என் மலர்
நீங்கள் தேடியது "trees"
- மகிழம், மந்தாரை, சரக்கொன்றை, பூவரசன், பூங்கம் உள்ளிட்ட நாட்டு மரங்கள் நடப்பட்டு தொடர்ச்சியாக பராமரிக்கப்பட்டு வருகிறது.
- முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேரில் ஆய்வுமகிழம், மந்தாரை, சரக்கொன்றை, பூவரசன், பூங்கம் உள்ளிட்ட நாட்டு மரங்கள் நடப்பட்டு தொடர்ச்சியாக பராமரிக்கப்பட்டு வருகிறது.
கரூர்,
கரூர் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் எம்.ஆர்.வி-டிரஸ்ட் மூலம் "கானகத்திற்குள் கரூர்" என்று செயல் திட்டம் மூலமாக, கரூர் மாவட்டத்தை பசுமையாக்கும் வகையில் கடந்த 2019 முதல் 2021 வரை 30,000 க்கும் மேற்பட்ட மகிழம், மந்தாரை, சரக்கொன்றை, பூவரசன், பூங்கம் உள்ளிட்ட நாட்டு மரங்கள் நடப்பட்டு தொடர்ச்சியாக பராமரிக்கப்பட்டு வருகிறது.
மேலும் மரங்களை நடுவதுடன் மட்டும் இல்லாமல் தொடர்ச்சியாக தண்ணீர் ஊற்றி பராமரிப்பதும், குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மரங்களை சுற்றி உள்ள மண் மற்றும் குப்பைகளை அகற்றி மரங்களுக்கு ஊற்றப்படும் நீரானது தேங்கி மரங்கள் செழித்து நிழல் தரும் வகையில் வளர செய்வதை "கானகத்திற்குள் கரூர்" என்ற செயல் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
தற்போது மழை காலம் துவங்க உள்ள நிலையில் மரங்களின் பராமரிப்பு பணியானது கடந்த சில தினங்களாக நடைபெற்று வரும் நிலையில் கரூர் 80 அடி சாலையின் அருகே உள்ள மரங்களை முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது மரக்கிளைகள் மின்சார கம்பங்களில் உரசாமல் இருக்கும் வகையிலும், மரங்களை சுற்றி உள்ள குப்பைகளை அகற்றி தண்ணீர் தேங்கும் வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என எம்.ஆர்.வி - டிரஸ்ட் தன்னார்வலர்களுக்கு அவர் அறிவுரை வழங்கினார்.
மேலும் நான் பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் நம் கரூர் மக்களுக்காக இந்த மரம் நடும் பணி தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.
மரம் நடப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருவது மகிழ்ச்சியாக இருப்பதாக இப்பகுதி சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பாராட்டி வருகின்றனர்.
- 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தொடக்க விழா கருங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
- கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிட்டுள்ளோம்.
தென்திருப்பேரை:
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாகவும், தமிழ்நாடு முதல் -அமைச்சரின் கனவுத் திட்டமான பசுமை தமிழ்நாடு திட்டத்தின் ஒரு பகுதியாகவும் தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டு அறக்கட்டளை (கூட்டமைப்பு) சார்பில் கலைஞர் நூற்றுக்கு நூறு என்ற அடிப்படையில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தொடக்க விழா செய்துங்கநல்லூரில் உள்ள கருங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டு அறக்கட்டளை (கூட்டமைப்பு) மாநில தலைவரும், தூத்துக்குடி மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினருமான எம்.ஏ. தாமோதரன் தலைமையில் ஊராட்சி ஒன்றிய ஆணை யர் முத்து கிருஷ்ணராஜா, வட்டார வளர்ச்சி அலுவலர் அரவிந்தன் ஆகியோர் முன்னி லையில் நடை பெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக கருங்குளம் ஊராட்சி ஒன்றியக் சேர்மன் கோமதி ராஜேந்திரன் கலந்து கொண்டு மரக்கன்று நடவுப் பணியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலக மேலா ளர் சித்தார்தன், துணை வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் ஆனந்த சுப்பு லெட்சுமி, கண்ணன், ஒன்றிய பணி மேற்பா ர்வை யாளர் பத்மகலா மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் எஸ். தன லட்சுமி, நியூ பாசகரங்கள் முத்துப்பாண்டி, பனையூர் வின்ஸ்டன், முருகேஸ்வரி, மதுரிதா அறக்கட்டளை இயக்குனர் சந்திரசேகரன் ஆகி யோர் மரக்கன்று நடவுப் பணியை மேற்கொண்டனர்.
