திட்டமிடப் பட்டுள்ளது.
ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் ஊராட்சி மன்ற தலைவர்கள் தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்கள் மூலம் பராமரித்தல், பள்ளிக் கல்வித்துறையின் மூலம் பராமரித்தல் என திட்ட மிட்டு இப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள், சமூக ஆர்வ லர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு "பசுமை ராமநாதபுரம்" உருவாக செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது வேளாண்மை துறை இணை இயக்குநர் சரஸ்வதி, தோட்ட கலைத்துறை துணை இயக்குநர் நாகராஜன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) தனுஷ்கோடி உள்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
- ராமநாதபுரம் கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளியில் மரம் நடும் விழா நிகழ்ச்சி நடந்தது.
- மரக்கன்று நட்டு சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என கலெக்டர் பேசினார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளியில் மரம் நடும் விழா நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பங்கேற்று பள்ளி மாணவ, மாணவிகளுடன் 1000 மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார்.
பள்ளி மாணவ-மாணவிகளுடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பேசினார். இதேபோல் மற்ற பள்ளிகளிலும் இந்த மாணவ-மாணவிகளை போல் மரக்கன்று நட்டு சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.
இதில் கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளி தாளாளர் கணேச கண்ணன், பள்ளிச் செயலாளர் ஜீவலதா, முதல்வர் முத்துக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.






