search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேரன்மகாதேவியில் கிராம உதயம் சார்பில் 2 ஆயிரம் மரக்கன்றுகள்
    X

    சேரன்மகாதேவியில் கிராம உதயம் சார்பில் 2 ஆயிரம் மரக்கன்றுகள்

    • சப்-கலெக்டர் முகமது சபிர் ஆலம் தொடங்கி வைத்து மரக்கன்று கள் வழங்கினார்.
    • கிராம உதயம் நிர்வாக இயக்குநர் டாக்டர் சுந்தரேசன் மரம் வளர்ப்பதன் அவசியம் குறித்து பேசினார்.

    நெல்லை:

    சேரன்மகாதேவி சப்-கலெக்டர் அலுவ லகம் மற்றும் கிராம உதயம் கோபால சமுத்திரம் இணைந்து பசுமை தீபாவளியை கொண்டாடும் வகையில் சேரன்மகாதேவி யில் 2 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்குதல், நடுதல் பராமரித்தல் மற்றும் 2 ஆயிரம் துணிப்பைகள் வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது.

    நிகழ்ச்சியை சப்-கலெக்டர் முகமது சபிர் ஆலம் தொடங்கி வைத்து மரக்கன்று கள் வழங்கி சிறப்புரையாற்றினார். கிராம உதயம் வழக்கறிஞர் ஆலோசனை குழு உறுப்பினர் புகழேந்தி பகத்சிங் வரவேற்று பேசினார். கிராம உதயம் நிர்வாக மேலா ளர் மகேஷ்வரி முன்னிலை வகித்தார்.

    கிராம உதயம் நிர்வாக இயக்குநர் டாக்டர் சுந்தரேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மரம் வளர்ப்பதன் அவசியம் குறித்து பேசினார். கிராம உதயம் பகுதி பொறுப்பாளர்கள் முருகன், பாலசுப்ரமணியம், சசிகலா, குமாரி, ஆறுமுகத்தாய் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். கிராம உதயம் பகுதி பொறுப்பாளர் பேச்சியம்மாள் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம உதயம் உறுப்பினர்கள், பொதுமக்கள், கிராம உதயம் தன்னார்வ தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×