முடிவில் தமிழ்நாடு பனை மரங்கள் பாதுகாப்பு கூட்டமைபு தலைவர் எம்.ஏ. தாமோரதான் பேசுகையில் சுற்றுச் சூழலை பாதுகாத்து பூமியில் அதிகரித்துவரும் வெப்பத்தை குறைக்கவும், பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த நாட்டின் பசுமைப் போர்வையை மேம்படுத்தவும், 2023-ம் ஆண்டு முழுவதும் கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் பாதுகாப்பான இடங்களில் எங்களது தமிழ்நாடு பனை மரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் நடவு செய்ய திட்டமிட்டுள்ளோம் என கூறினார். விழா வுக்கான ஒருங்கிணைப்பு பணியை தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகி ராஜேந்திரன் செய்திருந்தார்.
- அரண்மனை வளாகத்தில் மரங்களில் ஆயிரக்கணக்கான பழந்தின்னி வவ்வால்கள் தங்கியுள்ளது.
- பழந்தின்னி வவ்வால்களை பாதுகாக்க அதற்கு தேவையான மரங்களை வளர்க்க வேண்டும்.
தஞ்சாவூர்:
பறவை இனத்திலும் விலங்கு இனத்திலும் சேராத பாலூட்டும் இனமாக உள்ளது வவ்வால்கள்.
வவ்வால்களில் ஆயிரக்கணக்கான ரகங்கள் இருந்தாலும் தற்போது வரை 1200 வகையான வவ்வால்கள் உள்ளதாக கூறுகின்றனர் ஆய்வாளர்கள்.
வவ்வால்கள் பல வகையில் இருந்தாலும் அவை பெரும்பாலும் பழங்கள், பூக்கள், பூச்சிகள் உள்ளிட்டவற்றை உண்டு வாழ்ந்து வருகின்றன.
இயற்கையை பாதுகாப்பதிலும் வேளாண்மை பாதுகாப்ப திலும் மிகப்பெரிய பங்கு வகிக்கக்கூடியது.
இதில் பழம் தின்னி வவ்வால்கள் இயற்கையின் மிகப் பெரும் நண்பனாக விளங்குகிறது.
பழங்களை பறிக்கும் வவ்வால்கள் அவற்றை அங்கே உண்ணுவது கிடையாது.
வேறு இடத்திற்கு வந்து உண்பதால் அந்த இடத்தில் சிந்தும் விதைகள் மூலம் ஆயிரக்கணக்கான புதிய மரங்கள் உருவாகின்றன.வவ்வால் இனம் அழிந்தால் காடுகள் அழியும்.
காடுகள் அழிந்தால் வவ்வால் இனம் அழியும் அப்படி ஒரு ஒற்றுமையுடன் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்து வரும் இனங்களில் வவ்வாலும் ஒன்று.
தஞ்சாவூரின் மையப் பகுதியில் நாயக்க மன்னர் காலத்திலும், அதனைத் தொடர்ந்து மராட்டியர் மன்னர் காலுத்திலும் கட்டப்பட்ட அரண்மனையைச் சுற்றிலும் மிகப்பெரிய சுற்றுச்சுவர் உள்ளது.
