என் மலர்
நீங்கள் தேடியது "வருவாய்த்துறையினர்"
- 5 வயதுடைய சீனி புளிய மரம் வளர்ந்து இருந்தது.
- பல்லடம் போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல்லடம் :
பல்லடம் ஜே.கே.ஜே.காலனி முதலாவது வீதி அருகே, சுமார் 5 வயதுடைய சீனி புளிய மரம் வளர்ந்து இருந்தது. இதனை நேற்று சிலர் வெட்டுவதாக வரு வாய்த் துறையினருக்கு புகார் வந்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு அவர்கள் சென்ற போது அங்கு அந்த மரத்தை சிலர் முழுமையாக வெட்டி விட்டனர். உரிய அனுமதியின்றி மரம் வெட்டியது குறித்து வருவாய்த்துறையினர் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். இது குறித்து பல்லடம் போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சமூக ஆா்வலா்கள், வருவாய்த்துறையினா் மரக்கிளைகள் வெட்டுவதை உடனடியாக தடுத்து நிறுத்தினா்.
- அவிநாசி ஒன்றியம், வடுகபாளையம் ஊராட்சிக்குட்பட்ட நஞ்சைதாமரைக்குளம் பகுதியில் பழமையான ஆலமரம் உள்ளது.
அவிநாசி:
அவிநாசி ஒன்றியம், வடுகபாளையம் ஊராட்சிக்குட்பட்ட நஞ்சைதாமரைக்குளம் பகுதியில் பழமையான ஆலமரம் உள்ளது. இந்நிலையில் அப்பகுதியை சோ்ந்த சிலர் ஆட்களை வைத்து ஆலமரத்தின் கிளைகளை வெட்டியதாக கூறப்படுகிறது.தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சமூக ஆா்வலா்கள், வருவாய்த்துறையினா் மரக்கிளைகள் வெட்டுவதை உடனடியாக தடுத்து நிறுத்தினா்.
இதுகுறித்து தாசில்தார் மோகனன் கூறியதாவது:- ஆலமரத்தின் கிளைகளை வெட்டுவதற்கு ஏற்கனவே அனுமதி கோரியிருந்தனா். ஆனால் அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் அனுமதி பெறாத நிலையில் ஆலமரத்தின் கிளைகளை வெட்டியுள்ளனா். இதுகுறித்து மாவட்ட நிா்வாகத்துக்கு அறிக்கை சமா்ப்பிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
- தியாகதுருகம் அருகே சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
- சாலையின் இருபுறமும் நிலம் உள்ள 2 விவசாயிகள் பாலம் அமைத்தால் எங்களுக்கு இடையூறாக இருக்கும் என கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் அருகே திம்மலை கிராமத்தில் இருந்து அலங்கிரி கிராமத்திற்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் குறுக்கே சிறு பாலம் அமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு தொடங்கப்பட்டது.
அப்போது சாலையின் இருபுறமும் நிலம் உள்ள 2 விவசாயிகள் பாலம் அமைத்தால் எங்களுக்கு இடையூறாக இருக்கும் என கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். இதையொட்டி நில அளவையர்கள் நடராஜன், சக்திவேல் ஆகியோர் தலைமையில் வருவாய்த்துறையினர் நிலங்களை அளவீடு செய்யும் பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு நிறைவடைந்தது.
அதன்படி நேற்று வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இந்திராணி, பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது. இதில் இரண்டு பொக்லைன் எந்திரங்கள் மூலம் சாலையோர ஆக்கிரமிப்பு–கள் அகற்றப்பட்டன.அப்போது உதவி திட்ட அலுவலர் சீனிவாசன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கொளஞ்சி வேல், ஒன்றிய பொறியாளர் கோபி, வருவாய் ஆய்வாளர் சுகன்யா, ஊராட்சி மன்ற தலைவர் தேவி ராஜேந்திரன், ஊராட்சி செயலாளர் செல்வராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.
அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாத வகையில் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் 20 -க்கும் மேற்பட்ட போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முன்னெ–ச்சரிக்கை நடவடிக்கை யாக ஆம்புலன்ஸ் ஒன்று சம்பவ இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது அப்பகுதியில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியது.