சுமார் 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த அரண்மனை வளாகத்தில் 7 அடுக்குகளைக் கொண்ட கோயில் போன்ற கட்டுமான தோற்றத்தை ஏற்படுத்தும் ஆயுத கோபுரம், மணிகோபுரம் ஆகியவை உள்ளது.
இவைகளுக்கு மத்தியில் ஆங்காங்கே பலவகையான மரங்களும் உள்ளது.
இந்த மரங்களில் பல ஆயிரக்கணக்கான பழந்தின்னி வவ்வால்கள் கடந்த பல ஆண்டுகளாக தங்கியுள்ளது.
பகலில் மரங்களில் தொங்கியபடி ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மாலைப் பொழுதில் அப்பகுதியில் சாரை சாரையாக பறந்து சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவு வரை உணவு தேடி மீண்டும் அதே இடத்திற்கு பகலில் வருகிறது.
இந்த அரண்மனை வளாகம் முழுவதும் கடந்த ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான மரங்கள் இருந்த நிலையில் தற்போது மரங்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்தது.
இதனால் வவ்வால்களின் எண்ணிக்கையும் பாதியாக குறைந்துள்ளது.
அழிவின் விளிம்பில் உள்ள பழந்தின்னி வவ்வால்களை பாதுகாக்க அதற்கு தேவையான மரங்களை வளர்க்க வேண்டும்.
அது இருக்கும் இடத்தை பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்று பறவைகள் ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மரக்கன்றுகள் நடும் விழா சிவகிரி தாலுகா அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது
- நிகழ்ச்சியின்போது மரக்கன்றுகள் நடுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
சிவகிரி:
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டும், சுதந்திர தினத்தை முன்னிட்டும், சிவகிரி பேரூராட்சி சார்பில் 76 மரக்கன்றுகள் நடும் விழா சிவகிரி தாலுகா அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.பேரூராட்சி தலைவர் கோமதிசங்கரி சுந்தரவடிவேலு தலைமை தாங்கினார். பேரூராட்சி துணைத்தலைவர் லட்சுமிராமன் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் வெங்கடகோபு வரவேற்று பேசினார்.
சிறப்பு விருந்தினராக சிவகிரி தாசில்தார் ஆனந்த், புளியங்குடி டி.எஸ்.பி. அசோக், சிவகிரி இன்ஸ்பெக்டர் சண்முக லட்சுமி, சிவகிரி அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் ராம சுகாசினி, சித்த மருத்துவர் ஜெயந்தி, சிவகிரி வனச்சரக அலுவலர் மௌனிகா, வனவர் அசோக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்து, மரக்கன்றுகள் நடுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர்.
விழாவில் வரிவிதிப்பு மேல்முறையீட்டு உறுப்பினர்கள் செந்தில்வேல், ரத்தினராஜ், முத்துலட்சுமி, ராஜலட்சுமி, மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் சுந்தரவடிவேலு, இந்திய கம்யூனிஸ்டு கட்சி சிவகிரி நகர செயலாளர் பாலசுப்பிரமணியன், வேட்டை தடுப்பு காவலர் மாரியப்பன், தலைமை எழுத்தர் தங்கராஜ், வரிவசூலர் முத்துப்பாண்டி, பேரூராட்சி கவுன்சிலர்கள், டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், அரசு மருத்துவமனை பணியாளர்கள், செவிலியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் சித்தா மருந்தாளுநர் தனகேஸ்வரி நிலவேம்பு கசாயம் வழங்கினார்.
- கலைஞர் நூற்றுக்கு நூறு என்ற அடிப்படையில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தொடக்க விழா நடைபெற்றது.
- ஒவ்வொரு வட்டாரங்களிலும் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் முதல்-அமைச்சரின் கனவு திட்டமான பசுமை தமிழ்நாடு திட்டத்தின் ஒரு பகுதியாகவும், கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டும் தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டு அறக்கட்டளை (கூட்டமைப்பு) சார்பில் கலைஞர் நூற்றுக்கு நூறு என்ற அடிப்படையில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தொடக்க விழா நடைபெற்றது.
தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டு அறக்கட்டளை (கூட்டமைப்பு) மாநில தலைவரும், தூத்துக்குடி மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினருமான தாமோதரன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தா முன்னிலை வகித்தார். ஊராட்சி ஒன்றிய ஆணையர் ஹெலன் மரக்கன்று நடும் பணியை தொடங்கி வைத்தார்.
விழாவில் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சந்திரகலா, வேளாண்மை அலுவலர்கள் ரோகித் ராஜ் , ஆனந்தன் , பொறியாளர் தளவாய் , கூட்டுடன்காடு ஊராட்சி மன்றத் தலைவர் மாங்கனி அரிபாலகிருஷணன், ஊராட்சி வார்டு உறுப்பினர் இந்திராகாந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு தூத்துக்குடி மாவட்ட நிர்வாகி கள் மடத்தூர் சத்யா, பாலமுருகன், பனையூர் வில்சன், சங்கீதா, சந்தன மாரி, கனகராஜ், மீளவிட்டான் ராமலட்சுமி, உமாதேவி ஆகியோர் மரக் கன்றுகள் நடும் பணியை மேற்கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய சேர்மன் வசுமதி அம்பாசங்கர் ஏற்பாட்டின்படி, வட்டார வளர்ச்சி அலுவலக காசாளர் முருகன் மேற்கொண்டார்.
நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய ஆணையர் ஹெலன் பேசுகையில், கலைஞரின் நூற்றாண்டு விழாவினையொட்டி , 2023-ம் ஆண்டை கலைஞர் நூற்றாண்டு விழாவாக தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் கொண்டாடி ஒவ்வொரு வட்டாரங்களிலும் 10 ஆயிரம் மரக்கன்றுகள் வீதம் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. எனவே தூத்துக்குடி ஒன்றியத்தில் உள்ள 20 ஊராட்சிகளிலும் மரக்கன்றுகள் நடும் பணிக்கு தேவையான முழு ஒத்துழைப்பு
வழங்கப்படும் என்று கூறினார்.
- தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மல்லி கோட்டை கிராமம் அத்திராம் பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
- பள்ளி வளாகத்தில் இருந்த இரண்டு மரங்களை வெட்டி டிராக்டர் மூலம் ஏற்றிக்கொண்டு சென்றதை பார்த்த பொதுமக்கள் தடுத்து நிறுத்தி வாக்குவாதம் செய்துள்ளனர்.
தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மல்லி கோட்டை கிராமம் அத்திராம் பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 1 ம் வகுப்பு முதல் 5 ம் வகுப்பு வரை 55 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளி வளாகத்தில் 10க்கும் மேற்பட்ட மரங்கள் வளர்ந்து உள்ளன. பள்ளி வளாகத்தில் இருந்த இரண்டு மரங்களை வெட்டி டிராக்டர் மூலம் ஏற்றிக்கொண்டு சென்றதை பார்த்த பொதுமக்கள் தடுத்து நிறுத்தி வாக்குவாதம் செய்துள்ளனர். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் மற்றும் ஊராட்சி ஒன்றிய ஆணையாளருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.
- தூத்துக்குடி மாநகராட்சி, தமிழ்நாடு வனத்துறை மற்றும் தூத்துக்குடி விமான நிலையம் இணைந்து 66 ஆயிரம் மரங்கள் நட முடிவு செய்யப்பட்டுள்ளது.
- அம்மா உணவகத்தில் சமைக்கப்படும் உணவுகளை மேயர் ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா மற்றும் மாநகர மேயராக ஜெகன் பெரியசாமி பதவியேற்ற ஓராண்டினை முன்னிட்டும் 70 ஆயிரம் மரங்கள் நடப்படும் என்று அறிவித்தபடி முதற்கட்டமாக முதற்கட்டமாக 11 ஆயிரம் மரங்கள் நடப்பட்டது. அதனைத் தொடர்ந்து 7 ஆயிரத்துக்கும் அதிகமான மரங்கள் நடும் பணி ஏற்கனவே முடிவடைந்துள்ளது. தற்போது மேலும் 66 ஆயிரம் மரங்கள் நடும் பணி தூத்துக்குடி மாநகராட்சி, தமிழ்நாடு வனத்துறை மற்றும் தூத்துக்குடி விமான நிலையமும் இணைந்து நட முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதற்கான படிவத்தை வனத்துறை அதிகாரிகள் வழங்கும் நிகழ்ச்சி மாநகர அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது பொதுக்குழு உறுப்பினர் கோட்டு ராஜா, மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ், பகுதி செயலாளர் ரவீந்திரன், மண்டல தலைவர் நிர்மல்ராஜ், கவுன்சிலர்கள் ரெங்கசாமி, கந்தசாமி மற்றும் வனத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
இதனைத் தொடர்ந்து செல்வநாயகபுரம் பிரதான சாலை, ராஜீவ் நகர் பகுதியில் நடைபெற்று வரும் வடிகால் பணிகள் மற்றும் டி.எம்.பி.காலனி பகுதியில் தொடங்க உள்ள வடிகால் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி கமிஷனர் தினேஷ் குமாருடன் சென்று ஆய்வு நடத்தினார்.
பின்னர் தூத்துக்குடி அரசு மருத்துவமனை நுழைவு வாயிலில் உள்ள அம்மா உணவகத்தை பார்வையிட்ட மேயர் மற்றும் கமிஷனர் அங்கு சமைக்கப்படும் உணவுகளை ஆய்வு செய்தார். அப்பொழுது மேயர் ஜெகன் பெரியசாமி கூறுகையில், பெயர் முக்கியமல்ல. மக்களின் உணர்வு தான் முக்கியம் என்று பாமரர்களின் பசியை போக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் எண்ணங்களை நிறைவேற்றும் மாநகராட்சி உணவு கூடங்களில் ஓன்றான தூத்துக்குடி மாநகராட்சி உணவகத்தில் தரமாக உணவுகள் தயாரிக்கப்பட்டு சிறந்த முறையில் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது என்றார். அப்பொழுது அங்கு இருந்த மக்களின் வேண்டுகோளுக்கிணங்க இரவு உணவு வழங்க ஆவண செய்வதாக கூறினார். ஆய்வின் போது அரசு அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், பிரபாகரன், ஜாஸ்பர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
- ஆத்தூர் அருகே உமரிக்காடு பகுதியில் கோட்டைவாழ் அய்யன் கோவில் உள்ளது.
- கோவிலுக்கு வரும் மின் இணைப்பு, மரத்திற்கு கீழ் செல்வதால் நிழல் தரும் மரங்களை வெட்டும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஆத்தூர்:
ஆத்தூர் அருகே உமரிக்காடு பகுதியில் கோட்டைவாழ் அய்யன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு உள்ளூர் சுற்றுவட்டாரங்களை மட்டுமல்லாமல் வெளியூரில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். இக் கோவிலை சுற்றி ஏராளமான மரங்கள் உள்ளது. கோவிலுக்கு வரும் மின் இணைப்பு, மரத்திற்கு கீழ் செல்வதால் நிழல் தரும் மரங்களை வெட்டும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதற்கு தீர்வாக கோவில் நிர்வாகம் வயரிங் செய்யும் பி.வி.சி. பைப்புகளை மின்வாரிய ஊழியர்கள் ஒத்துழைப்போடு மின் கம்பியின் உள்ளாக நுழைத்து மாட்டி விட்டது. இதனால் மரங்கள் மின்கம்பியில் உரசும் அபாயம் நீங்கியது. மின்கம்பியை சுற்றி பாதுகாப்பான பி.வி.சி. பைப் இருப்பதால் மின்கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசினால் கூட எவ்வித அபாயம் ஏற்படுவதில்லை. மரங்களை பாதுகாக்க மற்ற இடங்களிலும் அரசு இதுபோன்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதற்கு தோட்டக்கலைத்துறை சார்பில் மானியம் வழங்கப்பட்டது.
- மிளகாய் சாகுபடி செய்ய 50 சதவீதம் மானியமாக ஒரு ஹெக்டேருக்கு ரூ. 7 ஆயிரத்து 500 வழங்கப்பட்டு வருகிறது.
சிவகங்கை
இளையான்குடி வட்டா ரம் தோட்டக்கலைத்துறை த் துறையில் தேசிய தோட்டக் கலை இயக்கத்தின் கீழ் காய் கறி நாற்றுகள், பழக்கன்றுகள் சாகுபடி செய்யவும் மழை நீர் சேமிக்க பண்ணைக் குட்டை அமைக்கவும், மற் றும் விவசாய உரங்கள் இயற்கை உரங்களுக்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் இத்திட்டத்தில் நடப்பாண்டில் புதிய திட்ட மாக விவசாய நிலங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி விவசாய நிலமாக மாற்றி மிளகாய் சாகுபடி செய்ய 50 சதவீதம் மானியமாக ஒரு ஹெக்டேருக்கு ரூ. 7 ஆயிரத்து 500 வழங்கப்பட்டு வருகிறது.
விவசாயம் செய்ய ஏது வாக நுண்ணீர் பாசன கருவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. மேற்கூரிய திட்டங்களில் பயன்பெற விரும்புவோர் தங்களது பட்டா, ஆதார் அட்டை நகல் மற்றும் புகைபடத்துடன் இளையான்குடி யூனியன் அலுவலகத்தில் உள்ள தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுகுமாறு தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் பாண்டிய ராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.
- வேப்பன், வாகை, புங்கன் போன்ற பல்வேறு வகையான மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன.
- 10க்கும் அதிகமான மரங்களை மர்ம நபர்கள் வெட்டி கடத்தியுள்ளனர்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் ஊராட்சியில் விஐபி நகர் அமைந்துள்ளது. அங்கு சுமார் 10 வீடுகள் மட்டுமே கட்டபட்டுள்ளது. இந்த நிலையில் அங்கு வேப்பன், வாகை, புங்கன் போன்ற பல்வேறு வகையான மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள வேப்ப மரங்கள் பலவற்றை சமூக விரோதிகள் சிலர் ஊராட்சி சார்பில் மரங்களை வெட்டச் சொன்னதாக கூறி 10க்கும் மேற்பட்ட வேப்ப மரங்களை வெட்டி கடத்தியுள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் மாதப்பூர் ஊராட்சி தலைவர் அசோக்குமார் ஆய்வு செய்த போது 10க்கும் மேற்பட்ட வேப்ப மரங்களை முழுமையாக வெட்டி உள்ளனர். மேலும் அங்கிருந்த சில மரங்களின் பெரிய, பெரிய கிளைகளையும் வெட்டி கடத்திச் சென்றது தெரிய வந்தது.
இது குறித்து மாதப்பூர் ஊராட்சி தலைவர் அசோக்குமார் கூறியதாவது;-
இந்த வீட்டுமனை இடத்தில் மாதப்பூர் ஊராட்சிக்கு ஒப்படைக்கப்பட்ட இடங்களில் எண்ணற்ற மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இவற்றில் 10க்கும் அதிகமான மரங்களை மர்ம நபர்கள் வெட்டி கடத்தியுள்ளனர். இது குறித்து மாதப்பூர் கிராம நிர்வாக அலுவலருக்கும், வருவாய் ஆய்வாளருக்கும் தகவல் அளித்துள்ளதாகவும் மரங்களை வெட்டி கடத்தும் கும்பலை கண்டறிந்து போலீசார் கைது செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.